Jump to content

சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்புக் கடமையில் இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சுமந்திரனின்-பாதுகாப்பு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு நாடகம் .

சுமத்திரன் தனக்கு குண்டு வைக்க வந்தவர்களென்று அப்பாவி  முன்னாள் ஊனமுற்ற விடுதலை புலிகளை குற்றம் சாட்டி சிறையில் தள்ளியவர் அப்ப  அவர்களின்  கதை அதோ கதிதானக்கும் .

இது சும்மா இலங்கை அரசுக்கும் சுமத்திரனுக்கும் ஒன்றும் இல்லை என்று காட்ட .நடாத்தும் நாடகம் .

வேணுமென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் இருந்து தூக்கட்டும் சுமத்திரனை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் அவருக்கு உயிராபத்து என்றும்  கொலை முயற்சி என்று கூறி சில முன்னாள் போராளிகளை பிடித்து உள்ளே போடுவார்கள். அத்துடன் மீண்டும் STF பாதுகாப்பு வழங்கப்படும்.

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

வேணுமென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் இருந்து தூக்கட்டும் சுமத்திரனை .

தவராசா போன்ற்வர்களுக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டது நான் எழுதிய தூக்கட்டும் என்பதுக்கு பதிலா திருப்பி அளிக்கட்டும் இனப்படுகொலை என்பதை ஒத்துக்கொள்ளட்டும் என்று வந்து இருக்கனும் . கடைசி மட்டும் இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி கொல்லுப்பட்டவர்  அவசரத்தில் எழுதி கொப்பி பேஸ்ட் சில குழப்பங்களை உருவாக்கியத்துக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்க்கிறேன் .

இன்னும் ஒரு கூடுதல் தகவல் சுமத்திரனுக்கு STF  பாதுகாப்பு மட்டுமே விலக்கப்பட்டுள்ளது  சாதாரண MP மாருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு தொடர்கிறது .

Link to comment
Share on other sites

சுமந்திரன் விரோதிகளுக்கு இது இரண்டாவது நல்ல செய்தி. முதல் செய்தி ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவி சுமந்திரன் , சம்பந்தர் , இன்னும் பல சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை செய்து குடியுரிமை நீக்குவதட்கான திடத்தை அரசு செய்யபோகின்றது. எனவே,இனி சுமந்திரனைப்பற்றி அதிகமாக எழுதவேண்டி வராது.  இனி இன்னுமொருவரை தேடி பிடித்து  தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2021 at 04:00, Robinson cruso said:

சுமந்திரன் விரோதிகளுக்கு இது இரண்டாவது நல்ல செய்தி. முதல் செய்தி ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவி சுமந்திரன் , சம்பந்தர் , இன்னும் பல சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை செய்து குடியுரிமை நீக்குவதட்கான திடத்தை அரசு செய்யபோகின்றது. எனவே,இனி சுமந்திரனைப்பற்றி அதிகமாக எழுதவேண்டி வராது.  இனி இன்னுமொருவரை தேடி பிடித்து  தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.

சுமத்திரன்  மக்களுக்கு நல்லது செய்தால்  நாங்களும் அவரின் ஆள்தான் ஆனால் அவர் சென்ற எந்த இடம் எமக்கு சார்பாக முடிந்து இருக்கு ?

**

பெரிய வார்த்தை எல்லாம் பேச வேண்டாம் சம்பந்தரின் கொழும்பு வீட்டை திரும்ப எடுக்கிறார்கள் என்றாலே காணும் அந்தாளுக்கு மோட்சம் தெரியும் .

சுமத்திரனுக்கு கொடுத்த கவுரவ ஜனதிபதி சட்ட தரணி பதவியை மீள  பெறுகிறோம் என்று அவர்கள் அறிவித்தால்  காணும் எடப்பாடியை  மின்சிய ஆளாய் குறுகி போய்  விடுவார் சுமத்திரன் .

On 9/2/2021 at 04:20, பெருமாள் said:

இனி இன்னுமொருவரை தேடி பிடித்து  தாக்கி எழுத வேண்டி வரும். பாவம் இணையதள போராளிகள்.

இளையவர்கள் பலர் இருக்கினம் அவர்கள் வருவார்கள் கவலை வேண்டாம் .

Link to comment
Share on other sites

On 9/2/2021 at 04:20, பெருமாள் said:

சுமத்திரன்  மக்களுக்கு நல்லது செய்தால்  நாங்களும் அவரின் ஆள்தான் ஆனால் அவர் சென்ற எந்த இடம் எமக்கு சார்பாக முடிந்து இருக்கு ?

**.

இளையவர்கள் பலர் இருக்கினம் அவர்கள் வருவார்கள் கவலை வேண்டாம் .

உங்களுக்கு சந்தோசம் போல இருக்குது. சுமந்திரனின் எதிரி என்றவுடன் ஐயா கொதித்தெழுந்து விடீர்கள். இளையவர்கள் யார்? விக்கி, சித்தார்த்தன், சுரேஷ் , அனந்தி, அடைக்கலம், ஸ்ரீகாந்தா, சிவாஜி , மாவை , சிவசக்தி போன்றோரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

உங்களுக்கு சந்தோசம் போல இருக்குது. சுமந்திரனின் எதிரி என்றவுடன் ஐயா கொதித்தெழுந்து விடீர்கள். இளையவர்கள் யார்? விக்கி, சித்தார்த்தன், சுரேஷ் , அனந்தி, அடைக்கலம், ஸ்ரீகாந்தா, சிவாஜி , மாவை , சிவசக்தி போன்றோரா ?

அவர்கள் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நீக்கியது நானே” : அமைச்சர் சரத் வீரசேகர

 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நானே நீக்கியதாகவும், அவருக்கு அந்தப் பாதுகாப்பு அவசியமற்றது என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அமைச்சரவை இதனை கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாக பேரணி 7 ஆம் திகதி இரவு பொலிகண்டியில் நிறைவடைந்தது. இதன்போது எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பேரணியில் முன்னின்று செயற்பட்டனர்.

இவ்வாறான நிலைமையில் 7 ஆம் திகதி இரவு சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டது.

அதற்கான காரணமும் சுமந்திரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் நேற்று குறித்த தொலைகாட்சி நிகழ்ச்சியியொன்றில் அது தொடர்பாக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களினால் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் அவர் எப்படி அந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தார்.

இதனாலேயே அவரின் அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். -(3)

 

http://samakalam.com/சுமந்திரனின்-விசேட-அதிர/

Link to comment
Share on other sites

On 8/2/2021 at 06:15, தமிழ் சிறி said:

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள்தான் பேரணியை ஏற்பாடுசெய்து நடாத்தியது போன்ற ஒரு செய்தியை அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்டு சுமந்திரனைத் துகிலுரிந்துள்ளார். பாவம் சுமந்திரன் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கண்ணன் காப்பாற்ற ஓடோடி வந்திருப்பார், அவர் ஆணாச்சே காப்பாற்ற யார் வருவார் கச்சி ஏகம்பனே.??

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு கொடுக்க ஒரு காரணம், அதை எடுக்க இன்னொரு காரணம். இதன் பின்புலம் இன்னும் கொஞ்ச நாளில் வெளிவரும் கவலை வேண்டாம். பகிங்கமாக அரசின் பாதுகாப்போடு, அரசுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து கொண்டது சந்தேகத்தை உருவாக்க கூடிய விடயமே. அதை  மக்கள் கண்டுள்ளதால் அவர்கள் கேள்வி கேட்கமுதல் தாங்களே  முந்திக்கொண்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தாமே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுமுன்தினம் மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.

இந்நிலையில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்றுமுன்தினம் இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.

என்ன காரணத்திற்காக தனக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.எப். பாதுகாப்பை தாமே நீக்கினார் எனவும், எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

"தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு எதற்கு?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் சுமந்திரனுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப படுகொலை செய்ய மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிங்களப் பாதாள உலகக் கோஷ்டியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சந்தேகநபர்கள் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அரசாங்கமே பொறுப்பு! - எம்.ஏ சுமந்திரன்

Report us Banu 5 hours ago

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக தனக்கு எதிரானவர்கள் செயற்படலாம் என்ற சமிக்ஞையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் எம்.ஏ சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

10 முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு எமக்கு உரிமையுள்ளது. இந்தப் போராட்டம் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளது.

 

இதற்கு அரசாங்கம் பதிலளிக்கும் என நம்புகின்றோம். இந்தப் போராட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் என்னுடைய பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையின் பாதகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் நான் எவருக்கு எதிராகவும் நான் எவ்வித முறைப்பாடுகளை செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை.

என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கமே சில விடயங்களை செய்தது. பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு என்னுடைய ஆலோசனைகளோ, முறைப்பாடுகளோ இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு ஏன் அகற்றப்பட்டது.

இதில் மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. ஒன்று அரசாங்கம் அவர்கள் என்னுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் எரிச்சலடைந்துள்ளது.

இது உண்மையல்லவெனின் அப்பாவிகளை அரசாங்கம் தேவைற்ற வகையில் சிறையில் தடுத்து வைத்துள்ளது. அல்லாவிடின் அவர்களை செயற்படுமாறு அரசாங்கம் சமிக்ஞையை கொடுக்கிறது.

ஆகவே எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/268377?ref=home-top-trending

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக தனக்கு எதிரானவர்கள் செயற்படலாம் என்ற சமிக்ஞையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

35 minutes ago, பெருமாள் said:

இவ்வாறு என்னுடைய ஆலோசனைகளோ, முறைப்பாடுகளோ இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு ஏன் அகற்றப்பட்டது.

உங்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பற்றி அப்போ கூறப்பட்ட காரணத்தை  நீங்கள் மறுக்கவும் இல்லை,. எதிர்க்கவும் இல்லை இப்போதுகூட அதை ஆதரித்து தானே கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். இப்போ பாதுகாப்பு தந்தவன் அதை எடுக்கும்போது மட்டும்  எச்சரிக்கிறீர்களே, இதற்கு என்ன அர்த்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 00:15, தமிழ் சிறி said:

சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

கருணா பிள்ளையான் போன்றவர்களுக்கு மீண்டும் கொந்துராத்துகள் கிடைக்கப் போகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 07:53, பெருமாள் said:

வேணுமென்றால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியில் இருந்து தூக்கட்டும் சுமத்திரனை .

 

On 9/2/2021 at 05:20, பெருமாள் said:

சுமத்திரனுக்கு கொடுத்த கவுரவ ஜனதிபதி சட்ட தரணி பதவியை மீள  பெறுகிறோம் என்று அவர்கள் அறிவித்தால்  காணும் எடப்பாடியை  மின்சிய ஆளாய் குறுகி போய்  விடுவார் சுமத்திரன் .

ஜனாதிபதி சட்டதரணி என்பது பதவியல்ல இது அவர்களுக்கு வழங்கப்படும் தொழில்சார் பட்டம் மட்டுமே. குடியரசு ஆவதற்கு முன்பாக இருந்த King´s Counsel(KC), Queen´s Counsel(QC) என்ற வரிசையில் இன்று President´s Counsel(PC) என்ற கௌரவ பட்டம் இலங்கையில்  சிரேஸ்ட சட்டதரணிகளுக்கு அவர்களின் துறைசார்ந்த தகமை, சேவை ஆகிய அடிப்படைகளில் வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி சட்டதரணிகள் என பட்டம் பெற்றவர் ஜனாதிபதிக்கு சட்டதரணியாக பதவி வகிக்கிறார் என்று கொள்வது தவறு. இந்த பட்டம் பெற்றவர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிக்கு அருகே தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமரவும் தமது சீருடைகளை பட்டு வஸ்திரத்தில் அணியவும் தகுதிபெற்றவர்கள் ஆவர். இங்கிலாந்தில் தோன்றிய இந்த வழமை அதன் பழைய காலனித்துவ /காமன்வெல்த் நாடுகளில் இன்றும் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.