-
Tell a friend
-
Topics
-
2
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஆழ்ந்த இரங்கலுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன். நகைச் சுவையால் சிரிக்கவைத்தது மட்டுமல்ல... கலைவாணரைப் போல் அந்தச் சுவையால் மக்களைச் சிந்திக்கவும் வைத்த நல்ல மனிதர்.
-
By தமிழ் சிறி · Posted
மாஸ்க்கை... இடம் மாறி, போட்டு விட்டார்கள் என்று இணையத்தில் கலாய்க்கின்றார்கள். -
By Paanch · பதியப்பட்டது
வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.....நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம்.' சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர். தென்மராட்சி பெண் தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி கடலில் வீசினாள். பேய் உடனே கடலில் குதித்து அதை தேடி எடுத்து வந்தது. அடுத்து வலிகாம பெண் தன் காதிலிருந்த மிகச் சிறியதான தோடுகளில் ஒன்றைக் கழட்டிக் கடலில் வீசினாள். பேய் அதையும் தேடிப் பிடித்து கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சிரித்தது ... ' இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ ஒருத்தி மட்டும் தான். நீ எதை வீசப் போகின்றாய்? ' என்று வடமராச்சிப் பெண்ணிடம் கேட்டது. உடனே வடமராட்சி பெண் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் போத்தலை எடுத்து, அதற்குள் இருந்த நீரைக் கடலில் ஊற்றி விட்டு, ' இப்போ நான் ஊற்றிய அந்த குடிதண்ணீரை கொண்டு வா' என்று கூறினாள். திகைத்துப் போன பேய் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்து மறைந்தது. இதற்காகத்தான், யாழ்பாண பேச்சு வழக்கில் பெரியவர்கள்... ' எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள் ' என்று அழகாகக் கூறுவார்கள். படித்ததில் பிடித்தது. -
By பெருமாள் · பதியப்பட்டது
விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தலைவர், செயலாளர் வெற்றிபெற்றிருப்பார்கள் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் கே.வி.தவராசாவினால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் சாராம்சம் வருமாறு- தங்களின் தலைமைத்துவ காலத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைத்த அவப்பெயரை சம்பாதித்து கொள்ளாதீர்கள். கட்சிக்கு வாக்களிக்கவில்லை, தனிப்பட்ட ரீதியான வாக்குகளாலேயே வெற்றியடைந்ததாக ஆபிரஹாம் சுமந்திரன் அகங்காரத்துடன் தெரிவித்திருப்பது, வாக்களித்த மக்களை அவமதிப்பதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனினும், ஆபிரஹாம் சுமந்திரன், தானே பேச்சாளர் என பிரதிபலித்துக் கொண்டு கருத்து வெளியிட்டு வருவது கட்சியின் இருப்பிற்கே ஆபத்தானது. பசில் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தயாரன அறிவித்து முதல் தனிப்பட்ட வாக்கினால் வென்றதாக கூறியது வரையானது கட்சிக்கு வாக்களித்த மக்களை அதிருப்திக்குள்ளாக்கும். இப்படி பொறுப்பற்ற வகையில் செயற்படும் நபரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். குறித்த நபர் ஊடகப்பேச்சாளர் அல்லவென்பதை விரைவில் அறிவித்து, கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை சரி செய்ய முயற்சியுங்கள். கட்சிக்கு எதிராக செயற்படும் ஆபிராஹாம் சுமந்திரனின் பின்னணி என்ன? இந்த இக்கட்டான நிலையில் உங்களின் கடமையை சரியாக செய்யாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி அத்தியாயத்தை எழுத நேரிடும். அப்படியொரு சம்பவம் நடந்தால், அதற்கு பொறுப்பானவராக நீங்களே இருப்பீர்கள். https://pagetamil.com/2021/04/16/சுமந்திரனை-கட்சியில்-வைத/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.