Jump to content

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா?

  • தூம் பூலே
கோடு

பட மூலாதாரம், GETTY IMAGES

அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா ஈடுபட்டு வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய வருகிறது.

தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நிலையை எட்டும் நோக்கில், உலக நாடுகளின் ராணுவங்கள், தொழில்நுட்ப ரீதியில் புதுமையான விஷயங்களைப் பயன்படுத்த, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன.

உதாரணத்துக்கு, டக்ட் டேப்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போரில் கடற்படையில் தன் மகன்கள் பணியாற்றி வந்த நிலையில், இல்லினோயி பகுதியில் இருந்த ராணுவ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தெரிவித்த யோசனையின்படி அது தயாரிக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் வெடிமருந்து பெட்டிகளுக்கு சீல் வைப்பதற்குப் பயன்படுத்தும், பிலிம் போன்ற டேப் பாதுகாப்பில் தடுமாறிக் கொண்டிருந்த வீரர்களுக்கு உதவும் வகையில் வெஸ்ட்டா ஸ்டவுட் என்ற பெண் ஒரு யோசனையை முன் வைத்தார் - தண்ணீர் புகாத வகையிலான, துணியால் தயாரித்த டேப் ஒன்றை அவர் தயாரித்தார். 

தாம் பணிபுரிந்த தொழிற்சாலை மேற்பார்வையாளர்களின் அதரவு கிடைக்காத நிலையில், அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு அவர் கடிதம் எழுதினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அவருடைய யோசனையின்படி டேப் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிபர் உத்தரவிட்டார்.

நமக்கு தேவையான வகையில், ஒட்டும் தன்மையுள்ள ஒரு டேப்பை ராணுவ தொழிற்சாலை தயாரிக்க முடிந்தால், அதனால் வேறு என்னவெல்லாம் செய்ய முடியும்?

2014-ல் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ``நாம் இரும்பு மனிதனை உருவாக்கப் போகிறோம் என்பதை அறிவிக்கவே இங்கு வந்திருக்கிறேன்'' என்று கூறினார்.

அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அவர் சீரியஸாக அதைக் கூறினார். அதற்கான பணிகளை அமெரிக்க ராணுவம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. டாலோஸ் என்ற பெயரிலான, பாதுகாப்பு கவச உடையாக அது திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான காணொளியும் காட்டப்பட்டது. இந்த கவச உடை அணிந்த நபர், எதிரியின் முகாமுக்குள் செல்வது போலவும், சீறிவரும் குண்டுகள் கவச உடையில் பட்டு தெறித்து விழுவது போலவும் அது இருந்தது.

இரும்பு மனிதன் உருவாகவில்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து, அந்த முயற்சி முடிவுக்கு வந்தது. ஆனால், அந்த கவச உடைக்காக தயாரிக்கப்பட்ட வெவ்வேறு பொருட்கள், வேறு வகைகளில் பயன்பாட்டுக்கு உகந்தவையாக உள்ளதாக அதைத் தயாரித்தவர்கள் கருதுகின்றனர்.

சீனா

பட மூலாதாரம், USSOCOM

தங்கள் ராணுவ வீரர்களின் திறன்களை மேம்படுத்த, வெளிப்புற கூடு போன்ற பொருளை உருவாக்கும் சாத்தியக்கூறு, ராணுவத்தினருக்கு நம்பிக்கை தரும் தொழில்நுட்பமாக இருக்கிறது. அதில் ராணுவங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

திறமையை மேம்படுத்துதல் என்பது புதியதல்ல. பழங்காலத்தில் இருந்தே ஆயுதங்கள், உபகரணங்கள், பயிற்சி முறைகள் தொடர்ந்து மேம்பட்டு வந்திருக்கின்றன.

ஆனால் இன்றைய காலத்தில், மேம்படுத்துதல் என்பது ராணுவ வீரருக்கு சிறந்த துப்பாக்கி தருவதுடன் நின்று விடுவதில்லை. தனிப்பட்ட ராணுவ வீரரின் திறமையை மேம்படுத்துவதாகவும் அது இருக்கிறது.

``அணுகுண்டை விட மோசமான'' ஒரு பாதிப்பை மனிதகுலம் எதிர்நோக்கி இருக்கிறது என்று 2017-ல் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

``குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதனை, விஞ்ஞானிகளால் உருவாக்க முடியும் என்பது எழுத்தளவில் மட்டுமின்றி, நடைமுறையிலும் சாத்தியமானதாக உள்ளது. விஞ்ஞானிகளால் உருவாக்கப்படும் மனிதன் கணிதத்தில் அறிவாளியாக, புத்திசாலித்தனமான இசைக் கலைஞராக அல்லது ஒரு ராணுவ வீரராக, பயம், கருணை, வருத்தம் அல்லது வலி பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் போரிடக் கூடிய வீரராக இருக்க முடியும்,'' என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பான டிஎன்ஐ முன்னாள் இயக்குநர் ஜான் ராட்ச்லிபே, கடந்த ஆண்டு சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

``மக்கள் விடுதலை ராணுவத்தின் வீரர்களைக் கொண்டு, உயிரியல் ரீதியில் மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் கூடிய ராணுவ வீரர்களை உருவாக்கும் வகையில், மனிதர்களை வைத்து சீனா பரிசோதனை நடத்தியுள்ளது. சீனாவின் அதிகார ஆசைக்கு நெறிசார்ந்த எல்லைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது'' என்று வால்ஸ்ட்ரீட் இதழில் அவர் எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையை ``பொய்களின் மூட்டை'' என்று சீனா அழைத்தது.

அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் புதிய இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ், தனக்கு முந்தைய இயக்குநரின் கருத்தை ஏற்கிறாரா என்று கேட்டதற்கு, அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என அவருடைய அலுவலகம் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சீனாவால் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்த இயக்குநரின் எச்சரிக்கைகள் பற்றி அவரது அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப்பின் பல திட்டங்களை பைடன் நிர்வாகம் மாற்றி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய அம்சமாக சீனாவுடன் உள்ள பதற்ற நிலை இடம் பெறும் என்று தெரிகிறது.

பேராவலும் உண்மை நிலையும்

ராணுவத்தினரின் போக்கு காட்டி ஏமாற்றும் வகையிலான செயல்பாடுகளில் வலியை, கடும் குளிரை அல்லது தூங்க வேண்டிய தேவை இல்லாத ராணுவ வீரர் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஆனால், ``இரும்பு மனிதனை'' உருவாக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியைப் பார்த்தால், தொழில்நுட்ப வரம்புகள் இந்த பேராவலை சாத்தியமற்றதாக ஆக்கும் என்று தெரிகிறது.

மரபணு மாற்றி அமைத்தல், வெளிப்புற கூடு உருவாக்குதல் மற்றும் மனிதன் - இயந்திர கூட்டுமுயற்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி சீனா இதுபோன்ற முயற்சியில் ``தீவிரமாக ஈடுபட்டு வருகிறது'' என்று 2019-ல் இரண்டு அமெரிக்க கல்வியாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் கூறியுள்ளனர். சீனா ராணுவ உத்திகள் குறித்த கருத்துகளின் அடிப்படையில் அந்தக் கட்டுரை உருவாக்கப் பட்டிருந்தது.

இந்தக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான எல்சா கனியா என்பவர், ராட்ச்லிபே கூறிய கருத்துகள் குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார்.

``சீன ராணுவம் என்ன விவாதிக்கிறது, என்ன விஷயங்களை உண்மையில் நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஆனால், அவர்களின் பேராவலுக்கும், இப்போதைய தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உள்ளது என்ற உண்மை நிலைக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்'' என்று நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ள கனியா கூறியுள்ளார்.

``சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதில் உலக நாடுகளுக்கு அதிக ஆர்வம் இருந்தாலும்கூட, எந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் இது சாத்தியமாகும் என்ற கேள்வியும் உள்ளது'' என்கிறார் அவர்.

மனிதர்களை வைத்து பரிசோதனை நடத்தியது பற்றி ராட்ச்லிபே குறிப்பிட்டிருந்தார். வளர்ந்த நிலையில் உள்ள மனிதனிடம் மரபணு மாற்றம் செய்து சில குணாதிசயங்களை உருவாக்க முடியும் என்ற நிலையில், கருமுட்டைகளின் டி.என்.ஏ.க்களை மாற்றுவது ``சூப்பர் ராணுவ வீரரை'' உருவாக்குவதற்கு சாத்தியமான ஒரு வழிமுறையாக இருக்கலாம்.

இது சாத்தியமா என்பதைக் காட்டிலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் தயாராக இருப்பார்களா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மூலக்கூறு மரபணு நிபுணர் டாக்டர் ஹெலன் ஓ நெயில் கூறியுள்ளார்.

``மரபணு அம்சத்தை மாற்றும் தொழில்நுட்பங்கள், அதன் மூலம் மறு உற்பத்தி செய்தல் ஆகியவை மரபணு மாற்றம் மற்றும் வேளாண்மையில் வழக்கமான நடைமுறைகளாகிவிட்டன. மனிதன் உடலில் இதைப் பயன்படுத்துவது இரண்டு அம்சங்களின் கூட்டுத் தன்மை கொண்டதாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில் இது நெறிகளுக்கு முரண்பட்டதாக இருக்கும்'' என்கிறார் அவர்.

2018 ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானி ஹே ஜியான்குயி என்பவர் அதிர்ச்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். கருப்பையில் இருந்த இரட்டை பெண் குழந்தைகளின் டி.என்.ஏ.க்களை வெற்றிகரமாக மாற்றி அமைத்ததன் மூலம், அவர்களுக்கு எச்.ஐ.வி. வராமல் தடுத்ததாக அவர் கூறினார்.

அது குற்றச்சாட்டுக்கு ஆளானது. சீனா உள்ளிட்ட, பெரும்பாலான நாடுகளில் அதுபோன்ற மரபணு - திருத்த நடைமுறைகளுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஐ.வி.எப். முறையில் உருவாக்கப்பட்டு, தேவையற்றதாக ஒதுக்கப்படும் கரு முட்டைகளில் மட்டுமே இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்யலாம், அதுவும் அது குழந்தையாக உருவாக அனுமதிக்காமல் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

தனது கண்டுபிடிப்பு நியாயமானது என்று அந்த விஞ்ஞானி கூறினார். ஆனால், அரசின் தடையை மீறிய குற்றத்துக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தக் கட்டுரைக்காக நாம் தொடர்பு கொண்டவர்களில் பலரும், ஹே ஜியான்குயி செயல்பாடு உயிரி நெறிசார் செயல்பாடுகளில் முக்கியமான விஷயமாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். எச்.ஐ.வி.யில் இருந்து பாதுகாப்பு பெறுவதுடன், இந்த நடைமுறை மூலமாக வேறு பல மேம்பட்ட விஷயங்களும் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளை உருவாக்க Crispr தொழில்நுட்பத்தை ஹே ஜியான்குயி கையாண்டார். உயிருடன் உள்ள செல்களில் டி.என்.ஏ.வில் குறிப்பிட்ட மற்றும் துல்லியமான மாற்றங்களை செய்வதாக அந்தத் தொழில்நுட்பம் உள்ளது. சில குணங்களை நீக்கி, வேறு சிலவற்றைச் சேர்க்க முடியும். 

பரம்பரையாக வரும் நோய்களைக் குணப்படுத்த இது வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. ராணுவத்துக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

Crispr தொழில்நுட்பம் ``புரட்சிகரமானது'' என்று லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கிறிஸ்டோபே காலிச்செட் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு வரம்புகள் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். டைப் செய்த கட்டுரையில் சில வார்த்தைகளைக் கண்டுபிடித்து, வேறொரு வார்த்தையை அங்கு மாற்றும் வகையிலான வசதியை இதனுடன் அவர் ஒப்பிடுகிறார். கட்டுரைகளில் சரிப்பட்டு வரக் கூடிய ஒரு அம்சம், வேறொரு விஷயத்துக்கு சரிப்பட்டு வராமலும் போகும்.

``ஒரு மரபணுவுக்கு ஒரு தாக்கம் தான் இருக்கும் என கருதுவது தவறு. ஒரு மரபணுவை நீங்கள் எடுத்துக் கொண்டால், அந்த தனிப்பட்ட நபருக்கு தசைகள் வலுவானதாக இருக்கலாம் அல்லது வேகமாக மூச்சுவிடக் கூடியவராக இருக்கலாம். ஆனால், அதுவேகூட பிற்காலத்தில் அவருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்'' என்று அவர் விளக்கினார்.

சில குணாதிசயங்களைப் பிரித்துப் பார்ப்பதும் கஷ்டமானது. உதாரணமாக, ஒருவரின் உயரத்தை நிர்ணயிப்பதில் பல மரபணுக்களுக்குப் பங்கு உள்ளது. ஒரு குணாதிசயத்தை மாற்றினால், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அது தொடரும்.

அமெரிக்காவின் முயற்சிக்கு நேரடி எதிர்வினையாகத்தான் சீனாவின் முயற்சிகளை சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக்கிரமிப்புக்கு முயற்சிக்கும் புதிய உயிரினங்களை அழித்துவிடும் வகையிலான மரபணுவை அழிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அமெரிக்க ராணுவம் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது என்று 2017-ல் கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்தத் தொழில்நுட்பம் ராணுவ ரீதியில் பயன்படுத்தப்படலாம் என ஐ.நா. நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

சாதகமான நிலையை முன்னெடுப்பதில் சீனாவும், அமெரிக்காவும் மட்டும் போட்டியிடவில்லை. ``மேம்படுத்தப்பட்ட ராணுவ வீரர்களை'' உருவாக்க பிரான்ஸ் நாட்டின் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சிக்கான நெறிசார்ந்த வரையறைகள் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, ``நாம் உண்மை நிலையை எதிர்கொள்ள வேண்டும். எல்லோருமே நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வது கிடையாது. எனவே, எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தாக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

 

கடற்படை

பட மூலாதாரம், PA MEDIA

 
படக்குறிப்பு, தீவிரமான தட்ப வெட்ப சூழலிலும் பணியாற்ற இந்த திட்டம் உதவுகிறது.

தனிநபர்களின் குணாதிசயங்களைப் பாதுகாப்பாக விஞ்ஞானிகளால் மேம்படுத்த முடிந்தாலும், ராணுவத்தில் அதைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் உள்ளன.

உதாரணமாக, ராணுவ கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக, சொந்த உடல் நலனுக்கு ஆபத்தான சிகிச்சை முறைக்கு தனிப்பட்ட ராணுவ வீரர் முழு மனதுடன் ஒப்புக்கொள்வாரா? சீனாவும், ரஷியாவும் தங்கள் கோவிட் தடுப்பு மருந்துகளை ராணுவத்தினருக்கு அளித்து பரிசோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

``ராணுவ வீரரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ராணுவம் கிடையாது. ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ள அல்லது போரில் வெற்றி பெறுவதற்காகத்தான் ராணுவம் உள்ளது'' என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நெறிகள் துறை நிபுணர் பேராசிரியர் ஜூலியன் சவுலெஸ்க்யூ கூறியுள்ளார்.

``ராணுவ வீரர்களை ஈடுபடுத்தும் ஆபத்தான சூழலுக்கு ஒரு வரம்பு உள்ளது. ஆனால் சாதாரண சமூகத்தைவிட அதிக அளவிலான ஆபத்து சூழலுக்கு அவர்கள் உள்ளாக்கப் படுகிறார்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கிடைக்கும் பயன்களைக் காட்டிலும், என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஆராய வேண்டியது முக்கியம் என்கிறார் அவர்.

``ராணுவத்தில் இந்த ஒப்பீடு மாறுபட்ட வகையில் இருக்கும். தனி நபர்கள் ஆபத்துகளை எதிர்கொள்வார்கள். ஆனால் பயன்களைப் பெற மாட்டார்கள்'' என்று அவர் கூறினார்.

ராணுவ வீரர்கள், வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைப்பதற்கு உத்தரவாதம் தரும் என்றால், மேம்படுத்தல் முயற்சிகள் வரவேற்கப்படும்.

ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல என்று கலிபோர்னியா பாலிடெக்னிக் அரசு பல்கலைக்கழகத்தின் தத்துவவியலாளர் பேராசிரியர் பேட்ரிக் லின் கூறுகிறார்.

``ராணுவ தகுதி மேம்படுத்தல் என்பது உங்கள் குடிமக்களை வைத்து, அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாகும். மேம்படுத்தப்பட்ட திறன்கள் கொண்ட வீரர்கள் என்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயத்தில், திறன் மேம்படுத்தாத வீரர்கள் செல்ல முடியாத, அல்லது செய்ய முடியாத காரியங்களை செய்யும் பணியில் இந்த மனிதர்களைப் பயன்படுத்தலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு கேப்டனாதல் என்பது இன்னும் சாத்தியமாகாமல் இருக்கலாம். ஆனால் ஆச்சர்யம் தரும் வகையில் திடீரென தகவல்கள் வெளியாகலாம்.

``ராணுவத்தில் உருவாகும் மாற்றங்களில் நெறி சார்ந்த கட்டுப்பாடு அல்லது ஜனநாயக ரீதியிலான கட்டுப்பாடு எதையும் செலுத்துவது சிரமமான விஷயம். ஏனெனில், இயல்பாகவே தேச நலனைப் பாதுகாப்பதில் ரகசியத்தன்மை மற்றும் அந்தரங்கத்தன்மை அதில் இருக்கிறது'' என்று சவுலெஸ்க்யூ கூறுகிறார்.

``எனவே இது சிரமமான நெறிசார் விஷயம். அறிவியல் அல்லது மருத்துவத்தில் இன்றைய சூழலில் இது கஷ்டமான விஷயமாக இருக்கும்'' என்கிறார் அவர்.

இந்தத் துறையைக் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதில் ``ஏறத்தாழ இவை அனைத்துமே இரட்டை பயன்பாடுள்ள ஆராய்ச்சி என்பது முக்கியமான சவாலாக இருக்கும். உதாரணமாக வெளிக்கூடு ஆராய்ச்சி என்பது முதலில் மருத்துவ ரீதியில் மோசமாக உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கு அல்லது குணமாக்குவதற்காக உத்தேசிக்கப்பட்டது. அதாவது பக்கவாதம் வந்தவர்களை மீண்டும் நடக்க வைக்கும் முயற்சியாக இந்த சிந்தனை உருவானது'' என்று பேராசிரியர் லின் கூறுகிறார்.

பயிற்சி

பட மூலாதாரம், FONDS DE DOTATION CLINATEC 

``ஆனால் இந்த உடல் இயக்க முறையிலான சிகிச்சையை எளிதாக ஆயுதமயமாக்கலாகவும் பயன்படுத்த முடியும். அப்படி நடக்காமல் எப்படி தடுக்க முடியும், எப்படி ஒழுங்குபடுத்த முடியும் என்பது தெரியவில்லை. உடல் இயக்க முறை சிகிச்சைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தாத வகையில், பரவலான ஒழுங்குமுறைகள் எப்படி உருவாக்கப்படும் என்றும் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

மரபணு ஆராய்ச்சியில் சீனா ஏற்கெனவே முன்னேறிய நிலையில் உள்ளது, மற்ற நாடுகள் பின்தங்கியுள்ளன என்று டாக்டர் ஓ நெயில் கூறுகிறார்.

``இப்போதுள்ள உண்மை நிலைகளில் கவனத்தை செலுத்துவதற்குப் பதிலாக, நெறி விஷயங்கள் குறித்த விவாதங்களில் நாம் நேரத்தை வீணடித்துவிட்டோம் என்று கருதுகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

``அனுமானம் மற்றும் கற்பனைகளில் அதிக சக்தியை செலவழித்துவிட்டோம். உண்மையான ஆபத்து சூழல்களில் அதிக சக்தியை நாம் செலவிட வேண்டும். அதை நன்கு புரிந்து கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஏனெனில், வேறு எங்காவது அதே நடைமுறை பயன்படுத்தப்படலாம். ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தான், அதில் எங்கே தவறு நடக்கும் என்பதை, அறிய முடியும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

 

https://www.bbc.com/tamil/global-55989130

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அமெரிக்காவின் super soldier உருவாக்க ஆய்வுகளும், முயற்சிகளும் இந்த மேற்கு ஆய்வாளரின் கண்ண்ணுக்கு காமாலை.

சீன இதில் பின்பற்றுவது அமெரிக்காவை.
   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.