Jump to content

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

— கருணாகரன் — 

சுதந்திர தினத்தன்று (04.02.2021) வட்டுக்கோட்டையில் ஒரு முதியவர் ஒரேயொரு கத்தரிக்காயை 90 ரூபாய்க்கும், ஐம்பது கிராம் புளியை 200 ரூபாய்க்கும், 50 கிராம் பச்சை மிளகாயை 50 ரூபாய்கும் வாங்கிக் கொண்டு செல்வதைக் கண்டேன். அதற்கு மேல் வாங்குவதற்கு அவருக்குக் கட்டுப்படியாகாது. அந்தளவுக்கு ஒவ்வொரு பொருளும் உச்சவிலையிலிருந்தன. ஆனால், அவர் வாங்க வந்தது இதையும் விட அதிகமாக. அதற்கு அவரிடம் கொள்வனவுச் சக்தி –வருமானம் – இல்லை. 

திரும்பி வரும் வழியில் இயக்கச்சியில், தன்னுடைய வீடிருந்த காணியைத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், காமாட்சி அக்கா. அந்தக் காணியில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அவரோ இன்னும் வேறு யாருடையதோ வீட்டில் தற்காலிகமாகக் குடியிருக்கிறார். 

இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபோது, நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கதறிக் கொண்டிருந்தனர் கறுப்பு உடையணிந்த முதிய தாய்மார். “எங்களுடைய பிள்ளைகள் எங்கே” என்று கதறும் குரல் காதை நிறைத்தது. 

தொடர்ந்து வந்த செய்தியில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான நடை ஊர்வலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து சென்றனர். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படியொரு இணைவு தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிகழ்ந்திருப்பது தெரிந்தது. எல்லோரும் அரசாங்கத்தைக் கண்டித்துச் சென்றனர். 

இதற்கடுத்ததாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 100 க்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்த காட்சி போனது. அதில் எந்த அரசியற் கைதிகளுக்கும் விடுதலை கிடைத்திருக்கவில்லை. 

மேலும் கொவிட் 19 தொற்றினால் 700க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். மூவர் மரணமடைந்ததாகவும் சொல்லப்பட்டது. 

ஒரு பெருமூச்சோடு இரவு படுக்கைக்குச் சென்றேன். 

நெருக்கடி நிலையில் நாடிருப்பதாகத் தோன்றியது. இது யுத்த காலத்தையும் விட மோசமான நிலையாகும். 

உண்மையில் யுத்தம் முடிந்தபோது பலரும் எதிர்பார்த்தது, நாட்டில் இனி அமைதி நிலை தோன்றி விடும். பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீளும். அரசியற் கொந்தளிப்புகளும் குழப்ப நிலையும் தணிந்து விடும். சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நீங்கி, சுமுக நிலை உருவாகும். அரசியல் தீர்வு எட்டப்படும். வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் நீங்கும் அல்லது குறையும் என்றே. 

ஆனால், நடந்திருப்பதும் நடந்து கொண்டிருப்பதும் வேறு. இதற்கு மாறானது. 

யுத்த காலத்திலிருந்ததையும் விட மோசமானதாக இலங்கைச் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியும் முரண்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக யுத்த காலத்தில் முஸ்லிம் சமூகமும் மலையக மக்களும் அரசாங்கத்துடன் அல்லது ஆட்சியாளர்களுடன் ஒரு இணக்க நிலையையே கடைப்பிடித்திருந்தனர். 

இன்றோ இவர்கள் அரசாங்கத்துக்கு எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

2015 இல் இருந்த அரசாங்கத்தோடு சம பங்காளிகளாக தமிழ்த்தரப்பு இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் காண்பித்த அந்த அரசியல் நல்லுறவும் இணக்கப்பாடும் பொருளற்று உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. பதிலாக அவர்கள் தொடர்ந்தும் அந்நியர் என்ற நிலையில், தோற்கடிக்கப்பட்டோர் என்ற வகையில் அவர்கள் நோக்கப்படுகின்றனர். அப்படியே கையாளப்படுகின்றனர். 

இதனால் அவர்கள் மறுபடியும் அரச எதிர்ப்பு மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு தங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வும் நீதியும் கிடைக்கும் என்பதற்கு மாறாக இந்தியா, அமெரிக்கா, ஐ.நா என்று வெளிச் சக்திகளிடம் தீர்வையும் நியாயத்தையும் எதிர்பார்க்கிறார்கள். 

இதேவேளை ஐ.நா, அமெரிக்கா, இந்தியா, சீனா எனப் பல்வேறு தரப்பினர்களுடைய வெளி அழுத்தங்களும் தலையீடுகளும் வலுவடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடி உச்சமைடைந்துள்ளது. உள்ளுர் உற்பத்தியைப் பெருக்கி இதைச் சரிப்படுத்திவிடலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது. 

ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்காமல், அவற்றின் விலையைக் குறைக்காமல், மக்களின் வயிற்றுப் பசியைப் போக்காமல் எந்த அபிவிருத்தியையும் செய்து விட முடியாது. பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும் என்பதற்கும் அப்பால் பதினைந்தும் போய் விடும் என்பதே உண்மை. இதற்குப் பதிலாக 27அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்குறைப்புச் செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இது அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சொல்கிறார். 

அப்படியென்றால் மூன்று மாதங்களுக்குள் நிலைமை சீராகி விடுமா? பொருளாதாரத்தில் மேம்பாடு கிட்டி விடுமா? என்று கேட்கிறார்கள் சனங்கள். 

அறுவடை செய்யும் நெல்லைக் காய வைப்பதற்கு முடியவில்லை. அதற்குரிய களங்களுமில்லை. களஞ்சியமில்லை என்று வீதி நீளத்துக்கும் நெல்லைப் பரப்பி வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். 

கூடுதலான நெல் உற்பத்திப் பிரதேசங்களில் ஆண்டுக்கு ஒரு களஞ்சியத்தை நிர்மாணித்தாலே விவசாயிகளின் நெருக்கடி தீர்ந்திருக்கும். அபிவிருத்தி என்பது தேவைகளைப் பகுப்பாய்வு செய்து, சரியாகத் திட்டமிட்டு முறையாகச் செய்தாலே வெற்றியளிக்கும். இல்லையெனில் அது குறைவிருத்தியாகவே போய் முடியும். 

ஏறக்குறைய இந்த நிலைதான் இலங்கையில் உள்ளது. அதனால்தான் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய், பாவற்காய், மஞ்சள், புளி போன்ற சமையலுக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

உண்மையில் இந்தப் பொருட்களை இப்படி இந்தளவு அதிகரித்த விலைக்கு விற்க வேண்டிய தேவை என்ன? நியாயம் என்ன? இவற்றின் உற்பத்திச் செலவு இந்தளவுக்கு ஒரு போதுமே இருக்காது என்பது அனைவருக்குமே தெரியும். அப்படியிருந்தும் விலை கூட்டப்பட்டுள்ளது என்றால் இதைக் கவனிப்பதும் கட்டுப்படுத்துவதும் யாருடைய பொறுப்பு? இப்படித்தான் இன்று நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டிருப்பதும். அரசாங்கம் விலைக்குறைப்புச் செய்த பொருட்களும் அறிவிக்கப்பட்ட விலைக்குத்தான் விற்பனை செய்யப்படும் என்பதற்கு எந்த வகையான உத்தரவாதமும் இல்லை. இதை ஏன் துணிந்து கூற முடிகிறது என்றால், அரசாங்கம் அறிவித்தபடி அரிசியின் கட்டுப்பாட்டு விலை எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை. அது இடத்துக்கிடம் கடைக்குக்கடை வெவ்வேறு விதமாக விற்கப்படுகிறது. கூட்டுறவுக் கடைகளில் கூட அரசு அறிவிப்புக் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

சனங்கள் இப்படிப் பல விதமான பிரச்சினைகள், நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே வாழ வேண்டியுள்ளது. இதற்குள் வேலையில்லாப் பிரச்சினை, சம்பளப் போதாமை என்ற பிரச்சினைகள் வேறு. பொருட்களின் விலை இந்தளவுக்கு அதிகரித்திருக்கும்போது நாளொன்றுக்கு 1000 ரூபாய் கூலியைக் கொடுக்க முடியாது என்று மலையக மக்களின் உழைப்புரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதைச் சரிப்படுத்தலாம் என்று அரசாங்கம் கருதினாலும் நினைக்கும் அளவுக்கு இதை எளிதில் செய்ய முடியாது என்பதை நிலைமைகள் காட்டுகின்றன. 

ஆகவே நாட்டில் கவனிக்கவும் தீர்வு காணவும் பட வேண்டிய ஆயிரம் அவசிய – அவசரப் பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் மூன்றாம் பட்சம், நான்காம் பட்சமாக்கி விட்டு தொல்லாய்வுப் பணிகள் போன்றவை முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. முதன்மைப்படுத்தப்படுகின்றன. 

இதனால்தான் எதிர்த்தரப்புகளும் அரசுக்கு எதிராகச் சனங்களைத் திரட்ட வாய்ப்பாகிறது. இப்பொழுது வடக்குக் கிழக்கில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான எதிர்ப்பு நடைப்பயணம் நடந்து கொண்டிருக்கிறது. இது சரியா பிழையா என்பது ஒரு புறமிருக்கட்டும். இதற்கு வாய்ப்பான சூழல் இதை முன்னெடுப்போருக்குக் கிடைத்துள்ளதை மறுக்க முடியாது.  

மக்கள் இந்தப் போராட்டத்தின் பக்கம் அணிதிரள்வதற்கான உளநிலையை உருவாக்கியதில் அரசுக்குப் பங்குண்டு என்பதையும் மறுக்க முடியாது. இதெல்லாம் நிலைமைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியே தீரும். எவருக்கும் இதனால் நன்மைகள் விளைந்து விடப்போவதில்லை. சரியாகச் சொன்னால், இதனால் கூடுதலான நன்மைகளை வெளிச்சக்திகளே பெறும். குறிப்பாக இந்தியாவும் மேற்குலகும். நாட்டைக் கொந்தளிப்புக்குள்ளாக்கி, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தித் தங்கள் வாணிபத்தையும் வல்லாதிக்கத்தையும் அதற்குள் பிரயோகிப்பதற்கே சீனா தொடக்கம் இந்தியா, அமெரிக்கா வரையில் முயற்சிக்கின்றன. இதற்குத் தேவையில்லாத வகையில் பலிக்கடாவாகிக் கொண்டிருக்கிறோம் நாமெல்லாம். 

இதேவேளை பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான எதிர்ப்பு நடைப்பயணத்தில் சில குறிப்பிடக் கூடிய விடயங்களும் நடந்துள்ளன. அதில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் இணைவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் முக்கியமானவை. இது வழமையான தமிழ் தேசிய கோரிக்கைகள் அல்ல என்பது கவனத்துக்குரியது என்கிறார் ராகவன் என்கிற சின்னையா ராஜேஸ்குமார். பிரிவினை கோரிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு காலகட்டத்தின் முதன்மைப் போராளித் தலைவர்களில் ஒருவராக இருந்த ராகவன், இப்பொழுது விடயங்களை நோக்கும் நிலையே வேறு. “சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்தல் மூலமே இலங்கை தீவுக்குள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் ராகவன். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபவனியைப் பற்றி ராகவன் மேலும் சொல்லும் விடயங்கள் கவனத்திற்குரியவை. “ஜனசா எரிப்பு, மலையக மக்களின் சம்பளக்கோரிக்கை, அகழாய்வு போன்ற பல்வேறு அம்சங்களை அடக்கியிருப்பது தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் கலாச்சார இருப்பை இலங்கைக்குள் உறுதி செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. 

ஆனால் விலைவாசி உயர்வு, மக்களின் அன்றாட வாழ்வு போராட்டம் சம்பந்தமான கோரிக்கைகள் (மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிக்கை தவிர்த்து) இல்லாதது பற்றி கவனித்தல் அவசியம்.  

அத்துடன் இந்த பேரணியின் அடிப்படை ஐ நா வையும் உலக நாடுகளையும் கவனத்தில் ஈர்ப்பதற்கான போராட்டமாக காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் உண்டு. ஐ நா வோ உலக நாடுகளோ சிறுபான்மை மக்களின் போராட்டங்களை செவிமடுத்து அவர்களுக்கான தீர்வை வழங்கமாட்டாது என்பது வரலாற்று அனுபவம். எனவே போராட்டங்களின் அடிப்படை மக்கள் சார்ந்து இருத்தல் அவசியம். அத்துடன் சிவில் உரிமை போராட்டங்களுக்கான நீண்ட காலத்திட்டங்களும் தந்திரோபாயங்களும் அவசியம். சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்தல் மூலமே இலங்கை தீவுக்குள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதற்கான அரசியல் தயாரிப்பு கூட்டமைப்பிடமோ அல்லது மற்றைய கட்சிகளிடமோ இல்லை. தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அமைப்பு ரீதியான கட்டுமானமும் இல்லை. 07ஆம் தேதிக்குப்பின் அடுத்த போராட்டம் என்பது எப்போது என்பது யாருக்கும் தெரியாத நிலை. தமிழரசு கட்சியோ (1961 சத்தியாகிரகம் தவிர்ந்து) கூட்டமைப்போ இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்களை செய்வதில்லை.  

பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகளே அவர்களுக்கான முக்கிய விடயமாக இருக்கிறது. இந்த சிந்தனை முறையிலிருந்து மீளாவிட்டால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. பொத்துவிலிலிருந்து பொலிகண்டி பொத்துவிலிலிருந்து பொல்காவலவுக்கு மாறுவது அவசியம். தமிழ் பேசும் சமூகங்கள் இலங்கையின் பிரஜைகள் அவர்களுக்கான சமூக நீதியை உறுதிப்படுத்தல் இலங்கையின் ஜனநாயக வாழ்வுக்கான முதல் படி என்பதை அனைத்து மக்களும் உணரும் வகையிலான போராட்டங்களே அவசியம்” எனவும், எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது அடுத்த சுதந்திர தினத்தையும் நிறைவாக இலங்கைச் சமூகங்கள் மகிழ்வாக – நிறைவாக உணரும் என்று தோன்றவில்லை. நாடு கண்ணுக்குத் தெரியாத யுத்தத்திற்குள்ளேயே தொடர்ந்தும் சிக்கியுள்ளது. 

 

https://arangamnews.com/?p=3587

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத்தோட்டம், வெறும் வளவுகளில மரக்கறித் தோட்டம் செய்தால் ஓரளவு சுயதேவையை சமாளிக்கலாம்.

பொத்துவில் பொல்காவல பேரணி நாட்டில் ஏதேனும் அதிசயம் நடந்தாலே சாத்தியம். வடகிழக்கில செய்வதே பெரும்பாடா இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

வீட்டுத்தோட்டம், வெறும் வளவுகளில மரக்கறித் தோட்டம் செய்தால் ஓரளவு சுயதேவையை சமாளிக்கலாம்.

பொத்துவில் பொல்காவல பேரணி நாட்டில் ஏதேனும் அதிசயம் நடந்தாலே சாத்தியம். வடகிழக்கில செய்வதே பெரும்பாடா இருக்கு!

இந்திய டிவி நாடகங்கள் பார்ப்பதை குறைத்து  வீட்டு  தோட்டம் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே பாதி  பிரச்சனையை சமாளிக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமக்கு தேவையான மரக்கறிகளை தாமே உற்ப்பத்தி செய்தால் நஞ்சில்லாத உணவை உண்ணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

மக்கள் தமக்கு தேவையான மரக்கறிகளை தாமே உற்ப்பத்தி செய்தால் நஞ்சில்லாத உணவை உண்ணலாம்.

தற்போது எல்லோரும் வளர்ச்சியை விரும்புகிறார்கள் ஆனால் சாப்பிட சோறு வேண்டும் எதுவும் செய்யாமல் , ஆடு , கோழி, மாடு வளர்ப்பதை விட்டு விட்டு வெளிநாட்டு நாய் வளர்க்கிறார்கள் , முட்டை , இறைச்சி கொடுத்து. 

மார்க்கட் பக்கம் போனன் பச்சை மிளகாய் 1250 ரூபா கிலோ சில இடங்களில் அதிக மழையால் மரக்கறிக்கு சரியான தட்டுப்பாடு , மலிவாக கிடைப்பது மரவள்ளி மட்டும் 3 கிலோ 100 ரூபாய் 

தற்போது 5000 ரூபா காசு மாற்றினாலே காணாமல் போகிறது விலைவாசி அப்படி இலங்கையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தற்போது 5000 ரூபா காசு மாற்றினாலே காணாமல் போகிறது விலைவாசி அப்படி இலங்கையில் 

இதைத்தான் நான் பலமுறை எழுதிவருகிறேன் யார் எவ்வாறு விளங்குகிக்கொள்கிறார்கள் 
என்பதுதான் புரியவில்லை. இன்னும் ஒரு 15-20 வருடத்தில் சாதரண இலங்கை சம்பளத்தில் வாழும் ஒரு குடும்பத்தால் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழமுடியாத நிலை தோன்றும். அவர்கள் நிற்ச்சயம் வெளியேறி கொள்வார்கள் அப்போது தமிழ் பிரதேசம் நோக்கிய சிங்கள மக்களின் நகர்வு தவிர்க்க முடியாதது. அவர்களை நாம் சிங்களவர்கள் என்பதனால் புறம்தள்ளுவது தொடர் தோல்விகளையே தரும், அவர்களை எங்களுடன் சேர்த்து வாழ கூடிய  சூழலுக்கு நாம் இப்போதே தயாராக இருந்தால் வெற்றியோடு வாழலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இதைத்தான் நான் பலமுறை எழுதிவருகிறேன் யார் எவ்வாறு விளங்குகிக்கொள்கிறார்கள் 
என்பதுதான் புரியவில்லை. இன்னும் ஒரு 15-20 வருடத்தில் சாதரண இலங்கை சம்பளத்தில் வாழும் ஒரு குடும்பத்தால் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழமுடியாத நிலை தோன்றும். அவர்கள் நிற்ச்சயம் வெளியேறி கொள்வார்கள் அப்போது தமிழ் பிரதேசம் நோக்கிய சிங்கள மக்களின் நகர்வு தவிர்க்க முடியாதது. அவர்களை நாம் சிங்களவர்கள் என்பதனால் புறம்தள்ளுவது தொடர் தோல்விகளையே தரும், அவர்களை எங்களுடன் சேர்த்து வாழ கூடிய  சூழலுக்கு நாம் இப்போதே தயாராக இருந்தால் வெற்றியோடு வாழலாம். 

நீங்கள் சொல்வது உண்மை தான் சிங்கள மக்கள் நகர்களை விட்டு நகர்ந்து வருகிறார்கள் வடகிழக்கில் அவர்கள் வந்து குடியேறி வருகிறார்கள் எல்லா வளங்களும் நிறைந்த பகுதிகள் எமது பகுதிகள் ஆனால் நகரை நாடுகிறார்கள் நம்மவர்கள். நகர் பகுதியில் கடை, வீடுகள் வாங்கி செட்டில் ஆகிறார்கள், கடற்றொழில் கூட இங்கே வந்து செய்கிறார்கள் நல்ல தொழில் வாய்ப்பை கண்டதும் போக மறுக்கிறார்கள் ஆனால் தொழில் செய்யும் வாய்ப்புகள் இல்லாமல் அரசிடம் பேரம் பேசி தொழில் வாய்ப்பை நமது அரசியல் வாதிகள் ஏற்படுத்தாதும் இன்னும் சில வருடங்களில் பெரும்பான்மை ஆவார்கள் இருப்பதும் இல்லாமல் போகும் நாம் அதே பல்லவியை பாடி அதே இடத்தில் நிற்கத்தான் போகிறோம். 😕😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருக்கும் இளைய சமூகம் இலகுவாய் பணம் உழைக்கும் வழியையைத் தான் தேடுகின்றனர் ...வயல் ,தோட்ட வேலைகளில் ஈடுபட அல்லது மினக்கெட விருப்பமில்லை ...வீடுகளில் கூட வடிவிற்கு பூக்கன்றுகள் நடுகிறார்களே தவிர பிரயோசமுள்ள காய்கறிகள்,பழவகை போன்ற பிரயோசனமுள்ள தாவரங்களை வளர்க்க விரும்புவதில்லை 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?

March 2, 20211 min read
இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?

 — கருணாகரன் — 

உண்மையாகவே இலங்கை ஒரு கூட்டுத் தண்டனைக்குள்ளாகியுள்ளது. இதைச் சொல்லும்போது உங்களுக்குப் பலவிதமான யோசனைகள் அல்லது கேள்விகள் எழலாம். அல்லது ஒன்றுமே புரியாத குழப்பமாகவும் இருக்கக் கூடும். இந்தக் கூட்டுத் தண்டனை என்பது இலங்கையர்கள் அனைவரும் விட்ட, விட்டுக் கொண்டிருக்கும் தவறுகளுக்கான தண்டனையாகும்.  

இதனால் இதுவரையிலும் இருந்ததைப் போலன்றி, இப்பொழுது நேரடியாகவே வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் இலங்கையில் அதிகரித்திருக்கின்றன.  

இந்தியா, சீனா, மேற்குலகம் என்ற மூன்று முனை இழுவிசைக்குள் கடுமையாகச் சிக்குண்டிருக்கிறது நாடு. இதில் யாரும் யாரையும் குறை சொல்லியோ குற்றம் சாட்டியோ பயனில்லை. எல்லோரும் குற்றவாளிகளே. இன்றைய உலக அரசியல் (பூகோள அரசியல்) எப்படியானது என்று விளங்கிக் கொள்ளாமல் விளையாடியதால், விளையாடிக் கொண்டிருப்பதால் வந்திருக்கும் வினை இது. இந்த அரசியலின் பொருளதாரப் போட்டிக்கு அல்லது பொருளாதார அரசியலின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டிருக்கிறது. 

இதற்கு இலங்கையைச் சரியான முறையில் வழிநடத்தத் தவறிய இலங்கையரின் அரசியலே காரணமாகும். இந்தத் தவறான அரசியலை முன்னெடுத்த இலங்கையில் உள்ள ஆளும் தரப்பு – எதிர்த்தரப்பு – போராடும் தரப்பு – போராடிய தரப்பு என அனைத்துத் தரப்பையும் சாரும். இவற்றுக்குப் பின்னால் விரும்பியும் விரும்பாமலும் ஆதரித்தும் இழுபட்டும் சென்ற மக்களையும் சேரும். முக்கியமாக ஒரு சிறிய தேசமான இலங்கையில் உள்ள இரண்டு கோடி மக்களுக்கிடையில் உள்ள அகப் பிளவையும் அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையும் மனித உரிமைகள் விவகாரங்களையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்த வெளிச் சக்திகள். 

உள்ளும் புறமும் முரண் 

இதன் விளைவாக இப்பொழுது உள்நாட்டிலும் நிலைமை சீரில்லை. வெளியிலிலும் நிலைமை சீரில்லை. அதாவது வெளிச்சக்திகளோடும் நிலைமை சீரில்லை என்ற நிலைமையே காணப்படுகிறது. 

பிரிவினை யுத்தம் முடிந்து விட்டது. ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, மீளிணக்கம், நல்லெண்ணச் செயற்பாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டாலும், திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் நாடு உள ரீதியாகவும் நடைமுறையிலும்  பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. சமூகங்களுக்கிடையிலான இடைவெளி வரவர அதிகரித்துக் கொண்டு போகிறது. இதன் விளைவாகப் பொருளாதாரம் படு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. முன்பு யுத்தத்தினால் பெருமளவு நிதியும் வளமும் இழக்கப்பட்டன. கூடவே பொருளாதார மேம்பாட்டுக்கு உழைக்கக்கூடிய இளைய தலைமுறையினர் போரில் தங்கள் சக்தியை இழந்தனர். அல்லது வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போயினர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சத்துக்கும் அதிகமானோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர். இதனால் ஒரு காலகட்டத்தின் உழைப்பாளிகள் இல்லை என்றாகியது. மிஞ்சியிருப்போருக்கும் உரிய, ஒழுங்கான தொழிற்துறைகள் இல்லை.  

உணவுத்தட்டுப்பாடு 

குறிப்பாக உற்பத்தித்துறை இல்லை. இதனால் இன்று மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியும் கடன் பொறியும் நம்மைச் சூழ்ந்திருக்குகிறது. மக்கள் நாளாந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  

இப்பொழுது  தங்களுடைய நாளாந்த உணவில் அவர்கள் சேர்த்துக் கொள்ளும் தானியங்களின் அளவு மிகமிகக் குறைந்து விட்டது. குறிப்பாக உழுந்து, பயறு, கடலை, கௌப்பி, எள்ளு போன்றவை எல்லாம் படு பயங்கரமான விலைக்குத் தாவிச் சென்று விட்டன. தானியங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உணவுப் பயன்பாட்டில் வருகிறதோ அந்தளவுக்கு மக்களின் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். உடல் ஆரோக்கியம் இல்லாத மக்களால் உழைக்கவும் முடியாது. புதியதாக –வினைத்திறனுடன் சிந்திக்கவும் முடியாது. ஆற்றற்குறைபாடுடைய மக்களைக் கொண்ட தேசமாக இலங்கை மாறிக் கொண்டிருக்கிறது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு உணவில் எடுத்துக் கொண்ட தானியங்களின் வகையும் தொகையும் இன்றில்லை. அதற்கு முன்னர், நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய முப்பதுக்கு மேற்பட்ட தானியங்களை மக்கள் உணவில் எடுத்தனர். அதற்கு முன்பு ஏறக்குறைய ஐம்பதுக்கும் அதிகமான தானியங்களை எடுத்தனர். அதற்கு முன்னர் இன்னும் கூடுதலான தானியங்கள். இப்பொழுது தானியங்களுக்குப் பதிலாக மாத்திரைகளையும் ரொனிக்குகளையும் எடுத்துக் கொள்கிறோம். இது எந்த வகையில் சரியானதாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களுடையை மக்களின் உடல் ஆரோக்கியத்திலும் சமூக ஆரோக்கியத்திலும் (சமூக ஆரோக்கியம் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவை) கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இலங்கையோ, தீராத சாபம் பெற்ற நாட்டைப்போல வரவர நெருக்கடிகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. தானே உருவாக்கும் நெருக்கடி வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. 

அனைத்து இனமக்களும் சிக்கலில் 

ஆகவேதான் அழுத்திச் சொல்கிறோம், யுத்தம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிய பிறகும் நாடு இன்னும் சீரடையவில்லை என. நாடும் மக்களும் ஏராளம் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியே உள்ளது என. இதில் தமிழ்த் தரப்புத்தான் பிரச்சினைகளால் பாடாய்ப்படுகிறது என்றில்லை. சிங்களத்தரப்பும் இதே நிலையில்தான் உள்ளது. அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. சில பிரச்சினைகள் வேறு விதமானவை. அவ்வளவுதான். ஏன், மலையக மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக – பெரும் சவாலாக உள்ளது. முஸ்லிம் மக்களுக்கு சமகாலத்தில் ஏற்படுத்தப்படும் –ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடிகள். இப்படி ஒவ்வொரு சமூகத்தினருக்கும் என்று பிரத்தியோகமாகவும் இலங்கையர்கள் என்ற வகையில் பொதுவாகவும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது. 

இதற்குத் தனியே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்தான் காரணம் என்றில்லை. மக்களும் காரணம். மக்கள் இயக்கங்கள், அரசியற் தரப்பினரையும் மக்களையும் சரியாக வழிப்படுத்தியிருக்க வேண்டிய ஊடகங்கள், மத அமைப்புகள் மற்றும் மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துத் தரப்புமே பொறுப்பு. இதை ஏன் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், திரும்பத்திரும்பத் தவறுகள் நடப்பதால் நாமும் தவிர்க்க முடியாமல் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது. 

தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் பிழைகள் கூடிச் செல்லும். பிழைகள் கூடிக் கொண்டு போனால் எல்லாமே பாழாகி விடும். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்லும். பின்னர், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதுவும் இதேபோலத்தான் தவறுகளையே செய்து கொண்டிருக்கும். அதை ஏனைய தரப்புகள் எதிர்க்கும். இப்படியே அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு சில தரப்பினரும் அதை எதிர்த்துக் கொண்டு சில தரப்பினரும் என்று ஒரே சமன்பாட்டில் (Formula) காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகளும் சக்திகளும் சரியான முடிவை எடுக்க முடியாமல், வரலாற்றிலிருந்தும் பட்டறிவிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முடியாமலும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றன. 

அனைத்துக்கும் காரணமான இனவாதம் 

இதனால்தான் நாடு யுத்த காலத்தைப்போல, யுத்தத்துக்கு முந்திய காலத்தைப்போல சீரழிந்த நிலையில் உள்ளது. உண்மையில் யுத்தம் நடந்து முடிந்த நாடுகள் அதற்குப் பிறகு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. ஆனால் இலங்கைதான் இன்னும் இருண்ட புதைகுழிக்குள் சிக்கியிருக்கிறது. இதற்கு அது தொடர்ந்தும் முன்னெடுக்கும் இனவாத அரசியலே காரணம். இந்த இனவாத அரசியலில் அனைவரும் பங்காளிகள். இதில் சிங்களத் தரப்பு, தமிழ்த்தரப்பு, முஸ்லிம் தரப்பு என்ற எந்த வேறுபாடுகளுமே இல்லை. 

இப்பொழுது பாருங்கள், அரசாங்கத்தை ஜெனிவாவில் நெருக்கடிக்குள்ளாக்கிக் காட்டுகிறோம் என்று தமிழ்த்தரப்பினர் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இலங்கைக்குத் தண்டனையை வாங்கியே தருவோம் என. முடிந்தால் அதைச் செய்து பாருங்கள் என்று அரசாங்கமும் சிங்களத் தரப்பும் சொல்கிறது. வேண்டுமானால் இதற்குப் பதிலாக இன்னும் இன்னும் நெருக்கடியை – கூட்டுத்தண்டனையை உங்களுக்குத் தருவோம் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படித்தான் அரசாங்கத்தைக் கூட்டுக்குள் அடைக்க அல்லது கட்டுப்படுத்திக் கொள்ள முஸ்லிம் தரப்பு முயற்சிக்கிறது. முஸ்லிம் தரப்பைக் கட்டி வைக்க அரசாங்கமும் சிங்களத் தரப்பும் முயற்சிக்கின்றன. இப்படியே ஆளாளுக்குப் பொறி வைக்கிற காரியங்களும் முனைப்பும் நடக்கிறதே தவிர, நாட்டை முன்னேற்றுவதைப் பற்றியோ, அதைப் பாதுகாப்பதைப் பற்றியோ யாரும் சிந்திக்கவில்லை. இதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான நியாயங்களைச் சொல்வர். அதில் உண்மையும் உண்டு. நியாயமும் உண்டு. ஆனால், அந்த நியாயங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காணவே முடியாது. 

முக்கியமாக எவரும் எந்த ஒரு தரப்பையும் மட்டும் திருப்திப்படுத்திக் கொண்டு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் நெருக்கடிகளைக் குறைக்கவும் முடியாது. இலங்கையை மீட்டெடுத்துக் காப்பாற்றவும் முடியாது. இன்றைய நிலையில் இலங்கைத்தீவு வெளிச்சக்திகளிடமிருந்தும் உள்நாட்டின் சீரழிவுச் சக்திகளிடமிருந்தும் காப்பாற்றப்பட்டால் மட்டுமே இலங்கையர்களுக்கு மீட்சி. இல்லையெனில் மிகப் பெரிய ஆபத்தே ஏற்படும். 

அனைத்து ஆபத்தும் மக்களுக்கே 

ஏனென்றால், நாட்டுக்கு வரும் ஆபத்தும் நெருக்கடியும் அனைவருக்கும் பொதுவானவை. அத்தனை சுமையையும் மக்கள்தான் ஏற்க வேண்டும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. அதில் தமிழர்கள் வேறு. சிங்களவர் வேறு. முஸ்லிம்களும் மலைய மக்களும் வேறு என்று எந்தப் பேதங்களும் இல்லை. ஒரு எளிய உண்மை. இப்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையினால் ஏதாவது நெருக்கடிகள் அல்லது இலங்கைக்குத் தண்டனை என்று வந்தாலும் அது முதலில் ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் மீதான நெருக்கடியாகவும் அழுத்தமாகவுமே இருக்கும். ஒரு சில தனி நபர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். அதற்கு அப்பால் ஏனைய அனைத்தும் சகல மக்களுக்குமானவையே. 

அதேவேளை பாதிக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்பது அவசியமானதே. அது யாராக இருந்தாலும். இதில் செய்ய வேண்டியது பிறத்தியாரின் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் நாமே உரிய பரிகாரங்களை – நேர்மையாகவும் விசுவாசமாகவும் மேற்கொள்வதேயாகும். இதற்குத் துணிச்சலான மனமும் உறுதியான நடவடிக்கையும் அவசியம். அதைச் செய்வதே சரி. அவர்களே உண்மையான தலைவர்கள். சரிகளைச் செய்வதற்கு எதன் பொருட்டும் தயங்குவோரும் சாட்டுகளைச் சொல்லிக் காலத்தைக் கடத்துவோரும் தலைவர்களே அல்ல. இலங்கைக்குத் தேவையானது துணிச்சல் மிக்க தலைவர்களே. அனைவரையும் சமத்துவமாக நோக்கக் கூடிய –இலங்கை ஒரு சோசலிஸ ஜனநாயகக் குடியரசு என்ற பெயருக்குத் தக்கமாதிரி நடந்து கொள்ளக் கூடிய தலைவர்களே. 

அவர்களால்தான் எல்லாவகையான நெருக்கடிகளையும் தீர்வுக்குக் கொண்டு வர முடியும். பொருளாதார நெருக்கடிகளை கடன்பட்டு ஒரு போதும் தீர்க்க முடியாது. படுகின்ற கடனை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம். அப்படிப் பயன்படுத்துவதற்கு எப்படியான ஒழுங்குளை மேற்கொள்ளப்போகிறோம். அந்த ஒழுங்கில் எல்லோரையும் எப்படி உட்படுத்தப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். அதை விடுத்து அன்றன்றைய பிரச்சினையை மட்டும் பார்ப்போம் என்றால் நாடு இதையும் விட மோசமான நிலைக்கு செல்லும். இப்போது சில இடங்களில் ஒரு வருத்தத்திற்குரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல இடங்களிலும் உள்ள பெயர்ப்பலகைகளிலும் அறிவிப்புப் பதாகைககளிலும் சிங்களம், சீன மொழி, ஆங்கிலம் என்றே அவை அமைக்கப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறது? உள்ளுரில் – ஒரு வீட்டுக்குள் அண்ணன் தம்பிகளாக –அக்கா தங்கைகளாக இருக்கத் தயாரில்லை. பதிலாக யாரையோ தயவு பண்ணி, அவர்களுக்குக் கீழே இருக்கத் தயாராக இருக்கிறோம் என. இதுதான் தமிழ்ப்பரப்பிலும் நிகழ்கிறது. ஒரு தேசியக் கொடியின் கீழே நிற்க முடியாதவர்கள் இன்று உலகெங்கும் உள்ள கொடிகளின் கீழே நிற்கிறார்கள். இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன? இதிலிருந்து மீள்வது எப்போது? அது எப்படி? 
 

https://arangamnews.com/?p=4006

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.