Jump to content

பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு!

பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்

பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்

உற்பத்தி

பிரீமியம் ஸ்டோரி

பூலோகத்தின் ‘கற்பகத்தரு’ என அழைக்கப்படுகிறது பனை. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சுவதன் மூலம் கிடைப்பதுதான் கருப்பட்டி (பனை வெல்லம்). தமிழகத்தின் சில பகுதிகளில் பனைவெல்ல உற்பத்தி நடந்தாலும் ‘உடன்குடி’தான் கருப்பட்டிக்குச் சிறப்புப் பெற்ற ஊர். மருத்துவ குணமிக்கப் பாரம் பர்யமான முறையில் கருப்பட்டியைக் கலப்படமில்லாமல் உற்பத்தி செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ளது ராமலிங்கத்தின் பனந்தோட்டம். பனங்கிழங்கு அறுவடையில் ஈடுபட்டிருந்த அவரைச் சந்தித்தோம். தித்திப்பான கருப்பட்டிக் காபியைப் பருகக் கொடுத்தபடியே பேச ஆரம்பித்தார். ‘‘பனையேற்றம்தான் எங்க பூர்வீகத் தொழில். அஞ்சாம் கிளாஸ் வரைக்கும்தான் படிச்சேன். பிறகு, எங்கப்பாக்கூடவே இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். 13 வயசுல பனையேறி கலசம்கட்டி பதநீ இறக்க ஆரம்பிச்சுட்டேன். தொழில் இல்லாத மாசங்கள்ல வயக்காட்டு வேலைக்கும் போவேன். இதுவரைக்கும் பத்தாயிரம் பனை மரங்களுக்கும் மேல ஏறி இறங்கிருப்பேன்’’ என்றவர், கருப்பட்டி உற்பத்தி தகவலுக்குள் புகுந்தார்.

‘‘திருச்செந்தூர்ல இருந்து உடன்குடி வரைக்கும் இருக்க எல்லா ஊர்லயும் கருப்பட்டி தயாரிக்குறாங்க. மார்ச் மாசத்துல இருந்து ஆகஸ்ட் வரைக்கும்தான் சீஸன். 20 வருஷத்துக்கு முன்னெல்லாம் திருச்செந்தூர் சுத்து வட்டாரத்துல 3 லட்சம் பனைமரங்க இருந்துச்சு. ஆனா, இப்போ ஒரு லட்சம் மரங்ககூட இல்ல. 10,000 பேர் இந்தத் தொழில்ல இருந்தாங்க. இப்ப 1,000 பேர்கூட இல்ல.

ஏப்ரல்ல இருந்து செப்டம்பர் வரைக்கும் தான் பதநீர் கிடைக்கும். அப்பதான் கருப்பட்டி, கல்கண்டு உற்பத்தி அதிகமா நடக்கும். மத்த ஆறு மாசம் வேற ஏதாவது வேலையைத் தேடிப் போகணும். தைப்பொங்கல் அன்னிக்குக் காலையில, பனந்தோட்டத்துல, நல்ல பனையாப் பார்த்து அந்த மரத்துக்கு மாலை போட்டுத் தேங்காய்ப் பழம் உடைச்சு பத்தி, சூடம் காமிச்சு கும்பிடுவோம். அந்தப் பனை மரத்தில ஏறி பாளையை இடுக்கிவிட்டு லேசா சீவி விடுவோம். இதுக்குபேரு ‘பனைக்கு நாள் செய்யுறது’ன்னு சொல்வாங்க. சீஸனுக்கு முன்னால நல்ல நாள்ல இப்படிச் செஞ்சா அந்த வருஷம் பனைமரங்கள்ல பதநீர் வத்தாம கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. இந்தப் பகுதிகள்ல இன்னமும் இந்த நாள் செய்யுற முறை வழக்கத்துல இருக்கு.

பனங்கருப்பட்டி
 
பனங்கருப்பட்டி

சீஸன் காலத்துல தினமும் காலையில பாளையோட நுனியை சீவிவிட்டு, உள்பக்கம் சுண்ணாம்பு தடவுன கலசத்தை (சிறிய பானை) கட்டி, பாளையோட நுனியைக் கலசத்துக்குள்ள கவுத்து வெச்சு கட்டித் தொங்க விடுவோம். பாளையில இருந்து பிசுபிசுப்பா சொட்டுச் சொட்டா பானைக்குள்ள வடியும். இதுதான் ‘பதநீர்’. ஒரு நாளுக்கு ரெண்டு நேரமும் பாளையச் சீவணும். இல்லாட்டா, பாளை காய்ஞ்சு உறைஞ்சு பதநீ வடியுறது நின்னுரும். முதல் நாள் காலையில கட்டுற கலசத்தை அடுத்த நாள் காலையில இறக்கிடுவோம்” என்றவர் கருப்பட்டி, கற்கண்டு உற்பத்தி செய்யும் முறை குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

மெழுகுப் பதத்தில் கருப்பட்டி!

“பனைமரத்துல இருந்து இறக்குறப் பதநீயை வடிகட்டித் தாச்சுல (இரும்பினாலான வட்ட வடிவக் கொப்பரை) ஊத்தி காய்ச்சணும். 2 மணி நேரத்துல கூழ் மாதிரி மாறிடும். அதைத்தான் ‘கூப்பனி’ன்னு சொல்றோம். கூப்பனிக்குள்ள அகப்பையை முக்கி எடுத்துப் பார்த்தா, ஒரு துளி மட்டும் வழியும். இதைக் கம்பிப்பதம்னு சொல்வோம். அந்த நேரத்துல 50 கிராம் ஆமணக்கு விதையை இடிச்சுத் தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைச்சு ஊத்தணும். இதை ஊத்துனாத்தான் கருப் பட்டிக்கான பதம் வரும். அது மட்டுமில்லாம, கூப்பனிப் பொங்கி வெளியேறாது.

அடுத்த அரை மணி நேரத்துல கூப்பனி வத்தி, மூணுல ஒரு பங்காகக் குறையும். அந்த நேரத்துல அகப்பையைத் திரும்பவும் முக்கி எடுத்து, ஒரு துளியை விரலால உருட்டிப் பார்த்தா, மெழுகுப் பதத்துல இருக்கும். இதுதான் கருப்பட்டிக்கான பதம். இதை வேறொரு பாத்திரத்துல மாத்தி, வடலி மட்டையால நாலஞ்சு தடவை கிளறினாலே கெட்டிப் பட்டுடும். இதுக்கிடையில, பதநீயைக் காய்ச்சுறதுக்கு முன்னாலயே, அரையடி உயரத்துல மணலைப் பரப்பணும். அதுமேல ஈரத்துணியை விரிச்சு, அதுல தண்ணில ஊற வைச்ச ஒற்றைக்கண் துளையிடப்பட்ட சிரட்டைகளை (தேங்காய்களின் மூன்று கண்களில் ஏதாவது ஒரு கண்ணில் துளை யிட்டிருக்க வேண்டும்) வரிசையாக அடுக்கி வைக்கணும். சிரட்டைக்குள்ள கருப்பட்டிப் பாகுவை ஊத்தணும். அரைமணி நேரத்துக்குள்ள கருப்பட்டி கெட்டிப்பட்டுடும். பிறகு, ஒவ்வொரு சிரட்டையை எடுத்துத் துளையிடப்பட்ட கண்ணுக்குள் குச்சியால குத்தினாலே கருப்பட்டி தனியாக வந்துடும். இதைப் பெட்டிகள்ல சேகரிச்சு வெச்சுக்குவோம்.

பனங்கற்கண்டு
 
பனங்கற்கண்டு

மாவுப் பதத்தில் கற்கண்டு!

பனங்கல்கண்டும் இந்த முறையிலதான் காய்ச்சுவோம். ஆனா, மெழுகுப் பதத்துக்குப் பதிலா மாவு மாதிரி வழுக்கிப் போற பதம்தான் கல்கண்டுக்கான பதம். இதில், கூடுதல் பதம், குறைஞ்ச பதம்னு ரெண்டு பதம் இருக்கு. பதம் கூடினா, (கூப்பனியின் அளவு குறைவாக இருக்கும்) கல்கண்டு சின்ன சைஸா இருக்கும். பதம் குறைஞ்சா, (கூப்பனியின் அளவு அதிகமாக) கல்கண்டு பருமனா இருக்கும். இதுல பதம்தான் ரொம்ப முக்கியம். சீஸன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கல்கண்டு உற்பத்திக்கான அறையைத் தயார் செய்யணும். பனையோலையில கூடம் மாதிரி அமைக்கணும். அதுக்குள்ள பெரிய மண் பானைகளை, ஒரு அடி இடைவெளியில மண்ணுக்குள்ள புதைச்சு வைக்கணும். பானையின் கழுத்துப்பகுதி மட்டும்தான் வெளியே தெரியணும். பானைக்குள்ள ‘சீலாப்பிக் கொரண்டு’ (காய்ந்த சிவனார் வேம்புச்செடி) வெச்சு கூப்பனியை ஊத்தி ஓலைப் பெட்டியால் மூடிடணும்.

பானைக்குள்ள வெச்சிருக்குற கொரண்டுல கூப்பனி ஒட்டி கல்கண்டாகும். இந்தப் பானையை 40 நாள்கள் வரை அப்படியே வெச்சிருக்கணும். 41-வது நாள் பெட்டியைத் திறந்து, இரும்புக் கம்பியால குத்தி, கொரண்டுவை வெளியே எடுத்துத் தட்டினா கல்கண்டு உதிரும். பானைக்குள்ள ஊத்துன கூப்பனி முழுசுமே கல்கண்டாக மாறாது. கால் பானை அளவு கூப்பனி மிச்சம் இருக்கும். அந்தக் கூப்பனியை வெளியில எடுத்து வெயில்ல காய வெச்சா கெட்டியாயிடும். அதைத் தட்டித் தூளாக்கி புகையிலைக்கு இனிப்புச் சேர்க்க பயன்படுத்துறாங்க” என்றவர் கொஞ்சம் கற்கண்டு கொடுத்து சுவைத்துப் பார்க்கச் சொன்னார்.

ஏப்ரல்ல இருந்து செப்டம்பர் வரைக்கும்தான் பதநீர் கிடைக்கும். அப்பதான் கருப்பட்டி, கல்கண்டு உற்பத்தி அதிகமா நடக்கும்.

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய ராமலிங்கம், “என் தோட்டத்துல 200 பனைமரங்க இருக்கு. இது எல்லாமே பலன் தரக்கூடிய மரங்கதான். ஆனா, பனையேத்தத்துக்கு ஆளுங்க கிடைக்காததுனால 75 பனைகள்ல மட்டும்தான் பதநீ இறக்கி கருப்பட்டி, கல்கண்டு காய்ச்சுறேன். போன வருஷம் 500 கிலோ கருப்பட்டி, 750 கிலோ கல்கண்டு கிடைச்சுது. ஒரு கிலோ கருப்பட்டி 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரையிலும், கல்கண்டு ஒரு கிலோ 450 முதல் 550 ரூபாய் வரையிலும் விற்பனையாகுது. 500 கிலோ கருப்பட்டி விற்பனை மூலமா 1,25,000 ரூபாய், 750 கிலோ கல்கண்டு விற்பனை மூலமா 3,37,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல பனையேறிகளோட கூலி, பதநீர் காய்ச்சுற செலவே மூணுல ஒரு பங்கு போயிடும்.

அந்த வகையில கருப்பட்டி மூலம் 42,000 ரூபாயும், கல்கண்டு மூலமா 1,12,500 ரூபாயும் லாபமாக் கிடைச்சுது. வருமானத்துக்காகவும், லாபத்துக்காகவும் மட்டும் நான் இதைச் செய்யல. பல தலைமுறையா செய்ற பனைத்தொழிலை விட்டுடக் கூடாதுன்னு செஞ்சுக்கிட்டிருக்கேன். எனக்கு வயசும் எழுபதை நெருங்குது. பிள்ளைகளும் வெளியூர்கள்ல இருக்குறதுனால, இந்தத் தொழில்ல ரொம்ப மெனக்கெடுறதில்ல. எந்தக் கலப்படமும் இல்லாம காய்ச்சுறதுனால என் தோட்டத்துக்கே வந்து வியாபாரிங்க வாங்கிட்டுப் போயிடுறாங்க. வேலையாள் பத்தாக்குறையாலதான் இந்தத் தொழில் நலிவடைஞ்சுக்கிட்டே போகுது. இளவட்டங்க ஒண்ணா சேர்ந்து பனந்தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து பதநீ காய்ச்சுனா கருப்பட்டி, கல்கண்டுல நல்ல வருமானமும் கிடைக்கும். பலருக்கு ஜோலியும் கிடைக்கும். பனைத் தொழிலும் உயிர் பெறும்” என்றபடி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, ராமலிங்கம், செல்போன்: 97501 18486

பனங்கற்கண்டு தயாரிப்பு
 
பனங்கற்கண்டு தயாரிப்பு

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா?

ரிஜினல் கருப்பட்டியை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது பற்றிப் பேசிய தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சக்திகுமார், ‘‘கருப்பட்டித் துண்டைக் கடித்து மென்றால், அதன் சுவை கரிப்புத்தன்மையுடன்கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால் அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. கருப்பட்டி வாசனையுடனோ, வாசனை இல்லாமலோ சீனிக்குரிய இனிப்புச்சுவை மட்டும் தெரிந்தால் அது போலி. கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் உட்பகுதி கறுப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். பளபளப்பாக இருந்தால் அது போலி. தேங்காயைத் தட்டிப்பார்ப்பதுபோல, கருப்பட்டியின் பின்புறம் தட்டிப்பார்க்கும்போது சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்ன கருப்பட்டித் துண்டைப் போட்டால் முழுவதும் கரைய குறைந்தது ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆகும். போலி 30 நிமிடங்களிலேயே பாதிக் கரைந்துவிடும். அதேபோல, பனங்கல்கண்டை வாயில போட்டு பல்லால் கடிக்கும்போது இரும்பு துண்டு மாதிரி உறுதியா இருந்தால்தான் அது ஒரிஜினல். கடலை மிட்டாய் மாதிரி ஒரே கடில ரெண்டு துண்டானால், அது சீனிப்பாகு கல்கண்டுன்னு கண்டு பிடிக்கலாம்” என்றார்.

உடல் பளபளப்புக்குக் கருப்பட்டி!

ருப்பட்டி, பனங்கற்கண்டின் மருத்துவக் குணம் குறித்துத் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம். ‘‘கருப்பட்டி ரத்தத்தைச் சுத்திகரித்து உடலைச் சுறுசுறுப்பாக்குவதுடன், மேனி பளபளக்கவும் வைக்கிறது. பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு, கர்ப்பப்பை வலுப் பெறவும் கருப்பட்டிக்களி, உளுந்தங்கஞ்சி செய்து கொடுப்பார்கள். காபியில் சீனிக்குப் பதிலாகக் கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். கருப்பட்டியைவிடக் கல்கண்டில் குளுக்கோஸின் அடர்த்தி அதிகம். வறட்டு இருமல், சளி, தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைகளுக்குப் பசும்பாலைக் காய்ச்சி அதனுடன் மிளகு, பனங்கல்கண்டை ஒன்றிரண்டாக நுனுக்கி காய்ச்சிப் பருகி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். கல்கண்டுப் பொடியை வாயில்போட்டுத் தண்ணீர் குடித்தாலே குளுக்கோஸ் சத்து உடலுக்கு உடனே கிடைத்துவிடும்” என்றார்.

பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்
 
பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம்

அதிகரிக்கும் கலப்படக் கருப்பட்டி!

ருப்பட்டி உற்பத்தியாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவருமான ரவியிடம் பேசினோம். “சீஸன்லதான் கருப்பட்டி, கல்கண்டு தயாரிக்க முடியும். ஆனா, சீனிக்கருப்பட்டி வருஷம் முழுவதும் தயாரிக்குறாங்க. சர்க்கரை ஆலைக் கழிவுகள், மொலாசஸ் கலந்து கருப்பட்டி வாசனைக்காகக் கழிவு கொஞ்சம் கூப்பனி, (கல்கண்டு பானையில் அடியில் தேங்கியிருக்கும் கழிவுப் பதநீர்) சீனி கலந்து சீனிக்கருப்பட்டி தயாரிக்குறாங்க. இந்தக் கருப்பட்டியைத் தொடர்ந்து சாப்பிடுறதால பல நோய்கள் உண்டாகுது.

30 லிட்டர் பதநீரைச் காய்ச்சினா 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். ஆனா, ஒரு லிட்டர் கூப்பனியில 200 கிலோ சீனியைக் கலந்து 180 கிலோ வரை சீனிக்கருப்பட்டி கிடைக்கும். எங்களை விட அவங்களுக்கு உற்பத்திச் செலவு 80 சதவிகிதம் குறையும். அதனால கொள்ளை லாபம் பார்க்குறாங்க. இதனால, எங்களுக்கு விலை கிடைக்காமப் போகுது. விவசாயிகள்கிட்ட நெல், தேங்காய் கொள்முதல் செய்றது மாதிரி கருப்பட்டியையும் கொள்முதல் செய்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்றார்.

லேபிளில் கருப்பட்டி! பார்சலுக்குள் சீனிக்கருப்பட்டி!

லப்படக் கருப்பட்டிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளருமான குணசீலனிடம் பேசினோம். “உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் 30 ஆலைகள் மட்டுமே கருப்பட்டி தயாரிப்புக்கான உரிமம் பெற்றுள்ளன. 150-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் பெறாமலே கருப்பட்டி தயாரித்து வருகின்றன. கருப்பட்டி தயாரிப்பதற்கான லைசென்ஸை வாங்கி, சீனிக்கருப்பட்டியை ஒரிஜினல் கருப்பட்டி என லேபிள் ஒட்டி விற்பனை செய்யுறாங்க. போன வருஷம் 5 ஆலைகளில் மட்டும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 40 டன் கலப்படக் கருப்பட்டியை பறிமுதல் செய்தனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 5 ஆலைகளில் மட்டும் 40 டன் கலப்படக் கருப்பட்டி என்றால், மொத்தமுள்ள ஆலை களில் சோதனையிட்டால் எத்தனை டன் பறிமுதல் செய்யப்படலாம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்” என்றார்.

 

https://www.vikatan.com/news/agriculture/how-to-make-palm-jaggery

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை ஒரு கற்பகதரு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.