Jump to content

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யோ தாத்தா சும்மா இருஜ‌யா 😁😀 ,
கொஞ்ச‌ நாளாக‌ தாத்தா ர‌வுடிஸ்ச‌த்தில் இற‌ங்கின‌ மாதிரி தெரியுது 😁 , யாழ் க‌ள‌ம் என்றால் க‌ருத்து மோத‌ல்க‌ள் இருக்கும் , நீங்க‌ள் ம‌ன்னிப்பு கேட்டு திற‌ந்த‌ திரியையும் பார்த்தேன் 😁,

இப்ப‌ புள்ளி பிர‌ச்ச‌னையா 😁
இண்டையில் இருந்து உங்க‌ளின் எல்லா ப‌திவுக்கும் பச்சை குத்துவ‌து என்று முடிவு ப‌ண்ணிட்டேன் நீங்க‌ளா நானா என்று ஒரு கை பாப்போம் 😁

அதோட‌ தாத்தா சீக்கிர‌ம் ஒரு முட்டி க‌ள்ளுட‌ன் வ‌ந்து உங்க‌ளை நேரில் ச‌ந்திக்கிறேன் 😁, தாத்தாவுக்கு க‌ள்ளூ ஊத்தி கொடுத்த‌ பேர‌ன் என்ற‌ பெய‌ரை நான் சீக்கிர‌மே எடுக்க‌ விரும்புகிறேன் 😁 ,

வேற‌ என்ன‌ தாத்தா ப‌ரிம‌ள‌ம் பாட்டிய‌ சுக‌ம் விசாரிச்ச‌தா சொல்லுங்கோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2021 at 00:15, குமாரசாமி said:

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

 

குத்தவும்  யோசித்ததுண்டு

அதைவிட  பலமாக  குத்திவிட்டும் யோசித்ததுண்டு

(பச்சையை சொன்னேன்  அண்ண)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சாவை (  நான் குறுக்கி எழுதுவதை யாரும் குட்டிச்சாத்தான் என்று விளங்கக்கூடாது) எல்லாரும் வச்சுச் செய்யிறாங்கள் போல😁

Link to comment
Share on other sites

On 18/2/2021 at 17:57, வல்வை சகாறா said:

கு.சாவை (  நான் குறுக்கி எழுதுவதை யாரும் குட்டிச்சாத்தான் என்று விளங்கக்கூடாது) எல்லாரும் வச்சுச் செய்யிறாங்கள் போல😁

சகாரா நல்லகாலம் சொல்லீட்டியள். இவ்வளவு நாளும் நான் கு.சா என்றதை குட்டிச் சாத்தான் என்று தானே விளங்கீட்டேன்.😷.

குமாரசாமி சகாராவை வன்மையாக கண்டியுங்கள்.😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 03:55, shanthy said:

சகாரா நல்லகாலம் சொல்லீட்டியள். இவ்வளவு நாளும் நான் கு.சா என்றதை குட்டிச் சாத்தான் என்று தானே விளங்கீட்டேன்.😷.

குமாரசாமி சகாராவை வன்மையாக கண்டியுங்கள்.😎

 

 

நானும் தான் 😉

On 12/2/2021 at 18:15, குமாரசாமி said:

ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி.

எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இந்த பச்சை புள்ளி  விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல்  பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டனர்.

எனவே யாழ்களத்தில் எனக்கிருக்கும் விருப்புவாக்கு உரிமையை நீக்கிவிடுமாறு யாழ்கள நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் எனதருமை யாழ்கள உறவுகளிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன். இந்த நிமிடம் முதல் எனது கருத்துக்களுக்கு தயவு செய்து விருப்பு வாக்குகள் இட வேண்டாம் என தயவு கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன்.🙏🏽

வாசிக்க சுவாரசியமாக இருந்தால் அல்லது எனது எண்னோடதத்துக்கு ஒத்து இருந்தால் நான் பச்சை குத்துவேன் அல்லது அப்படியே நகர்ந்து செல்வேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.