Jump to content

கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை

கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை 

தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். 

இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும் பெறுமானத்தையும் இழந்து உழைக்கின்ற மிருகமாக இருந்து கொண்டு தருகிற பணத்துக்கு வேலை செய்ய தான் இந்த கல்வி முறை உள்ளது. ஒரு விழுமியம் மிக்க வாழ்க்கையை கட்டி எழுப்புவதற்கான கல்வியாக இன்றைய கல்வி இல்லை. 

பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறான கல்வி வேண்டும் என்பதனை விளங்காமல் உள்ளனர்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை நாங்கள் போகும் இடமெல்லாம் கொண்டு செல்கிறோம்..வட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பது குறைவே..

இலங்கையை பொறுத்தவரையில் சில நேரங்களில் தெரிவுகள் குறைவாக இருக்குமெனில் இருப்பதைத்தான் தெரிவுசெய்ய முடியும், ஆனால் புலம்பெயர் தேசங்களில் பல்வேறு துறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட துறைகளை தவிர வேறு தெரிவு செய்வது மிகவும் குறைவே..

இவரது “ உள்ளூராட்சி எனும் கருப்பொருளை விளங்கிக்கொள்ளல்”எனும் பேட்டியும் இங்கே யாழில் உள்ளது, பல விடயங்களை கூறுகிறார்.

பகிர்ந்தமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

56 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த நிலை நாங்கள் போகும் இடமெல்லாம் கொண்டு செல்கிறோம்..வட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பது குறைவே..

இலங்கையை பொறுத்தவரையில் சில நேரங்களில் தெரிவுகள் குறைவாக இருக்குமெனில் இருப்பதைத்தான் தெரிவுசெய்ய முடியும், ஆனால் புலம்பெயர் தேசங்களில் பல்வேறு துறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட துறைகளை தவிர வேறு தெரிவு செய்வது மிகவும் குறைவே..

தாயகத்தில் ஓரளவு காலம் வசித்த எங்களுக்குப் போடப்பட்ட அடித்தளம் அப்படியாகிவிட்டது பிரபா. அதை உடைத்து வெளியில் வந்து சிந்திக்கக் கடுமையாகப் போராட வேணும். அப்படி யாராவது வட்டத்துக்கு வெளிய வர முயன்றாலும் எச்சரிக்கை, ஏளனம் என்றெல்லாம் செய்து அந்த சிந்தனையை மழுங்கடிக்கச் செய்திடுவார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டத்தை விட்டு வெளியே சிந்திப்பதில்லை என்பதற்கு வன்னி: தெருவில் காயும் நெல் என்ற இந்த கட்டுரையும் ஒரு உதாரணம். நெல்லை காய வைக்க களமேடுகளோ களஞ்சியங்களோ இல்லை ஆனால் கல்யாண மண்டபங்களும், பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான கட்டடங்களுக்கோ குறைவில்லை..

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.