Jump to content

Recommended Posts

இன்றென்ன..!
ஆண்டு பல கடந்தும்
அடியோடு மறந்திருந்தும்..?
எப்படி எங்கிருந்து
என்னறிவுக் கெட்டாமல்
விரல் வழியாய்த் தாளில்
விழுந்தாய்!, ஒரு வேளை
நீ கூட என்னை
நினைத் தாயோ?

எதுவேனும்..
என் புலனுக்கறியாமல்
தாள் மீது ஒரு கவியாய்
விழுந்த உன் பெயர்
வியப்பூற உயிர் பெற்று
விம்பமாய் என் முன்னெழவும்
உன் வாசம்
நாசிதனில் ஏறிப் புரக்கடித்து
கண்ணோரம்
ஆசைக் கனவாக வழிகிறது

வாழ் கனவே..!

கால நதிக்கரையில்
நாம் நடந்த காற் தடத்தை
ஆண்டுகளின் ஆற்றோட்டம்
அரித்தாலும் எஞ்சியுள்ள
சுவட்டுக் கரைக் குருதிச்
சுற்றோட்ட வெப்பமென்னில்
இறக்கும் வரை வாழ்வாய்
என் காலம் கடந்தவளே..  

 

திரு.திருக்குமரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, திரு said:

கால நதிக்கரையில்
நாம் நடந்த காற் தடத்தை
ஆண்டுகளின் ஆற்றோட்டம்
அரித்தாலும் எஞ்சியுள்ள
சுவட்டுக் கரைக் குருதிச்
சுற்றோட்ட வெப்பமென்னில்
இறக்கும் வரை வாழ்வாய்

சில கவிதை வரிகளை வாசிக்கும் பொழுது, சம்பவங்களை கேட்கும்/பார்க்கும் பொழுது, இடங்களை கடந்து போகும் பொழுது, தொண்டைக்குழிக்குள் ஏதோவென்று வந்து அடைப்பது போன்ற உணர்வு எழுவதுண்டு, அப்படியான ஒரு வரிகள்தான் இவை..

பாராட்டுக்களும் நன்றிகளும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.