Jump to content

பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் இரணைதீவில் - அங்குரார்ப்பணம் செய்தார் டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

 

iranai_1.jpg

 

இரணைதீவில் இன்று(14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர்,

இரணைதீவு மக்களின் வாழ்கை செழிப்படைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், கடலட்டை பண்ணையின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள மேலும் பல பேருக்கும் பொருத்தமான பிரதேசங்களை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

 

மேலும் கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைகளையும் உருவாக்கி எண்ணெய் வளத்தின் கேந்திர நிலையமாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குவது போன்று, இலங்கையின் கடலுணவுகளுக்கான   கேந்திர நிலையமாக இரணைதீவு பிரதேசம் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினால்  சுமார் 70 மில்லியன் ரூபாய் ஆரம்ப முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டைக் கிராமத்தின் முதலாவது கட்டத்தில் இரணைதீவை சேர்ந்த 83 இரணைதீவைச் சேர்ந்த பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

iranai_6.jpg

 

சர்வதேச சந்தையில் தாராளமான சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ள கடலட்டைகளை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பதனிட்டு ஏற்றமதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்ணையின் ஊடாக, சுமார் 300 பேருக்கு நேரடியான தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 400 பேர் மறைமுகமாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் கூட்டு செயற்பாட்டுப் பொறிமுறை ஊடாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்ணைக்கான திட்டமிடலின் போது, கணிசமான பலனை இரணைதீவு மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்வில் உரையாற்றிய தனியார் முதலீட்டாளர்களான சுகத் இன்ரனாஷனல் பிறைவேற் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரவிந்தன், குறித்த பண்ணையின் வருமானத்தில் 75 வீதமானவை இரணைதீவு மக்களையே சென்றடையும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் இரணைதீவில் - அங்குரார்ப்பணம் செய்தார் டக்ளஸ் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.

துரோகிகள் செய்வது நல்ல விடயமாக ஏற்றுக்கொள்ள மாட்டம் என்று சொல்லுவார்களே இங்கே!!!!!!

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லது செய்கிறார் என எண்ணினேன்.

காப்பரேட் நிறுவனங்கள் உள்நுழைகின்றன.

கடலட்டை வியாபாரம் அங்குள்ளவர்களை மலைநாட்டு அட்டை மாதிரி உறிஞ்சாவிட்டால் சரி.
மக்களுக்கு யார் செய்தாலும் சந்தோசமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

👍

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

😂 

மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டீர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் தேர்தலின்போது தமது தேவைக்காக எம்மை பாவிக்கிறார்கள்.

அதேபோல எமது தேவைக்காக மட்டும் அவர்களை நாம் பாவிப்பதில் தவறேயில்லை.

கணிப்பு சரியாக இருந்தால் , ஜெசி எனும் யூடியூப் தளத்தில் ஒரு பக்கம் வைத்திருக்கும் இந்த தம்பி குறிப்பிடும் மாட்டுவண்டிகூட போகமுடியாத ஊரில் காண்பிக்கபடும்  பின் தங்கிய இரணைதீவு பிரதேசம் இதுவாகதானிருக்கும் என்று நினைக்கிறேன்.

19 நிமிடத்தில் வருகிறது பதிவு 

தவறாககூடவும் இருக்கலாம், ஆனால் எம் தேவைக்காக இந்த பிறப்பால் தமிழனாகவும், வளர்வால் சிங்களவனாகவும் இருக்கும் இவர்களை எமது தேவைக்காக மட்டும்  பாவிப்பது தவறேயில்லை என்றே தோன்றுகிறது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகிகள் செய்வது நல்ல விடயமாக ஏற்றுக்கொள்ள மாட்டம் என்று சொல்லுவார்களே இங்கே!!!!!!

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

இதே டக்லஸ் கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோது தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையவில்லை  பணம் எடுக்கப்பட்டுள்ளது அங்கஜனும் தற்போது திட்டங்களை மேளதாளத்துடன் மாலையுடனும் திரை நீக்கம் செய்கிறார் இவர்களின் திட்டங்கள் நிறைவேறினால் சந்தோசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂 

மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டீர்களே

அந்த மக்கள் தானே அவரை தேர்தலில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அப்படிப்பார்த்தால் தீவக மக்களும் துரோகிகள் லிஸ்டில் 😉😉

2 hours ago, பெருமாள் said:

இதே டக்லஸ் கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோது தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையவில்லை  பணம் எடுக்கப்பட்டுள்ளது அங்கஜனும் தற்போது திட்டங்களை மேளதாளத்துடன் மாலையுடனும் திரை நீக்கம் செய்கிறார் இவர்களின் திட்டங்கள் நிறைவேறினால் சந்தோசம் .

ஏன் அவதி கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் இல்லாவிட்டால் மக்கள் விலத்தி விடுவார்கள். மகேஸ்வரன் மனுசிய விலத்தின மாதிரி😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்  இது ஒரு நல்லவிடயம்

ஆனால்  உந்தாள் சாப:பிட்ட  கையால காக்காவைக்கூட  விரட்டாது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவோ சீனாவின் ஓர் நிறுவனம் தான் பின்னிருந்து செயற்படும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையாகலாம், ஏனெனில், கடலட்டை சீனரால் விரும்பபப்படும் உணவு. எமக்கு கடலட்டை என்றால் ஒவ்வாது. 

இங்கு தேவை இல்லாதது, சீனாவில் பெரு மதிப்பு, காசு மரத்தில் காய்ப்பதை விட வேகமாக வளரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதுவோ சீனாவின் ஓர் நிறுவனம் தான் பின்னிருந்து செயற்படும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையாகலாம், ஏனெனில், கடலட்டை சீனரால் விரும்பபப்படும் உணவு. எமக்கு கடலட்டை என்றால் ஒவ்வாது. 

இங்கு தேவை இல்லாதது, சீனாவில் பெரு மதிப்பு, காசு மரத்தில் காய்ப்பதை விட வேகமாக வளரும்.

கடலட்டைப் பண்ணையொன்று ஆரம்பிப்போம்.வாறீங்களா.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகிகள் செய்வது நல்ல விடயமாக ஏற்றுக்கொள்ள மாட்டம் என்று சொல்லுவார்களே இங்கே!!!!!!

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

தனி  திரிக்கு திரி வீணைப்பெட்டியை கொண்டுவந்து ஒரே ராகத்தை வைத்து இழுப்பதால் 
யாருக்கு பிரயோசனம்? நீங்கள் எதையாவது செய்ய நினைக்கிறீர்களா? அல்லது பேசி பேசி வாழ்வை முடிக்க போகிறீர்களா என்பதை பற்றியே நீங்கள் தெளிவான முடிவு கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மட்டக்கிளப்பில் ஒரு 15 ஏழை குடும்பத்தை தூக்கிவிடுவதே எனது இலக்கு என்று நீங்கள் வரிந்துகொண்டால் அதற்கான வலிகள் எல்லாம் தானாகவே அமையும்.

மனைவியை நாளும் நாளும் அடித்து துன்புறுத்துகிற ஒருவன் சாப்பாடு கொடுக்கிறான் என்பதுக்காக 
வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தால். அரைவாசி சைக்கோ ஆண்கள் அதைத்தான் செய்துகொண்டு இருப்பார்கள். சட்டம் கோர்ட்டு சமூகம் என்பது விழிப்புணர்வுடன் இருப்பதாலேயே கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள். டக்கிளஸ் என்ன தனது சொத்தையா பிரித்து கொடுக்கிறார்? மக்களை கொலை செய்து கொள்ளையடித்ததை இப்போதும் பதுக்கித்தான் வைத்திருக்கிறார். இலங்கையை ஆட்டையை போட வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு துரும்பாக கிடக்கிறார் அவளவுதான். 

மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்பதால் என்னவும் செய்யலாம் என்பது மனிதத்துக்கு முரணானது 
வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்ற பெயரில் கபிரெட்டுக்கள் உள்ளூர் கனிம வளங்களை அள்ளுவதால்தான்  சகல இயற்கை கனிம வளங்களையும் பூமியில் கொண்டிருக்கும் ஆப்ரிக்க கண்டம் இப்போதும்  இருந்து கிடக்கிறது. 

மற்றவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன வீதி புனரமைப்பா செய்கிறீர்கள் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். யாரோ உங்களை எதோ என்றோ சொன்னார்கள் என்பதால் திரிக்கு திரி வீணைப்பெட்டியுடன்  வருகிறீர்கள் என்றால். தங்களது இளமை உயிர் உடல் எல்லாவற்றையும் இனத்துக்காக கொடுத்தவர்களை  பற்றி அநாகரீக மனிதர்கள் அலட்டும்போது எப்படி இருக்கும்? 

நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து என்ன ஆகப்போகிறது தனி? மாறாக நாம் நட்பாக்கினால் 
சில ஏழைகளுக்கு அது உதவும் என்பதே எனது ஆதங்கம். வீணான அலட்டல்கள் தனிமனித தாக்குதல் முதற்கொண்டு  திரிக்கு திரி கருத்து வைத்து வந்தவன் நான். விடுதலை போரை பற்றி ஒரு தமிழனுடன் தமிழில் பேச இனி என்ன இருக்கிறது? இதுவரைக்கும் விளங்காத ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது அவ்வாறே  இறப்பதே நன்று என்றே எண்ணுகிறேன். 

நான் கடவுளை நம்புவதில்லை ... நீங்கள் கால்நடையாக கூட தலங்களுக்கு செல்பவர். கடவுள் பூமிக்கு இறங்கிவந்து  யாருக்கும் எதுவும் செய்வதில்லை. ஒன்றை செய்ய நினைத்தால் இன்னொரு மனிதர் ஊடாகவே  செய்கிறார் உங்களால் கடவுளுக்கு ஆகவேண்டிய பல காரியம் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன் 
அடுத்தவன் எம்மை பற்றி என்ன எண்ணுகிறான் என்ன சொல்கிறான் என்பதில் என்ன இருக்கிறது. நாம் என்ன செய்தோம்  என்பதே வாழ்வின் முடிவில் ஒரு நிறைவையும் மகிழ்வையும் தர கூடியது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

தனி  திரிக்கு திரி வீணைப்பெட்டியை கொண்டுவந்து ஒரே ராகத்தை வைத்து இழுப்பதால் 
யாருக்கு பிரயோசனம்? நீங்கள் எதையாவது செய்ய நினைக்கிறீர்களா? அல்லது பேசி பேசி வாழ்வை முடிக்க போகிறீர்களா என்பதை பற்றியே நீங்கள் தெளிவான முடிவு கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மட்டக்கிளப்பில் ஒரு 15 ஏழை குடும்பத்தை தூக்கிவிடுவதே எனது இலக்கு என்று நீங்கள் வரிந்துகொண்டால் அதற்கான வலிகள் எல்லாம் தானாகவே அமையும்.

மனைவியை நாளும் நாளும் அடித்து துன்புறுத்துகிற ஒருவன் சாப்பாடு கொடுக்கிறான் என்பதுக்காக 
வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தால். அரைவாசி சைக்கோ ஆண்கள் அதைத்தான் செய்துகொண்டு இருப்பார்கள். சட்டம் கோர்ட்டு சமூகம் என்பது விழிப்புணர்வுடன் இருப்பதாலேயே கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள். டக்கிளஸ் என்ன தனது சொத்தையா பிரித்து கொடுக்கிறார்? மக்களை கொலை செய்து கொள்ளையடித்ததை இப்போதும் பதுக்கித்தான் வைத்திருக்கிறார். இலங்கையை ஆட்டையை போட வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு துரும்பாக கிடக்கிறார் அவளவுதான். 

மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்பதால் என்னவும் செய்யலாம் என்பது மனிதத்துக்கு முரணானது 
வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்ற பெயரில் கபிரெட்டுக்கள் உள்ளூர் கனிம வளங்களை அள்ளுவதால்தான்  சகல இயற்கை கனிம வளங்களையும் பூமியில் கொண்டிருக்கும் ஆப்ரிக்க கண்டம் இப்போதும்  இருந்து கிடக்கிறது. 

மற்றவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன வீதி புனரமைப்பா செய்கிறீர்கள் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். யாரோ உங்களை எதோ என்றோ சொன்னார்கள் என்பதால் திரிக்கு திரி வீணைப்பெட்டியுடன்  வருகிறீர்கள் என்றால். தங்களது இளமை உயிர் உடல் எல்லாவற்றையும் இனத்துக்காக கொடுத்தவர்களை  பற்றி அநாகரீக மனிதர்கள் அலட்டும்போது எப்படி இருக்கும்? 

நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து என்ன ஆகப்போகிறது தனி? மாறாக நாம் நட்பாக்கினால் 
சில ஏழைகளுக்கு அது உதவும் என்பதே எனது ஆதங்கம். வீணான அலட்டல்கள் தனிமனித தாக்குதல் முதற்கொண்டு  திரிக்கு திரி கருத்து வைத்து வந்தவன் நான். விடுதலை போரை பற்றி ஒரு தமிழனுடன் தமிழில் பேச இனி என்ன இருக்கிறது? இதுவரைக்கும் விளங்காத ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது அவ்வாறே  இறப்பதே நன்று என்றே எண்ணுகிறேன். 

நான் கடவுளை நம்புவதில்லை ... நீங்கள் கால்நடையாக கூட தலங்களுக்கு செல்பவர். கடவுள் பூமிக்கு இறங்கிவந்து  யாருக்கும் எதுவும் செய்வதில்லை. ஒன்றை செய்ய நினைத்தால் இன்னொரு மனிதர் ஊடாகவே  செய்கிறார் உங்களால் கடவுளுக்கு ஆகவேண்டிய பல காரியம் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன் 
அடுத்தவன் எம்மை பற்றி என்ன எண்ணுகிறான் என்ன சொல்கிறான் என்பதில் என்ன இருக்கிறது. நாம் என்ன செய்தோம்  என்பதே வாழ்வின் முடிவில் ஒரு நிறைவையும் மகிழ்வையும் தர கூடியது. 
 

உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன் மருதர்

யார் குற்றினாலும் அரிசியாக ஆக வேண்டும் என நினைக்கிறவன் நான் நாள் தோறும் தமிழ் ஆண்கள் பெண்கள் மாற்றான் கடைக்கும் ம் நெல் ஆலைக்கும் , மூட்டை தூக்கவும் , கழிவுகள் அள்ளவும் வீதியில் காத்துக்கிடப்பதை பார்க்கும் போது ஏன் எம்மினத்திற்கு மட்டும் சோதனை என கேள்வி எழும் ஆனால் எங்கோ ஓர் மூலையில் இருந்து இங்கே நடப்பது தெரிந்தும் எள்ளிநகையாடுபவர்களை என்ன செய்வது ??

தற்போது கொரோனா காலம் யாரும் அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை சந்தியில் நிற்கிறார்கள் ஆனால் கண்டுகொள்ள  யாரும் இல்லை போன கிழமை ஒரு அம்மாவும் இரு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு பிச்சை எடுத்து திரியுறா இலங்கை என்பது நாம அறியாதது இல்லை போர் நடந்து தோற்றுப்போன இனம் எப்படி முகம் கொடுக்கிறது நம்ம்மை எப்படி அரசு பார்க்கும் அப்படி இருக்கும் போது நமக்கு ஏது கிடைத்தாலும் லாபமே

நான் காவுவதில்லை ஆனால் சிலர் காவித்தான் திரிகிறார்கள்  அவர்கள் சொல்லி என் தசைக்குள் ஒன்று புக போவதில்லை  நாம் எப்பதை நாங்கள் சேர்ந்து சில ஐடிகளை உருவாக்கினோம் மக்களுக்கு உதவ தற்போது மக்களுக்கு பலர் உதவுகிரார்கள் நாங்கள் விலகி விட்டோம் அது யாழ்கள முன்னாள் கள உறுப்பினர் ஒருவருக்கும் தெரியும் .(முகநூலில்)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன் மருதர்

யார் குற்றினாலும் அரிசியாக ஆக வேண்டும் என நினைக்கிறவன் நான் நாள் தோறும் தமிழ் ஆண்கள் பெண்கள் மாற்றான் கடைக்கும் ம் நெல் ஆலைக்கும் , மூட்டை தூக்கவும் , கழிவுகள் அள்ளவும் வீதியில் காத்துக்கிடப்பதை பார்க்கும் போது ஏன் எம்மினத்திற்கு மட்டும் சோதனை என கேள்வி எழும் ஆனால் எங்கோ ஓர் மூலையில் இருந்து இங்கே நடப்பது தெரிந்தும் எள்ளிநகையாடுபவர்களை என்ன செய்வது ??

தற்போது கொரோனா காலம் யாரும் அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை சந்தியில் நிற்கிறார்கள் ஆனால் கண்டுகொள்ள  யாரும் இல்லை போன கிழமை ஒரு அம்மாவும் இரு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு பிச்சை எடுத்து திரியுறா இலங்கை என்பது நாம அறியாதது இல்லை போர் நடந்து தோற்றுப்போன இனம் எப்படி முகம் கொடுக்கிறது நம்ம்மை எப்படி அரசு பார்க்கும் அப்படி இருக்கும் போது நமக்கு ஏது கிடைத்தாலும் லாபமே

நான் காவுவதில்லை ஆனால் சிலர் காவித்தான் திரிகிறார்கள்  அவர்கள் சொல்லி என் தசைக்குள் ஒன்று புக போவதில்லை  நாம் எப்பதை நாங்கள் சேர்ந்து சில ஐடிகளை உருவாக்கினோம் மக்களுக்கு உதவ தற்போது மக்களுக்கு பலர் உதவுகிரார்கள் நாங்கள் விலகி விட்டோம் அது யாழ்கள முன்னாள் கள உறுப்பினர் ஒருவருக்கும் தெரியும் .(முகநூலில்)  

இனத்தை பற்றி இனத்தின் எதிர்கால இருப்பு பற்றி அக்கறை உள்ள ஒவ்வொருவரின் 
ஆதங்கமும் இப்போது இதுதான். நீங்கள் யாழை விட்டு போகிறேன் என்று கோவித்த போதும் 
உங்கள் நான் போகாதீர்கள் என்று தடுக்க காரணம். நாம் எல்லோரும் இனியாவது இணைய வேண்டும் 
அதனால் ஒரு சிறிய பயன் உள்ள செயல் ஆவது ஈடேற வேண்டும் என்பதாலேயே. இனஅழிப்பு போரால் 
கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கபட்வர்கள் இப்போதும் சிங்கள குடியேற்றம் போன்றவற்றால் பாதிப்பை 
நேரடியாக சந்திக்க போகிறவர்களும் அவர்களே. பாழாய்ப்போன தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் முதுகில் சவாரி செய்கிறார்களே தவிர எந்த எதிர்கால சிந்தனையும் இன்றி கிடக்கிறார்கள். உங்கள் ஆதங்கங்கள்  ஏமாற்றங்கள் எல்லாம் எங்களால் புரிய கூடியதே ........... கசப்பானவற்றை மறந்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் 
தொடர்வோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இனத்தை பற்றி இனத்தின் எதிர்கால இருப்பு பற்றி அக்கறை உள்ள ஒவ்வொருவரின் 
ஆதங்கமும் இப்போது இதுதான். நீங்கள் யாழை விட்டு போகிறேன் என்று கோவித்த போதும் 
உங்கள் நான் போகாதீர்கள் என்று தடுக்க காரணம். நாம் எல்லோரும் இனியாவது இணைய வேண்டும் 
அதனால் ஒரு சிறிய பயன் உள்ள செயல் ஆவது ஈடேற வேண்டும் என்பதாலேயே. இனஅழிப்பு போரால் 
கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கபட்வர்கள் இப்போதும் சிங்கள குடியேற்றம் போன்றவற்றால் பாதிப்பை 
நேரடியாக சந்திக்க போகிறவர்களும் அவர்களே. பாழாய்ப்போன தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் முதுகில் சவாரி செய்கிறார்களே தவிர எந்த எதிர்கால சிந்தனையும் இன்றி கிடக்கிறார்கள். உங்கள் ஆதங்கங்கள்  ஏமாற்றங்கள் எல்லாம் எங்களால் புரிய கூடியதே ........... கசப்பானவற்றை மறந்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் 
தொடர்வோம்.  

நன்றி 
நான் ஓர் பாலத்தில்  பயணம் செய்ய நினைக்கிறேன் ஆனால் பாலம் யார் போட்டது என அந்த பாலதிற்ப்புக்கல்லை நான் பார்க்க விரும்பல என் பின்னால் வருபவர்களை பாலத்தை கடந்து பாதையை காட்ட நினைக்கிறேன் பாலத்தில் பின் புறம் நின்று அந்த பாலத்தால் நான் போகமாட்டேன் அது என் எதிரி போட்ட பாலம் என்று சொல்பவர் அங்கே நின்று கூவிக்கொண்டு திரிய வேண்டியதுதான் 

உதாரணம் இலங்கை அரசை எதிர்பார்கள் நம்ம அரசியல் வாதிகள் ஆனால் அரசு கொடுக்கும் வாகனம் , வீடுகள் தங்குமிடங்கள் , சம்பளம் அனைத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் மக்களுக்கு அரசு எதாவது செய்ய வரும் போது தடுப்பார்கள் . பல கம்பெனிகள் வரட்டும் நாங்கள் கூட ஆடைதொழிற்சாலை மட்டக்களப்புக்கு வருவது நல்லதா கெட்டதா என யோசித்தோம் ஆனால் அங்கே 3000 ற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் வேலைசெய்கிறார்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் அங்கே அந்த வருமானத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் கைநனைக்கிறது என்று சொல்லலாம்  இலங்கையையே பல நாடுகள் கூறு போடும் போது நமது நிலங்களில் மாத்திரம் கம்பெனிகள் வரக்கூடாது என எதிர்பார்ப்பது ?? 

சைனா உள்ள வர இந்தியா தீவு பக்கம் நிற்கிறது அது வேற பூ கோள அரசியல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

பாழாய்ப்போன தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் முதுகில் சவாரி செய்கிறார்களே தவிர எந்த எதிர்கால சிந்தனையும் இன்றி கிடக்கிறார்கள். உங்கள் ஆதங்கங்கள்  ஏமாற்றங்கள் எல்லாம் எங்களால் புரிய கூடியதே ........... கசப்பானவற்றை மறந்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் 
தொடர்வோம்.  

இது தான் இப்ப தேவை.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

தனி  திரிக்கு திரி வீணைப்பெட்டியை கொண்டுவந்து ஒரே ராகத்தை வைத்து இழுப்பதால் 
யாருக்கு பிரயோசனம்? நீங்கள் எதையாவது செய்ய நினைக்கிறீர்களா? அல்லது பேசி பேசி வாழ்வை முடிக்க போகிறீர்களா என்பதை பற்றியே நீங்கள் தெளிவான முடிவு கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மட்டக்கிளப்பில் ஒரு 15 ஏழை குடும்பத்தை தூக்கிவிடுவதே எனது இலக்கு என்று நீங்கள் வரிந்துகொண்டால் அதற்கான வலிகள் எல்லாம் தானாகவே அமையும்.

மனைவியை நாளும் நாளும் அடித்து துன்புறுத்துகிற ஒருவன் சாப்பாடு கொடுக்கிறான் என்பதுக்காக 
வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தால். அரைவாசி சைக்கோ ஆண்கள் அதைத்தான் செய்துகொண்டு இருப்பார்கள். சட்டம் கோர்ட்டு சமூகம் என்பது விழிப்புணர்வுடன் இருப்பதாலேயே கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள். டக்கிளஸ் என்ன தனது சொத்தையா பிரித்து கொடுக்கிறார்? மக்களை கொலை செய்து கொள்ளையடித்ததை இப்போதும் பதுக்கித்தான் வைத்திருக்கிறார். இலங்கையை ஆட்டையை போட வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு துரும்பாக கிடக்கிறார் அவளவுதான். 

மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்பதால் என்னவும் செய்யலாம் என்பது மனிதத்துக்கு முரணானது 
வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்ற பெயரில் கபிரெட்டுக்கள் உள்ளூர் கனிம வளங்களை அள்ளுவதால்தான்  சகல இயற்கை கனிம வளங்களையும் பூமியில் கொண்டிருக்கும் ஆப்ரிக்க கண்டம் இப்போதும்  இருந்து கிடக்கிறது. 

மற்றவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன வீதி புனரமைப்பா செய்கிறீர்கள் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். யாரோ உங்களை எதோ என்றோ சொன்னார்கள் என்பதால் திரிக்கு திரி வீணைப்பெட்டியுடன்  வருகிறீர்கள் என்றால். தங்களது இளமை உயிர் உடல் எல்லாவற்றையும் இனத்துக்காக கொடுத்தவர்களை  பற்றி அநாகரீக மனிதர்கள் அலட்டும்போது எப்படி இருக்கும்? 

நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து என்ன ஆகப்போகிறது தனி? மாறாக நாம் நட்பாக்கினால் 
சில ஏழைகளுக்கு அது உதவும் என்பதே எனது ஆதங்கம். வீணான அலட்டல்கள் தனிமனித தாக்குதல் முதற்கொண்டு  திரிக்கு திரி கருத்து வைத்து வந்தவன் நான். விடுதலை போரை பற்றி ஒரு தமிழனுடன் தமிழில் பேச இனி என்ன இருக்கிறது? இதுவரைக்கும் விளங்காத ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது அவ்வாறே  இறப்பதே நன்று என்றே எண்ணுகிறேன். 

நான் கடவுளை நம்புவதில்லை ... நீங்கள் கால்நடையாக கூட தலங்களுக்கு செல்பவர். கடவுள் பூமிக்கு இறங்கிவந்து  யாருக்கும் எதுவும் செய்வதில்லை. ஒன்றை செய்ய நினைத்தால் இன்னொரு மனிதர் ஊடாகவே  செய்கிறார் உங்களால் கடவுளுக்கு ஆகவேண்டிய பல காரியம் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன் 
அடுத்தவன் எம்மை பற்றி என்ன எண்ணுகிறான் என்ன சொல்கிறான் என்பதில் என்ன இருக்கிறது. நாம் என்ன செய்தோம்  என்பதே வாழ்வின் முடிவில் ஒரு நிறைவையும் மகிழ்வையும் தர கூடியது. 
 

நல்ல கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.