Jump to content

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?


Recommended Posts

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

 

தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nunavilan said:

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

ஓம்!

 

ஆனால் பல்மொழி பண்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டில் விற்பனை நிலையத்துக்குச் சென்று எந்த மொழியில் பேசவேண்டும் என்று தீர்மானிப்பது விற்பனையாளர் அல்ல. நீ இந்த மொழியில்தான் பேசு என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இங்கு விற்பனையாளர் தமிழர் அடையாளங்களை அணிவது மட்டுமல்ல தமிழில் பேசவேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறித்தினார் என்ற கேள்வி எழுகின்றது. வரும் வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறுவதுதான் அவரின் வேலையா? 

 

கனடா வந்த புதிதில் ஒர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன். கணவன், மனைவி மற்றும் மகள் கொண்ட ஒரு குடும்பம் எரிபொருள் நிரப்ப வருவார்கள். என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களின் நிறம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து இது ஒரு தமிழ்க் குடும்பம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் உங்களின் பின்புலம் என்ன என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டேன். தாங்கள் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.  இதை சொல்லுவதன் காரணம் தமிழர் போன்று தோற்றமளித்தாலும் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவர் தமிழர் அடையாளங்களை அணிந்திருந்தால், அவரை நோக்கி தமிழர் அடையாளங்களை அணிவது மாத்திரமின்றி தமிழிலும் பேசவேண்டும் என்று சொன்னால் அது அவரை அவமதிப்பதாக அமையும். 

 

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த வீடியோவில் வரும் டயானா சுப்பாரா இருக்காங்க❤️😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தமிழன்" னா தமிழிலா பேசணும்?

எவன் ஒருவன் தன்மொழியை இழக்கிறானோ
அவன் தன் அடையாளத்தையே இழக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

இந்தப்பிரச்சனை  எல்லா நாட்டிலும்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்//

இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்//

இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை

எந்த மொழியில் பேச வேண்டும் என்று... கடைக்காரர் வற்புறுத்த முடியாது என்றாலும்,

வேற்று மொழிக்காரர்.. தமது மொழியிலேயே பேசுவார்கள்.
வேற்று மொழிக்காரரும்... அது தமிழ்க் கடை என்றே தெரிந்து வருகின்றார்கள்.
தமிழில் பேசுவதனை, பெரும் பொருட்டாக எடுக்க மாட்டார்கள்.  

இங்குள்ள தமிழ்க் கடைகளுக்கு.... ஜேர்மன், பிலிப்பைன்ஸ் போன்ற  நாட்டவர்கள் அதிகம் வருவார்கள்.
தமிழில் பேசுவதை, அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 
கடைக்காரரும்... கூடிய விரைவில்... அவர்கள் கேட்கும் பொருட்களை,
தமிழருக்கு...  முன்னரே, கொடுத்து அனுப்பி விடுவார்.

தமிழ்க் கடைகளில்... எனக்குப் பிடிக்காத விடயம்,
அங்குள்ள தொலைக்காட்சியில்...  தமிழ் சினிமா பாடல்களை,
அதிக சத்தத்துடன்... ஒளிபரப்பிக் கொண்டிருப்பதை பார்க்க... கடுப்பாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பிலிப்பைன்ஸ் காரிகள் சேர்ந்தால் போதும் பூனைச்சண்டையாத்தான் இருக்கும் அப்போது எனது செந்தமிழ்ச் சொற்களை எடுத்து அவள் மீது வீசுவேன் அடங்கி விடுவார்கள்.
வெளிநாட்டு அனுபவம். இந்த மொழி தான் பேசவேண்டும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அயல் நாடுகளில் ஆனால் நாங்கள் தமிழர்கள்  ஈழம் அது,இது என உணர்சியாக பேசுபவர்கள் கூட ஆங்கிலம் கலந்து தான் பேசி உசுப்பேற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நாலு பிலிப்பைன்ஸ் காரிகள் சேர்ந்தால் போதும் பூனைச்சண்டையாத்தான் இருக்கும் அப்போது எனது செந்தமிழ்ச் சொற்களை எடுத்து அவள் மீது வீசுவேன் அடங்கி விடுவார்கள்.
வெளிநாட்டு அனுபவம். இந்த மொழி தான் பேசவேண்டும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அயல் நாடுகளில் ஆனால் நாங்கள் தமிழர்கள்  ஈழம் அது,இது என உணர்சியாக பேசுபவர்கள் கூட ஆங்கிலம் கலந்து தான் பேசி உசுப்பேற்றுகிறார்கள்.

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில்... தமிழில்தான் பேசுவார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான இடங்களுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் போது பெரும்பாலும் தமிழில் தான் கதைப்பதுண்டு..!

யாரைப் பார்த்தாலும்.....  Hi அல்லது How  என்னும் இந்த நாய்.....எப்போது தன் மொழியில் குரைக்கப் போகின்றது?

சிங்களவன் சிங்களக் கடையிலும் தமிழ்க்கடையிலும் சிங்களத்தில் தானே கதைக்கிறான்?

எனது இனம் தன் மொழியைத் ..தாழ்வாக நினைத்துக் கொள்வதால்...இவ்வாறு எழுத நேர்ந்தது!

வெம்பிளியில் பஸ்ஸில் ஏறிய இந்தியாக்காரன்...இந்தியில் ரிக்கட் கேட்டு வாங்கிப் போகின்றான்!
வெள்ளை இன பஸ் சாரதி எதுவும் பேசாமல் ...ரிக்கட் கொடுத்ததை எனது கண்களால் கண்டு ஆச்சரியப் பட்ட நாட்களும் உண்டு..!

தமிழன் கொழும்பில் சிங்களம் பேசாது..தமிழில் வியாபாரம் செய்திருந்தால்.....சிங்களவனுக்குக் கொஞ்சமாவது தமிழ் படிக்கும்  தேவை இருந்திருக்கும்  எங்கிறது எனது பட்டறிவு..!

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

குறிப்பு: நாய் என்ற வார்த்தையை எந்த வித தீய நோக்கிலும் பயன்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

குறிப்பு: நாய் என்ற வார்த்தையை எந்த வித தீய நோக்கிலும் பயன்படுத்தவில்லை.

முன் ஜாக்கிரதை... முனுசாமி. 😁 🤣

Link to comment
Share on other sites

13 hours ago, ஈழப்பிரியன் said:

எவன் ஒருவன் தன்மொழியை இழக்கிறானோ
அவன் தன் அடையாளத்தையே இழக்கிறான்.

உண்மையல்ல. ஊமையாகி போனவர்கள் கூட மொழியை இழப்பதில்லை - சைகை மொழியை தமதாக்கி கொள்கிறார்கள். வாழும் நாட்டை மாற்றிக் கொள்ள ஒருவருக்கு உரிமை இருப்பது போலவே தமது மொழி, மதம், பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் அடிப்படை மனித உரிமை அனைவருக்கும் உண்டு. வாழும் நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் தமது அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார்களேயன்றி இழந்து விடுவதில்லை. அது போலவே மொழி, மதம் ஆகியவற்றை மாற்றிக்கொள்பவர்களும் தமது அடையாளத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாலி said:

ஓம்!

 

ஆனால் பல்மொழி பண்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டில் விற்பனை நிலையத்துக்குச் சென்று எந்த மொழியில் பேசவேண்டும் என்று தீர்மானிப்பது விற்பனையாளர் அல்ல. நீ இந்த மொழியில்தான் பேசு என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இங்கு விற்பனையாளர் தமிழர் அடையாளங்களை அணிவது மட்டுமல்ல தமிழில் பேசவேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறித்தினார் என்ற கேள்வி எழுகின்றது. வரும் வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறுவதுதான் அவரின் வேலையா? 

 

கனடா வந்த புதிதில் ஒர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன். கணவன், மனைவி மற்றும் மகள் கொண்ட ஒரு குடும்பம் எரிபொருள் நிரப்ப வருவார்கள். என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களின் நிறம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து இது ஒரு தமிழ்க் குடும்பம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் உங்களின் பின்புலம் என்ன என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டேன். தாங்கள் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.  இதை சொல்லுவதன் காரணம் தமிழர் போன்று தோற்றமளித்தாலும் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவர் தமிழர் அடையாளங்களை அணிந்திருந்தால், அவரை நோக்கி தமிழர் அடையாளங்களை அணிவது மாத்திரமின்றி தமிழிலும் பேசவேண்டும் என்று சொன்னால் அது அவரை அவமதிப்பதாக அமையும். 

 

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த வீடியோவில் வரும் டயானா சுப்பாரா இருக்காங்க❤️😍

வாலி

அந்த டயானாவுக்கு ஒரு பிள்ளை 10 வயதில் இருக்கிறான். .. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனுடன் ஆங்கிலத்தில் பேசினால்தான் அவனுக்கு புரியும் என்பது தெரிந்த தமிழனுக்கு 
லத்தீன் நாட்டவர்களுடன் ஸ்பானிஷில் பேசினால்தான் புரியும் என்று தெரிந்த தமிழனுக்கு 
தமிழர்களுடன் தமிழில் பேசுவது என்றால் வயுத்துக்குத்தும் வியாக்கினங்களும் வந்து விடுகிறது.
இதுக்கு  சுத்த அறிவின்மை ஒன்றுதான் அடிப்படை காரணம் தவிர்த்து பிறிதொன்று இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை.  தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது.  ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை.  எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது  (எனக்கும் தான்).

டயானா கூறியது போல இவர் தனது publicity  க்கு வீடியோ விட்டது போல இருக்கு.

ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில்... தமிழில்தான் பேசுவார்கள்.  :grin:

அண்ணனுக்கு சாம்பிள் வீடியோவே இருக்கு வேணாம் என நினைக்கிறன்  எந்த நாடு என தெரியல ஒரு பொண்ணு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணனுக்கு சாம்பிள் வீடியோவே இருக்கு வேணாம் என நினைக்கிறன்  எந்த நாடு என தெரியல ஒரு பொண்ணு 

ராஜா... அந்த சாம்பிள் வீடியோவை போட்டு விடுங்கள்.
அதைப் பார்த்து.... எந்த நாடு என்று முடிவுக்கு வருவோம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை.  தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது.  ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை.  எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது  (எனக்கும் தான்).

டயானா கூறியது போல இவர் தனது publicity  க்கு வீடியோ விட்டது போல இருக்கு.

ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.

ஆரஞ்சு நிற T-shirt  அணிந்திருப்பவர் மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் அனைவருமே முத்தமிழ் வானொலியின்  ஒலிபரப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது.

அதனால்தான் இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஆரஞ்சு நிற T-shirt  அணிந்திருப்பவர் மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் அனைவருமே முத்தமிழ் வானொலியின்  ஒலிபரப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது.

அதனால்தான் இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். 

👍

ஓ.. இதுவா வானொலி அரசியல் 😉 

இந்த வானொலி பற்றி கேள்விப்படவேயில்லை. இணைய வானொலியா?

வானொலி அறிவிப்பாளராக டயானா அக்காக்கு முழுமையான தமிழில் உரையாட முடியவில்லையே?

மற்றவர் ரூபன் அண்ணனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம் அண்ட் ஸ்ட்டீல்ஸ் சந்திக்கு அருகாமையில் ஒரு இளையவர் பூக்கடை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கு #தமிழீழம், # ஈழம் சார்ந்த P2P செய்திகளையும் தாங்கி இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஆதங்கத்தில் தனது கடையில் இருந்த பூக்கள் சுமார் பல ஆயிரம் $$$$ பெறுமதியான பூக்களை நடு வீதியில் விட்டெறிந்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
இளையவர்கள் இப்படியான உணர்வுகளையும் மட்டுமே வெளிக்காட்டாது அறிவு பூர்வமாக தங்கள் எதிப்பை தெரிவிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Sasi_varnam said:

மார்க்கம் அண்ட் ஸ்ட்டீல்ஸ் சந்திக்கு அருகாமையில் ஒரு இளையவர் பூக்கடை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கு #தமிழீழம், # ஈழம் சார்ந்த P2P செய்திகளையும் தாங்கி இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஆதங்கத்தில் தனது கடையில் இருந்த பூக்கள் சுமார் பல ஆயிரம் $$$$ பெறுமதியான பூக்களை நடு வீதியில் விட்டெறிந்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
இளையவர்கள் இப்படியான உணர்வுகளையும் மட்டுமே வெளிக்காட்டாது அறிவு பூர்வமாக தங்கள் எதிப்பை தெரிவிக்க வேண்டும். 

 

முகநூல் நண்பர்(முன்னால் யாழ்கள உறுப்பினர்) தனிமடலில் அனுப்பியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழரிடம் தமிழில் தான்  கதைப்பன். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் கூடியிருக்கும்  ஒரு பொது இடத்திலை வேறு மொழியில் கதைத்தால் எனக்கு கோபம் வரும். நீங்கள் தமிழர்தானே தமிழில் கதைக்கலாம் தானே எண்டு கோபமாய் கூட கேட்டிருக்கிறன்.வேறை நாட்டுக்காரனோடை என்ன மொழிலையும் பேசட்டும். ஆனால் தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுங்கள் என உரக்க கூறுவேன்.
எனக்கு தெரிஞ்சு ஜேர்மனியில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசும் நாடுகளிலை ஆக மோசம்.

3dtamil.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

சிங்களவன் சிங்களக் கடையிலும் தமிழ்க்கடையிலும் சிங்களத்தில் தானே கதைக்கிறான்?

எனது இனம் தன் மொழியைத் ..தாழ்வாக நினைத்துக் கொள்வதால்...இவ்வாறு எழுத நேர்ந்தது!

💯

தமிழர்கள் பலர் கடைகளில் ஆங்கிலத்தில் கதைத்து கொள்வது உண்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் தமிழரிடம் தமிழில் தான்  கதைப்பன். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் கூடியிருக்கும்  ஒரு பொது இடத்திலை வேறு மொழியில் கதைத்தால் எனக்கு கோபம் வரும். நீங்கள் தமிழர்தானே தமிழில் கதைக்கலாம் தானே எண்டு கோபமாய் கூட கேட்டிருக்கிறன்.வேறை நாட்டுக்காரனோடை என்ன மொழிலையும் பேசட்டும். ஆனால் தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுங்கள் என உரக்க கூறுவேன்.
எனக்கு தெரிஞ்சு ஜேர்மனியில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசும் நாடுகளிலை ஆக மோசம்.

3dtamil.gif

மகா கவி பாரதியாரின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருந்தது...!

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று.....இவற்றை மனதில் நினத்துத் தான்  பாடியிருப்பான் போலும்..!

ஒரு காலத்தில்...சிவாஜி கணேசனின் படங்கள் பார்க்கும் போது....மதுரைத் தமிழ் கேட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றேன்!

இப்போதெல்லாம் ஒருவரும் தமிழே...கலப்பில்லாமல் பேசுவதில்லை..!

இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியா அல்லது  வேண்டுமென்றே அது சாகடிக்கப் படுகின்றதா என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உண்டு..!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஒரு கவிதை மொழி....ஏன் சாகடிக்கப் படுகின்றது என்பது தான் தெரியவில்லை!

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் தோற்றிய தமிழ் மொழியை இன்று அதைலிருந்து பிறந்த மொழிகளே அழிக்க முயல்வது தான் கொடுமை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புங்கையூரன் said:

மகா கவி பாரதியாரின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருந்தது...!

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று.....இவற்றை மனதில் நினத்துத் தான்  பாடியிருப்பான் போலும்..!

ஒரு காலத்தில்...சிவாஜி கணேசனின் படங்கள் பார்க்கும் போது....மதுரைத் தமிழ் கேட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றேன்!

இப்போதெல்லாம் ஒருவரும் தமிழே...கலப்பில்லாமல் பேசுவதில்லை..!

எனது பல வருட அனுபவங்களில் பல நாட்டுக்காரர்களுடன் பழகியுள்ளேன். அதில் குடும்ப நண்பர்களாக கூட இருக்கின்றார்கள். துருக்கி,போலந்து,ருமேனியா,சேர்பியா,குர்தர்,கானா,ரஷ்யா தெலுங்கு மலையாளம் இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். இப்படியானவர்களுடன் பேசும் போது பொது மொழி ஜேர்மன் ஆகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் தம் நாட்டுக்காரருடன்  அவரவர் மொழியில் தான் பேசிக்கொள்வர். இதை அவர்கள் மரியாதைக்குறைவாகவே நினைப்பதில்லை. பொது இடங்களில் கூட.....தமது மொழியை பெருமையாக பேசுவர்.
எமது தமிழினத்தில் மட்டும் தான் சொந்த மொழியில் கதைப்பதை கேவலமாக நினைப்பர். அங்கை பார் வெள்ளைக்காரன் நிக்கிறான் இதுகள் தமிழிலை கதைக்குதுகள் என என் காதால் கேட்டிருக்கின்றேன். ஊரில் இருந்த ஆங்கில மோகம் இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும் அந்த மோகம் அழியவேயில்லை.
எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னவெண்டால் ஐந்து பக்க தமிழ்க்கட்டுரை எழுதுவார்கள்.அதில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் சொற்களை எழுதி விடுவார்கள்.ஏனெண்டால்  தமிழிலை விளங்கப்படுத்தேலாதாம்.:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.