Jump to content

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?


Recommended Posts

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

 

தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nunavilan said:

"தமிழன்" னா தமிழிலா பேசணும்?

ஓம்!

 

ஆனால் பல்மொழி பண்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டில் விற்பனை நிலையத்துக்குச் சென்று எந்த மொழியில் பேசவேண்டும் என்று தீர்மானிப்பது விற்பனையாளர் அல்ல. நீ இந்த மொழியில்தான் பேசு என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இங்கு விற்பனையாளர் தமிழர் அடையாளங்களை அணிவது மட்டுமல்ல தமிழில் பேசவேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறித்தினார் என்ற கேள்வி எழுகின்றது. வரும் வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறுவதுதான் அவரின் வேலையா? 

 

கனடா வந்த புதிதில் ஒர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன். கணவன், மனைவி மற்றும் மகள் கொண்ட ஒரு குடும்பம் எரிபொருள் நிரப்ப வருவார்கள். என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களின் நிறம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து இது ஒரு தமிழ்க் குடும்பம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் உங்களின் பின்புலம் என்ன என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டேன். தாங்கள் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.  இதை சொல்லுவதன் காரணம் தமிழர் போன்று தோற்றமளித்தாலும் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவர் தமிழர் அடையாளங்களை அணிந்திருந்தால், அவரை நோக்கி தமிழர் அடையாளங்களை அணிவது மாத்திரமின்றி தமிழிலும் பேசவேண்டும் என்று சொன்னால் அது அவரை அவமதிப்பதாக அமையும். 

 

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த வீடியோவில் வரும் டயானா சுப்பாரா இருக்காங்க❤️😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தமிழன்" னா தமிழிலா பேசணும்?

எவன் ஒருவன் தன்மொழியை இழக்கிறானோ
அவன் தன் அடையாளத்தையே இழக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

இந்தப்பிரச்சனை  எல்லா நாட்டிலும்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்//

இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்//

இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை

எந்த மொழியில் பேச வேண்டும் என்று... கடைக்காரர் வற்புறுத்த முடியாது என்றாலும்,

வேற்று மொழிக்காரர்.. தமது மொழியிலேயே பேசுவார்கள்.
வேற்று மொழிக்காரரும்... அது தமிழ்க் கடை என்றே தெரிந்து வருகின்றார்கள்.
தமிழில் பேசுவதனை, பெரும் பொருட்டாக எடுக்க மாட்டார்கள்.  

இங்குள்ள தமிழ்க் கடைகளுக்கு.... ஜேர்மன், பிலிப்பைன்ஸ் போன்ற  நாட்டவர்கள் அதிகம் வருவார்கள்.
தமிழில் பேசுவதை, அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 
கடைக்காரரும்... கூடிய விரைவில்... அவர்கள் கேட்கும் பொருட்களை,
தமிழருக்கு...  முன்னரே, கொடுத்து அனுப்பி விடுவார்.

தமிழ்க் கடைகளில்... எனக்குப் பிடிக்காத விடயம்,
அங்குள்ள தொலைக்காட்சியில்...  தமிழ் சினிமா பாடல்களை,
அதிக சத்தத்துடன்... ஒளிபரப்பிக் கொண்டிருப்பதை பார்க்க... கடுப்பாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பிலிப்பைன்ஸ் காரிகள் சேர்ந்தால் போதும் பூனைச்சண்டையாத்தான் இருக்கும் அப்போது எனது செந்தமிழ்ச் சொற்களை எடுத்து அவள் மீது வீசுவேன் அடங்கி விடுவார்கள்.
வெளிநாட்டு அனுபவம். இந்த மொழி தான் பேசவேண்டும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அயல் நாடுகளில் ஆனால் நாங்கள் தமிழர்கள்  ஈழம் அது,இது என உணர்சியாக பேசுபவர்கள் கூட ஆங்கிலம் கலந்து தான் பேசி உசுப்பேற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நாலு பிலிப்பைன்ஸ் காரிகள் சேர்ந்தால் போதும் பூனைச்சண்டையாத்தான் இருக்கும் அப்போது எனது செந்தமிழ்ச் சொற்களை எடுத்து அவள் மீது வீசுவேன் அடங்கி விடுவார்கள்.
வெளிநாட்டு அனுபவம். இந்த மொழி தான் பேசவேண்டும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அயல் நாடுகளில் ஆனால் நாங்கள் தமிழர்கள்  ஈழம் அது,இது என உணர்சியாக பேசுபவர்கள் கூட ஆங்கிலம் கலந்து தான் பேசி உசுப்பேற்றுகிறார்கள்.

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில்... தமிழில்தான் பேசுவார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான இடங்களுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் போது பெரும்பாலும் தமிழில் தான் கதைப்பதுண்டு..!

யாரைப் பார்த்தாலும்.....  Hi அல்லது How  என்னும் இந்த நாய்.....எப்போது தன் மொழியில் குரைக்கப் போகின்றது?

சிங்களவன் சிங்களக் கடையிலும் தமிழ்க்கடையிலும் சிங்களத்தில் தானே கதைக்கிறான்?

எனது இனம் தன் மொழியைத் ..தாழ்வாக நினைத்துக் கொள்வதால்...இவ்வாறு எழுத நேர்ந்தது!

வெம்பிளியில் பஸ்ஸில் ஏறிய இந்தியாக்காரன்...இந்தியில் ரிக்கட் கேட்டு வாங்கிப் போகின்றான்!
வெள்ளை இன பஸ் சாரதி எதுவும் பேசாமல் ...ரிக்கட் கொடுத்ததை எனது கண்களால் கண்டு ஆச்சரியப் பட்ட நாட்களும் உண்டு..!

தமிழன் கொழும்பில் சிங்களம் பேசாது..தமிழில் வியாபாரம் செய்திருந்தால்.....சிங்களவனுக்குக் கொஞ்சமாவது தமிழ் படிக்கும்  தேவை இருந்திருக்கும்  எங்கிறது எனது பட்டறிவு..!

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

குறிப்பு: நாய் என்ற வார்த்தையை எந்த வித தீய நோக்கிலும் பயன்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

குறிப்பு: நாய் என்ற வார்த்தையை எந்த வித தீய நோக்கிலும் பயன்படுத்தவில்லை.

முன் ஜாக்கிரதை... முனுசாமி. 😁 🤣

Link to comment
Share on other sites

13 hours ago, ஈழப்பிரியன் said:

எவன் ஒருவன் தன்மொழியை இழக்கிறானோ
அவன் தன் அடையாளத்தையே இழக்கிறான்.

உண்மையல்ல. ஊமையாகி போனவர்கள் கூட மொழியை இழப்பதில்லை - சைகை மொழியை தமதாக்கி கொள்கிறார்கள். வாழும் நாட்டை மாற்றிக் கொள்ள ஒருவருக்கு உரிமை இருப்பது போலவே தமது மொழி, மதம், பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் அடிப்படை மனித உரிமை அனைவருக்கும் உண்டு. வாழும் நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் தமது அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார்களேயன்றி இழந்து விடுவதில்லை. அது போலவே மொழி, மதம் ஆகியவற்றை மாற்றிக்கொள்பவர்களும் தமது அடையாளத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாலி said:

ஓம்!

 

ஆனால் பல்மொழி பண்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டில் விற்பனை நிலையத்துக்குச் சென்று எந்த மொழியில் பேசவேண்டும் என்று தீர்மானிப்பது விற்பனையாளர் அல்ல. நீ இந்த மொழியில்தான் பேசு என்பது அடிப்படை உரிமை மீறலாகும். இங்கு விற்பனையாளர் தமிழர் அடையாளங்களை அணிவது மட்டுமல்ல தமிழில் பேசவேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறித்தினார் என்ற கேள்வி எழுகின்றது. வரும் வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறுவதுதான் அவரின் வேலையா? 

 

கனடா வந்த புதிதில் ஒர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன். கணவன், மனைவி மற்றும் மகள் கொண்ட ஒரு குடும்பம் எரிபொருள் நிரப்ப வருவார்கள். என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களின் நிறம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து இது ஒரு தமிழ்க் குடும்பம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் உங்களின் பின்புலம் என்ன என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டேன். தாங்கள் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.  இதை சொல்லுவதன் காரணம் தமிழர் போன்று தோற்றமளித்தாலும் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒருவர் தமிழர் அடையாளங்களை அணிந்திருந்தால், அவரை நோக்கி தமிழர் அடையாளங்களை அணிவது மாத்திரமின்றி தமிழிலும் பேசவேண்டும் என்று சொன்னால் அது அவரை அவமதிப்பதாக அமையும். 

 

இனி, கனடாவில் தமிழ்க் கடைகளில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் மோசமானது. வாடிக்கையாளருடன் இங்கிதமாகப் பேசப் பழகத் தெரியாது. வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்.வாடிக்கையாளர் சேவையின் அவசியத்தை அறிந்துகொள்வதன் அல்லது அறிவுறுத்துவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த வீடியோவில் வரும் டயானா சுப்பாரா இருக்காங்க❤️😍

வாலி

அந்த டயானாவுக்கு ஒரு பிள்ளை 10 வயதில் இருக்கிறான். .. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனுடன் ஆங்கிலத்தில் பேசினால்தான் அவனுக்கு புரியும் என்பது தெரிந்த தமிழனுக்கு 
லத்தீன் நாட்டவர்களுடன் ஸ்பானிஷில் பேசினால்தான் புரியும் என்று தெரிந்த தமிழனுக்கு 
தமிழர்களுடன் தமிழில் பேசுவது என்றால் வயுத்துக்குத்தும் வியாக்கினங்களும் வந்து விடுகிறது.
இதுக்கு  சுத்த அறிவின்மை ஒன்றுதான் அடிப்படை காரணம் தவிர்த்து பிறிதொன்று இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை.  தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது.  ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை.  எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது  (எனக்கும் தான்).

டயானா கூறியது போல இவர் தனது publicity  க்கு வீடியோ விட்டது போல இருக்கு.

ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில்... தமிழில்தான் பேசுவார்கள்.  :grin:

அண்ணனுக்கு சாம்பிள் வீடியோவே இருக்கு வேணாம் என நினைக்கிறன்  எந்த நாடு என தெரியல ஒரு பொண்ணு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணனுக்கு சாம்பிள் வீடியோவே இருக்கு வேணாம் என நினைக்கிறன்  எந்த நாடு என தெரியல ஒரு பொண்ணு 

ராஜா... அந்த சாம்பிள் வீடியோவை போட்டு விடுங்கள்.
அதைப் பார்த்து.... எந்த நாடு என்று முடிவுக்கு வருவோம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

எனக்குத் தனிப்பட்ட முறையில் அந்தக் கடை பிடிக்காது காரணம் அவர்களின் வாடிக்கையாளர் சேவை.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தமிழில் தான் கதைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரியவில்லை.  தமிழர் தமிழில் கதைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் கூறியதாகவே தெரிகிறது.  ஆனால் எம்மவரில் பலரின் கதைக்கும் தோனி (சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கதைப்பார்) அதை எதிர்கொள்பவர்களுக்கு சங்கடமாக அமைகிறதென்பந்து உண்மை.  எம்மவர்கள் பலருக்கு பட்டர் பூசி கதைக்கத் தெரியாது  (எனக்கும் தான்).

டயானா கூறியது போல இவர் தனது publicity  க்கு வீடியோ விட்டது போல இருக்கு.

ஆரஞ்சு கலர் இல் இருப்பவர் அதிகப்பிரசங்கி மட்டுமல்லாது விதண்டாவாதம் கதைக்கிறார்.

ஆரஞ்சு நிற T-shirt  அணிந்திருப்பவர் மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் அனைவருமே முத்தமிழ் வானொலியின்  ஒலிபரப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது.

அதனால்தான் இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஆரஞ்சு நிற T-shirt  அணிந்திருப்பவர் மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் அனைவருமே முத்தமிழ் வானொலியின்  ஒலிபரப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது.

அதனால்தான் இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். 

👍

ஓ.. இதுவா வானொலி அரசியல் 😉 

இந்த வானொலி பற்றி கேள்விப்படவேயில்லை. இணைய வானொலியா?

வானொலி அறிவிப்பாளராக டயானா அக்காக்கு முழுமையான தமிழில் உரையாட முடியவில்லையே?

மற்றவர் ரூபன் அண்ணனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம் அண்ட் ஸ்ட்டீல்ஸ் சந்திக்கு அருகாமையில் ஒரு இளையவர் பூக்கடை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கு #தமிழீழம், # ஈழம் சார்ந்த P2P செய்திகளையும் தாங்கி இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஆதங்கத்தில் தனது கடையில் இருந்த பூக்கள் சுமார் பல ஆயிரம் $$$$ பெறுமதியான பூக்களை நடு வீதியில் விட்டெறிந்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
இளையவர்கள் இப்படியான உணர்வுகளையும் மட்டுமே வெளிக்காட்டாது அறிவு பூர்வமாக தங்கள் எதிப்பை தெரிவிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Sasi_varnam said:

மார்க்கம் அண்ட் ஸ்ட்டீல்ஸ் சந்திக்கு அருகாமையில் ஒரு இளையவர் பூக்கடை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவருடைய இன்ஸ்ட்டா கிராம் கணக்கு #தமிழீழம், # ஈழம் சார்ந்த P2P செய்திகளையும் தாங்கி இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஆதங்கத்தில் தனது கடையில் இருந்த பூக்கள் சுமார் பல ஆயிரம் $$$$ பெறுமதியான பூக்களை நடு வீதியில் விட்டெறிந்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
இளையவர்கள் இப்படியான உணர்வுகளையும் மட்டுமே வெளிக்காட்டாது அறிவு பூர்வமாக தங்கள் எதிப்பை தெரிவிக்க வேண்டும். 

 

முகநூல் நண்பர்(முன்னால் யாழ்கள உறுப்பினர்) தனிமடலில் அனுப்பியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழரிடம் தமிழில் தான்  கதைப்பன். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் கூடியிருக்கும்  ஒரு பொது இடத்திலை வேறு மொழியில் கதைத்தால் எனக்கு கோபம் வரும். நீங்கள் தமிழர்தானே தமிழில் கதைக்கலாம் தானே எண்டு கோபமாய் கூட கேட்டிருக்கிறன்.வேறை நாட்டுக்காரனோடை என்ன மொழிலையும் பேசட்டும். ஆனால் தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுங்கள் என உரக்க கூறுவேன்.
எனக்கு தெரிஞ்சு ஜேர்மனியில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசும் நாடுகளிலை ஆக மோசம்.

3dtamil.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

சிங்களவன் சிங்களக் கடையிலும் தமிழ்க்கடையிலும் சிங்களத்தில் தானே கதைக்கிறான்?

எனது இனம் தன் மொழியைத் ..தாழ்வாக நினைத்துக் கொள்வதால்...இவ்வாறு எழுத நேர்ந்தது!

💯

தமிழர்கள் பலர் கடைகளில் ஆங்கிலத்தில் கதைத்து கொள்வது உண்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் தமிழரிடம் தமிழில் தான்  கதைப்பன். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் கூடியிருக்கும்  ஒரு பொது இடத்திலை வேறு மொழியில் கதைத்தால் எனக்கு கோபம் வரும். நீங்கள் தமிழர்தானே தமிழில் கதைக்கலாம் தானே எண்டு கோபமாய் கூட கேட்டிருக்கிறன்.வேறை நாட்டுக்காரனோடை என்ன மொழிலையும் பேசட்டும். ஆனால் தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுங்கள் என உரக்க கூறுவேன்.
எனக்கு தெரிஞ்சு ஜேர்மனியில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் ஆங்கிலம் பேசும் நாடுகளிலை ஆக மோசம்.

3dtamil.gif

மகா கவி பாரதியாரின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருந்தது...!

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று.....இவற்றை மனதில் நினத்துத் தான்  பாடியிருப்பான் போலும்..!

ஒரு காலத்தில்...சிவாஜி கணேசனின் படங்கள் பார்க்கும் போது....மதுரைத் தமிழ் கேட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றேன்!

இப்போதெல்லாம் ஒருவரும் தமிழே...கலப்பில்லாமல் பேசுவதில்லை..!

இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியா அல்லது  வேண்டுமென்றே அது சாகடிக்கப் படுகின்றதா என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உண்டு..!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஒரு கவிதை மொழி....ஏன் சாகடிக்கப் படுகின்றது என்பது தான் தெரியவில்லை!

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் தோற்றிய தமிழ் மொழியை இன்று அதைலிருந்து பிறந்த மொழிகளே அழிக்க முயல்வது தான் கொடுமை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புங்கையூரன் said:

மகா கவி பாரதியாரின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருந்தது...!

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று.....இவற்றை மனதில் நினத்துத் தான்  பாடியிருப்பான் போலும்..!

ஒரு காலத்தில்...சிவாஜி கணேசனின் படங்கள் பார்க்கும் போது....மதுரைத் தமிழ் கேட்டுப் பெருமைப் பட்டிருக்கின்றேன்!

இப்போதெல்லாம் ஒருவரும் தமிழே...கலப்பில்லாமல் பேசுவதில்லை..!

எனது பல வருட அனுபவங்களில் பல நாட்டுக்காரர்களுடன் பழகியுள்ளேன். அதில் குடும்ப நண்பர்களாக கூட இருக்கின்றார்கள். துருக்கி,போலந்து,ருமேனியா,சேர்பியா,குர்தர்,கானா,ரஷ்யா தெலுங்கு மலையாளம் இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். இப்படியானவர்களுடன் பேசும் போது பொது மொழி ஜேர்மன் ஆகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் தம் நாட்டுக்காரருடன்  அவரவர் மொழியில் தான் பேசிக்கொள்வர். இதை அவர்கள் மரியாதைக்குறைவாகவே நினைப்பதில்லை. பொது இடங்களில் கூட.....தமது மொழியை பெருமையாக பேசுவர்.
எமது தமிழினத்தில் மட்டும் தான் சொந்த மொழியில் கதைப்பதை கேவலமாக நினைப்பர். அங்கை பார் வெள்ளைக்காரன் நிக்கிறான் இதுகள் தமிழிலை கதைக்குதுகள் என என் காதால் கேட்டிருக்கின்றேன். ஊரில் இருந்த ஆங்கில மோகம் இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும் அந்த மோகம் அழியவேயில்லை.
எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னவெண்டால் ஐந்து பக்க தமிழ்க்கட்டுரை எழுதுவார்கள்.அதில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் சொற்களை எழுதி விடுவார்கள்.ஏனெண்டால்  தமிழிலை விளங்கப்படுத்தேலாதாம்.:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.