Jump to content

66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !!


Recommended Posts

 

66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !!

66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம்ம சாதனை !! 1

 

 

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூலம் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். இதழ் சுப்மன் கீழ் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோன் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அடுத்து வந்த புஜாரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது 58 பந்துகள் மட்டுமே பிடித்து 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி தடுமாற்றம் கண்டது. அதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த வந்த இந்திய கேப்டன் விராட் கோலியும் 5 பந்துகளை பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் மொய்ன் அலி வீசிய துல்லியமான சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார்.

 
66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம்ம சாதனை !! 2

ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மா, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு சதம் அடித்து அசத்தினார்.

3 விக்கெட்டுக்கு பிறகு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரஹானே, அரைசதம் அடித்தார்.

சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய ரோஹித், 150 ரன்களை கடந்தார். ரோஹித்தும் ரஹானேவும் இணைந்து ஆடி 4வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர். இரட்டை சதத்தை நோக்கி ரோஹித்தும் சதத்தை நோக்கி ரஹானேவும் ஆடிக்கொண்டிருந்த நிலையில், ரோஹித்தை 161 ரன்னில் வீழ்த்தி ஜாக் லீச் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ரோஹித் அவுட்டான அடுத்த ஒருசில ஓவர்களிலேயே ரஹானே 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சிறிது நேரம் தாக்குபிடித்த அஸ்வின் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் மூலம் முதல் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 300 ரன்கள் குவித்திருந்தது.

66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம்ம சாதனை !! 3

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அக்‌ஷர் பட்டேல் (5), இஷாந்த் சர்மா (0), குல்தீப் யாதவ் (0) மற்றும் முகமது சிராஜ் (4) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் இறுதி வரை ஆட்டமிழக்காத ரிஷப் பண்ட் 58 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது.

இந்தநிலையில், இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு எக்ஸ்ட்ரா ரன் (வொய்ட், நோ பால்..) கூட கொடுக்காத இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இதன் மூலம் 66 ஆண்டுகால வரலாற்றை மாற்றியும் எழுதியுள்ளனர்.

66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம்ம சாதனை !! 4

கடந்த 1955ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 328 ரன்கள் குவித்திருந்தது, இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ஒரு எக்ஸ்ட்ரா ரன் கூட கொடுக்காததே இதுவரை சாதனையாக இருந்தது, தற்போது இந்திய அணி 329 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.

https://tamil.sportzwiki.com/cricket/england-break-66-year-old-record-in-test-cricket-do-not-concede-even-a-single-extra-in-indias-first-innings/?fbclid=IwAR2TV8bzC7B-LHe0DIKwrBIH6X9Dbzc7RbxE1bOveulEd4YrKmhQtw1LfkI

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.