Jump to content

போலி அறிவியலும் மூட நம்பிக்கைகளின் விதையும்


Recommended Posts

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்டமுடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் 'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும்.

இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும், அம்மை நோயின் போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு 'ஆண்டிபயாடிக்' என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும். மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் போலி அறிவியலுக்குப் பலி ஆனவர்தான்.

ஏனெனில், உண்மையில் கலசங்கள் இடிதாங்கிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் குறைந்து வருவதற்குக் காரணம் அவை கூடு கட்டுவதற்கு ஏற்ற இடங்கள், மரங்கள் குறைந்து வருவதுதான். பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப்பரப்பில் இருக்க முடியாது.

வேப்பிலை 'ஆண்டிபயாடிக்' என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்' வைரஸினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்' என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரஸும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.

போலி அறிவியல் உருவாகக் காரணம்: நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான 'சண்டை' பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் 'குற்றவாளி' என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரித் தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர்.மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல் செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நம் நாட்டை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு,கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம். மதத்தில் உள்ள கட்டுக்கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை.

அதன் கதைகளில் பூமியைக் கடத்திக்கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள்! பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில்

மத அடிப்படைவாதிகள் 'அறிவியலால்' தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்றார்கள். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படை வாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை.

மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்து விடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மத நிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல்பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

இந்தப் போலி அறிவியலின் அடிப்படை மிக எளிமையானது. அதாவது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும் நம்பிக்கைகளையும், கட்டுக் கதைகளையும், பாரம்பரிய மருத்துவ மூடநம்பிக்கைகளையும் கோர்த்து விடுவதுதான். இதனால் மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல்பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதைகிளப்பி விடப்படுகிறது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, ஹோமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோவில் சுத்துவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல்பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது.

இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகள் மூலம் இதனைச் சாதிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் 'அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை', ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்' என்றவாறு இருக்கும். 

அமெரிக்காவில் உள்ள நாசாவும், நம்மூர் திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப்பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் 'நாசாவே சொல்லிடுச்சு' என்பார்கள்,

இல்லையானால் 'திருமூலர் அப்பவே இதச் சொல்லி வச்சுட்டுப் போயிட்டாரு' என்பார்கள். தமிழ் ஆசிரியர்களுக்கே புரியாத ஏதாவது ஒரு செய்யுளை எடுத்துப் போடுவார்கள். அதற்கு இதுதான் அர்த்தம் என்பார்கள். 'cosmic dance' அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் 'நடனம்' ஆடுகிறார் என்பார்கள்.

நூல்: முனைவர் எஸ்.சேதுராமன் அவர்கள் எழுதிய “மூட நம்பிக்கைகளும் போலி அறிவியலும்”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றீ துல்பன்.

நல்லதொரு கட்டுரை

இந்து மதத்தில் மாத்திர‌மல்ல எல்ல சமயத்திலும் இவ்வாறான மூட நம்பிக்கைகள் உண்டு. 

இங்கு பலர் இதை வாசித்தவுடன் சாரைப்பாம்பின் மீது மண்ணெண்ணை ஊற்றியதுபோல் வருவார்கள்.

Link to comment
Share on other sites

நானும் போலி அறிவியலுக்கும்( Pseudoscience), சதி கோட்ப்பாடுகளுக்கும்(Conspiracy Theories) எதிராக ஒரு திரி திறக்கவேண்டும் என நினைத்தேன். ஏனேனில், தமிழ் பொது பரப்பில் தமிழ் பொக்கிஷம் விக்கி , ஹீலர் பாஸ்கர்,பாரிசாலன் போன்ற அரைவேட்டிக்காடுகளின் கணணொளிகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

Link to comment
Share on other sites

31 minutes ago, zuma said:

நானும் போலி அறிவியலுக்கும்( Pseudoscience), சதி கோட்ப்பாடுகளுக்கும்(Conspiracy Theories) எதிராக ஒரு திரி திறக்கவேண்டும் என நினைத்தேன். ஏனேனில், தமிழ் பொது பரப்பில் தமிழ் பொக்கிஷம் விக்கி , ஹீலர் பாஸ்கர்,பாரிசாலன் போன்ற அரைவேட்டிக்காடுகளின் கணணொளிகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

நன்றி Zuma. போலி அறிவியலை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டும் பதிவுகளை இடுங்கள்.

Link to comment
Share on other sites

அரியலூர் புதைபடிவங்கள்(Fossil)  மற்றும்  பருப்பொருட்பேறுகளை(concretion)  குறித்த தவறான விளக்கங்களுக்களை அளித்த ஒரிசா பாலு மற்றும் தமிழ்போக்கிஷாம் விக்கி போன்றோருக்கு  நகைச்சுவையுடன் ஒரு எதிர்வினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

இந்து மதத்தில் மாத்திர‌மல்ல எல்ல சமயத்திலும் இவ்வாறான மூட நம்பிக்கைகள் உண்டு. 

👍

11 hours ago, zuma said:

நானும் போலி அறிவியலுக்கும்( Pseudoscience), சதி கோட்ப்பாடுகளுக்கும்(Conspiracy Theories) எதிராக ஒரு திரி திறக்கவேண்டும் என நினைத்தேன். ஏனேனில், தமிழ் பொது பரப்பில் தமிழ் பொக்கிஷம் விக்கி , ஹீலர் பாஸ்கர்,பாரிசாலன் போன்ற அரைவேட்டிக்காடுகளின் கணணொளிகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

போலி அறிவியலுக்கு எதிரான திரி திறவுங்கோ 👏
நல்ல காலம் ஹீலர், பாஸ்கர் இவர்களை நான் பார்த்ததே இல்லை. தமிழ் பொக்கிஷம் இரண்டு 3 அரசியல் வீடியோ யாழ் இணையத்தில் பார்த்துள்ளேன். பாரிசாலன் சாதி வெறியர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.