Jump to content

‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்

-புருஜோத்தமன் தங்கமயில் 

ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. 

இங்கு ‘அடக்குமுறையாளர்’கள்  அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. 

‘இணக்க சக்திகள்’ என்ற அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புகளும், குறுகிய அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புகள்தான், போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன.

பௌத்த சிங்களப் பேரினவாத அடங்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் அரசியல் உரிமைப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தது முதல், சலுகைகளுக்காகப் பேரினவாதத் தரப்புடன் இணங்கிச் செயற்பட்ட தமிழ்த் தரப்புகள் இருக்கின்றன. 

அவற்றில் சில தரப்புகள், கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. இன்னும், சில தரப்புகள், தவிர்க்க முடியாத சூழலில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டக் களத்தின் பங்காளிகளாகத் தம்மை மாற்றியும் கொண்டிருக்கின்றன. ஆனாலும் வரலாற்றுப் பக்கங்களில், அந்தத் தரப்புகளின் கறுப்புப் பக்கங்களை மறைக்க முடியாது.

பேரினவாத அடக்குமுறையாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்குபவர்களும், குறு அரசியலுக்காகப் போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவர்களும், தமிழ் அரசியல் சூழலில் இப்போதும்  உலாவுகிறார்கள். அதற்கு, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான போராட்டத்தைத் தொடர்ந்து, நிகழும் நிகழ்வுகளை அவதானித்தாலே புரிந்து கொள்ள முடியும். (இனி, பத்தி முழுவதும் ‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டம் என்றே வரும்)
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில், வடக்கு - கிழக்கை இணைத்து, மக்களின் பெரும் பங்களிப்போடு நடத்தப்பட்ட போராட்டமாக, ‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டத்தைக் குறிப்பிட முடியும். 30 ஆண்டுகளில் பின்னராக, முஸ்லிம் மக்களின் கணிசமான பங்களிப்போடு நடத்தப்பட்ட போராட்டமாகவும் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. 

இது, பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைக்கும், அதை முன்மொழியும் ராஜபக்‌ஷர்களுக்கும் பாரிய எரிச்சலை உண்டு பண்ணியிருக்கின்றது. அத்தோடு, ராஜபக்‌ஷர்களின் இணக்க சக்திகளுக்கும், குறு அரசியல் நலனுக்காக அங்கலாய்க்கும் தரப்புகளுக்கும் ஜீரணிக்க முடியாத அளவுக்கான ‘ஒரு வியாதி’யை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. அந்தத் தரப்புகளை, ‘வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்’ என்ற பெயரில் அழைத்துக் கொள்ளவும் முடியும்.

நீதிமன்றத் தடைகள், பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைகள், கன மழை என்று தொடர்ந்த தடைகளைத் தாண்டி, பொத்துவிலில் போராட்டம் ஆரம்பித்தது முதல், போராட்டம் கவனம் பெறத் தொடங்கியது. அது போராட்டத்தை நோக்கி, மக்களைத் திரள வைத்தது. 

தடைகள் தாண்டிய முதல் நாள் போராட்டம், இரண்டாவது நாளில், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு அடுத்த கட்டத்தை அடைந்து, ஊடகக் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. அது, தடைகள் தாண்டி போராட்டத்தை ஆரம்பித்தவர்களை அடையாளம் காட்டியது. 

இந்தத் தருணத்திலிருந்து, ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’யும் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியது. அதில் ஒரு கோஷ்டி, பிரதேசவாதத்தை முன்னிறுத்தி முனகிக் கொண்டிருந்தது. அந்தக் கோஷ்டி, ராஜபக்‌ஷர்களின் ஏவல் சக்தி; அவர்களின் அரசியல் இருப்புக்கு, தமிழ் மக்களின் பிரதேசவாதம் கடந்த ஒருங்கிணைவு அச்சுறுத்தலானது. அதனால், பிரதேசவாதத்தை எப்படியாவது முன்னிறுத்தி, போராட்டத்தைக் குழப்ப முனைந்தது. இந்தக் கோஷ்டியை, மக்கள் இலகுவாகப் புறந்தள்ளினார்கள். அவர்களின் பேச்சுகளைக் கண்டுகொள்ளவில்லை.

இன்னொரு கோஷ்டியோ, போராட்டத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் கவனம் பெறுகிறார்கள் என்கிற பொறாமைத் தீயால் எழுந்தவர்கள். அவர்கள், இரண்டாவது நாளிலேயே, போராட்டத்தை முடக்கும் அளவுக்கான செயற்பாடுகளை, சமூக ஊடகங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.  

ஆனால், மற்றைய ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’யோ, போராட்டத்தின் ஒற்றுமையை மாத்திரமல்ல, அதன் மீதான நம்பிக்கையையே சிதைக்கும் வேலைகளில் இன்றும் ஈடுபட்டு வருகிறார்கள். 

‘பொத்துவில்2பொலிகண்டி’  போராட்டத்துக்குள் நிகழ்ந்த குழப்பங்களுக்குப் பெரும்பாலும் ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’யினரே காரணமாக இருந்தார்கள்.

‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டத்துக்கான அழைப்பு, வடக்கு, கிழக்கு சிவில் சமூக சம்மேளனத்தால், நில ஆக்கிரமிப்பு, நினைவேந்தல் தடை, ஜனாஸா எரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை,  தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பத்து விடயங்களை முன்னிறுத்தியே விடுக்கப்பட்டிருந்தது. 

பத்துக் காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையே வெளிநாட்டுத் தூதரங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், போராட்டத்துக்கான ஆதரவை வெளியிட்டன.ஆனால், போராட்டத்தின் இறுதியில் போராட்டப் பிரகடனமாக முன்வைக்கப்பட்ட ஆவணம் என்பது, போராட்டத்துக்கான அழைப்பின் போது முன்னிறுத்தப்பட்ட காரணங்களில் இருந்து குறிப்பிட்டளவு மாறுபட்டிருந்தது. 

பிரகடனத்தின் உள்ளடக்கங்களில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள். அவை நிராகரிக்க முடியாதவை. ஆனால், அந்தக் கோரிக்கைகளோடு போராட்டத்தின் பங்காளிகளாகத் தம்மை இணைத்துக் கொண்ட முஸ்லிம் மக்கள், முழுமையாக இணங்கும் சூழல் இல்லை. 

 

ஏனெனில், அவர்களுக்கு என்றோர் அரசியல் நிலைப்பாடு இருக்கின்றது. போராட்டத்துக்கான அழைப்பைக் குறிப்பிட்ட பத்துக் காரணங்களை முன்வைத்து அழைத்த போது, அந்தக் காரணங்களோடு இணங்குவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருந்தர்கள். அதனால், போராட்டத்தின் பங்காளியாக மாறினார்கள்.ஆனால், இறுதியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்துக்கு, முஸ்லிம் மக்களின் அங்கிகாரம் கோரப்பட்டதா என்கிற கேள்வி எழுகின்றது?

அதைவிட, குறிப்பிட்ட காரணங்களை முன்வைத்து, போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துவிட்டு, அதைத் தாண்டிய விடயங்களை உள்ளடக்குவது என்றால், அதை வெளிப்படையாக அறிவித்து, பங்காளித் தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது அடிப்படை. அந்த அடிப்படைதான் நம்பிக்கையைத் தொடரச் செய்யும். 

ஆனால், ‘பொத்துவில்2பொலிகண்டி’ இறுதிப் பிரகடனத்தின் உள்ளடக்கம், ஆரம்பக் காரணங்களில் இருந்து, பெருமளவு விலகி இருந்ததற்கு, வெளியில் இருந்து போராட்டத்துக்குள் நுழைந்த தரப்புகளே காரணம் என்று, போராட்டத்தின் முதல் கட்டத்திலிருந்து இறுதிக் கட்டம் வரையில் இருந்த பங்காளிகள் கூறுகிறார்கள். 

போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவுக்குள் இருந்த ஒருசில ஆசாமிகள், போராட்டத்தின் பேரெழுச்சியைத் தங்களுக்கான அரசியல் ஆதாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவும் விளைந்திருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தொடர்கின்றது. சில ஆசாமிகளின் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்தவும் செய்கின்றது.

ஜனநாயப் போராட்டங்களின் போது, மக்கள் பெருந்திரளாகக் கூடும் போது, அவர்களின் கோரிக்கைகள் பல்வேறு விதமாக எழுவது இயல்பு. ஆனால், போராட்டத்துக்கான அழைப்பு என்பது, எந்த அடிப்படையில் இருந்ததோ அதனை இறுதி வரை பேணுவது போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தவர்களின் கடமை. 

பத்துக் காரணங்களை முன்னிறுத்தியே, ‘பொத்துவில்2பொலிகண்டி போராட்டம்’ முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சுமந்திரன் உரையாற்றியதும், அவருக்கு எதிராகத் துரோகிப் பட்டங்களை தூக்கிக் கொண்டு கஜேந்திரகுமாரும், இன்னும் சில புலமைத்தரப்பினரும் முன்வந்தார்கள்.

அவர்களிடம் உண்மையில் இருந்தது, போராட்டத்தின் நோக்கம் பற்றியதாக இருக்கவில்லை. மாறாக, போராட்டத்தில் சுமந்திரன், மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறார். அதை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்கிற நோக்கமே மேலேழுந்தது. 

பொலிகண்டியில் சாணக்கியன் மக்களால் கொண்டாடப்பட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள், என்னென்ன காரியங்களை எல்லாம் ஆற்றினார்கள் என்பதற்கான ஆதாரங்கள், வீடியோக்களாக சமூக ஊடகங்களில் இருக்கின்றன.

ஒரு போராட்டத்தின் ஆரம்பம், அடிப்படைகளை மறந்து நின்று, அதற்கு இன்னொரு நிறத்தைப் பூசுவது என்பது அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தைப் ‘பொத்துவில்2பொலிகண்டி’ப் போராட்டத்தின் மீது நிகழ்த்துவதற்கு, ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’கள் தயாராக இருக்கின்றன. அவர்களிடத்தில் இருந்து போராட்டத்தையும் அதற்கான மக்களின் அர்ப்பணிப்பையும் காப்பாற்றியாக வேண்டும். அதுதான், தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லது. 

ஏனெனில், ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’களிடம் அரசியலுக்கான அறம் என்பது, சிறிதும் இல்லை. மாறாக, சுயநல சிந்தனைகளும் அடக்குமுறைகளுக்கு ஒத்தூதும் இயல்புமே மேலோங்கி இருக்கும்.
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொத்துவில்-முதல்-பொலிகண்டி-போராட்டம்-வயிற்றெரிச்சல்-கோஷ்டிகள்/91-266157

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.