Jump to content

மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற களவெட்டி பொங்கல் விழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற களவெட்டி பொங்கல் விழா

 
IMG-20210218-WA0320-696x392.jpg
 33 Views

விவசாயிகள் அறுவடை நிறைவுபெற்றதும் தமிழர்களினால் பாரம்பரியமாக செய்யப்பட்டுவரும் களவெட்டி பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

IMG-20210218-WA0101.jpg

தமிழர்களின் கலைகலாசர பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

IMG-20210218-WA0085.jpg

தற்போது அறுவடை காலம் நடைபெற்றுவரும் நிலையில் அறுவடையை பூர்த்திசெய்வோர் வயல் நிலத்தில் பொங்கிப்படைத்து பூமாதேவிக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் அனுஸ்டித்துவருகின்றனர். இந்த பாரம்பரிய செயற்பாட்டினை எதிர்கால சந்ததியும் கடைப்பிடிக்கவேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்வு வெல்லாவெளி,விவேகானந்தபுரம்,ஆயிரம்கால் மண்டப ஆலயம் என்ற வரலாற்று சிறப்புக்கொண்ட பழனியர் வட்டை ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆயிரங்கால் ஆலயத்தில் நடைபெற்றது.

IMG-20210218-WA0332.jpg

போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாள ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

IMG-20210218-WA0269.jpg

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ராகுலநாயகி அவர்களினால் நந்திக் கொடி ஏற்றப்பட்டு உதவிப் பிரதேசசெயலாளர் ஏற்பட்டதை தொடர்ந்து நிகழ்வு நடைபெற்றது.

IMG-20210218-WA0338.jpg

இந்த நிகழ்வில் புவனேந்திரன் வேளான்மைக்கு விசேட பூசை மேற்கொள்ளப்பட்டு, பண்டைய மரபு வழிபாடுகளுக்கு ஏற்ப வேளாண்மை வெட்டப்பட்டு,உப்பட்டி கட்டப்பட்டு பிரதேச செயலாளரினால் வேளாண்மை கதிர்களை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்ட சூடுகள் வைக்கப்பட்டு நெற்கதிர்களை கம்புகளால் அடித்து அபரிகட்டி நெல் தூற்றப்பட்டு உரலில் போட்டு நெல்லை இடித்து மண் பானையில் களபட்டி பொங்கல்விழா இடம்பெற்றன.

IMG-20210218-WA0317.jpg

இதன்போது பாஞ்சாலி கலைக்கழகத்தின் தலைவர் கலாபூசணம் தணிகாசலம் களவெட்டி எனும் தலைப்பில் கவியரங்கு நிகழ்வு நடைபெற்றதுடன் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன

 

https://www.ilakku.org/?p=42537

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.