Jump to content

யாழ் எனும் கைத்தடி..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும்.
 ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., 

 

ஆம், நீங்கள் சொல்வது மிகச்சரி. பகிர்வுக்கு நன்றி வளவன்.....!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வளவன் இப்ப்டிச் சொல்லுகின்றீர்கள்?

யாழ் என்பவள் பெண் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால்....அவளுக்கு இப்போது இருபத்து மூன்று வயது தானே?

அவளுக்கு  ஐம்பது வயது வரும்போது நாடி ....நரம்புகளைப் பற்றி யோசிப்போமே...!😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, valavan said:

அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும்.

வளவன் அண்ணா!

யாழ் முறுக்குடன் 23 வயதில்தான் இருக்கு. ஆனால் கருத்தாளர்கள்தான் நாடி, நரம்பு தளர்ந்த முதியோர்களாக இருந்துகொண்டு, முறுக்காக இருப்பதாகப் பாவனை பண்ணுகின்றார்கள்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வளவன், 

யாழில் இணைய முதலே யாழை ஒருதலையாக காதலித்தேன், இணையும் போது பதிவு திருமணம் முடித்துவிட்டேன்😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிதாரம் போடாத எழுத்துகள் வளவன். எத்தனையோ முறை மனம் சொல்வதை எழுத முயல்வதும் பின்னர் அழிப்பதுமாக கடந்த காலங்களைக் கடந்திருக்கிறேன். நிதர்சனத்தை புரிந்து கொள்ள விரும்பாத பக்கங்களை யாழின் கருத்துக்கள நண்பர்களில் காண்பதுண்டு. சில சமயங்களில் அதுவும் நன்றே என்றும் தோன்றும். எழுத்துக்களில் அதி மேதாவித்தனம் அல்லது அடிமுட்டாள்த்தனம் அவை மட்டுமே கருத்துக்களத்தை கொண்டு நகர்த்தும் அடிப்படையாக உணர்வதுண்டு. போட்டு உடைத்து எழுதும் திராணி எப்போதும் இருந்ததில்லை. மேலே கிருமி சொன்னதைப்போல் யாழ் இணையம் இளமைதான் எழுதும் கருத்தாளர்கள் அரும்பும் முதுமையில்.... எழுத்துகளுக்கு அப்பால் நாமெல்லாம் வெறும் பூஜ்ஜியங்கள் ஆகிவிட்டோமோ என்றும் அதிகம் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றிய எண்ணம்போல் நமக்கும் தோன்றுகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடியவர்கள் திண்டாடுகிறார்கள் திண்டாடியவர்கள் கொண்டாடுகிறார்கள்  இந்த கருத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்திலே இருக்கிறது  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான எழுத்துக்கள்.
பாராட்டுக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 18:32, valavan said:

யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி  யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?

Edited by குமாரசாமி
அதிகமாக பதியப்பட்ட ஒரு சொல் நீக்கம் "வந்து"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி  யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?

கவனித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

கவனித்தேன். 

வணக்கம் விசுகர்! என்றும் யாருக்கும் தொந்தரவாகவோ இடைஞ்சலாகவோ இருக்க நான் விரும்புவதில்லை. இதை என் தனிப்பட்ட/குடும்ப வாழ்விலும் மிக கண்ணியமாக எவ்வித கோபதாபங்களுமின்றி பின்பற்றுபவன்.சரியோ பிழையோ எதையும் நேருக்கு நேர் கதைப்பது எனக்கு பிடித்த விடயம்.

யாழ்களத்தில் அண்மைக்காலங்களில் ஒரு சிலர் ஏதோ சொல்ல விழைகின்றார்கள். நேரடியாக சொல்லி விட்டார்கள் என்றால் மனக்கசப்புகள் இல்லாமல் இருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு.

எதற்கும் வளவன் பதில் சொல்லட்டும். :)

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! என்றும் யாருக்கும் தொந்தரவாகவோ இடைஞ்சலாகவோ இருக்க நான் விரும்புவதில்லை. இதை என் தனிப்பட்ட/குடும்ப வாழ்விலும் மிக கண்ணியமாக எவ்வித கோபதாபங்களுமின்றி பின்பற்றுபவன்.சரியோ பிழையோ எதையும் நேருக்கு நேர் கதைப்பது எனக்கு பிடித்த விடயம்.

யாழ்களத்தில் அண்மைக்காலங்களில் ஒரு சிலர் ஏதோ சொல்ல விழைகின்றார்கள். நேரடியாக சொல்லி விட்டார்கள் என்றால் மனக்கசப்புகள் இல்லாமல் இருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு.

எதற்கும் வளவன் பதில் சொல்லட்டும். :)

நானும் அதை கவனித்தேன் அண்ணா.

நான் நினைக்கிறேன் ஒரே குறிக்கோளுடன்  இருப்பது அல்லது சுயநல அரசியல்களுக்கு முட்டுக்கொடுக்காதிருப்பது இன்றைய உலகில் சபிக்கப்பட்டதாக இருக்கலாம் இருக்கிறது. நமது கொள்கைகளுக்கு வயதாகி விட்டது என்பதை வேறு மாதிரி சொல்ல வந்து அது முடியாததால் வருத்தம் அடைகிறார்கள் போலும் 

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் எங்களுக்கு ஊன்றுகோலாகும் ஒரு கைத்தடி தான்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2021 at 08:21, குமாரசாமி said:

உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி  யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?

சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா.

பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது.

கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே.

மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு  முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா.

பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது.

கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே.

மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு  முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.

சந்தேகங்கள் வருவது மனித இயல்பு. அதை நேரடியாகவே உங்களிடம் கேட்டேன். அவ்வளவுதான். உங்கள் பதிலுக்கு நன்றி வளவன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமான எழுத்து வளவன் எழுத்து.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.