Jump to content

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

— வேதநாயகம் தபேந்திரன் — 

1999 ஆம் ஆண்டு; 

மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. 

மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன்.  

ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்பிடப்போகிறேன் என்றேன்.  

இல்லையில்லை, நீங்கள் பிளேட்டைத் தாருங்கள். வேறொரு பிளேட் தருகிறோம். அதில் சாப்பிடலாமென்றார். இதென்னடா புதினமாக உள்ளது என நினைத்துப் பிளேட்டைக் கொடுத்தேன். 

உடனேயே சாப்பிட்ட கை கழுவ ஒருவர் செம்பும் பிளாஸ்ரிக் பாத்திரமும் கொண்டுவந்தார். கைகளைக்கழுவினேன். 

இன்னொருவர் சில்வர் பிளேட்டுகள் கொண்டு வந்து ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டு போனார். இன்னொருவர் சுடச் சுட சம்பா அரிசிச்சோற்றைப் போட்டுக்கொண்டு வர இன்னொருவர் கட்டித் தயிரை கரண்டியால் வெட்டிச் சுடுசோற்றினுள் போட்டுக்கொண்டு போனார். இன்னொருவர் சீனியைப் போட இன்னொருவர் கனிந்த இதரை வாழைப்பழத்தை உரித்துப் போட்டுக் கொண்டுபோனார். 

சுடு சோற்றில் தயிரையும் வாழைப்பழத்தையும் சீனியையும் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டோம். உண்மையில் அது தேவார்மிதமாகத்தான் இருந்தது. 

விருந்தினர்களுக்குத்தான் மச்சச்சாப்பாடு. ஆனால் மாப்பிளை பொம்பிளைக்கு ஏழுவகை மரக்கறிகள் உள்ள பூதாக்கலம் தான் உணவு. பூதாக்கலம் என்பது மணமக்கள் ஒரே வாழையிலையில் ஒன்றாக உணவருந்துவதாகும். 

1998 ஆம் ஆண்டு; 

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்கிறேன். 

திருமணம் முடிய மணமகளின் வீட்டில் மதிய உணவுக்காகச் செல்கின்றோம். 

Self Serve எனும் சுயமாகப் பரிமாறும் முறை. சில்வர் பிளேட்டில் வெள்ளைக்குத்தரிசிச் சோறு, கோழிக் கறி, மரக்கறிகளை எனது விருப்பத்திற்கு விரும்பிய அளவில் சாப்பிடுகிறேன். 

மாப்பிளை பொம்பிளைக்குரிய பூதாக்கலச் சாப்பாடு இங்கும் மரக்கறிதான். 

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

ஆனால் அது அவர்களது பாரம்பரியம். அதற்கும் தனியானதொரு வரலாற்றுப் பின்னணி இருக்கலாம். மச்சச் சாப்பாடு இல்லாமல் கொண்டாட இது என்ன விரதச் சாப்பாடா என்று அங்குள்ளவர்கள் கேட்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவ நண்பர்களது மங்கல நிகழ்வுகள் என்றால் நான் தவறவிட மாட்டேன். மச்சச் சாப்பாடுகளை ஒரு பிடி பிடிக்கலாம் அல்லவா. 

1998 ஆம் ஆண்டு; 

திருகோணமலையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாப் பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். 

திருமண நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறேன். மணவறையில் கோட் சூட் அணிந்து மாப்பிளை மட்டும் தனியாக இருக்கின்றார். 

பள்ளிவாயலில் சமயப் பணியாற்றும் ஹத்தீப் அல்லது உலமா என்பவர் இஸ்லாமிய சமயாசாரப்படி திருமணப்பதிவை நடத்துகின்றார்.  

மணமகளின் தந்தையார் மணமகனுக்கு அடுத்ததாக திருமணப் பதிவுப்பத்திரத்தில் கையெழுத்து இடுகின்றார். 

திருமண ஒப்பந்தம் நிறைவேறியதும் மதிய உணவு.  

சஹன் எனப்படும் வட்ட வடிவமான சில்வர் தட்டு முன்பாக நான்கு பேராக அமர்ந்திருந்தார்கள். நடுவே சோறுபோட்டார்கள். அதனை ஒவ்வொருவரும் தமது வலது கையால் தமது பக்கத்திற்கென அள்ளி எடுத்தார்கள். 

தொடர்ந்து கறிகள் போடப்பட அப்படியே எடுத்துச் சாப்பிட்டார்கள். சகோதரத்துவத்தைக் குறித்த உணவு உண்ணும் முறையே அது. 

எமக்குத் தனித் தனிப் பிளேட்டுகளில் சோறு கறிகளைப் பரிமாறப்போவதாகக் கூறினார்கள். வேண்டாம் வேண்டாம். எமக்கும் அவ்வாறு உணவு தாருங்கள் என்றோம். தந்தார்கள். நாமும் சகோதரத்துவமாக உண்டோம். புதியதொரு மகிழ்வான அனுபவம். 

2002 ஆம் ஆண்டு; 

தம்பலகமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகிறேன். பிரதேச செயலர் விஜேசூரிய சேரின் மகனது திருமண நிகழ்வுக்காக கலேவெல எனும் ஊருக்குச் செல்கின்றோம். மாப்பிளை, பொம்பிளை கண்டிய ராஜ பரம்பரை முறையில் திருமண உடையணிந்து இருந்தனர். 

திருமண நிகழ்வு முடிந்ததும் விருந்து. அங்கு இரு பிரிவாக உபசரணை நடக்கின்றது. சிறியதொரு ஹோலில் உற்சாக போத்தல்கள், அதற்குரிய பைற்சுகள் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடுகிறது. சில இலட்சம் ரூபா செலவு தாண்டும் போல இருந்தது.   

தகப்பன், மகன் வித்தியாசமில்லாமல் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது. 

பலவகை இறைச்சிகள், மீன்வகைகளுடன் அற்புதமான ஒரு மதியஉணவு.  

2012 ஆம் ஆண்டு;  

கிளிநொச்சிக் கடமைக்குச் செல்கிறேன். பூநகரி ஞானிமடப் பிரதேசத்தில் ஒரு வெளிக்கள நிகழ்வு. இரவு தங்கவேண்டிய நிலை. அப் பிரிவின் கிராம அலுவலர் இரவு உணவை ஏற்பாடு செய்தார். 

பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவத்தில் உணவு பரிமாறினார்கள். தட்டுவம் என்பது கள்ளுக் குடிக்கும் பிளாவை ஒத்த வடிவம். 

பிளா ஒரு பக்கம் முடிந்து கட்டப்பட்டிருக்கும். ஆனால் தட்டுவம் ஒரு பக்கம் சமனாக இரு இடங்களில் கட்டப்பட்டிருக்கும். 

பூநகரியின் வரலாற்றுப் பெருமை சொல்லும் மொட்டைக் கறுப்பன் அரிசிச்சோறு, மீன் கறி, கணவாய்க்கறி, நண்டுக்கறி, சுறா வறை, இறால் பொரியல், ஒடியல் பிட்டு, பருப்புக் கறி, கரட் சம்பல் என அமர்க்களமான சாப்பாடு. எமது ஸ்மார்ட் போனில் படங்களையும் எடுத்துக் கொண்டு மணக்க மணக்க உண்டோம்.  

2019 ஆம் ஆண்டு;  

திருகோணமலை நகரில் அரச பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனது நண்பரின் மகளின் சாமத்திய வீடு எனப்படும் மங்கைப் பருவ மங்கல நீராட்டுவிழா. 

மண்டபமொன்றில் நடைபெற்றது. அறுசுவையுடன் கூடிய மாமிச உணவு. 

நிகழ்வு முடிந்து திரும்பும் போது எனது நண்பனை ரகசியமாகக் கேட்டேன் ”இது என்ன மச்சான் மச்சச் சாப்பாட்டுக்கு மாறிற்றியோ?” 

மச்சான் இஞ்சத்த ஆக்கள் மச்சத்தைத்தான் விரும்பிச் சாப்பிடுவினம். அதால நாங்கள் முந்தநாள் எமது வீட்டில் சடங்கு சம்பிரதாயக் கொண்டாட்டங்களைச் செய்தோம்.  

இன்று ஹோலில் யாவருக்கும் கொண்டாட்டச் சாப்பாடு மச்சம். நீ இஞ்ச இருந்த காலம் (1997 -2003) போல இல்ல இப்ப. எங்கட யாழ்ப்பாணத்தாக்களின்ர கலியாணமும் இப்படித்தான் நடக்குது” என்றான். 

இட மாற்றம் பண்பாட்டுப் பழக்கத்தை மாற்றுகிறது. 

இப்படியே ஊருக்கு ஊர் மாறுபட்ட திருமண முறைகள் இருக்கும். ஆனால், எங்கு போனாலும் ஒரு பிடி பிடிக்கலாம். 

 

https://arangamnews.com/?p=3786

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

பூதாக்கலம் 

மறந்துபோய் நினைவுக்கு வர மறுத்த சொல்...
இணைப்பிற்கு நன்றி கிருபன் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK இல் பூப்புனித நீராட்டு என்று சொல்லி, பூசகரை அழைத்து, பூப்பெய்திய பெண்ணுக்கு (ஓமம் வளர்த்து தூய்மைப்படுத்தும், முட்டாள் தனமான சடங்கு ??). ஆயினும், அது அவரவர் விருப்பம்.

உணவு கலாசாரம் வேரூன்றிய மண்ணில் மண்ணில் மாறலாம்.

ஆனால், புலம் பெயர் நாடுகளில் மாறினால், புலம்பெயர் நாடுகளில் உள்ள எல்லா வசதிகளையும், சலுகைகளையும்,  சுதந்திரங்களையும், உரிமைகளையம்  வகை தொகை இன்றி அனுபவித்துக் கொண்டு   இருக்கும்  அநேகமான பழசுகளுக்கு, சில காலம் அறிந்த புதிதுகளுக்கும் ஒத்துவராது.
 
அவரவர் விருப்பப்படி நடக்கட்டும் என்றாலும், அதை நிலைநிறுத்துவதற்கு, பழசுக்கள் தாம் அறியாத, புரியாத சமய விழுமியத்தை  இழுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான இணைப்புக்கு நன்றி கிருபன்.......! 

பொதுவாக முன்பெல்லாம் சாமத்திய வீடு ( அங்கிருக்கும் பெரிய பெண்களே தட்டிக் கழித்து ஆரத்தி முதலிய சடங்குகளை செய்வார்கள்). வீடுகுடி பூரல் போன்றவற்றிற்கு ஐயரைக் கூப்பிடும் வழக்கம் இல்லை.( வீட்டுக்கு கூரைவேலை, நிலை கதவு செய்யும் ஆசாரியாரே சகல சடங்குகளையும் செய்வார்). ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் ஐயரைக் கூப்பிடுவதே வழக்கமாகி விட்டது......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் விருந்துகளில் பரிமாறும் போது சோறு அள்ளுவதற்கு ஒரு கையில் சிறிய தட்டு அப்படியே அள்ளும் போது சிந்தாமல் சிதறாமல் மற்ற கையையும் சேர்த்து அள்ளி வைப்பார்கள்.
இரண்டாவது தடவையும் வைப்பார்கள்.
ஒருசிலர் மூன்றாவது தடவையும்.
இத்தனைக்கும் சோறு மாதுழம்பழ முத்துகள் மாதிரி பெரிதாக இருக்கும்.
இதன் பின்பு வடை வாழைப்பழம் பாயாசம்.
இப்படி எல்லாம் சாப்பிட்டவர்களை ஒரு பிடி சாதம்.அது கூட குத்தரியாக இருக்காது.

விருந்துக்கு போனால் நிலத்திலே இருக்க முடியாது என்று எவரையுமே பார்க்க முடியாது.

இப்போ சப்பாணி கொட்ட முடியாமல் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள்.
இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

Saivam.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

Saivam.jpg

சைவத்தில் அசைவம் இல்லை ஆனால் அசைவத்தில் சைவம் இருக்கிறது அதனால் இது சைவம்தான் ......!    😂

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

சைவத்தில் அசைவம் இல்லை ஆனால் அசைவத்தில் சைவம் இருக்கிறது அதனால் இது சைவம்தான் ......!    😂

உயிர் நீங்கியபின்னர் அதன் உடலை உண்பவர்கள் அசைவர்கள் என்று கொள்ளப்படுகிறார்கள். இந்தக் கோட்பாட்டிற்கு இணங்க தாவரங்களுக்கும் உயிர் உள்ளது. ஆகவே சைவர்கள் என்று தாவரங்களை உண்பவர்களும் அசைவர்களே.!!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 16:30, குமாரசாமி said:

மறந்துபோய் நினைவுக்கு வர மறுத்த சொல்...
இணைப்பிற்கு நன்றி கிருபன் சார்.

கிழக்கில் கலத்தில் போடுவது என்பார்கள் 3 நாள் மரக்கறி ஆனால் வருபவர்களுக்கு  ஆட்டிறைச்சி கறியும் சோறும் , எலும்பு சொதியும் , பப்படம், இன்னும் பலகறிகள் அதனும் இறுதியாக தயிரும் வாழைப்பழமும் சீனியும் சோறை குழைக்க பாலும் ஊற்றுவார்கள் ஆனால் 

வடக்கில் கல்யாணத்தில்  ஒரு இறைச்சித்துண்டைக்கூட  காட்ட மாட்டார்கள்  இதை நான் கண்டது நம்ம கலைஞன் கல்யாணத்தில்  வுவுனியாவில் நடந்த்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வடக்கில் கல்யாணத்தில்  ஒரு இறைச்சித்துண்டைக்கூட  காட்ட மாட்டார்கள்  இதை நான் கண்டது நம்ம கலைஞன் கல்யாணத்தில்  வுவுனியாவில் நடந்த்து 

நாலாம் சடங்கிலை வைச்சு செய்வினம்....😎
புலம்பெயர் நாடுகளிலையும் யாழ்ப்பாணாத்தார்ரை கலியாணவீடு சாமத்திய வீடுகளிலை மச்சம் மாமிசம் காட்ட மாட்டினம். 😁

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் கலத்தில் போடுவது என்பார்கள் 3 நாள் மரக்கறி ஆனால் வருபவர்களுக்கு  ஆட்டிறைச்சி கறியும் சோறும் , எலும்பு சொதியும் , பப்படம், இன்னும் பலகறிகள் அதனும் இறுதியாக தயிரும் வாழைப்பழமும் சீனியும் சோறை குழைக்க பாலும் ஊற்றுவார்கள் ஆனால் ??????

பஞ்சியை பாராமல் மிச்சத்தையும் எழுதவும். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.