Jump to content

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)

— வேதநாயகம் தபேந்திரன் — 

1999 ஆம் ஆண்டு; 

மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. 

மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன்.  

ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்பிடப்போகிறேன் என்றேன்.  

இல்லையில்லை, நீங்கள் பிளேட்டைத் தாருங்கள். வேறொரு பிளேட் தருகிறோம். அதில் சாப்பிடலாமென்றார். இதென்னடா புதினமாக உள்ளது என நினைத்துப் பிளேட்டைக் கொடுத்தேன். 

உடனேயே சாப்பிட்ட கை கழுவ ஒருவர் செம்பும் பிளாஸ்ரிக் பாத்திரமும் கொண்டுவந்தார். கைகளைக்கழுவினேன். 

இன்னொருவர் சில்வர் பிளேட்டுகள் கொண்டு வந்து ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டு போனார். இன்னொருவர் சுடச் சுட சம்பா அரிசிச்சோற்றைப் போட்டுக்கொண்டு வர இன்னொருவர் கட்டித் தயிரை கரண்டியால் வெட்டிச் சுடுசோற்றினுள் போட்டுக்கொண்டு போனார். இன்னொருவர் சீனியைப் போட இன்னொருவர் கனிந்த இதரை வாழைப்பழத்தை உரித்துப் போட்டுக் கொண்டுபோனார். 

சுடு சோற்றில் தயிரையும் வாழைப்பழத்தையும் சீனியையும் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டோம். உண்மையில் அது தேவார்மிதமாகத்தான் இருந்தது. 

விருந்தினர்களுக்குத்தான் மச்சச்சாப்பாடு. ஆனால் மாப்பிளை பொம்பிளைக்கு ஏழுவகை மரக்கறிகள் உள்ள பூதாக்கலம் தான் உணவு. பூதாக்கலம் என்பது மணமக்கள் ஒரே வாழையிலையில் ஒன்றாக உணவருந்துவதாகும். 

1998 ஆம் ஆண்டு; 

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்கிறேன். 

திருமணம் முடிய மணமகளின் வீட்டில் மதிய உணவுக்காகச் செல்கின்றோம். 

Self Serve எனும் சுயமாகப் பரிமாறும் முறை. சில்வர் பிளேட்டில் வெள்ளைக்குத்தரிசிச் சோறு, கோழிக் கறி, மரக்கறிகளை எனது விருப்பத்திற்கு விரும்பிய அளவில் சாப்பிடுகிறேன். 

மாப்பிளை பொம்பிளைக்குரிய பூதாக்கலச் சாப்பாடு இங்கும் மரக்கறிதான். 

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

ஆனால் அது அவர்களது பாரம்பரியம். அதற்கும் தனியானதொரு வரலாற்றுப் பின்னணி இருக்கலாம். மச்சச் சாப்பாடு இல்லாமல் கொண்டாட இது என்ன விரதச் சாப்பாடா என்று அங்குள்ளவர்கள் கேட்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவ நண்பர்களது மங்கல நிகழ்வுகள் என்றால் நான் தவறவிட மாட்டேன். மச்சச் சாப்பாடுகளை ஒரு பிடி பிடிக்கலாம் அல்லவா. 

1998 ஆம் ஆண்டு; 

திருகோணமலையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாப் பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். 

திருமண நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறேன். மணவறையில் கோட் சூட் அணிந்து மாப்பிளை மட்டும் தனியாக இருக்கின்றார். 

பள்ளிவாயலில் சமயப் பணியாற்றும் ஹத்தீப் அல்லது உலமா என்பவர் இஸ்லாமிய சமயாசாரப்படி திருமணப்பதிவை நடத்துகின்றார்.  

மணமகளின் தந்தையார் மணமகனுக்கு அடுத்ததாக திருமணப் பதிவுப்பத்திரத்தில் கையெழுத்து இடுகின்றார். 

திருமண ஒப்பந்தம் நிறைவேறியதும் மதிய உணவு.  

சஹன் எனப்படும் வட்ட வடிவமான சில்வர் தட்டு முன்பாக நான்கு பேராக அமர்ந்திருந்தார்கள். நடுவே சோறுபோட்டார்கள். அதனை ஒவ்வொருவரும் தமது வலது கையால் தமது பக்கத்திற்கென அள்ளி எடுத்தார்கள். 

தொடர்ந்து கறிகள் போடப்பட அப்படியே எடுத்துச் சாப்பிட்டார்கள். சகோதரத்துவத்தைக் குறித்த உணவு உண்ணும் முறையே அது. 

எமக்குத் தனித் தனிப் பிளேட்டுகளில் சோறு கறிகளைப் பரிமாறப்போவதாகக் கூறினார்கள். வேண்டாம் வேண்டாம். எமக்கும் அவ்வாறு உணவு தாருங்கள் என்றோம். தந்தார்கள். நாமும் சகோதரத்துவமாக உண்டோம். புதியதொரு மகிழ்வான அனுபவம். 

2002 ஆம் ஆண்டு; 

தம்பலகமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகிறேன். பிரதேச செயலர் விஜேசூரிய சேரின் மகனது திருமண நிகழ்வுக்காக கலேவெல எனும் ஊருக்குச் செல்கின்றோம். மாப்பிளை, பொம்பிளை கண்டிய ராஜ பரம்பரை முறையில் திருமண உடையணிந்து இருந்தனர். 

திருமண நிகழ்வு முடிந்ததும் விருந்து. அங்கு இரு பிரிவாக உபசரணை நடக்கின்றது. சிறியதொரு ஹோலில் உற்சாக போத்தல்கள், அதற்குரிய பைற்சுகள் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடுகிறது. சில இலட்சம் ரூபா செலவு தாண்டும் போல இருந்தது.   

தகப்பன், மகன் வித்தியாசமில்லாமல் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது. 

பலவகை இறைச்சிகள், மீன்வகைகளுடன் அற்புதமான ஒரு மதியஉணவு.  

2012 ஆம் ஆண்டு;  

கிளிநொச்சிக் கடமைக்குச் செல்கிறேன். பூநகரி ஞானிமடப் பிரதேசத்தில் ஒரு வெளிக்கள நிகழ்வு. இரவு தங்கவேண்டிய நிலை. அப் பிரிவின் கிராம அலுவலர் இரவு உணவை ஏற்பாடு செய்தார். 

பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவத்தில் உணவு பரிமாறினார்கள். தட்டுவம் என்பது கள்ளுக் குடிக்கும் பிளாவை ஒத்த வடிவம். 

பிளா ஒரு பக்கம் முடிந்து கட்டப்பட்டிருக்கும். ஆனால் தட்டுவம் ஒரு பக்கம் சமனாக இரு இடங்களில் கட்டப்பட்டிருக்கும். 

பூநகரியின் வரலாற்றுப் பெருமை சொல்லும் மொட்டைக் கறுப்பன் அரிசிச்சோறு, மீன் கறி, கணவாய்க்கறி, நண்டுக்கறி, சுறா வறை, இறால் பொரியல், ஒடியல் பிட்டு, பருப்புக் கறி, கரட் சம்பல் என அமர்க்களமான சாப்பாடு. எமது ஸ்மார்ட் போனில் படங்களையும் எடுத்துக் கொண்டு மணக்க மணக்க உண்டோம்.  

2019 ஆம் ஆண்டு;  

திருகோணமலை நகரில் அரச பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனது நண்பரின் மகளின் சாமத்திய வீடு எனப்படும் மங்கைப் பருவ மங்கல நீராட்டுவிழா. 

மண்டபமொன்றில் நடைபெற்றது. அறுசுவையுடன் கூடிய மாமிச உணவு. 

நிகழ்வு முடிந்து திரும்பும் போது எனது நண்பனை ரகசியமாகக் கேட்டேன் ”இது என்ன மச்சான் மச்சச் சாப்பாட்டுக்கு மாறிற்றியோ?” 

மச்சான் இஞ்சத்த ஆக்கள் மச்சத்தைத்தான் விரும்பிச் சாப்பிடுவினம். அதால நாங்கள் முந்தநாள் எமது வீட்டில் சடங்கு சம்பிரதாயக் கொண்டாட்டங்களைச் செய்தோம்.  

இன்று ஹோலில் யாவருக்கும் கொண்டாட்டச் சாப்பாடு மச்சம். நீ இஞ்ச இருந்த காலம் (1997 -2003) போல இல்ல இப்ப. எங்கட யாழ்ப்பாணத்தாக்களின்ர கலியாணமும் இப்படித்தான் நடக்குது” என்றான். 

இட மாற்றம் பண்பாட்டுப் பழக்கத்தை மாற்றுகிறது. 

இப்படியே ஊருக்கு ஊர் மாறுபட்ட திருமண முறைகள் இருக்கும். ஆனால், எங்கு போனாலும் ஒரு பிடி பிடிக்கலாம். 

 

https://arangamnews.com/?p=3786

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

பூதாக்கலம் 

மறந்துபோய் நினைவுக்கு வர மறுத்த சொல்...
இணைப்பிற்கு நன்றி கிருபன் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK இல் பூப்புனித நீராட்டு என்று சொல்லி, பூசகரை அழைத்து, பூப்பெய்திய பெண்ணுக்கு (ஓமம் வளர்த்து தூய்மைப்படுத்தும், முட்டாள் தனமான சடங்கு ??). ஆயினும், அது அவரவர் விருப்பம்.

உணவு கலாசாரம் வேரூன்றிய மண்ணில் மண்ணில் மாறலாம்.

ஆனால், புலம் பெயர் நாடுகளில் மாறினால், புலம்பெயர் நாடுகளில் உள்ள எல்லா வசதிகளையும், சலுகைகளையும்,  சுதந்திரங்களையும், உரிமைகளையம்  வகை தொகை இன்றி அனுபவித்துக் கொண்டு   இருக்கும்  அநேகமான பழசுகளுக்கு, சில காலம் அறிந்த புதிதுகளுக்கும் ஒத்துவராது.
 
அவரவர் விருப்பப்படி நடக்கட்டும் என்றாலும், அதை நிலைநிறுத்துவதற்கு, பழசுக்கள் தாம் அறியாத, புரியாத சமய விழுமியத்தை  இழுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான இணைப்புக்கு நன்றி கிருபன்.......! 

பொதுவாக முன்பெல்லாம் சாமத்திய வீடு ( அங்கிருக்கும் பெரிய பெண்களே தட்டிக் கழித்து ஆரத்தி முதலிய சடங்குகளை செய்வார்கள்). வீடுகுடி பூரல் போன்றவற்றிற்கு ஐயரைக் கூப்பிடும் வழக்கம் இல்லை.( வீட்டுக்கு கூரைவேலை, நிலை கதவு செய்யும் ஆசாரியாரே சகல சடங்குகளையும் செய்வார்). ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் ஐயரைக் கூப்பிடுவதே வழக்கமாகி விட்டது......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் விருந்துகளில் பரிமாறும் போது சோறு அள்ளுவதற்கு ஒரு கையில் சிறிய தட்டு அப்படியே அள்ளும் போது சிந்தாமல் சிதறாமல் மற்ற கையையும் சேர்த்து அள்ளி வைப்பார்கள்.
இரண்டாவது தடவையும் வைப்பார்கள்.
ஒருசிலர் மூன்றாவது தடவையும்.
இத்தனைக்கும் சோறு மாதுழம்பழ முத்துகள் மாதிரி பெரிதாக இருக்கும்.
இதன் பின்பு வடை வாழைப்பழம் பாயாசம்.
இப்படி எல்லாம் சாப்பிட்டவர்களை ஒரு பிடி சாதம்.அது கூட குத்தரியாக இருக்காது.

விருந்துக்கு போனால் நிலத்திலே இருக்க முடியாது என்று எவரையுமே பார்க்க முடியாது.

இப்போ சப்பாணி கொட்ட முடியாமல் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள்.
இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மரக்கறி உணவுகளைத்தான் திருமண நிகழ்வில் யாவருக்கும் வழங்குவார்கள். 

ஆனால் மட்டக்களப்புத் திருகோணமலையைப் பரம்பரையிடமாகக் கொண்டோர் மச்ச உணவுகளை வழங்குவது எனக்குப் புதினமாக இருந்தது. 

Saivam.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

Saivam.jpg

சைவத்தில் அசைவம் இல்லை ஆனால் அசைவத்தில் சைவம் இருக்கிறது அதனால் இது சைவம்தான் ......!    😂

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

சைவத்தில் அசைவம் இல்லை ஆனால் அசைவத்தில் சைவம் இருக்கிறது அதனால் இது சைவம்தான் ......!    😂

உயிர் நீங்கியபின்னர் அதன் உடலை உண்பவர்கள் அசைவர்கள் என்று கொள்ளப்படுகிறார்கள். இந்தக் கோட்பாட்டிற்கு இணங்க தாவரங்களுக்கும் உயிர் உள்ளது. ஆகவே சைவர்கள் என்று தாவரங்களை உண்பவர்களும் அசைவர்களே.!!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 16:30, குமாரசாமி said:

மறந்துபோய் நினைவுக்கு வர மறுத்த சொல்...
இணைப்பிற்கு நன்றி கிருபன் சார்.

கிழக்கில் கலத்தில் போடுவது என்பார்கள் 3 நாள் மரக்கறி ஆனால் வருபவர்களுக்கு  ஆட்டிறைச்சி கறியும் சோறும் , எலும்பு சொதியும் , பப்படம், இன்னும் பலகறிகள் அதனும் இறுதியாக தயிரும் வாழைப்பழமும் சீனியும் சோறை குழைக்க பாலும் ஊற்றுவார்கள் ஆனால் 

வடக்கில் கல்யாணத்தில்  ஒரு இறைச்சித்துண்டைக்கூட  காட்ட மாட்டார்கள்  இதை நான் கண்டது நம்ம கலைஞன் கல்யாணத்தில்  வுவுனியாவில் நடந்த்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வடக்கில் கல்யாணத்தில்  ஒரு இறைச்சித்துண்டைக்கூட  காட்ட மாட்டார்கள்  இதை நான் கண்டது நம்ம கலைஞன் கல்யாணத்தில்  வுவுனியாவில் நடந்த்து 

நாலாம் சடங்கிலை வைச்சு செய்வினம்....😎
புலம்பெயர் நாடுகளிலையும் யாழ்ப்பாணாத்தார்ரை கலியாணவீடு சாமத்திய வீடுகளிலை மச்சம் மாமிசம் காட்ட மாட்டினம். 😁

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் கலத்தில் போடுவது என்பார்கள் 3 நாள் மரக்கறி ஆனால் வருபவர்களுக்கு  ஆட்டிறைச்சி கறியும் சோறும் , எலும்பு சொதியும் , பப்படம், இன்னும் பலகறிகள் அதனும் இறுதியாக தயிரும் வாழைப்பழமும் சீனியும் சோறை குழைக்க பாலும் ஊற்றுவார்கள் ஆனால் ??????

பஞ்சியை பாராமல் மிச்சத்தையும் எழுதவும். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.