Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டாதி 2020

ஐரொப்பா  எங்கும்  கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம்

ஐரொப்பிய  நாடுகள் தம்மிடையேயும் பிற  நாடுகளுக்கிடையேயும்

எல்லைகளை  மூடியும் விமானப்பறப்புக்களை  புறக்கணிக்கவும்  தொடங்கிய  நேரம்.

பிள்ளைகளுடன் ஆவணி  மாத விடுமுறை  முடியும் வேளை 

நான்  10  நாள் வேறு ஒரு பயணம்  போகப்போறேன் என்றேன்

அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால்  ஆவணி  மாதமே  வழமையாக பூட்டப்படும்  எனது  தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே  கேள்விக்குறி ஒன்றை  தந்திருந்தது)

விமானம்  ஓடாது  என்றார்கள் விமான  ரிக்கற்  ஏற்கனவே  எடுத்தாச்சு  என்றேன்.

விமானம்  ஓடாவிட்டால்  என்றார்கள்  காரில்  போவேன்  என்றேன் (அப்பா  1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால்  எதிர்ப்பில்லை)

அப்போ அங்க  நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது  கருதி உங்களுக்கு கொரோனா  பரிசோதனை  செய்யணும் என்றார்கள்.

அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம்  எடுத்து  தந்தார்கள்

கொரோனா  தொற்று  இல்லை  என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை  கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில்  உதவலாம்  என்பதற்காக)

ஓய்வு  முடித்து வந்த  அடுத்த  நாள் விமானநிலையத்தில் விட்டு  விட்டு  சென்றார்கள் (அவர்களுக்கு  நம்பிக்கையில்லை  நான்  பறப்பேன்  என்று)

விமான  நிலையத்தில்  எந்த  எதிர்ப்புமில்லை.

தொடர்ந்து  ஒவ்வொரு வாசலாக  முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். 

விமானம்  ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன்  நீண்ட வரிசையில் நிற்க  வைத்து துப்பாக்கி  போல்  எதையே நெற்றியில்  வைக்கிறார்கள். 

ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு  சூடாக இருக்கு

அது  வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட  வெய்யில் வேற???

நெற்றியை  தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு

அடப்பாவிகளா அவ்வளவு  தானா???

ஆனால் அடிக்கடி  பிரெஞ்சு  அரசாங்கம் சொன்னபடியே  உள்ளது வயதானவர்களை  இந்த  நேரத்தில் அரவணையுங்கள்

சென்று  பாருங்கள்

அவர்களை  தனிமையில் விட்டு விடாதீர்கள்...

அது  ஒன்று  மட்டுமே எனது  மனதில் ஓடியபடி????

தொடர்வோம்

Edited by விசுகு
  • Like 21
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தொடர்கின்றோம்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

விமானம்  ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன்  நீண்ட வரிசையில் நிற்க  வைத்து துப்பாக்கி  போல்  எதையே நெற்றியில்  வைக்கிறார்கள். 

அரச கட்டடங்கள் வைத்தியசாலை போன்ற இடங்களில் தலையை வைக்க அது பெரிய சத்தத்தில் சொன்ன பின்பு தான் உள்நுழையவிடுகிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

IR-BT-TG88-1_1024x1024@2x.jpg?v=15986384

பாடசாலையில் இருந்து விமானநிலையம் வரை பயன்படுத்துகிறார்கள்.

இது பரவாயில்லை.
அனேகமான இடங்களில் தானியங்கியாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.
பக்கத்தில் போய் குனிந்து,நிமிர்ந்து முன்னுக்கு,பின்னுக்கு போய் வெறுப்பே வந்துவிடும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு  சூடாக இருக்கு

ரென்ஷன் ஆனாலும் சூடாகும்!

தொடருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எந்த இடத்திற்கு சென்றாலும் (காரியாலங்கள் ,) வாசலில் இந்த மெசினை வைத்து உடல் சூட்டை கணித்து வெப்பநிலையின் வீதம் , ஊர் பெயர் , வருபவரின் அடையாள அட்டை இலக்கம் , விலாசம் , போண் நம்பர் எல்லாம் பதிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள் நான் மோட்டார் சைக்கிளில் சென்றேன் அதன் போது வெப்பநிலை உடலில் அதிகம் இருக்க கொஞ்ச நேரம் பிடித்து வைத்தார்கள் பின்னர் உடல் சூடு குறையவே உள்ளே விட்டார்கள் , கொஞ்ச நேரம் மரண பீதிதான் எனக்கும் 

தொடரட்டும் விசுகர் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

எழுதப் பஞ்சியில தொடருவியள் போல. பேசாமல் எழுதி முடியுங்கோ விசுகு. 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது  முறை  வந்ததும் நெற்றியில் காய்ச்சல் பார்த்து விட்டு

நீங்கள்  உங்கள் பயணத்தை தொடரலாம்

ஆனால் பயணம் முடியும்வரை எந்த  காரணத்துக்காகவும் Mask யை களட்டக்கூடாது என்கிறார்கள்

விமானத்துக்குள் வந்ததும்  எனது இருப்பிடத்தை  தேடிப்பிடிப்பது கடினமாக  இருக்கவில்லை

காரணம் எனது  சீற்றுக்கு பக்கத்திலோ முன்னுக்கோ பின்னுக்கோ  எவருமில்லை

(ஒன்று  விட்டு  ஒரு சீற்றே ஒதுக்கப்பட்டிருந்தது.)

விமானம்  பறக்கத்தொடங்க சாப்பாடும் தேனீரும்  தருகிறார்கள்

எல்லோரும் Mask யை களட்டியதால்  நானும் சாப்பிட்டு தேனீர் குடிக்க ஒரு  மணித்தியாலப்பயணம்  நிறைவுக்கு  வருவதாக  அறிவிக்கவும் சரியாக  இருக்கிறது.

அடுத்த பரிசோதனைகளை   சந்திக்கணுமே  என  மனம் சொல்கிறது

14 நாள்  உள்ளே  போட்டாலும் பின் வாங்குவதில்லை என பாசம்  தள்ளுகிறது

விமானத்தால் வெளியில் வந்து வெளியே செல்லும் பாதையில் நடக்கத்தொடங்குகின்றேன்

வெளியே  வரும்வரை எந்த  பரிசோதனையும் இல்லை.

மூத்த மருமகன் சொன்னது போல் வந்து நிற்கிறார் (அதிசயமாக  பார்க்கிறார்)

நான் முடிவெடுத்திட்டா அப்புறம் நானே எனது  சொல்லை  கேட்பதில்லை என  பஞ்ச்  டயலாக்கை  விட்டு விட்டு அம்மாட்ட  போ என்கிறேன்.

நான் வருவதாக அக்காவிடம் (அவரின் அம்மா) சொல்லவேண்டாம்  ஆனால் நீ மத்தியானம் சாப்பிட வருவதாய் சொல்லி சமைக்கச்சொல்  என்று  சொல்லியிருந்தேன்)

போய்க்கொண்டிருக்கும்போதே அக்காவிடமிருந்து தொலைபேசி  வருகிறது  என்ன  மகன்  நேரம் பின்னேரம் 3 ஆகுது இன்னும் சாப்பிடவரவில்லையே  என?

இதோ 10 நிமிடத்தில்  வந்து விடுவேன்  என்றபடி சில  நிமிடங்களில்  கதவை  தட்டுகிறோம்.

மருமகன் விலத்தி என்னை  தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக  ஓடிவந்து முத்தம் தந்து  வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே  இல்லை  அதிலும்  இன்றைய சூழ்நிலையில்  எப்படி  சாத்தியம் என ???

குளித்து சாப்பிட்டு முடிய மருமகன் கடை  திறக்க புறப்படுகிறார்.

நாங்கள்  பேசத்தொடங்குகுின்றோம்

ஏனப்பு இத்தனை சிரமத்திலும் வரணுமா?

ஆமாக்கா  இப்பத்தான் வரணும்

சாப்பிட என்ன வேணும் எங்க  எங்க  போகணும்?  இது  அக்கா

இன்றிலிருந்து  நீங்க சமைக்கவேண்டாம்

முடிந்தவரை வெளியில்  உணவகங்களில் சாப்பிடலாம்

மற்றும்படி உங்களுக்கு  எங்கெல்லாம்  போகணுமோ சொல்லுங்க  அங்கெல்லாம்  போகலாம்

எனக்கு எந்த உறவினர் வீட்டுக்கோ 

பார்க்கவேண்டிய இடமோ  என்று ஏதும் இல்லை  

என்னை  யாரும் பார்க்க  விரும்பினால் நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்கள் இங்கு வந்து  என்னை  சந்திக்கட்டும்.

அதன்படி காலையில்  எழும்பி தேனீர்  காலைச்சாப்பாடு  முடிய  கால்  போனபோக்கில் நடந்தோம்

மதியம் முடிந்தவரை வெளியில் சாப்பிட்டோம் (அக்கா கோயில் விரதம்  என்ற  படியால் அதிகம் வெளியில் சாப்பிட முடியவில்லை)

வேறு  எவரிடமும் கார் திறப்பு  கொடுக்காதவர்  நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார்.  அவருக்கு போக விரும்பிய அவருக்கு  பிடித்தவர்கள்  வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி  வந்திருக்கிறார்  தம்பி வந்திருக்கிறார் என்று  அறிமுகப்படுத்தும் போதே என்  அக்காவின்  முகத்தில் பேரானந்தத்தை  கண்டேன்.  அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும்  உங்களை  தேடி  வரும் தம்பி. அக்கா  தம்பி  பாசத்துக்கு  எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள்.

பின்னேரம் என்றதும் நாலைந்து பந்துகளுடன் அக்கா  மைதானத்துக்கு வந்து விடுவார்

இருவரும் சேர்ந்து பந்தை காலால் அடித்து

மேலே போட்டு பிடித்து என 2 மணித்தியாலங்கள் விளையாடுவோம்

அப்பொழுதும் நான் களைப்பதை  பார்த்தே அவர் இன்றைக்கு  காணும் என  நிறுத்துவார்

இன்னொன்றையும் அடிக்கடி  சொல்வார்

தம்பி நீ சின்னனாக  இருக்கும்போது உன்னுடன் விளையாடி  இருக்கமாட்டன்

அது தான் காலம்  எம்மை  மீண்டும்  ஒன்றாக  விளையாட வைத்திருக்கு என்பார் (அவருக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம்)

விளையாடி  முடிய யோகா செய்வார் ( அவர் யோகா ஆசிரியர்)

எனக்கும்  சில  பயிற்சிகள் சொல்லித்தருவார்.

பொழுது பட  வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு

இரவிரவாக  நித்திரை  கொள்ளும்வரை  அந்தக்கால  கதைகள்  உட்பட பேசிக்கொண்டே தூங்கிவிடுவோம்

தம்பி கதைத்துக்கொண்டிருக்கும்போதே நீ  தூங்கி விடுவாய் எனக்கு  அந்த  தூக்கம்  தானே பிரச்சினை  என்பார்

அது தான் எனது சொத்து அதில்  கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன்

இப்படியே 10 நாட்கள் ஓடி விட்டன

புறப்படும் நாளும் வந்தது. புறப்படும் போது கட்டி  அணைத்து நன்றி தம்பி என்றார்

எதுக்கு தம்பிக்கு  நன்றி அக்கா  என்றேன்

இந்த 10 நாட்களும் என்னுள்  ஒரு அபாரபலம் இருந்ததை  உணர்ந்தேன் என்றார்

எனக்கும்  போக விருப்பமில்லை  அக்கா

எங்கள் பெற்றோர் இவ்வளவு  இடைவெளி  விடாது  எம்மை பெற்றிருந்தால் நானும்  பென்சனில் இன்னும் கொஞ்ச  நாள்  உங்களுடன் நின்றிருக்கலாம் வேலை அழைக்கிறது போய்த்தானே ஆகணும் என்றபடி  புறப்படத்தொடங்கினோம். அப்பொழுதும் மனம்  சொல்கிறது என்னை .இங்கே விமானம்  ஏற  விடக்கூடாது. ஒரு மாதம்  யாரும்  எங்கேயும் நகரமுடியாது  என்று என்னை  திருப்பி விடணும் மீண்டு.ம் வந்து  அக்காவுடன் நிற்கணும் என.

காரில்  போய்க்கொண்டிருக்கும்போது மருமகன்  கேட்கிறான்

இன்றைய சூழ்நிலையில் இங்க  வரப்போகும் முடிவு  பற்றி கனக்க யோசித்திருப்பீர்கள்

ஆனாலும் வந்திருக்கிறீர்கள்

இந்த  முடிவை  நீங்க  எடுப்பதற்கு ஏதோ  ஒரு  காரணம்  இருக்குமென்று  எனது  உள் மனசு  சொல்லுது மாமா

தெரிஞ்சு  கொள்ளலாமா  என்று  கேட்டான்

கோவிட் 19 தொடங்கி அது  மெல்ல  மெல்ல ஆட்களை தனிமைப்படுத்த தொடங்கிய போது

தனிமை அக்காவை  வாட்டி  இருக்கணும்

ஒரு  நாள் தொலைபேசியில் சொன்னார்

தம்பி இதென்ன  வாழ்க்கை  செத்திடலாம்  போலிருக்கடா  என்று.

அன்றைக்கு ரிக்கற்  போட்டேன் 

ஏனெனில்  செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில்  எனக்கு என்றுமே உடன்பாடில்லை.

அதற்காகத்தான் வந்தேன்  என்றேன்

அவனது கண்கள் கலங்கியிருந்தன.

விமான  நிலையத்தில்  எந்த பிரச்சினையுமில்லை.

பயணம் தொடர்கிறது....

  • Like 12
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசப்பிணைப்போடு செல்கிறது பயணம். மேலும் தொடருங்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

பாசப்பிணைப்போடு செல்கிறது பயணம். மேலும் தொடருங்கள். 

நன்றி பாட்டி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

மருமகன் விலத்தி என்னை  தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக  ஓடிவந்து முத்தம் தந்து  வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே  இல்லை  அதிலும்  இன்றைய சூழ்நிலையில்  எப்படி  சாத்தியம் என ???

வயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும்.
தம்பி ஜாக்கிரதை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில்  எனக்கு என்றுமே உடன்பாடில்லை.

எனக்கு என் அண்ணர் 80களில்  சொன்ன வசனம் இது. ஆனால் அதைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பது காலத்தின் கொடுமை.

பயணம் தொடரட்டும்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

வேறு  எவரிடமும் கார் திறப்பு  கொடுக்காதவர்  நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார்.  அவருக்கு போக விரும்பிய அவருக்கு  பிடித்தவர்கள்  வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி  வந்திருக்கிறார்  தம்பி வந்திருக்கிறார் என்று  அறிமுகப்படுத்தும் போதே என்  அக்காவின்  முகத்தில் பேரானந்தத்தை  கண்டேன்.  அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும்  உங்களை  தேடி  வரும் தம்பி. அக்கா  தம்பி  பாசத்துக்கு  எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள்.

எமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...!

உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..!

அடுத்த தலை முறைகளுக்குள்  இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..!

தொடருங்கள்  விசுகர்...!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

வயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும்.
தம்பி ஜாக்கிரதை.

உண்மை தான் அண்ணா.

நன்றி அண்ணா

12 hours ago, குமாரசாமி said:

எனக்கு என் அண்ணர் 80களில்  சொன்ன வசனம் இது. ஆனால் அதைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பது காலத்தின் கொடுமை.

பயணம் தொடரட்டும்.

சில விடயங்களில் நாம் எடுக்கும் காலம் தாழ்த்திய முடிவுகள் எம் ஆயுள் வரை தொடர்ந்து வந்து துன்புறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கும் சில அனுபவ பாடங்கள் தான் உந்து சக்தியாகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மை தான் அண்ணா.

நன்றி அண்ணா

சில விடயங்களில் நாம் எடுக்கும் காலம் தாழ்த்திய முடிவுகள் எம் ஆயுள் வரை தொடர்ந்து வந்து துன்புறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கும் சில அனுபவ பாடங்கள் தான் உந்து சக்தியாகின்றன.

உண்மை தான் விசுகு அண்ணா ,தொடருங்கள் உங்கள் பயணத்தை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் Busy Man  ஆனாலும் இந்த கொரோனா காலத்தில  போய் சொந்தத்தை வளைர்த்து விட்டிருக்கார் மனுசன் வாழ்த்துக்கள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் பிள்ளைகளுடன் வீடியோ கோல் போட்டு காட்டி Duty Free shop இல் அவர்களுக்கு பிடித்த அங்கு பிரபலமான பொருட்களை வாங்கிக்கொண்டு விமானத்தினுள் நுழைந்து விமானம் பறக்கும் வரை அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு விமானம் பறக்கும் போது தொலைபேசியை செயலிழக்க செய்கிறேன். மீண்டும் தொலைபேசியை இயக்கும்போது வரப்போகும் செய்தி மீண்டும் இன்னொரு அக்கா வீட்டுக்கு அனுப்பப்போவதை அறியாமல்???

இந்த இடத்தில் நிச்சயமாக தொடரும் போடணும் இல்லையா??

(கோபப்பட வேண்டாம் உறவுகளே கைத்தொலைபேசியில் இதற்கு மேல் எழுத முடியவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கண பேர் உறவுகள் உயிரோடு இருக்கும் போது கணக்கெடுப்பதில்லை ....இறந்த  பின் ஓலமிட்டு செத்த வீட்டை பெரிசாய் செய்வீனம் ...தொடருங்கள் விசுகு அண்ணா 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(உண்மையில் நான்  எடுத்துக்கொண்ட  கருவின் கதை  முடிவடைந்து விட்டது

ஆனால் பயணம்  என்று  பெயர் வைத்ததால் அந்தப்பயணம் முடிவடையவில்லை

தொடர்கின்றேன்)

 

சார்ல் து கோல் விமான நிலையத்தை விமானம் வந்தடைந்துள்ளதாக  விமானி  அறிவிக்கவும்

எனது  தொலைபேசியை மீள இயக்குகின்றேன்

எனது பெரிய மகளிடமிருந்து குறும் செய்தி  ஒன்று  வந்திருக்கிறது

உடனடியாக தொடர்பு  கொள்ளுங்கள் என்று.

அவள் ஐந்து மாத  கர்ப்பிணி

அவசரமாக அவளை  தொலைபேசியில் அழைக்கின்றேன்

அப்பா  எனக்கு கொரோனா என  உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கை  தற்போது  தான் கிடைத்தது

நான்  உங்கள் வீட்டுக்கும் அடிக்கடி  வந்து போனதால் வீட்டில் எல்லோருக்கும் பரிசோதனை செய்யணும் தனிமைப்படுத்தணும் 

ஆனால் நீங்கள் 10 நாட்களாக  எம்முடன் இல்லாததால் உங்களுக்கு  தேவையில்லை

ஆனால் எங்களுக்கு  கொரோனா  வந்தாலும் பிரச்சினையில்லை உங்களுக்கு  வந்தால்தான் ஆபத்து

எனவே வீட்டுக்கு வரவேண்டாம் அப்பா மீண்டும் வேறு  எங்காவது  செல்லுங்கள் என்கிறாள்

அடிப்பாவி  ஒரு 2 மணித்தியாலத்துக்கு முன் தெரிந்திருந்தால் அக்காவுடனேயே நின்றிருப்பேனே என்றபடி சரி யேர்மனிக்கு ரிக்கற் பாருங்கள்.  அந்தக்காவும்  அத்தாரும்  லீவில் வீட்டில  தான் நிற்கிறார்களாம்.

கடுகதி ரயில் ரிக்கற்  எடுத்தபடி அடுத்த பயணம் புறப்படுகின்றேன்.

அங்கும் எங்கும் செல்லமுடியாத  நிலை.

வீட்டில் இருந்தபடியே ஒரே சமையலும்  சாப்பாடும் பல  நாட்கள்  கதைக்க  கிடைக்காத விடயங்களை  பேசியபடியும்  நாட்கள்  போகின்றன.  அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது  அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்)

அங்கு  நின்றபோது வீட்டில் இருந்த  எவருக்கும் கொரோனா  தொற்று  உறுதிப்படுத்தப்படவில்லை

மகளுக்கும் 3 அல்லது  4 நாட்கள் உடல் நோ மற்றும் சிறு உபாதைகளுடன் கொரோனா முடிவுக்கு  வந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்ந்தது

ஏழாவது நாள் எனது  மச்சாள் ஒருவர் (அப்பாவின்  மூத்த தமைக்கையின் மகள்)  பிரான்சில் இறந்து விட்டார்  என்ற  செய்தி கேட்டதும் அனைவரது வேண்டுகோளையும் புறந்தள்ளி பிரான்சுக்கு  வரவேண்டியதாயிற்று.

5எனக்கு இதுவரை  கொரோனா தொற்று  இல்லை)

 

முற்றும்

 

 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது  அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்)

விசுகு எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 16:07, ஈழப்பிரியன் said:

விசுகு எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.

அவர் வேறு ஒரு பெயரில் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்  அண்ணா

அதை அவர் பாதையிலேயே விட்டு  விடுவோம்

சிலரது  கட்டுக்கதைகளுக்கு இவர் கேள்விகளை  வைப்பதுண்டு

ஐயர் கூட இவரது நண்பர் தான்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனா தொற்று காலத்தில் பயணங்களைத் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருப்பதுதான் நல்லது. அவசர தேவைக்கு மட்டும் பயணம் செய்யுங்கள். உங்கள் பயண அனுபவம் உறவுகளின் சங்கமத்துடன் நன்றாக இருந்தது

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.