Jump to content

தமிழர்கள் தமது கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் – இரா.சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமது கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் – இரா.சம்பந்தன்

தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.

குறித்த பிரச்சினை பல வருடகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும், தமிழ்மக்களுக்கு நியாயமானதும் அர்த்தமுள்ளதுமான அதிகாரப் பரவலாக்கமொன்று வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் எடுத்துரைத்தோம்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமது யோசனைகளைக் கையளித்த போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/தமிழர்கள்-தமது-கௌரவம்-மற/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இன்னும் உயிரோடுதான் உள்ளேன்"

புரிந்து கொண்டோம்.

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தாலே அவர்களுக்குப் பாதுகாப்பு -இரா.சம்பந்தன்

1-186.jpg
 25 Views

தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமது யோசனைகளைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.

குறித்த பிரச்சினை பல வருடகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், தமிழ்மக்களுக்கு நியாயமானதும் அர்த்தமுள்ளதுமான அதிகாரப் பரவலாக்கமொன்று வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் எடுத்துரைத்தோம்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/?p=42738

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணங்களும் கொடுத்தவையோ? இல்லை வெறும் வாய்ப்பேச்சு தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கத்தில் சில செக்கன்கள் மனம் விட்டு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தமிழர்கள் தமது கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் – இரா.சம்பந்தன்

 

 

அதுக்கு முதலில் தமிழர்கள் அங்கிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

அதுக்கு முதலில் தமிழர்கள் அங்கிருக்க வேணும்.

அதுவும் சரிதான் ஐயாவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழரின் பிரச்சினையை தீர்க்கலாம் என நினைத்தார் ஆனால் அரசோ ஐயாவை இலவுகாத்த கிளி போல ஆக்கிட்டுது ஐயாவை நேற்றைய பேட்டியில் கண்டேன் உடல் தளர்ந்து போனார் .

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதுவும் சரிதான் ஐயாவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழரின் பிரச்சினையை தீர்க்கலாம் என நினைத்தார் ஆனால் அரசோ ஐயாவை இலவுகாத்த கிளி போல ஆக்கிட்டுது ஐயாவை நேற்றைய பேட்டியில் கண்டேன் உடல் தளர்ந்து போனார் .

சம்பந்தரின் அரசியல் என்பது பெரிதாக சோபிக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர் தலைமை வகித்த காலகட்டம் என்பது அவரின் அரசியல் திறமையை அளவிடும் சரியான அளவீடு அல்ல என்பதே உண்மை. அவர் முடிவெடுக்கும் பொறுப்பில் தலைமைத்துவதிற்கு வந்தது 2009 ம் ஆண்டின் பின்னரே. அந்த காலம் என்பது தமிழ் மக்கள் படுமோசமாக தோற்கடிக்கபட்டு சிங்கள இனவாதிகள் அதி உச்ச வெற்றி திமிரில் இருந்த காலகட்டம். அதுவும் பல கட்சி ஜனநாயக அரசியலில் எதையும் ஜனநாயக முறைப்படி  செய்யக்கூடிய வலுவே அவரிடம் இருந்தாது. ஆகவே அவரது இந்த குறுகிய காலம் என்பது அவரின் அரசியலை அளவிடும் சரியான அளவீடு அல்ல.

ஆனால் கடந்ந்து போன  தசாப்தங்களில் இருந்த  தமிழ் தலைமைகளின் அரசியல்  தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளை  எல்லாம் அவர் மீது சுமத்தி அவரை மட்டும்  " பலியாடு" ஆக்கும் விதமான கருத்துக்களே அண்மைக்காலத்தில் அவர் மீதான விமர்சனங்கள ஆகும்.  ஈழத்தமிழினம் அதல பாதாளத்தில் விழுந்த‍து அவரின் காலத்தில் அல்ல என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்.  

சாணக்கியன் போன்ற திறமையுள்ள இளைஞர்கள் எழுச்சி பெறுவது தமிழருக்கு  சிறு நம்பிக்கையை தருகிறது.  மும்மொழி திறமை உடைய‍ அவரின் பாராளுமன்ற உரைகளும், இன  உரிமை சார்ந்த விடயங்களுடன் மக்களின்  அன்றாட பிரச்சனைளை தீர்ப்பதிலும் அவர் காட்டும் அக்கறை பாராட்ட த்தக்கது. அவர் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி தலைவராக வரும் வாய்ப்பு உள்ளது என்பது எனது எண்ணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

அவர் தலைமை வகித்த காலகட்டம் என்பது அவரின் அரசியல் திறமையை அளவிடும் சரியான அளவீடு அல்ல என்பதே உண்மை. அவர் முடிவெடுக்கும் பொறுப்பில் தலைமைத்துவதிற்கு வந்தது 2009 ம் ஆண்டின் பின்னரே. அந்த காலம் என்பது தமிழ் மக்கள் படுமோசமாக தோற்கடிக்கபட்டு சிங்கள இனவாதிகள் அதி உச்ச வெற்றி திமிரில் இருந்த காலகட்டம். அதுவும் பல கட்சி ஜனநாயக அரசியலில் எதையும் ஜனநாயக முறைப்படி  செய்யக்கூடிய வலுவே அவரிடம் இருந்தாது. ஆகவே அவரது இந்த குறுகிய காலம் என்பது அவரின் அரசியலை அளவிடும் சரியான அளவீடு அல்ல.

ஆமாம் சரியாக சொன்னீர்கள், ஆயுதபோராட்ட காலத்திற்கு முன்னர் சம்பந்தரிடம் தலைமை பொறுப்பு வந்திருந்தால் தமிழர்களுக்கென்று ஒரு தனியான அரசை தன் அரசியல் வன்மைமூலம் ஜனநாயக முறைப்படி சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து பெற்று தந்திருப்பார், ஏனென்றால் அப்போதெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களிடமும் அவர்கள் மக்களிடமும் தமிழர்களுக்கு எதிரான இனவாதமும் வெறியும் இருந்ததில்லையே.

 

16 minutes ago, tulpen said:

ஆனால் கடந்ந்து போன  தசாப்தங்களில் இருந்த  தமிழ் தலைமைகளின் அரசியல்  தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளை  எல்லாம் அவர் மீது சுமத்தி அவரை மட்டும்  " பலியாடு" ஆக்கும் விதமான கருத்துக்களே அண்மைக்காலத்தில் அவர் மீதான விமர்சனங்கள ஆகும்.  ஈழத்தமிழினம் அதல பாதாளத்தில் விழுந்த‍து அவரின் காலத்தில் அல்ல என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்.  

ஆமாம் கடந்த தசாப்தங்களில் தவறு செய்த அரசியல் தலமைகளின்கீழ் ஐயா இருக்கவில்லை, சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுத்துக்கிட்டிருந்தார், ஈழ தமிழினம் இப்போதான் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது 1958, 1977,1983 இல் எல்லாம் சிங்களவர்கள் மடியில் தமிழர்களை வைத்து கிரிபத் ஊட்டி உச்சத்தில் வைத்திருந்தார்கள் அவ்வளவு பாசம் எங்க இனத்தின்மேல்.

22 minutes ago, tulpen said:

சாணக்கியன் போன்ற திறமையுள்ள இளைஞர்கள் எழுச்சி பெறுவது தமிழருக்கு  சிறு நம்பிக்கையை தருகிறது.  மும்மொழி திறமை உடைய‍ அவரின் பாராளுமன்ற உரைகளும், இன  உரிமை சார்ந்த விடயங்களுடன் மக்களின்  அன்றாட பிரச்சனைளை தீர்ப்பதிலும் அவர் காட்டும் அக்கறை பாராட்ட த்தக்கது. அவர் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி தலைவராக வரும் வாய்ப்பு உள்ளது என்பது எனது எண்ணம். 

சாணக்கியன் எழுச்சி பெறுவது என்ன சிறு நம்பிக்கை என்று சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்? பெருநம்பிக்கை அது.

ஏனென்றால் இலங்கை பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களில் இதுவரை மும்மொழி திறமை உள்ளவர்கள் இருந்ததே இல்லையே.

சாணக்கியன் தனக்குள்ள மும்மொழி திறமையை வைத்து இன உரிமை சார்ந்த விடயங்களிலும் மக்களின் அன்றாட பிரச்சனைகளிலும் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகளை பார்த்து சிங்களம் ஆடிபோய் தமிழர்களுக்கான தீர்வை கொரியரில் அவர் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது.

இப்போ இருக்கும் தமிழரசு கட்சியின் தலைரை பார்த்தே என்ன செய்வதென்று தெரியாமல் சிங்கள தலைமைகளும் இனமும் அலறுகின்றதே, சாணக்கியன் எதிர்காலத்தில் தலைமையை கைப்பற்றிவிட்டால் அவர்களின் நிலமை என்னாகும்?

ஒரு பெரும்பான்மை இனத்தை இப்படி நாங்கள் அச்சுறுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? 

 

Link to comment
Share on other sites

44 minutes ago, valavan said:

ஆமாம் சரியாக சொன்னீர்கள், ஆயுதபோராட்ட காலத்திற்கு முன்னர் சம்பந்தரிடம் தலைமை பொறுப்பு வந்திருந்தால் தமிழர்களுக்கென்று ஒரு தனியான அரசை தன் அரசியல் வன்மைமூலம் ஜனநாயக முறைப்படி சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து பெற்று தந்திருப்பார், ஏனென்றால் அப்போதெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களிடமும் அவர்கள் மக்களிடமும் தமிழர்களுக்கு எதிரான இனவாதமும் வெறியும் இருந்ததில்லையே.

 

ஆமாம் கடந்த தசாப்தங்களில் தவறு செய்த அரசியல் தலமைகளின்கீழ் ஐயா இருக்கவில்லை, சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுத்துக்கிட்டிருந்தார், ஈழ தமிழினம் இப்போதான் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது 1958, 1977,1983 இல் எல்லாம் சிங்களவர்கள் மடியில் தமிழர்களை வைத்து கிரிபத் ஊட்டி உச்சத்தில் வைத்திருந்தார்கள் அவ்வளவு பாசம் எங்க இனத்தின்மேல்.

சாணக்கியன் எழுச்சி பெறுவது என்ன சிறு நம்பிக்கை என்று சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்? பெருநம்பிக்கை அது.

ஏனென்றால் இலங்கை பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களில் இதுவரை மும்மொழி திறமை உள்ளவர்கள் இருந்ததே இல்லையே.

சாணக்கியன் தனக்குள்ள மும்மொழி திறமையை வைத்து இன உரிமை சார்ந்த விடயங்களிலும் மக்களின் அன்றாட பிரச்சனைகளிலும் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகளை பார்த்து சிங்களம் ஆடிபோய் தமிழர்களுக்கான தீர்வை கொரியரில் அவர் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது.

இப்போ இருக்கும் தமிழரசு கட்சியின் தலைரை பார்த்தே என்ன செய்வதென்று தெரியாமல் சிங்கள தலைமைகளும் இனமும் அலறுகின்றதே, சாணக்கியன் எதிர்காலத்தில் தலைமையை கைப்பற்றிவிட்டால் அவர்களின் நிலமை என்னாகும்?

ஒரு பெரும்பான்மை இனத்தை இப்படி நாங்கள் அச்சுறுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? 

 

எனது கருத்தின் சாராம்சம் என்பது சம்பந்தரின் தலைமை பற்றியது. சம்பந்தரின் அரசியல் தவறுகள் விமர்சிக்கப்டவேண்டியவை. அவர் தலைமை வகித்த காலத்தில் அவரின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கலாம் அவர் மீது குற்றம் சாட்டலாம். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மிக குறுகிய காலம்  தலைமை வகித்த அவரின் காலம் அவரின் அரசியல் ஒட்டு மொத்த தமிழரின் உரிமை போரின் தோல்வியை  அளவிடும்  அளவீடு அல்ல என்பதே. அதுவே உண்மையானது.

ஆயுத போராட்டத்திற்கு முற்பட்ட காலத்தில் அவர் வெறும் திருகோணமலை தொகுதி எம்.பி மட்டுமே. தனது தொகுதி மக்களின் தேவைகளை கவனித்தாரா? தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தாரா? பன்முகப்படுத்தப்ட்ட வரவு செலவு திட்டத்தில் தொகுதிக்கு ஒதுக்கபட்ட நிதியை சிறப்பாக தொகுதியின் அபிவிருத்திக்கு பகிர்ந்தளித்தாரா? இது போன்ற கேள்விகளை  அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களிடம் கேட்கவேண்டும். 

சாணக்கியன் அவரது மும்மொழி திறமைக்காக மட்டும் அல்ல. இள வயதினரான அவர் மக்களின் பல்வேறு பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதை அவர் அணுகும் விதம் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளதை வைத்தே அவர் பலராலும் பாராட்டப்படுகிறார். பலராலும் நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறார். அந்த நம்பிக்கை மேலும் உறுதியடைவதும் உடைந்து போவதும் அவரின் எதிர்கால நடவடிக்கைகளில் தான் தங்கியுள்ளது.  ஏற்கனவே  மிதவாத/ தீவிரவாத தலைமைகளில் நம்பிக்கை வைத்து ஏமாந்த மக்களுக்கு அப்படியான நம்பிக்கை வைப்பது கடினம் என்ற உங்களது தரப்பு வாத‍த்தையும் நான் நிராகரிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான தீர்வு அல்லது பட்ட வலிக்கான பரிகாரம் பற்றி சம்பந்தரின் தலைமை மீது எந்த குற்றச்சாட்டும் வைப்பதில்லை. ஏனெனில் அவர்களால் அது முடியாது என்று தெரியும்.

ஆனால் 2009 க்கு பின்னர் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்து செயற்படவில்லை என்பதே குற்றச்சாட்டு. அதற்கு எதிராக இருப்பது வேறு ஒன்றும் இல்லை 2009 க்கு பின்னரான  சம்பந்தரின் வாழ்வும் பொருளாதாரமும் தான்.

அத்துடன் சரிவராது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றும் அவரது கால அவகாசமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அதுக்கு முதலில் தமிழர்கள் அங்கிருக்க வேணும்.

இருக்கும் தமிழர்கள் போதாதா? 😁

Link to comment
Share on other sites

20 hours ago, சுவைப்பிரியன் said:

அதுக்கு முதலில் தமிழர்கள் அங்கிருக்க வேணும்.

 

15 hours ago, குமாரசாமி said:

இருக்கும் தமிழர்கள் போதாதா? 😁

நீங்கள் ஜேர்மன் பாராளுமன்றம் போக ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் போதாதுதானே?

அங்கே இருப்பவர்களை கூப்பிடலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

 

நீங்கள் ஜேர்மன் பாராளுமன்றம் போக ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் போதாதுதானே?

அங்கே இருப்பவர்களை கூப்பிடலாமே?

தமிழர்கள் புலம்பெயர் நாட்டு பாராளுமன்றம் சென்று கிழிச்சது ஏதாவது?? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

இருக்கும் தமிழர்கள் போதாதா? 😁

இப்ப இருக்கும் தமிழ் மக்கள் இவர் சொல்லும் காலம் வரை இருக்க  வேணுமே.அதுக்கு இவரும் மற்றவர்களும் சொல்லும் தீர்ர்வு வரும் போது வரைக்குமாவது அவர்களின் வாழ்வாதரத்தையும் யோசிக்க வேண்டும் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.