Jump to content

யாழ். காற்றாலை மின் திட்டத்தில் பலித்த இந்தியாவின் இராஜதந்திரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். காற்றாலை மின் திட்டத்தில் பலித்த இந்தியாவின் இராஜதந்திரம்

- ரொபட் அன்டனி -
வடக்கில் அரசியல் கட்சிகளும் சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் யாழ். காற்றாலை மற்றும் சூரிய ஒளிமூலமான மின்திட்டத்தை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.

யாழ். தீவுகளிலிருந்து இந்தியாவின் எல்லைக்கு சுமார் 48 கிலோ மீட்டர் தூரமே காணப்படுகின்றது. எனவே இந்தியா இதனை இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் குறித்த திட்டத்துக்கான செலவை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் டலஸை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். இதனையடுத்து தற்போது இந்த திட்டம் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள சூழலில் தற்போது மேற்கு மு‍னையம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் இந்த கிழக்கு முனைய விடயம் தொடர்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளான அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சீன நிறுவனத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின் உற்பத்தி திட்டங்கள் இந்தியாவின் கைகளுக்கு மாறும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் இந்தியா இராஜதந்திர ரீதியில் காய்நகர்த்திவருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

daadadadad.jpg

யாழ். தீவுகளின் மின்திட்டம்
யாழ்ப்பாணத்தின் இந்த நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் இங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருந்தது. இது தொடர்பில் ஜனவரி மாதத்தில் அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டிருந்தது. 

சீனாவின் காற்று மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடர்பான நிறுவனமான சினோர் இடக்வின்( SINOR ITECHWIN) என்ற நிறுவனம்  இந்த மின்சக்தி திட்டத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க விருந்தது. வடக்கில் அரசியல் கட்சிகளும் இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்ததன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் இந்தியா இது தொடர்பில் அவதானம் செலுத்தியது. குறித்த தீவுகளிலிருந்து இந்தியாவின் எல்லைக்கு சுமார் 48 கிலோ மீட்டர் தூரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சீனாவின் பிரசன்னம் அங்குவரும் பட்சத்தில் அது இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியது. இதனையடுத்து இந்தியா இதனை இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அந்தவகையில் எவ்வாறு இந்த விடயத்தை தடுத்து நிறுத்தி இந்தியாவின் பிரசன்னத்தை அங்கு எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பாக இந்தியா இராஜதந்திர ரீதியில் ஆராய்ந்த நிலையிலேயே அண்மையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியா நன்கொடை 
குறித்த சந்திப்பில் மின்சக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசியத்தை அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார். அந்த வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை இலங்கையே  முன்னெடுக்க வேண்டும் என்றும் இதற்கான நிதி உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதன்படி 12 மில்லியன் டொலர் உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக மின்சக்தி அமைச்சரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.  இந்நிலையில் இந்தியா இவ்வாறு 12 மில்லியன் டொலர்களை இலவசமாக வழங்குமாயின் தாம் அதனை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரிவித்திருக்கின்றார்.

அதன்படி, இந்திய உயர்ஸ்தானிகரின் யோசனையை ஏற்றுக் கொண்ட மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கும் என்றும் அந்த வகையில் இந்தியாவின் நன்கொடையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து  கேசரிக்கு விபரித்த மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாண மக்களுக்கு போதுமான வகையில் குறைவின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதே மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான நோக்கமாக இருக்கின்றது. அதற்காக எந்த விதமான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். அந்த வகையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தின் அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இந்தியா இது தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்கின்றது. என்னை அண்மையில் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை முன்னெடுக்க முழுமையான நிதி செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார். இந்தியா இந்த செலவை முழுமையாக நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகின்ற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவானது இலங்கையின் மூத்த அண்ணனாகும். எனவே இந்தியா கூறுகின்ற இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

 இந்தியா இவ்வாறு 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் பட்சத்தில் அந்த திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் நாங்கள் முன்னெடுப்போம் என்பதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றேன். இந்தியா எமது நண்பன் என்ற வகையில் நாம் இதனை ஏற்றுக் கொள்கின்றோம். இந்தியா தெற்காசியாவின் ஆன்மாவாகவுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தை தற்போது இந்த புதிய வகையில் செய்வது தொடர்பில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்தி இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார். 

இலங்கை விருப்பம் 
அந்தவகையில் இந்தியாவின் உதவியுடன் இந்த காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கத்துடன் இருப்பதாகவே தெரியவருகிறது. முக்கியமாக கிழக்கு முனைய விடயத்தில் இந்தியாவுக்கு ஒரு அதிருப்தி நிலைமை ஏற்பட்டது. அதனை இந்தப்  விடயத்தின் ஊடாக முகாமைத்துவம் செய்யும் ஒரு உபாயமும் இங்கு இருப்பதாக தெரிகிறது. காரணம் கிழக்கு முனைய விடயத்தில் இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பில் இந்தியா நேரடியாகவே தனது அதிருப்தியை வெளியிட்டுவந்தது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கிழக்கு முனைய விடயத்தில் இலங்கை செயற்பட்ட விதம் தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் தாம் அதில் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் நேரடியாக தெரிவித்திருந்தார். அந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் தி‍னேஷ் குணவர்த்தனவே வெளியிட்டிருந்தார். இந்த சூழலிலேயே தற்போது இந்த யாழ். காற்றாலை மின் திட்டம்  இந்தியாவின் கைகளுக்கு மாறும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக அவ்வாறே நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.   

இலங்கை இந்திய உறவு
தெற்காசியாவின் வல்லரசு எனக் கருதப்படும் இலங்கையின் மிக நெருங்கிய அயல்நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாறு தொடக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் நெருங்கிய உறவு நீடித்து வந்திருக்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வரலாற்றிலும் அண்மைய அரசியல் வரலாற்றிலும் இருதரப்பு உறவில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும் இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்பு என்று வரும்போது ஒரு நெருக்கமான நிலை ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இரண்டு நாடுகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது அனுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. 

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் கடந்தகாலங்களில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவந்தன. முக்கியமான இலங்கையிலான சீனாவின் பிரசன்னம் இந்தியாவை அதிருப்திக்குள்ளாக்கி வந்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கைக்கு எந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் முதலாவதாக உதவி வழங்குவதில் இந்தியா முதன்மை வகிக்கிறது என்று கூறவேண்டும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக உதவி வழங்குவதில் முதன்மையாக செயற்பட்டு வந்திருக்கின்றது. அண்மைய கால வரலாற்றை எடுத்து நோக்கும் போது 2004ஆம் ஆண்டில் இலங்கையில் சுனாமி பேரனர்த்தம்  ஏற்பட்டபோது இந்தியா முதல் நாடாக இலங்கைக்கு உதவி செய்தது. அதன்பின்னர் இயற்கை அனர்த்தங்கள் வெள்ளம் மண்சரிவு போன்ற நேரங்களில் கூட இலங்கைக்கு இந்தியா உதவி செய்திருக்கின்றது.

யுத்த காலத்தில் கூட இலங்கைக்கு இந்தியா உதவி செய்திருக்கிறது. அதேபோன்றே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூட இலங்கைக்கு முதலாவதாக தடுப்பூசிகளை வழங்கியது மட்டுமின்றி அதற்கு முன்னர் பல்வேறு மருத்துவ உதவிகளையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் அதில் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை செலுத்துகின்ற இந்தியாவின் ஒரு நோக்கமும் இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பிரசன்னம் எப்போதும் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதுவது இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான அந்த நாட்டின் அக்கறையை எடுத்துக் காட்டுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் கடந்த சில வருடங்களாக அதாவது சுமார் ஒரு தசாப்தகாலமாக இலங்கையில் சீனாவின்  பிரசன்னம் இந்தியாவை அதிருப்தியடைய செய்ததாகவே கருதப்படுகிறது. 2000-ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் சீனாவின் பிரசன்னம் இலங்கையில் அதிகரித்தமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்த்தி அடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. முக்கியமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது சீனாவுக்கு 70 வீத உரிமத்துடன் 99 வருட குத்தகைக்கு வழங்கியபோது பல்வேறு விதமான அதிருப்தி நிலைமை தென்பட்டது.

அந்தவகையில் இந்தியாவும் இலங்கையில் தனது பிரசன்னத்தை உறுதியாக்குவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறது.  அதன்படியே கொழும்பு கிழக்கு முனையத்தை இலங்கையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா முயற்சித்தது.  இந்தியாவுக்கு 49 வீத உரிமம் மற்றும் இலங்கைக்கு 51 வீத உரிமைத்துவம் என்ற அடிப்படையில் இதனை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

எனினும் அரசாங்கத்தின் உள்ளேயும்  அரசாங்கத்துக்கு வெளியேயும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது இந்த யாழ்ப்பாணத்தின் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்ட விவகாரம் களத்துக்கு வந்து இருக்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகின்றது. குறித்த திட்டத்துக்கான செலவை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியாவது. அங்கு தனது பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. இலங்கை குறித்த திட்டத்துக்கான நிதியை இந்தியா இலவசமாக வழங்கும் பட்சத்தில் அதனை இந்தியாவுக்கே அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றது. 

அந்த விடயத்தில் இந்தியா ஒரு இராஜதந்திர ரீதியில் காய்நகர்த்தியிருக்கின்றது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தொடர்ந்தும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்வதில் தாமதம் நிலவுகின்றது. பெரும்பாலும் ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.virakesari.lk/article/100885

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி......உலக நாடுகள் எல்லாம் ஒரு மாதமாவது கண்டியில் குந்தியிருந்து பாடம் பயில வேண்டும்......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

இலங்கையின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி......உலக நாடுகள் எல்லாம் ஒரு மாதமாவது கண்டியில் குந்தியிருந்து பாடம் பயில வேண்டும்......!  😎

இலங்கை செலுத்த வேண்டிய கடன், அது அமைந்திருக்கும் கேந்திர நிலையத்துடன் ஒப்பிடுகையில் தூசு. நன்கொடைகளிலும், கடன்களிலும் காலத்தை ஓட்டலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசகர்களை அடி முட்டாளாகக் கருதியதால் கட்டுரை ஆசிரியர் றொபேட் அந்தனிக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ☹️

கட்டுரையை இங்கே இணைத்த கிருபனின் நகைச்சுவை உணர்விற்கு எனது பாராட்டுக்கள்... 👍

 

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

வாசகர்களை அடி முட்டாளாகக் கருதியதால் கட்டுரை ஆசிரியர் றொபேட் அந்தனிக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ☹️

கட்டுரையை இங்கே இணைத்த கிருபனின் நகைச்சுவை உணர்விற்கு எனது பாராட்டுக்கள்... 👍

 

😂

ஏன் வாசகர்களை அடிமுட்டாள்களாக்க வேண்டிய தேவை வீரகேசரிக்கு?🤔

இந்தியா இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் மூக்குடைபட்டுள்ளது. ஆனால் குத்துவிட்டது சீனாதான்!

சீனாவோ, இந்தியாவோ ஏதோ ஒரு நாடு வடக்கில் மூன்று தீவுகளுக்கு டீசலைப்பாவிக்காமல் மின்சாரம் கொடுத்தால் நல்லதுதானே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

1) ஏன் வாசகர்களை அடிமுட்டாள்களாக்க வேண்டிய தேவை வீரகேசரிக்கு?🤔

2) இந்தியா இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் மூக்குடைபட்டுள்ளது. ஆனால் குத்துவிட்டது சீனாதான்!

3) சீனாவோ, இந்தியாவோ ஏதோ ஒரு நாடு வடக்கில் மூன்று தீவுகளுக்கு டீசலைப்பாவிக்காமல் மின்சாரம் கொடுத்தால் நல்லதுதானே!

 

1) 😂😂

கிருபன், நான் கட்டுரையாளரை கிண்டலடித்ததை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் போல..

இந்த விடயத்தில் இராசதந்திர ரீதியில் வெற்றிபெற்றது சீனாவும் சிங்களமுமே. எழுத்து வாசனைகூட இல்லாத சிறு குழந்தைக்குக் கூட இது தெரியும்/புரியும்.

ஆனால் கட்டுரையாளரோ " வாங்கின காசிற்கு மேல கூவுறாண்டா கொய்யால" ரகம் போல , அதனால் நேர் எதிராக இந்தியாவின் இராசதந்திரம் வெற்றி பெற்றதாக புலுடா விடுகிறார். வாசகர்களை முட்டாளாக நினைத்தார் போலும். 😏

2) 1️⃣0️⃣0️⃣

3)

 

😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்த விடயத்தில் இராசதந்திர ரீதியில் வெற்றிபெற்றது சீனாவும் சிங்களமுமே. எழுத்து வாசனைகூட இல்லாத சிறு குழந்தைக்குக் கூட இது தெரியும்/புரியும்.

ஆனால் கட்டுரையாளரோ " வாங்கின காசிற்கு மேல கூவுறாண்டா கொய்யால" ரகம் போல , அதனால் நேர் எதிராக இந்தியாவின் இராசதந்திரம் வெற்றி பெற்றதாக புலுடா விடுகிறார். வாசகர்களை முட்டாளாக நினைத்தார் போலும். 😏

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.