Jump to content

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பின்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் மாநகர முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருகிறேன். எனினும், குறித்த கட்டடமானது யாழ்ப்பாண மாநகர சபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில் அதனை, யாழ். மாநகரசபை பொறுப்பேற்று நடத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு, அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துள்ளேன்.

மேலும், அந்தக் கட்டிடத்தினை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் கட்டடத்தை எவ்வாறு கையாள்வது, பராமரிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுதுள்ளோம். வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்புவிழா செய்யப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு, இந்தியத் துணைத்தூதுவரிடம் இதுகுறித்து பல விடயங்களைத் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் இதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்.

இதேவேளை, முன்னைய மாநகர ஆட்சியாளர் குறித்த கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசாங்கத்திற்குக் கையளிப்பதற்கு இணங்கி இருந்ததன் காரணமாகவே இவ்வளவு காலமும் குறித்த கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

எனினும், இந்த கலாசார மத்திய நிலையமானது யாழ். மாநகர சபையின் சொத்தாகும். அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது மாநில சபைக்கு மீண்டும் கையளிக்கப்படவுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யாழ்-கலாசார-மத்திய-நிலைய/

Link to comment
Share on other sites

மேயரின் முயற்சிகளுக்கு நன்றிகள். 👍 இது தொடர்பில் உறுதியாக இருப்பதுடன் இந்திய அரசுடன் தொடர்பினை ஏற்படுத்தி ராஜதந்திர நகர்வுகள் மூலம்  இந்த நிலையம்  எக்காலமும்  யாழ் மாநகர சபையில் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்தோடு நிற்காது இக்கட்டத்தை உலக தரத்தில் தொடர்ச்சியாக பராமரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனை யாழ் மாநகர சபையின் நிர்வாக பொறுப்பின் கீழ் நிரந்தரமாக்க வேண்டும். மாநகரசபைக்கு தொடர்ச்சியான வருவாய் மூலமாக( Revenue Source) இது அமையும் என்பதால் இதன் பராமரிப்பு செலவு குறித்து அச்சமடைய தேவையில்லை. 

இலங்கை அரசின் கீழான உள்ளூராட்சி, மாகாண அரசினை பொறுப்பில் எடுப்பவர்கள் தேசிய அரசியலில்  இருந்து சற்றே விலகி இருந்து உள்ளூர் அபிவிருத்திகளில் கூடிய கவனம் செலுத்துவதன் மூலம் தமிழரின் பலம் வெவ்வேறு மட்டங்களில் காப்பாற்ற உதவலாம். அந்நோக்கில் ஆட்சியில்  அதிகாரத்தில் உள்ளவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட நல்லுறவை பேணுவதில் தவறில்லை. விக்கினேஸ்வரன் விட்ட தவறை எதிர்காலத்தில் மாகாண சபை ஆட்சியாளர்கள் எவரும் திரும்ப விடக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

மேயரின் முயற்சிகளுக்கு நன்றிகள். 👍 இது தொடர்பில் உறுதியாக இருப்பதுடன் இந்திய அரசுடன் தொடர்பினை ஏற்படுத்தி ராஜதந்திர நகர்வுகள் மூலம்  இந்த நிலையம்  எக்காலமும்  யாழ் மாநகர சபையில் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்தோடு நிற்காது இக்கட்டத்தை உலக தரத்தில் தொடர்ச்சியாக பராமரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனை யாழ் மாநகர சபையின் நிர்வாக பொறுப்பின் கீழ் நிரந்தரமாக்க வேண்டும். மாநகரசபைக்கு தொடர்ச்சியான வருவாய் மூலமாக( Revenue Source) இது அமையும் என்பதால் இதன் பராமரிப்பு செலவு குறித்து அச்சமடைய தேவையில்லை. 

இலங்கை அரசின் கீழான உள்ளூராட்சி, மாகாண அரசினை பொறுப்பில் எடுப்பவர்கள் தேசிய அரசியலில்  இருந்து சற்றே விலகி இருந்து உள்ளூர் அபிவிருத்திகளில் கூடிய கவனம் செலுத்துவதன் மூலம் தமிழரின் பலம் வெவ்வேறு மட்டங்களில் காப்பாற்ற உதவலாம். அந்நோக்கில் ஆட்சியில்  அதிகாரத்தில் உள்ளவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட நல்லுறவை பேணுவதில் தவறில்லை. விக்கினேஸ்வரன் விட்ட தவறை எதிர்காலத்தில் மாகாண சபை ஆட்சியாளர்கள் எவரும் திரும்ப விடக்கூடாது. 

😂😂

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்.

எதற்கும் யாழ் பொதுசன நூலகத்தை முழுமையாக பொது மக்களுக்குத் திறந்துவிட்டு, அதனைப் பராமரித்து அதில் பயிற்சி எடுக்கட்டும்.  மிகுதியை பின்னர் பார்ப்போம்...🤥

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

😂😂

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்.

எதற்கும் யாழ் பொதுசன நூலகத்தை முழுமையாக பொது மக்களுக்குத் திறந்துவிட்டு, அதனைப் பராமரித்து அதில் பயிற்சி எடுக்கட்டும்.  மிகுதியை பின்னர் பார்ப்போம்...🤥

ஏன் கபிதன் யாழ் பொதுசன நூல் நிலையம் பொதுமக்களுக்கு திறந்து விடப்படவில்லையா?  அந்த கட்டட பராமரிப்பில் தவறு உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

ஏன் கபிதன் யாழ் பொதுசன நூல் நிலையம் பொதுமக்களுக்கு திறந்து விடப்படவில்லையா?  அந்த கட்டட பராமரிப்பில் தவறு உள்ளதா? 

ஆம் துல்பன்.

1) தமிழர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு நிபந்தனை. சிங்களவருக்கு ஒரு நிபந்தனை. பிற நாட்டவருக்கு ஒரு நிபந்தனை.

2) நூலகம் முளுமையாகப் பாவனைக்குத் திறந்துவிடப்படவில்லை

3) பராமரிப்பில் ஏக குறைபாடுகள். 

4) அலுவலர்களின் தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, பயனாளர்களை மதியாமை. இன்னோரன்ன... குறைபாடுகள்.

ஒருமுறை உள்ளே சென்று வாருங்கள். 

வெறுக்கும். 

☹️

 

 

Link to comment
Share on other sites

29 minutes ago, Kapithan said:

ஆம் துல்பன்.

1) தமிழர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு நிபந்தனை. சிங்களவருக்கு ஒரு நிபந்தனை. பிற நாட்டவருக்கு ஒரு நிபந்தனை.

2) நூலகம் முளுமையாகப் பாவனைக்குத் திறந்துவிடப்படவில்லை

3) பராமரிப்பில் ஏக குறைபாடுகள். 

4) அலுவலர்களின் தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, பயனாளர்களை மதியாமை. இன்னோரன்ன... குறைபாடுகள்.

ஒருமுறை உள்ளே சென்று வாருங்கள். 

வெறுக்கும். 

☹️

 

 

இவை களையப்பட வேண்டும் எனபதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.  படிக்கும் காலத்தில் (படிக்க மட்டுமில்லை😂)    வாரத்தில் இரண்டு மூன்று முறை சுதந்திரமாக அங்கு சென்று வந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு அழகான சைக்கிள் காலம்.  சுதந்திரத்திற்கான போராட்டம் இருந்த சுதந்திரத்தையும் பறித்தது தான் எமது வரலாறு. எதிர்காலம் அந்த வரலாற்றை திருத்தி எழுதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி தொடங்கியாச்சு?? ☹️

Link to comment
Share on other sites

41 minutes ago, Kapithan said:

ஆம் துல்பன்.

1) தமிழர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு நிபந்தனை. சிங்களவருக்கு ஒரு நிபந்தனை. பிற நாட்டவருக்கு ஒரு நிபந்தனை.

2) நூலகம் முளுமையாகப் பாவனைக்குத் திறந்துவிடப்படவில்லை

3) பராமரிப்பில் ஏக குறைபாடுகள். 

4) அலுவலர்களின் தான்தோன்றித்தனம், பொறுப்பின்மை, பயனாளர்களை மதியாமை. இன்னோரன்ன... குறைபாடுகள்.

ஒருமுறை உள்ளே சென்று வாருங்கள். 

வெறுக்கும். 

☹️

 

 

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

2 minutes ago, zuma said:

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

புதிய மேயராவது அதை மாற்றியமைத்து யாழ் பொது சன நூலகத்தை பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனபதே அனைவரதும் விருப்பமும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

 

2 minutes ago, zuma said:

கபித்தான் சொன்னது சரியானதே.
நான் கடந்தமுறை சென்ற போது(2019) அவதானித்தது எதுவெனில், நூலகத்தை நூதனசாலையாய் மாற்றியுள்ளார்கள். தமிழர் யாரும் படிப்பதற்கு செல்வதில்லை, அதனை ஒரு சுற்றுலா தலமாக தான் மக்கள் பாவிக்கின்றார்கள்.

 

போர்க்காலத்தில் நல்லூரில் இருந்த இந்த நூலகம் எவ்வளவோ மேல். 

நூலகத்தில் வேலை செய்வோருக்கு அது நூல்நிலையம் என்பதும் மறந்துவிட்டது, தமிழரின் வரலாறு/அடையாளம் என்பதும் மறந்துவிட்டது. 

☹️

1 minute ago, tulpen said:

புதிய மேயராவது அதை மாற்றியமைத்து யாழ் பொது சன நூலகத்தை பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனபதே அனைவரதும் விருப்பமும். 

முதல்வரால் அது முடியாது.

எங்கள் மனனிலை கறள் பிடித்துவிட்டது. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

😂😂

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்.

எதற்கும் யாழ் பொதுசன நூலகத்தை முழுமையாக பொது மக்களுக்குத் திறந்துவிட்டு, அதனைப் பராமரித்து அதில் பயிற்சி எடுக்கட்டும்.  மிகுதியை பின்னர் பார்ப்போம்...🤥

நானும் 2019யில் அங்கு நின்ற போது ஒருக்கால் போய் பார்ப்போம் என்று போக அங்கு நின்ற காவலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தான் பார்வையாளர்கள் வரலாம் என்று சொன்னார்கள் ...நான் விசரில் திரும்பி வந்திட்டேன் ...அதன் பிறகு போகவில்லை .
அங்கு போய் வாசிப்பதற்கு எல்லோரையும் ஒரே நேரத்தில் விடுவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை ...ஒரு வேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தான் இந்த நடைமுறையோ தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் – சி.வி.கே. சிவஞானம்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் தொடர்பான பராமரிப்பு குறித்து வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயத்தில் தனித்து மாநகர சபை மீது பாரிய நிதித் தாக்கத்தைச் சுமத்தி மக்களின் சேவைகளைப் பாதிக்காத வகையில் நிதி மூலங்களுக்கான வாய்ப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகமும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இந்த நிதித்தாக்க விடயத்தில் கவனமும் கட்டுப்பாடும் செலுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “புதிதாக யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.1960-களில் நிர்மாணிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையில் சேதமடைந்து திறந்தவெளி அரங்குக்குப் பதிலாக இந்தக் கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்த திறந்தவெளி அரங்கானது, யாழ். மாநகர சபைக்குரிய ஆதனத்தில், மாநகர சபையின் செலவில் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டதாகும்.

இந்நிலையில், இந்தியாவின் பாரிய முழு நிதிப் பங்களிப்பின் மூலம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கலாசார மத்திய நிலையம் அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் பராமரிப்புக்குப் போதுமான நிதிவசதி யாழ். மாநகர சபையிடம் இல்லையென்பது யதார்த்தமானது. எனினும், அதன் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் என்பது எவ்வித கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-கலாசார-மத்தி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.