Jump to content

உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை | கனலி

spacer.png
 

னக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன்.

பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தால், அதற்குக் காரணம் நாம் தான் என்றால் வேறு எதைப் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்க மாட்டோம். நீங்கள் தொலைக்காட்சியை இயக்கியவுடன் அதில் அனைத்தும் இதைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும். தலைப்புச் செய்திகள், வானொலி, செய்தித்தாள்கள் இவை எல்லாவற்றிலும் வேறு எதைப் பற்றியும் நீங்கள் வாசிக்கவோ கேட்வோ கூடாத அளவுக்கு இருக்க வேண்டும். ஒரு போர் நடந்துகொண்டிருப்பதைப் போன்று இருக்க வேண்டும்.

ஆனால், ஒருவர்கூட அதைப் பற்றி பேசவில்லை. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது மிகுந்த தீமையுடயைது, அது நம் இருப்பையே அச்சுறுத்துவது என்றால், அதை எப்படி தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்? ஏன் எந்த வரைமுறையும் இல்லை? ஏன் அது சட்டவிரோதமாக்கப்படவில்லை?

ஆக, என்னுடைய 11 வயதில் நான் நோயில் விழுந்தேன். நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். பேசுவதை நிறுத்தினேன். சாப்பிடுவதை நிறுத்தினேன். இரண்டு மாதங்களில் 10 கிலோ வரை உடல் எடை இழந்தேன். பிறகு ஆஸ்பெர்கர் குறைபாட்டால், குறிப்பிட்ட சமயங்களில் பேச இயலாமை என்கிற கோளாறால் பாதிக்கப்பட்டேன். எப்போது அவசியமோ அப்போது மட்டுமே நான் பேசுவேன் என்று இதற்கு அர்த்தம். இது அப்படியான பொழுதுகளில் ஒன்று. இந்த நிலையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு, அநேகமாக அனைத்து கறுப்பு அல்லது வெள்ளை மட்டும்தான். நாங்கள் பொய் சொல்வதில் தேர்ந்தவர்கள் அல்லர்; போலவே, உங்களில் பெரும்பாலானோருக்கு விருப்பமான சமூக விளையாட்டுகளில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்வதில்லை. கலை சார்ந்தவர்கள் இயல்பானவர்கள் என்றும், மற்றவர்கள் விசித்திரமானவர்கள் என்றும் பல வழிகளில் நான் நினைக்கிறேன். குறிப்பாக நீடித்த வளர்ச்சியின் நெருக்கடியை, வாழ்வாதாரத்துக்கான அச்சுறுத்தல், எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்சினை என்று எல்லோரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும், முன்னைப் போலவே கடந்துசெல்கின்றனர்.

அதுதான் எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், கரியமில வாயு வெளியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றால், நாம் அதை நிறுத்தியாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை அது கறுப்பு அல்லது வெள்ளை. பிழைத்திருத்தல் என்று வரும்போது, துலக்கமில்லாத பகுதிகள் என்று எதுவும் இல்லை. நாம் மாற்றத்துக்கு உட்பட வேண்டும்.

ஸ்வீடன் போன்ற பணக்கார நாடுகள், தங்களுடைய கரியமில வாயு வெளியேற்றத்தில், ஆண்டுக்குக் குறைந்தது 15 சதவீத அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் இரண்டு டிகிரி செல்சியஸ் என்ற எச்சரிக்கை இலக்குக்குக் கீழ் நாம் நிலைக்க முடியும்; என்றாலும், 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருப்பது காலநிலை பாதிப்புகளை வெகுவாக குறைக்கும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.

நம்முடைய ஊடகங்களும், நம் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அதைப் பற்றி அவர்கள் மூச்சுவிடக் கூட இல்லை. போலவே, ஏற்கெனவே நிலைகொண்டுள்ள பசுங்குடில் வாயுக்களைப் பற்றியும் யாரும் பேசவில்லை.

காற்று மாசுபாடு ஒரு வெப்பமாதலை மறைக்கவில்லை, எனவே புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தும்போது, ஏற்கனவே கூடுதல் வெப்பமாதல் உள்ளது, ஒருவேளை 0.5 முதல் 1.1 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறாவது தொகுப்புப் பேரழிவுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம் என்ற உண்மை குறித்து யாரும் மூச்சுவிடக் கூட இல்லை. ஒரு நாளில் 200 உயிரின வகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. இயல்பான அளவு என்று கருத்தப்படும் நிலையில் இருந்து 1000இல் இருந்து 10,000 வரையிலான அளவுகளுக்கு இடையில் இந்த அழிவின் வேகம் நடந்துகொண்டிருக்கிறது.

போலவே, உலகளாவிய முன்னெடுப்பாக பாரிஸ் உடன்படிக்கை முழுக்க குறிப்பிடப்பட்டிருக்கும், காலநிலை நீதியின் அம்சங்கள் குறித்தும் ஒருவரும் பேசவில்லை. அப்படி என்றால், பணக்கார-வசதியான-வளர்ந்த நாடுகள் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தை, அதன் இன்றைய வேகத்தில், 6 முதல் 12 ஆண்டுகளுக்குள் பூஜ்யத்துக்குக் கொண்டுவர வேண்டும். இந்த நிலையில் ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்கள், நாம் ஏற்கெனவே நிறுவியிருக்கும் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தூய குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை போன்ற வசதிகளைப் பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

எல்லாமே கிடைக்கப்பெற்ற நம்மைப் போன்றவர்கள் காலநிலை நெருக்கடி குறித்து ஒரு நொடிகூட அக்கறை கொள்ளாமல், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் நமக்கிருக்கும் கடமைகளை மறந்துவிட்டு, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் இந்த நெருக்கடி குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? அவை ஏன் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன? அறிந்தே ஒரு தொகுப்புப் பேரழிவை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? நாம் தீயவர்களா?

நிச்சயமாக இல்லை. மக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதையே தொடர்கிறார்கள். ஏனென்றால், பெரும்பான்மையானவர்களுக்கு தங்கள் செயல்களின் விளைவுகள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த எந்தப் புரிதலும் இன்றி இருக்கிறார்கள். நமக்குத் தெரிந்திருக்கிறது என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம்; எல்லோரும் இதை அறிந்திருக்கிறார்கள் என்றும் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நாம் அறிந்திருக்கவில்லை. எப்படி அறிந்திருக்க முடியும்?

உண்மையில் நெருக்கடி என்பது இருந்தால், அந்த நெருக்கடி கரியமில வாயு வெளியேற்றத்தால் ஏற்பட்டிருந்தால், அதன் சமிக்கைகளை-விளைவுகளையேனும் நீங்கள் பார்க்கலாம். நகரங்கள் வெள்ளக்காடானது மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களும், ஒட்டுமொத்த தேசமும்கூட நிலைகுலைந்து நின்றன. சில வரைமுறைகளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், அப்படியொன்றும் இல்லை. இதைப் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

அவசரக் கூட்டங்கள், தலைப்புச் செய்திகள், பிரேக்கிங் செய்திகள் என்று எதுவுமே இல்லை. ஒரு நெருக்கடியில் இருப்பதைப் போன்று ஒருவரும் உணரவில்லை. அனைத்தும் அறிந்த காலநிலை விஞ்ஞானிகளும், சூழலியல் அரசியல்வாதிகளும்கூட உலகம் முழுக்கப் பறந்துகொண்டும் இறைச்சியையும் பால் பொருட்களை நுகர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

நான் 100 ஆண்டுகள் வாழ முடியும் என்றால், 2103ஆம் ஆண்டில் நான் உயிருடன் இருப்பேன். ஆனால், எதிர்காலத்தைப் பற்றி இன்றைக்குச் சிந்திக்கும்போது, 2050ஆம் ஆண்டுக்குப் பிறகு யோசிக்கவே முடியவில்லை. அப்போது, என்னுடைய வாழ்நாளில் பாதியைக் கூட நான் கடந்திருக்க மாட்டேன். அடுத்து என்ன நிகழும்?

2078ஆம் ஆண்டு நான் என்னுடைய 75ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவேன். அந்த நாளை என்னுடைய குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ என்னுடன் செலவழிக்கக்கூடும். ஒருவேளை அவர்கள் உங்களைப் பற்றி கேட்கக் கூடும், 2018இல் இருந்த மக்களைப் பற்றி கேட்கக் கூடும். செயலாற்றுவதற்கான நேரம் இருந்தும் ஏன் எதுவுமே செய்யாமல் இருந்தீர்கள் என்று ஒருவேளை அவர்கள் கேட்கக் கூடும்.

நாம் இப்போது செயலாற்றுவதும் செயலாற்றாமல் இருப்பதும் என்னுடைய மொத்த வாழ்க்கை, என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். நாம் இப்போது செயலாற்றுவதும் செயலாற்றாமல் இருப்பதும் எதிர்காலத்தில் நானோ என்னுடைய தலைமுறையோ சீரமைக்க முடியாது.

ஆக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி தொடங்கியபோது இது போதும் என்று நினைத்தேன். ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் வாசலுக்கு வெளியே தரையில் அமர்ந்தேன். பள்ளி வேலைநிறுத்தத்தைத் தொடங்கினேன்.

நான் பள்ளியில் இருக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அவர்களுள் சிலர் நான் காலநிலை விஞ்ஞானியாகி இந்தப் பிரச்சினையைத் “தீர்க்க” வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், காலநிலை நெருக்கடி ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்டது. நம்மிடம் உண்மையும்-தரவுகளும் ஏற்கெனவே தீர்வுகளாக இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் விழித்துக்கொண்டு செயலாற்றுவதே.

எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்போது நான் எதற்காகப் படிக்க வேண்டும்? எதிர்காலத்தைக் காப்பதற்காக எவருமே எதுவுமே செய்யாதபோது? தலைசிறந்த அறிவியல் தரவுகள் நம்முடைய அரசியல்வாதிகளையும் சமூகத்தையும் உலுக்காதபோது, பள்ளிக்குச் சென்று அதே தரவுகளை மீண்டும் படிப்பதில் என்ன பயன்?

ஸ்வீடன் ஒரு சிறிய நாடு, அதன் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பையும் பெரியளவில் ஏற்படுத்திவிடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், சில குழந்தைகள் சில வாரங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதன் மூலம் உலகம் முழுக்க தலைப்புச் செய்தியாக மாறும்போது, செயலில் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நாம் அனைவரும் இணைந்து ஆற்றக்கூடிய செயலை கற்பனை செய்து பாருங்கள்.

என்னுடைய உரையின் இறுதியில் இருக்கிறோம். இந்த இடத்தில் தான் நம்பிக்கை, சோலார் தகடுகள், காற்றாலை, சுழற்சிப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களை மக்கள் பேசத் தொடங்குவார்கள்.

ஆனால், அதை நான் செய்யப் போவதில்லை. 30 ஆண்டுகளாக நேர்மறையான சிந்தனைகளை, யோசனைகளை பேசிக் கொண்டும் முன்னிருத்திக் கொண்டும் இருந்தோம்; ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால், கரியமில வாயு வெளியேற்றம் இன்றைக்கு வீழ்ந்திருக்கும். ஆனால், அப்படி நிகழவில்லை. நிச்சயம் நமக்கு நம்பிக்கை தேவை; அது நம்மிடம் நிறையவே இருக்கிறது. ஆனால், நம்பிக்கையைவிட நமக்குத் தேவையான ஒன்று இருக்கிறது. அது செயல். எப்போது நாம் செயல்படத் தொடங்குகிறோமோ, அப்போது நம்பிக்கை எங்கும் பரவும்.

நம்பிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, செயலில் இறங்குங்கள். அப்போது நம்பிக்கை தானே வரும்.

இன்றைய காலகட்டத்தில், நாள் ஒன்றுக்கு 10 கோடி எண்ணெய் பீப்பாய்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதை மாற்றுவதற்கான அரசியல் இல்லை. எண்ணெயை நிலத்திலேயே வைத்திருப்பதற்கு எந்த விதிகளும் இல்லை. இல்லாத இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நாம் உலகைக் காப்பாற்றிவிட முடியாது. எனவே, விதிகள் மாற்றப்படவேண்டும்.

அனைத்தும் மாற்றப்பட வேண்டும்; அந்த மாற்றம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நன்றி!


மூலம்: The disarming case to act right now on climate change, TEDxStockholm, November 2018

தமிழில் சு. அருண் பிரசாத்

‘நம் வீடு பற்றி எரிகிறது’ என்ற கிரெட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் இடம்பெற்றிருக்கும் உரை.

 

http://kanali.in/உலகைக்-காக்க-விதிகளை-மாற/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.