Jump to content

பிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பரப்புகின்ற அவதூறு குறித்த தமிழர் இயக்கம் கண்டன அறிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிஸாரின் தேடுதல்களை அடுத்து பிரஞ்சு ஊடகம் கொடுத்த தகவல் பிரான்சிலே வாழுகின்ற தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கின்றது என தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளதாவது...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மேலாளருக்குச் சொந்தமான இடத்திலே கண்டெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்படாத தங்கம் உருக்கும் செயல்பாடு குறித்த விசாரணையைப் பற்றி செய்தியிடும் போது குறித்த அவ்வானொலியின் ஊடகவியலாளர் உச்சரித்த வார்த்தைகள் பிரான்சில் வாழும் தமிழர்களுக்கு இழிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை பற்றிய பிரஞ்சு செய்தி ஊடகங்கள் ஏதும் வாய் திறக்காத நிலையில் தமது சுதந்திரத்திற்கான தாகத்தில் தமிழ் பிரதிநிதிகளின் போராட்டங்கள் பற்றி முற்றிலும் தவறான தகவல்களைத் தொடர்ந்தும் பரப்பி வருவது வருந்தத்தக்கது.

தங்களது ஊடக ஈர்ப்பை அதிகரிக்க இத்தகைய ஊடகவியலாளர்கள் இழிவான குறுக்குவழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக இந்த சம்பவத்தைப் பயங்கரவாதத்துடனும், தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைப்பதன் மூலமும் இதற்குப் பயங்கரவாத சாயம் பூசப்பார்க்கின்றார்கள்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இன அழிப்பிலிருந்து தப்பி ஓடிய தமிழர்கள் புலம்பெயர்ந்து பிரான்சிற்குக் குடியேறி 3வது தலைமுறையாக 400,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். பயங்கரவாத சட்டத்துடன் பொது உரிமைகள் சட்டத்தை இணைத்துப் பேசுவதை இந்த ஊடகங்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

பிரான்சில் வாழும் 400,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் உணர்வுதனை மதிக்குமாறு பிரஞ்சு ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் செய்திகளை வெளியிடும் விதத்தில் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

"கதை சொல்லும்" பாணியில் கண்மூடித்தனமாக இருந்து விடாதீர்கள்: தவறான சிங்கள புத்தியீவிகள் மற்றும் சிறீலங்கா அரசால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களால் கடந்தகாலத்தில் "பயங்கரவாதி" என்ற வார்த்தையுடன் தமிழர்களை தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்காக, இவ்வாறே வரலாறு தொடர வேண்டும் என்றதல்ல.

இதனால் பிரான்சில்400,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்றல்ல. இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும்.

பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும், சுதந்திரத்துக்காகவும் போராடி வருகின்றனர். இனப்படுகொலைக்குப் பலியானாலும் கண்ணியத்துடன் வாழும் மக்கள் எமது தமிழ் மக்கள்.

நட்பு, வரவேற்பு,விருந்துபசாரம் போன்ற உயரிய கொள்கைகள் கொண்ட ஓர் இனத்து மக்கள் நாங்கள்.

அன்றாட வாழ்க்கையின் விதிகளாகப் பரஸ்பர மரியாதை, நல்ல பழக்கவழக்கங்கள்,கொள்கைகள் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றோம்.

பிரான்சில் வாழும் 400,000 தமிழர்களையும், 5,000 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்களையும், தமிழ்ச் சங்கங்களையும் களங்கப்படுத்தியிருக்கும் இந்த ஊடக செய்தியை நாங்கள் கண்டிக்கின்றோம். பிரான்ஸ் நாங்கள் விரும்பி அமைத்துக் கொண்ட எங்கள் வாழ்விடம்: எனவே தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை அவதூறு பரப்பி அடைமானம் வைக்க வேண்டாம்.

தமிழர் இயக்கம் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 3200 க்கும் மேற்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றிவருகின்றது.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மேல் சுமத்த எத்தணிக்கும் பயங்கரவாத பிம்பத்தை ஆதரிக்க வேண்டாம் எனப் பிரெஞ்சு ஊடகங்களுக்குத் தமிழர் இயக்கம் அழைப்பு விடுக்கின்றோம். இதுவே 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் வாழும் தமிழர்களை நீங்கள் மதிக்கும் செயலாகும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/statements/01/269266?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது French இல் வெளியிடப்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது French இல் வெளியிடப்பட்டதா?

பிரான்சில் libel (எழுத்தில் இருப்பது). defamation, slander (வாயால் சொல்லப்படுவது) போன்ற சட்டங்கள் கடுமையானவை. 

அதுவும், சட்டத்தால் சரி பார்க்கப்படாத தகவ்களை கொண்டு செய்வது இன்னும் கடுமையானது.    

எனவே, குறித்த ஊடகங்களுக்கு அதை சரி செயுமாறு கடிதமும், அதை பகிரங்க படுத்திய பின், நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

இது French இல் வெளியிடப்பட்டதா?

பிரான்சில் libel (எழுத்தில் இருப்பது). defamation, slander (வாயால் சொல்லப்படுவது) போன்ற சட்டங்கள் கடுமையானவை. 

அதுவும், சட்டத்தால் சரி பார்க்கப்படாத தகவ்களை கொண்டு செய்வது இன்னும் கடுமையானது.    

எனவே, குறித்த ஊடகங்களுக்கு அதை சரி செயுமாறு கடிதமும், அதை பகிரங்க படுத்திய பின், நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

French மொழியில் வெளியிட்டு இருக்கமாட்டார்கள் என நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

ப்ரெஞ்ச் மொழியில் வெளியிடப்படாவிடின் இதில் என்ன பயன்? குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிப் பழகிய அதே முறையில் தான் இன்னமும் செயலாற்றுகின்றனரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரஞ்சு மொழியில் உள்ள அறிக்கையும், அதன் தமிழாக்கமும் என்று தானே பிரசுரம் இருக்க வேண்டும்.

செய்தியை எழுதியவர்கள் பிரஞ்ச் இல் இருக்கும் அறிக்கையை இணைக்காமல் இருக்கலாம். 
 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

French மொழியில் வெளியிட்டு இருக்கமாட்டார்கள் என நினைக்கிறீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

பிரஞ்சு மொழியில் உள்ள அறிக்கையும், அதன் தமிழாக்கமும் என்று தானே பிரசுரம் இருக்க வேண்டும்.

செய்தியை எழுதியவர்கள் பிரஞ்ச் இல் இருக்கும் அறிக்கையை இணைக்காமல் இருக்கலாம். 
 

 

உண்மைதான்.. பிரஞ்சு மொழியில் உள்ள அறிக்கையும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் என வந்திருக்கவேண்டும்.. 

உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இதுவும் பத்தோடு பதினென்றாவது செய்தியாகத்தான் போய்விடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.