Jump to content

"திராவிடத் தலைவர் அண்ணாவைப் படிக்க வேண்டும்" - சீனாவில் தமிழ் பரப்பும் நிறைமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன்.

இன்று (பிப்ரவரி-21) உலகத் தாய்மொழி தினம் (International Mother Language day). 1952-ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது. அந்தப் போராட்டத்தில் மொழிக்காக உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக அந்த நிகழ்வு நடந்த பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்தது.

உலகத் தாய்மொழி தினமான இன்று, தமிழோடு தொடர்புடைய ஓர் சுவாரஸ்யமான விருந்தினரை இணையம் வழி சந்தித்து உரையாடினேன். சீனா யுனான் மின்ஸு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி கிகி ஜாங். சீனாவின் சர்வதேச தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். தமிழ்க் கல்வெட்டுகள், கோயில்களின் சுவடுகள் கண்டெடுக்கப்பட்ட சீனத்தின் தொன்ம நகரொன்றில் வசிக்கும் நிறைமதி, நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

"நிறைமதி... பெயரே பேரழகாக இருக்கிறது... யார் சூட்டிய பெயர்?"

"நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் நிறைய தமிழ்ப்பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுத்து, 'உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேர்வு செய்யுங்கள்' என்று சொன்னார். நான் 'நிறைமதி' என்ற பெயரைத் தேர்வு செய்தேன். அப்போது எனக்கு 'நிறைமதி' என்றால் என்ன பொருள் என்று தெரியாது. தமிழை பொருளுணர்ந்து படிக்கக் கற்றபிறகே 'நிறைமதி' என்றால் 'முழு நிலா' என்று தெரிந்துகொண்டேன். இந்தவார்த்தை 'வெற்றி', 'நல்ல குடும்பம்' என்ற பொருள்களையும் தரும்."

"தமிழகத்துக்கு எத்தனை முறை வந்திருக்கிறீர்கள்?"

"இரண்டுமுறை வந்துள்ளேன். முதல்முறை சென்னைக்கு வந்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் சில பணிகள் இருந்தன. இரண்டாம்முறை மதுரைக்கு வந்தேன். அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்கினேன். சில களப்பணிகள் செய்தேன். கொஞ்சம் படிக்கவும் செய்தேன்."

நிறைமதி
 
நிறைமதி

"தமிழ் மீது எப்படி ஆர்வம் வந்தது?"

"சர்வதேச மொழிகளைக் கற்பதில் ஆர்வம் எனக்கு. இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். தமிழ் தொன்மையான செம்மொழி என்றிருந்தது. தமிழ் எழுத்துகள் மலர்களைப் போல இருந்தன. அது தொடர்பாக நிறைய படித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தமிழில் 200-க்கும் மேற்பட்ட எழுத்துகள் இருக்கின்றன என்று அறிந்தபோது கொஞ்சம் பயம் வந்தது. கற்றுக்கொள்ள மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் படிக்கப் படிக்க எளிதாகிவிட்டது. 2007 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் பீஜிங்கில் உள்ள தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி படித்தேன். ஆனால் அப்போது படித்தது புத்தகத் தமிழ்."

 

"பேசுவது சரி, எழுதவும் படிக்கவும் எப்படி கற்றுக்கொண்டீர்கள்?"

"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன். திருக்குறளையெல்லாம் படித்து மனனம் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. படிக்கப் பழகியபிறகு எழுதுவதும் கைவந்துவிட்டது."

"தமிழுக்கும் சீனமொழிக்கும் என்னமாதிரியான ஒற்றுமைகள் உள்ளன?"

"இருமொழிகளுக்கும் நீண்ட வரலாறு உண்டு. இரண்டுமே தொன்மையான செம்மொழிகள். இரு மொழிகளுமே காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்கின்றன.

"சீனத்தமிழ் வானொலியில் உங்கள் பங்களிப்பு?"

"இரண்டு ஆண்டுகள் சீன வானொலியில் பணிபுரிந்தேன். சீன இசை நிகழ்ச்சிகள், சீனப் பண்பாடு, வரலாறு சார்ந்த நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கினோம்."

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம்  | International mother language day
 
பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் | International mother language day

"மதுரைக்கு வந்துள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?"

"ரொம்பவும் தொன்மையான நகரம். மதுரை ரொம்பவே நெருக்கமாக இருந்தது. முழுமையாக தமிழிப்பண்பாட்டை அனுபவித்தேன். பாய் விரித்து உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். வாழை இலையில் உணவை வைத்து கையால் சாப்பிடுகிறார்கள். எல்லாமே எனக்குப் புதுசு. வித்தியாசமாக இருந்தது. இதையெல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறேன். நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ஒரு கிழவரைச் சந்தித்தேன். நான் அவரிடம் தமிழில் பேசினேன். அந்தக் கிழவர் அழுதார். 'ஏன் அழுகிறீர்கள்' என்று கேட்டேன். 'எங்கிருந்தோ வந்து அழகாக தமிழ் பேசுகிறாயம்மா... பெருமையாக இருக்கிறது' என்றார். மொழியை எந்தளவுக்கு தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள் என்பது புரிந்தது."

"மதுரையைப் பற்றி ஒரு புத்தகம்கூட எழுதப்போவதாக சொன்னீர்கள்..."

"ஆமாம். மதுரையில் நான் காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் சில ஆராய்ச்சிகள் செய்தேன். சில வகுப்புகளில் கலந்துகொண்டேன். அப்போது தினமும் நாள்குறிப்பு எழுதினேன். அதைத்தொகுத்து புத்தகமாக வெளியிடவிருக்கிறேன்."

"தமிழ் பேசுவதிலும் எழுதுவதிலும் என்ன சிரமம் உணர்கிறீர்கள்?"

"தமிழர்கள் மாதிரி உச்சரிப்பது மிகவும் சிரமம். வழக்குத்தமிழ் பேசுவதும் பிரச்னை. நான் இளங்கலைத் தமிழ் படித்தபோது புத்தகத்தமிழ்தான் படித்தேன். புத்தகத்தமிழுக்கும் வழக்குத்தமிழுக்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. தமிழை நன்கு புரிந்துகொண்டு பேச திரைப்படங்கள் எனக்கு நிறைய உதவின. ஒரு பேராசிரியராக நான் என் மாணவர்களுக்கு வழக்குத்தமிழ் கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன்."

நிறைமதி
 
நிறைமதி

"சீனாவில் என்னமாதிரியான தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன?"

"நான் 'சிவாஜி த பாஸ்' பார்த்தேன். ரஜினியை எனக்கு நிறைய பிடிக்கும். அதேபோல விஜய்க்கு சீனாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 'காவலன்', 'நண்பன்' படங்களெல்லாம் இங்கே வெளியாகி பல நாள்கள் திரையரங்கில் ஓடின. என் மாணவர்களையும் இந்தப் படங்களைப் பார்க்கச் செய்தேன்."

 

"தமிழ் மொழியின் சிறப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?"

"மூன்று சிறப்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். ஒன்று, அதன் தொன்மை. அது வரலாற்றில் தன்னை புதுப்பித்துக்கொண்டே வருகிறது. இரண்டாவது, இதன் அழகு. எழுத்துகள் மலர்களைப் போன்று அழகாக இருக்கின்றன. இசையைப்போல ஒலிக்கின்றன. மூன்றாவது, தமிழுக்கு முறையான இலக்கணம் இருக்கிறது."

"தமிழில் என்னவெல்லாம் வாசித்திருக்கிறீர்கள்?"

"தமிழில் கொஞ்சமாகத்தான் வாசித்திருக்கிறேன். நான் இளங்கலை மாணவி. எழுதுவது, பேசுவது தொடர்பான பாடங்களும் இலக்கணமும்தான் அதிகம். அதனால் வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. நிறைய நாவல்கள் படிக்க வேண்டும். குறிப்பாக அண்ணாத்துரையின் சில நூல்களைப் படிக்க வேண்டும்."

நிறைமதி
 
நிறைமதி

"அண்ணாவைப் பற்றி என்னவெல்லாம் கேள்விப்பட்டுள்ளீர்கள்?"

"அண்ணா, தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய ஒரு தலைவர்."

"சீனாவில் தமிழ்க்கற்றுக்கொள்ள என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?"

"பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் படிக்க முடியும். ஆனால் பூஜ்ஜியத்தில் இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கும். மொத்தம் நான்கு ஆண்டுகாலப் படிப்பு. முதலாண்டில் அ, ஆ,இ-யில் ஆரம்பித்து எழுத்துகளைப் படிக்கவேண்டும். இரண்டாவதுஆண்டில் கட்டுரைகள் படிக்க வேண்டும். மூன்றாவது ஆண்டில் மொழி பெயர்ப்பு. நான்காவது ஆண்டில் பேச்சுத்தமிழ், சில இலக்கியங்கள் பற்றிய அடிப்படை படிக்க வேண்டும்."

"சீனாவில் தமிழ்க்கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன..."

ஆமாம். எங்கள் ஊருக்கு அருகில்தான் அந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. சிவனைப் பற்றிய பாடல்கள் அந்தக் கல்வெட்டில் இருந்தன. இங்கு ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது. கடல் அரிப்பால் அது அழிந்துவிட்டது. அதுபற்றி கல்வெட்டில் தகவல் இருந்தது. இந்தக் கல்வெட்டு மூலம் தமிழர்களுக்கும் சீனாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரியவந்தது.

"சீனாவுக்கும் தமிழகத்துக்குமான வரலாற்றுத்தொடர்பு பற்றிச் சொல்லுங்கள்?"

"சீனாவுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. குறிப்பாக, கடல் வழியில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. சீனாவில் பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழகம் பற்றிப் பேசப்படுகின்றன. ஹான் வம்சத்தின் வரலாற்று புத்தகத்தில் காஞ்சிபுரத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தோடு சீனாவுக்கு நிறைய தொடர்புகள் உண்டு."

"தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பெரிய பந்தம் போதி தர்மர். அவரைப்பற்றிப் படித்திருக்கிறீர்களா?"

"காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு வந்து பௌத்த மதத்தைப் பரப்பிய மாஸ்டர். அவர் கொடுத்தது தான் குங்ஃபூ. அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்ச தீவையும் சீனாவுக்கே கொடுக்கலாம். 

😂

Link to comment
Share on other sites

9 minutes ago, Kapithan said:

கச்ச தீவையும் சீனாவுக்கே கொடுக்கலாம். 

😂

சீனாவுக்கா அல்லது நிறைமதிக்கா கொடுக்கலாம்? 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை மாதிரி  சீன எழுத்துக்களின்  எண்ணிக்கையும் அதிகம் என கேள்விப்பட்டேன் உண்மை பொய் தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.