Jump to content

தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்-

February 21, 2021

Tamil-Thesiyam.jpg

இன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற புரிதலற்று, தமது உரையாடல்களில் பயன்படுத்துகின்றனர் . சிலர் இதனை ஒரு குறித்த குழு என்ற ஓர் வரையறைக்குள் உட்படுத்த முயல்கின்றனர். வேறுசிலர் இது பிரிவினைவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக்கூறி தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனையின் அர்த்தம் பொருள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசியம் பற்றிய பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள தேசியம் பற்றிய புரிதல் அவசியமானது.

தேசம், தேசியவாதம் பற்றிய சிந்தனைகள் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைமை, ஜனநாயகம் பற்றிய கருத்தியல்களின் தோற்றத்துடன் தீவிரமாக வளர்ச்சியடைந்த சிந்தனைகளாக காணப்படுகின்றன. இவற்றின் முக்கிய இலக்கு மன்னராட்சி, காலனித்துவ, ஏகாதிபத்திய, குடியேற்றவாதத்திற்கு எதிரான மக்கள் புரட்சியாக வெளிப்பட்டிருப்பதை பழைய வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. அந்தவகையில் தேசியம் பற்றிய அறிஞர்களது கருத்துக்களை நோக்குவோமாயின்,

ஜே. கால்ரன்- தேசியவாதம் என்பது தேசிய உணர்வுடன் ஒன்றிணைந்த தேசபக்தி எனக் குறிப்பிடுகின்றார். ஜே.ஹாசின்சன் என்பவர் தேசியவாதம் பிரதானமாக மக்களின் சுதந்திரம் அவர்களின் அரசாட்சி பற்றிய ஒரு கோட்பாடு என்கின்றார். எச். கோன் என்ற அறிஞர் தேசியங்கள் என்பவை வரலாற்றில் உயிர்ச்சக்தி வாய்ந்த விளைச்சல்கள் எனவே அவை மாறுதன்மை கொண்டவையாக காணப்படுவதானால் தேசியவாதம் என்பதை உறுதியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது எனக்குறிப்பிடுகின்றார். ஆகவே மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒன்றிணைந்த மக்களின் தேசிய உணர்வின் வெளிப்பாடு தேசியம் என அடையாளப்படுத்த முடியும்.

இன்றைய நவீன காலத்தில் தேசியம் என்பது இரு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அடக்குமுறைக்கு எதிராக தன்னை ஒடுக்குகின்ற சக்திகளை எதிர்த்துப்போராடும் விடுதலை வேட்கை உடையதாகவும் மறுபுறம் அடக்குமுறைக்கான கருவியாகப் பிறதேசங்ககளின், இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்திச் சிறுபான்மை இனப்பிரிவுகளின் உரிமைகளை மறுக்கும் ஆதிக்கவாத சிந்தனை கொண்ட ஜனநாயக விரோத தேசியவாதமாகவும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் இனவாதம், மதவாதம், ஆதிக்கவாத சிந்தனைகளின் வெளிப்பாட்டால் கட்டமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இனம், மதம் என்பன அரசியல் அதிகார மையத்தை கட்டுப்படுத்த கூடிய அளவு வலிமை பெற்றுக்காணப்படுகின்றன.

தெற்காசியாவில் தனித்துவமான பாரம்பரிய வரலாற்றை கொண்ட தமிழர்கள் பெரும்பான்மை இன மக்களின் அடக்குமுறையில் இருந்து விடுபட்டு தமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காவும் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள காலச்சார பாரம்பரியங்களை மீள் கட்டமைப்பு செய்து கொள்வதற்காகவும் தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாக உருவான தேசிய உணர்வே தமிழ்த்தேசிய சிந்தனையாகும்.

தமிழ்த்தேசியம் என்பது தனிநாடு என்ற மறைமுக பதத்தை தாங்கி நிற்பதாக பெரும்பான்மை இன மக்களால் விமர்சிக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக காணப்படுகின்றது. எனினும் யதார்த்தத்தில் தமிழ்த்தேசியம் வலியுறுத்துவது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகளை பரிபூரணமான முறையில் தமிழர்கள் அனுபவிப்பதற்கான உரிமையுடன் தமது தனித்துவமான கலாச்சாரத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு ஊடுகடத்துவதை நோக்காக கொண்டுள்ளது. எனினும் இவ்உயரிய நோக்கத்தை அடைந்து கொள்ள தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் பலவிதமான சவால்களை எதிர் கொள்கின்றனர்.

தமிழ்த்தேசிய சிந்தனையை பலவீனப்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக 4 காரணிகளை இக்கட்டுரை விபரிக்க முயலுகிறது.

முதலாவது, தமிழ்த்தேசியத்தின் பங்காளர்களை அடையாளப்படுத்துவதில் முரண்பாடு காணப்படுகிறது. தமிழ்த்தேசிய தத்துவத்தை வெளிப்படுத்தி அக்கருத்தியலை வலுப்படுத்த போராடுபவர்கள் மாத்திரமே தமிழ்த்தேசியவாதிகள் என்ற முத்திரை குத்த பலர் முயல்கின்றனர். உண்மையில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் யதார்த்தத்தை தெளிவாக புரிந்து கொள்ள தவறுகின்ற புள்ளி இங்கே ஆரம்பமாகின்றது. தமிழ்த்தேசியம் என்பது தமிழ் இனத்தின் நலனை முதன்மையாக கொண்டு செயற்படுகின்ற தமிழரின் உணர்வு வெளிப்பாடாகும் அந்தவகையில் தமிழ்த்தேசியவாதிகள் பெற்றுக்கொள்ளும் வெற்றி என்பது ஒரு குழுவின் வெற்றியாக நாம் அடையாளப்படுத்த முடியாது என்ற புரிதலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை தமிழ்த்தேசிய சிந்தனையின் அடிப்படையில் அரசியல் விமர்சகர்கள் இரண்டாக வகைப்படுவத்துவதை அவதானிக்க முடிகின்றது.

  1. தமிழ்த்தேசியவாதி
  2. தமிழ்த்தேசியதுரோகி

என்பன அவையாகும். எனினும் இங்கு மூன்றாம் தரப்பினர் மறைந்து காணப்படுகின்றனர் என்பதை பலர் சுட்டிக்காட்ட தவறுகின்றனர். மூன்றாம் தரப்பினராக தமிழ் இனத்தில் பிறந்த தமிழர்களை குறிப்பிடலாம். இவர்களை அணிசேரா கொள்கை கொண்ட தமிழர்களென அழைக்க முடியும். அணிசேரா கொள்கை கொண்ட தமிழர்களை, தமிழ்த்தேசிய துரோகிகள் மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் என்ற இரு பிரிவுக்குள்ளும் வகைப்படுத்தல் என்பது சாத்தியமற்றது. இவ்அணிசேரா தமிழர்கள் தமிழ்த்தேசிய பார்வையாளர்களாக காணப்படுகின்ற போதிலும் தமிழ்த்தேசிய சிந்தனையில் நேரடியாக பங்குபற்றாது மறைமுகமாக தமிழ்த்தேசிய சிந்தனையின் பங்குதாரர்களாக காணப்படுகின்றனர். அணிசேரா தமிழர்களுக்கு இத்தகுதியை பிறப்பால் தமிழன் என்ற இன அடையாளம் பெற்றுக் கொடுகின்றது. இதன் மூலம் தமிழ்த்தேசியத்தின் வெற்றி, தோல்வி இரண்டுமே தமிழ் மக்களின் வாழ்வியலில் நேர்மறையான அல்லது எதிர்மறையான மாற்றத்தை உருவாக்க கூடியது. இதன் அடிப்படையில் தமிழ்த்தேசியத்தின் பங்காளியாக இருப்பதற்கு தமிழன் என்ற இன அடையாளம் போதுமானது என்ற அடிப்படை புரிதலை நாம் உணர்தல் வேண்டும்.

இரண்டாவது, தமிழ்த்தேசியம் என்பது தமிழ் இனத்தின் உணர்வு வெளிப்பாடாக காணப்படுகின்ற போதிலும் சில தமிழ்த்தேசிய விரோதிகள் மற்றும் தமிழ்த்தேசிய கொள்கையை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முயற்சிக்கும் கயவர்கள் தமிழ் மக்கள் மனதில் நாடு, பிரதேச, மத, சாதி பிரிவினைகளை தமிழ்த்தேசிய உணர்வுடன் முரண்பட செய்வதன் மூலம் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்த முயல்கின்றனர்.

அதேசமயம், தமிழ்த்தேசியம் பற்றிய தெளிவான புரிதல் அற்ற சில தமிழர்கள் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொண்ட நாடு, சாதி, மத, பிரதேச பிரிவினைவாத வெறுப்புகளை தமிழ்த்தேசிய உணர்வுடன் ஒப்பீடு செய்வதன் மூலமாக தமிழ் இன உணர்வினை தமது தனிப்பட்ட சமூக பிரச்சனைகளின் அடிப்படையில் பலவீனப்படுத்த முயல்கின்றனர்.

குறிப்பாக, தெற்காசியாவில் அதிகளவான தமிழர்கள் வாழும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், அண்மைக்காலமாக திட்டமிட்டு நாட்டுப்பற்றை தமிழ்த்தேசிய சிந்தனையுடன் முரண்பட செய்வதன் மூலம் தமிழர் எனும் இன அடையாளத்தை, நாடு எனும் அடிப்படையில் ஓர் குறித்த எல்லைக்குள் மட்டுப்படுத்த முயலும் பிரிவினைவாதிகள் இதனை மேலும் வலுப்படுத்த இலங்கைவாழ் இந்திய தமிழர்களின் பிரச்சனையை இந்திய, இலங்கை தமிழர் பிரச்சனை போல் சித்தரிக்க முயல்கின்றனர். இவ்வாறான பிரிவினைவாத சிந்தனையை ஓர் இனத்தில் இருந்து அகற்ற வேண்டுமாயின் மத, சாதி, நாடு பற்றை கடந்து தமிழன் என்ற இன உணர்வை உருவாக்க வேண்டும். உலகெங்குமுள்ள தமிழர்கள் இவ்வாறான பிரிவினைவாத உணர்வுகளில் இருந்து விடுபட ஒவ்வொரு தமிழன் மத்தியிலும் ஓர் அடிப்படை புரிதல் உருவாக வேண்டும். தமிழ்த்தேசியம் என்பது தமிழ் இனத்தின் பாதுகாப்பை நோக்காக கொண்ட ஓர் உணர்வு வெளிப்பாடு இதில் தனிப்பட்ட சாதி, மத, பிரதேச, நாடு என்ற பேதம் கிடையாது.

“பிறப்பால் நீ தமிழன் எனின் தமிழ்த்தேசியத்திற்கு நீ உரித்துடையவன்” என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்தல் வேண்டும். தமிழன் என்ற இன அடையாளமே தமிழ்த்தேசியம் என்ற சிந்தனையை உருவாகியுள்ளது என ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து கொள்வதன் மூலமாக, தமிழ்த்தேசியம் என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் உள்ளடக்கிய ஓர் வலுவான சிந்தனையாக தன்னை வடிவமைத்து கொள்வதுடன் இதன் மூலம் உலகெங்குமுள்ள தமிழர்களின் கருத்துக்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்க கூடிய ஒர் களத்தையும் உருவாக்க வாய்ப்பளிக்கின்றது. இவ்வாறான உலக தமிழர் ஒன்றினைவு தமிழர்களின் உரிமை, பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடியதாகவும் உலக அரங்கில் ஓர் இனத்தின் உரிமை குரல் ஓங்கி ஒலிக்கவும் வழிவகுக்கும்.

மூன்றாவது, பல தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் தமிழ்த்தேசியத்தில் உள்ள குறைகளை மட்டுமே சுட்டி காட்டுவதில் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றார்களே தவிர்த்து அக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வைக்க தவறுகின்றனர். இப்போக்கை மாற்றி தமிழ்த்தேசிய குறைபாடுகளுடன் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகளையும் சுட்டிக்காட்டுதல் தமிழ்த்தேசிய உணர்வினை பலவீனப்படுத்தாது வலுவான நிலையை பெற்றுக்கொள்ள உதவும்.

நான்காவது, இன்று பல தமிழ் அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் யூத தேசியவாதத்துடன் தமிழ்த்தேசியத்தை ஒப்பிட்டு பேச முயல்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்கு அரசியல் என்பது காலம், புறச்சூழல், மக்களின் மனநிலை என்பவற்று ஏற்ப நாளாந்தம் மாற்றமடையக் கூடியது அந்தவகையில் தமிழ்த்தேசியம் என்பது, தனித்துமான வரலாற்று, கலாச்சார பின்புலம் கொண்ட மக்களின், உணர்வு வெளிப்பாடாக காணப்படுகின்றது. இதனை ஏனைய இன தேசியவாத எழுச்சிகளுடன் ஒப்பிடுவது தமிழ்த்தேசிய கருத்திலை பலவீனப்படுத்தி பல குழப்பங்கள் உருவாக வழிவகுக்கும். உதாரணமாக இன்றைய தமிழ்த்தேசிய தலைவர் யார்? யூதர்கள் அளவிற்கு பொருளாதார பலம் எமக்கு உண்டா? யூதர்களை போல் தமிழர் ஒற்றுமையானவரா? இக்காலத்திற்கு இது உகர்ந்ததா? என்ற பல குழப்பங்கள் காணப்படுகின்றன. யூத இனத்திற்கு எவ்வாறு ஓர் பாரம்பரியமான தனி சிறப்பான வரலாறு காணப்படுகின்றதோ அதற்கு சற்றும் தரம்தாழாத வகையில் தமிழர்களுக்கு தனிச்சிறப்பான வரலாற்று பின்புலம் காணப்படுகின்றது. தமிழர்களின் தமிழ்த்தேசிய பாதை என்பதை தனித்துவமானதாகவும் தற்காலத்திற்கு ஏற்ற வகையிலும் வடிவமைப்பதே சிறந்தது. யூத தேசியவாத சிந்தனைகளின் அணுகுமுறைகள், யூதர்கள் தமது தேசியவாத சிந்தனைகளை அடைவதற்காக மேற்கொண்ட உத்திகளை நாம் கற்றுக் கொள்வதற்கப்பால் தமிழ்த்தேசிய சிந்தனையுடன் யூததேசியவாதத்தை ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ளல் வேண்டும்.

ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்குவோமாயின், உலகில் காணப்படுகின்ற தொன்மையான இனங்களில் தமிழ் இனமும் ஒன்றாகும், எனினும் இன்றுவரை தெற்காசிய மண்ணில் தமிழ் மக்களின் உரிமை தொடர்ச்சியாக பல்வேறு விதமான அடக்குமுறைகளின் கீழ் திட்டமிட்ட வகையில் இன அடையாளத்தை இழப்பதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு வருவதை பழைய வரலாறுகளில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறான இன அடையாள அழிப்பில் இருந்து தமிழர்கள் தம்மை பாதுகாத்து கொள்ளவும் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு தமிழரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது. உலகில் ஏதோ ஒரு மூலையில் ஓர் தமிழன் பெற்றுக்கொள்ளும் வெற்றியை எம் இனத்தின் வெற்றியாக கொண்டாடும் அதே சமயம் ஒரு தமிழனின் உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ் இனமும் குரல் கொடுக்க கூடிய தூய தமிழ்த்தேசிய உணர்வினை உருவாக்க ஒவ்வொரு தமிழரும் சாதி, மத, பிரதேச, நாடு என்ற பிரிவினைவாத சிந்தனையிலிருந்து விடுபட்டு தமிழ் இன உணர்வின் அடிப்படையில் தமிழ்தேசிய பாதையில் பயணிப்பதன் மூலமாக மட்டுமே தமிழ் இன இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

-சு. பிரஜீவன்ராம்-
 

 

https://globaltamilnews.net/2021/157194/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.