Jump to content

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

 
un1-696x447.jpg
 11 Views

எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது.

அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதாவது அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் என்பது பொதுவானது. தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்பது அறிக்கையின் சாராம்சம்.

சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை தீர்மானம் உறுதிப்படுத்துகின்றது.

சிறீலங்கா அரசு அமைத்த காணாமல்போனோர் அவலுவலகத்தின் செயற்பாட்டை தீர்மானம் பாராட்டியுள்ளது.

முஸ்லீம் மக்களின் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் அரசின் செயற்பாட்டை கண்டித்துள்ளது.

தீர்மானத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவில் தமிழ் மக்கள் இருப்பதற்கான அடையாளத்தையே தீர்மானம் மறைத்துள்ளது.

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என கூறும் தீர்மானம், அதனை பொதுவாகவே தெரிவித்துள்ளது.

சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான எந்தவித கோரிக்கைகளும் இல்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. உதாரணமாக பொருளாதாரத் தடை, பயணத்தடைக்கான கோரிக்கைகள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆதாரங்களை ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு எதிர்வரும் 49 மற்றும் 51 ஆவது கூட்டத்தொடர்களில் அறிக்கை சமர்ப்பித்து அதனை நாடுகள் விவாதிக்கும் என தீர்மானம் நிறைவு பெறுகின்றது.

https://www.ilakku.org/?p=42806

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப P2P       ஊர்வலத்தில் முசுலிம்கள் கலந்து கொண்டதுக்கு பலன் கிடைச்சிட்டுது....இங்கிலீசில் ...கொடிகட்டிப் பறக்கிறவையின் மொழிபெயர்ப்புத் திறனைக்கண்டு தலை சுத்துது....ஆரப்பா இந்த இலக்குக் காரன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய கறையான் பேய்கள் உள்ளே அரிக்க, அமெரிக்கா, UK  பேய் முன் கதவை திறந்து விட்டு உள்ளது. 

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

கிந்திய கறையான் பேய்கள் உள்ளே அரிக்க, அமெரிக்கா, UK  பேய் முன் கதவை திறந்து விட்டு உள்ளது. 

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்வதை தவிர வேறு எதை செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்வதை தவிர வேறு எதை செய்ய முடியும்?

US  இல் பிரசுரமாகும் சிறிலங்கா எக்ஸ்பிரஸ் எனும் பத்திரிகையில் கடந்த சில நாட்களுக்குள் வெளிவந்தது.

US இல் வெளிநாட்டு  முகவராக பதிவு செய்யப்படாத,  பாகிஸ்தான் பூர்விகத்தை கொண்ட, Imaad Shah Zubri எனும் பெயரில்  உள்ள நபர்,  UNHRC  இல்  US ஆல்  சிறிலங்கா நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் நகர்வுகளுக்கு எதிராக lobby செய்வதத்திற்கும், அந்த நகர்வுகளை முறியடிப்பதற்கும், 2014 இல் சிறிலங்க அரசாங்கத்தால் 6.5 மில்லியன் டாலர்களை லஞ்சமாக  பெற்றதற்காக   12 வருடங்கள் Los  Angles நீதிமன்றத்தால் சிறைவிதிக்கப்படுகிறார்.  

 

நீங்களே ஊகிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Knowthyself said:

 

 

போர் குற்றமா இனப்படுகொலையா / War Crime or Genocide/Kuna Kaviyalahan/ Human Rights Council /Sri Lanka

https://www.youtube.com/watch?v=ZqRF30gJWFM&t=278s

 

 

 

 

 

 

இலங்கையர்களுக்கு பயணத்தடை என்று சிங்கள அரசுக்கு சார்புபட்டு செய்தி வெளியிட்டு தமிழர்களின் முதுகில் குத்திய ஊடகங்கள் கூகிள் தேடலில் .https://www.google.com/search?rlz=1C1CHBF_en-GBGB878GB878&sxsrf=ALeKk03OObHw6pxiFw2rAHj7Q49koUSZHA%3A1613992310808&ei=dpEzYPvqMPSN1fAPjfeP0A8&q=இலங்கையர்களுக்கு+பயணத்தடை&oq=&gs_lcp=Cgdnd3Mtd2l6EAEYATIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIJCCMQ6gIQJxATMgcIIxDqAhAnMgcIIxDqAhAnMgcIIxDqAhAnOgcIIxCwAxAnOgcIABCwAxBDOgcIABBHELADOgQIIxAnOg0IABCHAhCxAxCDARAUOgUIABCxAzoCCABQzRpY4iBgnV9oAnACeAKAAX6IAYYHkgEEMTAuMZgBAKABAaoBB2d3cy13aXqwAQrIAQrAAQE&sclient=gws-wiz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதங்கமும், கிருபாகரன் சொல்வது தான்.

சுமந்திரன், தன்னிடம் ஈழத்தமிழர் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தை தந்துவிட்டார் என்ற தோரணையில், எல்லாவற்றிலும், குறிப்பாக வெளிநாட்டு பிரிதிநிதிகளை சந்திப்பது, உரையாடுவது, கோரிக்கைகள் போன்றவற்றில், அவர் தனித்து அவரது பிரதியாக விடயங்களாக தோற்றம் கொடுத்து  பங்கெடுத்துவிட்டு, அது தமிழ் மக்களின், அவரது கட்சியின் (பதிவு செய்யப்படாவிட்டாலும்) கருத்தாக, முடிவாக அறிவிப்பது.

அவர் செய்வதை, கட்சியில் உள்ள ஒருவரேனும், ஒரு விடயத்துக்கு ஆக கூட கருது அளிக்காமல் இருப்பது.

இதில், சுமந்திரனை மர் கேள்வி கேட்க கூடிய தலைமை பண்பை இப்போதைய நிலையில் எடுக்க  கூடியவர், சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

US  இல் பிரசுரமாகும் சிறிலங்கா எக்ஸ்பிரஸ் எனும் பத்திரிகையில் கடந்த சில நாட்களுக்குள் வெளிவந்தது.

US இல் வெளிநாட்டு  முகவராக பதிவு செய்யப்படாத,  பாகிஸ்தான் பூர்விகத்தை கொண்ட, Imaad Shah Zubri எனும் பெயரில்  உள்ள நபர்,  UNHRC  இல்  US ஆல்  சிறிலங்கா நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் நகர்வுகளுக்கு எதிராக lobby செய்வதத்திற்கும், அந்த நகர்வுகளை முறியடிப்பதற்கும், 2014 இல் சிறிலங்க அரசாங்கத்தால் 6.5 மில்லியன் டாலர்களை லஞ்சமாக  பெற்றதற்காக   12 வருடங்கள் Los  Angles நீதிமன்றத்தால் சிறைவிதிக்கப்படுகிறார்.  

 

நீங்களே ஊகிக்கலாம்.

https://www.srilankaexpress.org/imaad-zuberi-gets-12-year-prison-term

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

சுமந்திரனின் மறுவடிவமே சாணக்கியன் என்பதை காலம் தெரிவிக்கும். அதைவிட சாணக்கியனை அரசியலுக்கு கொண்டுவந்ததே சுமந்திரன்தான் என்றொரு கருத்துமுண்டு. சுமந்திரனை இப்போது சாணக்கியன் எதிர்த்தால் சாணக்கியனின் அரசியல் எதிர்காலம் இருண்டுவிடும். அவர் வளர்ந்தாலும் அரசே அவரால் பயனடையும். இலங்கைத் தமிழருக்கு அப்படியொரு எழுதா விதியுண்டு. 

Link to comment
Share on other sites

 

9 hours ago, Kadancha said:

சுமந்திரன், தன்னிடம் ஈழத்தமிழர் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தை தந்துவிட்டார் என்ற தோரணையில், எல்லாவற்றிலும், குறிப்பாக வெளிநாட்டு பிரிதிநிதிகளை சந்திப்பது, உரையாடுவது, கோரிக்கைகள் போன்றவற்றில், அவர் தனித்து அவரது பிரதியாக விடயங்களாக தோற்றம் கொடுத்து  பங்கெடுத்துவிட்டு, அது தமிழ் மக்களின், அவரது கட்சியின் (பதிவு செய்யப்படாவிட்டாலும்) கருத்தாக, முடிவாக அறிவிப்பது.

அவர் செய்வதை, கட்சியில் உள்ள ஒருவரேனும், ஒரு விடயத்துக்கு ஆக கூட கருது அளிக்காமல் இருப்பது.

இதில், சுமந்திரனை மர் கேள்வி கேட்க கூடிய தலைமை பண்பை இப்போதைய நிலையில் எடுக்க  கூடியவர், சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

 

கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் எல்லாம் தூக்கமா, அல்லது உதவாக்கரைகளா? சுமந்திரனையும் சாணக்கியனையும் தவிர வேறு தலைவர்களே இல்லையா? மற்றவர்களுக்கு போட்ட வாக்குகள் எல்லாம் எதற்காக?

 

 

Link to comment
Share on other sites

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

புதிய தலைமுறை பிள்ளைகள் தமது சொந்த அறிவில் சிந்தத்து புதிய தந்திரோபாய அரசியலை கொண்டு செல்லும் வரை வருடாவருடம் இப்படியே புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான். பழைய கறள் கட்டிய உதவக்கரை அணுகுமுறைகளை புதிய தலைமுறைக்கு பழக்காமல் இருப்பதே எதிர்கால மக்களுக்கு செய்யும் ஆக்க்குறைந்த உதவி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை வெட்டியாடி தமிழர்களை கரைசேர்க்க கூடிய ஒரே பேர்வழி ....அது வேறு யாருமல்ல 
அம்பிகா அன்றி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டும் அம்பிகா சற்குணநாதன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.