Jump to content

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

 
un1-696x447.jpg
 11 Views

எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது.

அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதாவது அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் என்பது பொதுவானது. தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்பது அறிக்கையின் சாராம்சம்.

சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை தீர்மானம் உறுதிப்படுத்துகின்றது.

சிறீலங்கா அரசு அமைத்த காணாமல்போனோர் அவலுவலகத்தின் செயற்பாட்டை தீர்மானம் பாராட்டியுள்ளது.

முஸ்லீம் மக்களின் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் அரசின் செயற்பாட்டை கண்டித்துள்ளது.

தீர்மானத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவில் தமிழ் மக்கள் இருப்பதற்கான அடையாளத்தையே தீர்மானம் மறைத்துள்ளது.

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என கூறும் தீர்மானம், அதனை பொதுவாகவே தெரிவித்துள்ளது.

சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான எந்தவித கோரிக்கைகளும் இல்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. உதாரணமாக பொருளாதாரத் தடை, பயணத்தடைக்கான கோரிக்கைகள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆதாரங்களை ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு எதிர்வரும் 49 மற்றும் 51 ஆவது கூட்டத்தொடர்களில் அறிக்கை சமர்ப்பித்து அதனை நாடுகள் விவாதிக்கும் என தீர்மானம் நிறைவு பெறுகின்றது.

https://www.ilakku.org/?p=42806

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப P2P       ஊர்வலத்தில் முசுலிம்கள் கலந்து கொண்டதுக்கு பலன் கிடைச்சிட்டுது....இங்கிலீசில் ...கொடிகட்டிப் பறக்கிறவையின் மொழிபெயர்ப்புத் திறனைக்கண்டு தலை சுத்துது....ஆரப்பா இந்த இலக்குக் காரன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய கறையான் பேய்கள் உள்ளே அரிக்க, அமெரிக்கா, UK  பேய் முன் கதவை திறந்து விட்டு உள்ளது. 

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

கிந்திய கறையான் பேய்கள் உள்ளே அரிக்க, அமெரிக்கா, UK  பேய் முன் கதவை திறந்து விட்டு உள்ளது. 

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்வதை தவிர வேறு எதை செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்வதை தவிர வேறு எதை செய்ய முடியும்?

US  இல் பிரசுரமாகும் சிறிலங்கா எக்ஸ்பிரஸ் எனும் பத்திரிகையில் கடந்த சில நாட்களுக்குள் வெளிவந்தது.

US இல் வெளிநாட்டு  முகவராக பதிவு செய்யப்படாத,  பாகிஸ்தான் பூர்விகத்தை கொண்ட, Imaad Shah Zubri எனும் பெயரில்  உள்ள நபர்,  UNHRC  இல்  US ஆல்  சிறிலங்கா நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் நகர்வுகளுக்கு எதிராக lobby செய்வதத்திற்கும், அந்த நகர்வுகளை முறியடிப்பதற்கும், 2014 இல் சிறிலங்க அரசாங்கத்தால் 6.5 மில்லியன் டாலர்களை லஞ்சமாக  பெற்றதற்காக   12 வருடங்கள் Los  Angles நீதிமன்றத்தால் சிறைவிதிக்கப்படுகிறார்.  

 

நீங்களே ஊகிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Knowthyself said:

 

 

போர் குற்றமா இனப்படுகொலையா / War Crime or Genocide/Kuna Kaviyalahan/ Human Rights Council /Sri Lanka

https://www.youtube.com/watch?v=ZqRF30gJWFM&t=278s

 

 

 

 

 

 

இலங்கையர்களுக்கு பயணத்தடை என்று சிங்கள அரசுக்கு சார்புபட்டு செய்தி வெளியிட்டு தமிழர்களின் முதுகில் குத்திய ஊடகங்கள் கூகிள் தேடலில் .https://www.google.com/search?rlz=1C1CHBF_en-GBGB878GB878&sxsrf=ALeKk03OObHw6pxiFw2rAHj7Q49koUSZHA%3A1613992310808&ei=dpEzYPvqMPSN1fAPjfeP0A8&q=இலங்கையர்களுக்கு+பயணத்தடை&oq=&gs_lcp=Cgdnd3Mtd2l6EAEYATIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIJCCMQ6gIQJxATMgcIIxDqAhAnMgcIIxDqAhAnMgcIIxDqAhAnOgcIIxCwAxAnOgcIABCwAxBDOgcIABBHELADOgQIIxAnOg0IABCHAhCxAxCDARAUOgUIABCxAzoCCABQzRpY4iBgnV9oAnACeAKAAX6IAYYHkgEEMTAuMZgBAKABAaoBB2d3cy13aXqwAQrIAQrAAQE&sclient=gws-wiz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதங்கமும், கிருபாகரன் சொல்வது தான்.

சுமந்திரன், தன்னிடம் ஈழத்தமிழர் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தை தந்துவிட்டார் என்ற தோரணையில், எல்லாவற்றிலும், குறிப்பாக வெளிநாட்டு பிரிதிநிதிகளை சந்திப்பது, உரையாடுவது, கோரிக்கைகள் போன்றவற்றில், அவர் தனித்து அவரது பிரதியாக விடயங்களாக தோற்றம் கொடுத்து  பங்கெடுத்துவிட்டு, அது தமிழ் மக்களின், அவரது கட்சியின் (பதிவு செய்யப்படாவிட்டாலும்) கருத்தாக, முடிவாக அறிவிப்பது.

அவர் செய்வதை, கட்சியில் உள்ள ஒருவரேனும், ஒரு விடயத்துக்கு ஆக கூட கருது அளிக்காமல் இருப்பது.

இதில், சுமந்திரனை மர் கேள்வி கேட்க கூடிய தலைமை பண்பை இப்போதைய நிலையில் எடுக்க  கூடியவர், சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

US  இல் பிரசுரமாகும் சிறிலங்கா எக்ஸ்பிரஸ் எனும் பத்திரிகையில் கடந்த சில நாட்களுக்குள் வெளிவந்தது.

US இல் வெளிநாட்டு  முகவராக பதிவு செய்யப்படாத,  பாகிஸ்தான் பூர்விகத்தை கொண்ட, Imaad Shah Zubri எனும் பெயரில்  உள்ள நபர்,  UNHRC  இல்  US ஆல்  சிறிலங்கா நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் நகர்வுகளுக்கு எதிராக lobby செய்வதத்திற்கும், அந்த நகர்வுகளை முறியடிப்பதற்கும், 2014 இல் சிறிலங்க அரசாங்கத்தால் 6.5 மில்லியன் டாலர்களை லஞ்சமாக  பெற்றதற்காக   12 வருடங்கள் Los  Angles நீதிமன்றத்தால் சிறைவிதிக்கப்படுகிறார்.  

 

நீங்களே ஊகிக்கலாம்.

https://www.srilankaexpress.org/imaad-zuberi-gets-12-year-prison-term

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

சுமந்திரனின் மறுவடிவமே சாணக்கியன் என்பதை காலம் தெரிவிக்கும். அதைவிட சாணக்கியனை அரசியலுக்கு கொண்டுவந்ததே சுமந்திரன்தான் என்றொரு கருத்துமுண்டு. சுமந்திரனை இப்போது சாணக்கியன் எதிர்த்தால் சாணக்கியனின் அரசியல் எதிர்காலம் இருண்டுவிடும். அவர் வளர்ந்தாலும் அரசே அவரால் பயனடையும். இலங்கைத் தமிழருக்கு அப்படியொரு எழுதா விதியுண்டு. 

Link to comment
Share on other sites

 

9 hours ago, Kadancha said:

சுமந்திரன், தன்னிடம் ஈழத்தமிழர் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தை தந்துவிட்டார் என்ற தோரணையில், எல்லாவற்றிலும், குறிப்பாக வெளிநாட்டு பிரிதிநிதிகளை சந்திப்பது, உரையாடுவது, கோரிக்கைகள் போன்றவற்றில், அவர் தனித்து அவரது பிரதியாக விடயங்களாக தோற்றம் கொடுத்து  பங்கெடுத்துவிட்டு, அது தமிழ் மக்களின், அவரது கட்சியின் (பதிவு செய்யப்படாவிட்டாலும்) கருத்தாக, முடிவாக அறிவிப்பது.

அவர் செய்வதை, கட்சியில் உள்ள ஒருவரேனும், ஒரு விடயத்துக்கு ஆக கூட கருது அளிக்காமல் இருப்பது.

இதில், சுமந்திரனை மர் கேள்வி கேட்க கூடிய தலைமை பண்பை இப்போதைய நிலையில் எடுக்க  கூடியவர், சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

 

கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் எல்லாம் தூக்கமா, அல்லது உதவாக்கரைகளா? சுமந்திரனையும் சாணக்கியனையும் தவிர வேறு தலைவர்களே இல்லையா? மற்றவர்களுக்கு போட்ட வாக்குகள் எல்லாம் எதற்காக?

 

 

Link to comment
Share on other sites

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

புதிய தலைமுறை பிள்ளைகள் தமது சொந்த அறிவில் சிந்தத்து புதிய தந்திரோபாய அரசியலை கொண்டு செல்லும் வரை வருடாவருடம் இப்படியே புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான். பழைய கறள் கட்டிய உதவக்கரை அணுகுமுறைகளை புதிய தலைமுறைக்கு பழக்காமல் இருப்பதே எதிர்கால மக்களுக்கு செய்யும் ஆக்க்குறைந்த உதவி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை வெட்டியாடி தமிழர்களை கரைசேர்க்க கூடிய ஒரே பேர்வழி ....அது வேறு யாருமல்ல 
அம்பிகா அன்றி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டும் அம்பிகா சற்குணநாதன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.