Jump to content

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம்

 
Kajendrakumar.jpg
 14 Views

தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செ. கஜேந்திரன்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் வெற்றிகரமாக மக்கள் எழுச்சி போராட்டமாக இடம் பெற்றது. இதற்கு தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவளித்தது. ஆனால், இந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் விதமாக பச்சைத் துரோகத்தனமாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இன்று தமிழ் மக்களுக்கு பலவீனமான ஐ. நா. வின் அறிக்கை ஒன்று வந்துள்ளது என்றால் அதை முழுமையாக தமிழ் அரசுக் கட்சிதான் ஏற்க வேண்டும். ‘சுமந்திரனின் இந்தத் துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாகவே எம்.கே.சிவாஜிலிங்கமும் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தரப்புக்கள் கூடித்தான் இந்தப் பேரவையை அமைக்கின்றன. இது முழுக்க முழுக்க கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றி தாங்கள் செய்யும் துரோகத்தை மறைக்கும் விதமாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.

தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அந்தக் கூட்டில் இருந்து கொண்டு கோட்டாபயவை பாதுகாப்பதற்காக நாடகமாடுகிறார் என்பதே எமது கருத்து” என்றார்.

 

https://www.ilakku.org/?p=42837

Link to comment
Share on other sites

தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் சலுகை மூலம் பாராளுமன்றம் சென்றவர் தானே இந்த கஜேந்திரன். இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது இது முதல் தடவை அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியப் பேரவையில் இணைய மாவைக்கு சம்பந்தன் முட்டுக்கட்டை.!

Screenshot-2021-02-23-09-00-36-927-com-a

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்."

- இவ்வாறு மிகத் திட்டவட்டமான, தெளிவான அறிவுறுத்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்குத் தொலைபேசி மூலம் வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி.

'தமிழ்த் தேசியப் பேரவை' அமைவது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கூட்டாகத் தாம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தமை குறித்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்புத் தமிழ் தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் வெளியான செய்தித் தொகுப்பை கேட்டறிந்த பின்னரே மாவை சேனாதிராஜாவுடன் நேற்று திங்கட்கிழமை காலை சம்பந்தன் தொடர்புகொண்டார் என அறியவந்தது.

தாம், அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இடம்பெற்ற சம்பவம் அது என்றும் சாரப்பட மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.

"செய்தியாளர் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சிவஞானமும் இருந்திருக்கின்றார். நானே நேரடியாக விடயங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பை நலிவுபடுத்தியோரே அல்லோ மற்றெல்லோரும்.

அவர்கள் எல்லோருமே விரும்பினால் கூட்டமைப்புக்குள் வரலாம். நாங்கள் அவர்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் விரும்பினால் எல்லோரும் கூட்டமைப்புக்குள் வரலாம்.

அப்படி இருக்கையில் ஏன் தனியாக அவர்களுடன் இன்னொரு கூட்டு? கூட்டமைப்பை நலிவுபடுத்தவா? அதுவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எட்டாமல் எப்படி கூட்டமைப்பையும் சேர்த்து புதிய கூட்டுச் செயற்பாடு குறித்து ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க முடியும்? அதுபோலவேதான் தமிழரசுக் கட்சிக்கும்.

கட்சி உரிய முறையில் அமைப்பு ரீதியாகக் கூடி ஒரு முடிவு எடுக்காமல், கட்சியிலிருந்து வெளியேறியோருடன் ஒரு தலைப்பட்சமாக நீங்கள் எப்படி கூட்டுச் செயற்பாடு, கூட்டு என்று நடவடிக்கைகளை எடுக்க முடியும்? உடனடியாகச் சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இந்த நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லுங்கள்.

நாங்கள் கலந்து பேசி பின்னர் தீர்மானங்களை எடுக்கலாம். அவசரப்பட்டு தம்மிஷ்டப்படி யாரும் முடிவுகளை எடுத்து அறிவிக்க அனுமதியாதீர்கள்" என்று சாரப்பட இரா.சம்பந்தன் அறிவுறுத்தலை வழங்கினார்.

சம்பந்தரின் கருத்தை மாவை சேனாதிராஜா எதிர்த்துப் பேசாமல் செவிமடுத்து, இணக்கம் தெரிவித்தார் என்றும் அறியவந்தது.

http://aruvi.com/article/tam/2021/02/23/22942/

டிஸ்கி: 

tenor.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பொறுப்பற்றவர் என்பதா இல்லை  மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் பொறுப்பற்றவர் என்பதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்த் தேசியப் பேரவையில் இணைய மாவைக்கு சம்பந்தன் முட்டுக்கட்டை.!

Screenshot-2021-02-23-09-00-36-927-com-a

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்."

- இவ்வாறு மிகத் திட்டவட்டமான, தெளிவான அறிவுறுத்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்குத் தொலைபேசி மூலம் வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி.

'தமிழ்த் தேசியப் பேரவை' அமைவது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கூட்டாகத் தாம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தமை குறித்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்புத் தமிழ் தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் வெளியான செய்தித் தொகுப்பை கேட்டறிந்த பின்னரே மாவை சேனாதிராஜாவுடன் நேற்று திங்கட்கிழமை காலை சம்பந்தன் தொடர்புகொண்டார் என அறியவந்தது.

தாம், அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இடம்பெற்ற சம்பவம் அது என்றும் சாரப்பட மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.

"செய்தியாளர் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சிவஞானமும் இருந்திருக்கின்றார். நானே நேரடியாக விடயங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பை நலிவுபடுத்தியோரே அல்லோ மற்றெல்லோரும்.

அவர்கள் எல்லோருமே விரும்பினால் கூட்டமைப்புக்குள் வரலாம். நாங்கள் அவர்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் விரும்பினால் எல்லோரும் கூட்டமைப்புக்குள் வரலாம்.

அப்படி இருக்கையில் ஏன் தனியாக அவர்களுடன் இன்னொரு கூட்டு? கூட்டமைப்பை நலிவுபடுத்தவா? அதுவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எட்டாமல் எப்படி கூட்டமைப்பையும் சேர்த்து புதிய கூட்டுச் செயற்பாடு குறித்து ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க முடியும்? அதுபோலவேதான் தமிழரசுக் கட்சிக்கும்.

கட்சி உரிய முறையில் அமைப்பு ரீதியாகக் கூடி ஒரு முடிவு எடுக்காமல், கட்சியிலிருந்து வெளியேறியோருடன் ஒரு தலைப்பட்சமாக நீங்கள் எப்படி கூட்டுச் செயற்பாடு, கூட்டு என்று நடவடிக்கைகளை எடுக்க முடியும்? உடனடியாகச் சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இந்த நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லுங்கள்.

நாங்கள் கலந்து பேசி பின்னர் தீர்மானங்களை எடுக்கலாம். அவசரப்பட்டு தம்மிஷ்டப்படி யாரும் முடிவுகளை எடுத்து அறிவிக்க அனுமதியாதீர்கள்" என்று சாரப்பட இரா.சம்பந்தன் அறிவுறுத்தலை வழங்கினார்.

சம்பந்தரின் கருத்தை மாவை சேனாதிராஜா எதிர்த்துப் பேசாமல் செவிமடுத்து, இணக்கம் தெரிவித்தார் என்றும் அறியவந்தது.

http://aruvi.com/article/tam/2021/02/23/22942/

டிஸ்கி: 

tenor.gif

இந்தியாவின் கட்டளையை சிரமேற் பணிந்து.....சம்பந்தன் ஐயா...

🤣

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பொறுப்பற்றவர் என்பதா இல்லை  மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் பொறுப்பற்றவர் என்பதா?

இலங்கை அரசியலில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவோர்  பொறுப்பற்று நடப்பது இது முதற் தடவை அல்ல. இந்த இரண்டுமே  மிகச்சிறிய உதாரணங்கள் மட்டுமே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.