Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                             சுதந்திரம் எம் சுவாசம்.

 

"சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்".

 

மரத்தினின்று வீழ்ந்த 

பழுத்த சருகுகள் 

வேருக்கு உரமாகின்றன 

மரணித்த வீரனின் 

பாச நினைவுகள் 

மனதில் தடுமாறுகின்றன 

 

சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் 

அதை நோக்கி நாம் கொடும் 

பாலையில் அல்லவா நடக்கின்றோம் 

கண்தொடும் தூரம் கானல் நீர் 

 

நாம் எதைத் தொலைத்தோம் 

எங்கே தொலைந்து போனோம் 

எம் மூதாதையர் வாழ்ந்தார்களே 

நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே 

 

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் 

காக்கை வன்னியனும், கருணா  நிதியும் 

நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா 

சுதந்திரத்தை விற்பார்களா 

காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா 

 

ஓ ....வீரனே ......

திறந்திருக்கும் உன் விழிகளில்

இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி 

விழுந்து கிடக்கும் உன் உடல்கூட 

முட்களையும், கற்களையும்

ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு 

இனம் காட்டி விட்டல்லவா  விதையாகியது.......!

 

யாழ் அகவை 23 க்காக 

ஆக்கம் சுவி.........!

 

  • Like 19
  • Thanks 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஓ ....வீரனே ......

திறந்திருக்கும் உன் விழிகளில்

இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி 

விழுந்து கிடக்கும் உன் உடல்கூட 

முட்களையும், கற்களையும்

ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு 

இனம் காட்டி விட்டல்லவா  விதையாகியது.......!

இத்தனை வரிகளுக்குள்ளும் எமது போராட்டமே ஒழிந்திருக்கிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஓ ....வீரனே ......

திறந்திருக்கும் உன் விழிகளில்

இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி 

விழுந்து கிடக்கும் உன் உடல்கூட 

முட்களையும், கற்களையும்

ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு 

இனம் காட்டி விட்டல்லவா  விதையாகியது.......!

வீரர்கள் இப்போது வரலாறாகிவிட்டனர். “எங்கள் தாத்தா ஒரு புலி வளர்த்தார்” என்ற நாடோடிக் கதை மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

வீரர்கள் இப்போது வரலாறாகிவிட்டனர். “எங்கள் தாத்தா ஒரு புலி வளர்த்தார்” என்ற நாடோடிக் கதை மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.....!

இங்கு நான் தனியாக எந்த இயக்கத்தின் வீரனையும் குறிப்பிடவில்லை.அதில் நான் மிகக் கவனமாக இருந்தேன்......!

அன்று அநேகமாக பல இயக்கத் தலைவர்களும் போராளிகளும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். அதிகம் ஏன் கோட்டையில் இருந்து இராணுவத்தை வெளியேற விடாமல் தடுத்ததில் அத்தனை இயக்கங்களின் பங்கும் இருக்கு..... பின்பு தலைவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்தபோது அவர்களும் பிரிந்தார்கள்.....!

ஆனால் அன்று ஒவ்வொரு போராளியும் எமக்கு ஒரு நாடு கிடைக்கும் என்னும் உத்வேகத்தில்தான் சென்றிருந்தார்கள்.ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் பெயர் தெரிந்த / தெரியாத பல வீரர்கள் விதையாகி இருக்கிறார்கள்......!

ஒரே வீட்டில் இருந்த ஒரு தாய் பெற்ற சகோதரங்கள் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து போராடியிருக்கின்றார்கள்.....இதுக்குமேல் சொல்ல ஒன்றுமில்லை..... எனக்கு எல்லோரையும் பிடிக்கும்......!

அவர்களுக்கானதே  இந்தக் கவிதை....!

(உங்களுக்கு புலிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றனர், எனக்கு எல்லோருமே நினைவுக்கு வருகின்றனர்).

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தை கவிதையில் தந்துள்ளீர்கள், எங்கள் உறவினர்கள் பலரும் ஒவ்வொரு இயக்கத்திலிருந்து எமக்காக மரணித்துவிட்டார்கள், அவர்களின் கனவு எமது விடுதலை, அது என்றோ ஒரு நாள் நடக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 02:51, suvy said:

நாம் எதைத் தொலைத்தோம் 

எங்கே தொலைந்து போனோம் 

 

On 22/2/2021 at 02:51, suvy said:

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா.

நல்லவற்றை விதைப்போம்

எம் கண் முன்னே நடந்த வரலாற்றை சொல்லி செல்வோம்.

அவரவர் தத்தமது புத்திக்கேற்ப எடுத்துக் கொள்ள இது ஒன்றும் புத்தக கதை அல்லவே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 18:51, suvy said:

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...!

சுதந்திரம் என்பது இயற்கையானது!

கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..!

முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே  ஓடுகின்றன!

ஒரு நாயைக் கட்டி விட்டுப்  பாருங்கள்...! தன்னை  யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்!

அதே போலத் தான்...எமது போராட்டமும்...!  ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து  கொண்டேயிருக்கும்...!

இறுதி  முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வலி மிகுந்த கவிதை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்த இடத்திலேயே தேடவேண்டும் ஓசோவின் தத்துவ வார்த்தைகள்.

தொலைத்த இடத்தில் நாங்களும் இல்லை. தொலைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தேடும் சக்தியும் இல்லை.

தர்மம் வெல்லும் என்ற சொல்லைக்காட்டிலும் வல்லவன் வாழ்வான் என்ற சொல்லே இக்காலத்தில் மிளிர்ச்சியாக இருக்கிறது. சுவியண்ணா.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 08:01, புங்கையூரன் said:

எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...!

சுதந்திரம் என்பது இயற்கையானது!

கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..!

முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே  ஓடுகின்றன!

ஒரு நாயைக் கட்டி விட்டுப்  பாருங்கள்...! தன்னை  யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்!

அதே போலத் தான்...எமது போராட்டமும்...!  ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து  கொண்டேயிருக்கும்...!

இறுதி  முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!

யதார்த்தமான கருத்து புங்கை.........சுதந்திரம் இயற்கையானது மட்டுமல்ல மிகவும் பெறுமதியானதும் கூட......!

வருகைக்கும் கருத்துக்களுக்கும் எல்லோருக்கும் மிகவும் நன்றிகள்......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாய் வாழ நினைத்தோமே 

சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு 

கடத்திவிட முயன்றோமே 

யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் 

காக்கை வன்னியனும், கருணா  நிதியும் 

நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா 

சுதந்திரத்தை விற்பார்களா 

காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா 

அருமை யான கவிதை. மண்மீட்ப்புக்காய் சென்று விதையாகிப்போன அத்தனை தியாக தீபங்களையும் வணங்குகின்றேன்.

பல பிரிவுகளாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு எனோ இந்தநிலை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.