Jump to content

உடல்நலனைக் கடத்த அனுமதிக்கலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடல்நலனைக் கடத்த அனுமதிக்கலாமா?

health  
 

டாக்டர் சசித்ரா தாமோதரன்

ஒரு கடத்தல்காரர் விமானியைக் கட்டுப்படுத்தி விமானத்தைக் கடத்தி, ஓரிடத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் விமானத்தை, மொத்தமாகத் திசைமாற்றி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றுவிடுவது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் நம் அன்றாடப் பயன்பாட்டின் மூலம் உடலுக்குள் ஊடுருவி நம் உடலையே வேறொரு நிலைக்குக் கடத்திக்கொண்டு போனால்? கேட்கப் புதிதாக இருந்தாலும், இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நமது உடலின் உறுப்புகளில் பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, பாலின சுரப்பிகள் அட்ரீனல், கணையம் போன்ற மிகச்சிறிய சுரப்பிகள், ஹார்மோன்கள் என்ற வேதிப்பொருள்களை மிகக் குறைந்த அளவில் உற்பத்திசெய்து, நாளங்கள் இல்லாததால், அவற்றை நேரடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இதன் மூலம் நமது மூளை, இதயம், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள் என அனைத்து உடலுறுப்புகளுக்கும் சென்றடையச் செய்வதுடன், உடலின் வளர்ச்சி, நோயெதிர்ப்பு, வளர்சிதை மாற்றங்கள், சூழலுக்கேற்ப உடலைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல் என்று நம் உடலின் அத்தனை முக்கியப் பணிகளுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன நாளமில்லா சுரப்பிகள்.

 
 
 

எளிதாகக் கூறவேண்டுமென்றால், இந்த சுரப்பிகள் சுரக்கும் எண்டோகிரைன் ஹார்மோன்கள்தாம், நம் உடலில் லட்சம் கோடி (ட்ரில்லியன்) கணக்கில் இருக்கும் ஒட்டுமொத்த செல்களையும் கட்டுப்படுத்தி உடலின் செயல்பாடுகள், வளர்ச்சி - ஆரோக்கியத்தைச் சமன்படுத்துகின்றன. மேலும், எப்போதாவது இந்த சுரப்பிகளின் செயல் பாடுகளில் பற்றாக்குறையோ மிகுதியோ என ஏற்படும் சிறிய மாற்றம்கூட, நம் ஆரோக்கி யத்தைப் பாதித்து, நீரிழிவு நோய், தைராய்டு, உடல்பருமன், பி.சி.ஓ.டி., குழந்தைப் பேறின்மை, மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

உடலைக் கடத்துதல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை, சோப், ஷாம்பு, நாப்கின் போன்ற அத்தியாவசியப் பொருள்களிலும், பதப்படுத்தப்பட்ட உணவு -ஊட்டப் பொருள்களிலும் கலந்துள்ள சில வேதிப்பொருள்கள்தாம். இவை நமது உடலுக்குள் சென்று கலந்துவிடும் போது, அவை எண்டோகிரைன் ஹார்மோன்கள் போலவே இயங்கி, நமது செல்களிலுள்ள ஹார்மோன் ஏற்பிகளைத் தன்வசப்படுத்துகின்றன. நமது உடலில் இயல்பாக உற்பத்தியாகும் ஹார்மோன்களின் செயல்திறனைப் பாதித்து, அவற்றின் அளவைக் குறைக்கவோ கூட்டவோ செய்கின்றன. பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

நம் உடலில் ஹார்மோன் சுரக்கும் அளவோடு ஒப்பிடும்போது இவற்றின் அளவு மிகவும் குறைவுதான். ஆனால், பல்வேறு செயற்கை வேதிப் பொருள்களை நாள்படத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவை நம் உடலில் சேர்த்துக்கொண்டே போகும் போது ஏற்படும் விளைவுகள்தாம் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளன.
இந்த வேதிப்பொருள்கள், உடலில் இயற்கையாக இயங்கும் ஹார்மோன்களைப் போலவே செயல்பட்டு, அவற்றின் உண்மையான செயல்பாடுகளில் குறுக்கிட்டு, மனித உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் வேறு பக்கம் திசைதிருப்பி விடுவதால், இவற்றை ‘எண்டோகிரைனை சீர்குலைக்கும் வேதிப்பொருள்கள்' (Endocrine Disrupting Chemicals - EDC) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எண்டோகிரைன் சீர்குலைவு

ஒரு சாதாரண மனிதன் அன்றாட வாழ்வில் வந்துபோகும் எண்டோ கிரைன் சீர்குலைப்பிகள் இதுவரை 80,000 கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் சில:

* பிளாஸ்டிக், உணவு பேக்கிங் உறைகள், ஃபீடிங் பாட்டில்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் என அனைத்திலும் அதிகளவு காணப்படும் 'பி.பி.ஏ. - Bis Phenol Acetate'.
* பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும், செயற்கை உணவு ஊட்டங்களிலும் காணப்படும் ‘பாரபென்கள்' (Parabens).
* அழகு சாதனப்பொருள்கள், நாப்கின்களில் காணப்படும் ‘தாலேட்' (Phthalates), ஆக்சிபென்ஸோன்' (Oxybenzone).
* ஷாம்பு, சோப்புகளில் உள்ள ‘ட்ரைக்ளோசான்' (Triclosan), ‘ஆல்கைல் பினைல்' (Alkyl Phenyl).
* பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்களில் உள்ள ‘டிடிடி' (DDT), ‘டயாக்சின்' (Dioxins).
* நீரில் கலந்துள்ள ‘ஆர்சனிக்'
* சிகரெட், வாகனப் புகை.
* தொழிற் சாலைக் கழிவு களில் ‘பி.சி.பி.' (PCB), 'டி.டி.ஈ.' (DDE) போன்ற எண்ணற்ற எண்டோகிரைன் சீர்குலைப்பிகள் உள்ளன.

பி.பி.ஏ. ஆபத்து

எண்டோகிரைன் சீர்குலைப்பி ஒவ்வொன்றும் நம் உடலில் ஒவ்வொரு விதமாகச் செயல்படும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, பயன்பாட்டில் பெருமளவில் உள்ள பி.பி.ஏ.வை (BPA) எடுத்துக்கொள்வோம். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், ஃபீடிங் பாட்டில்கள், ஃபிளாஸ்க்குகள், டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, என அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் 90% பொருள்களில் இருக்கும் இந்த பி.பி.ஏ., ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களைப் போல் செயல்பட்டு நம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இவற்றை ‘ஜெனோ ஈஸ்ட்ரோஜன்கள்', அதாவது ‘வெளியிலிருந்து கிடைக்கப்பெறும் ஈஸ்ட்ரோஜென்' என்கிறார்கள் மருத்துவர்கள். இவை, செல்களின் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுக்குள் பதிந்து, பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களையும், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் ஒருபக்கம் குறைக்கும் இந்த பி.பி.ஏ., அதே வேளையில் சினைப்பையில் பி.சி.ஓ.டி. எனும் நீர்க்கட்டிகள், என்டோமெட்ரியோசிஸ் எனும் ரத்தக்கட்டிகள், சினைப்பைச் செயலிழப்பு என மறுபக்கத்தையும் முடக்கி, ஆண்-பெண் இருவரிடையேயும் கருத்தரித்தலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

மீறிக் கருத்தரித்தால் கருச்சிதைவு, கர்ப்பகால நீரிழிவு நோய், பிறவிக் குறைபாடுகள், குறைமாதக் குழந்தைப்பேறு எனப் பல கர்ப்ப காலப் பிரச்சினைகளை இவை ஏற்படுத்துகின்றன. மீறிக் கரு உருவாகிவிட்டாலும், இவற்றைப் பயன்படுத்தும் கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்குத் தாயின் நஞ்சுக்கொடி வழியாகவும், தாய்ப்பால் மூலமாகவும் இவை சென்றடைந்து, ஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி. போன்ற கற்றல் குறைபாடுகள், ஆஸ்துமா, அலர்ஜி, இளவயதுப் பருவமடைதல், இளவயது உடல்பருமன், நீரிழிவு நோய், நியூரோபிளாஸ்டோமா போன்ற இளவயதுப் புற்றுநோய்கள் என அடுத்த தலைமுறையையும் இது பாதிக்கிறது.

கரு, கர்ப்பம் என்பதை விட்டுவிட்டால் சாதாரணமானவர்களுக்கு உடல்பருமன், நீரிழிவு நோய், தைராய்டு நோய், எலும்புப் புரை, அல்சைமர் நோய், நோய்த் தடுப்பாற்றல் குறைவதால் ஏற்படும் தொற்றுநோய்கள், இவையனைத்துக்கும் மேலாக, ‘செல் சைக்கிள் டிஸ்ரெகுலேஷன்' என்ற அணுக்களின் மறுபராமரிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மார்பகம், கர்ப்பப்பை, சிறுநீரகம், புராஸ்டேட், விரை ஆகியவற்றில் புற்றுநோய்கள் என இந்த ஒரேயொரு சீர்குலைப்பி ஏகப்பட்ட நோய்களை ஏற்படுத்த வல்லது.

இந்த ஜெனோ ஈஸ்ட்ரோஜன்கள், இயற்கை ஈஸ்ட்ரோஜன்களைக் காட்டிலும் நம் உடலால் மிக மிகக் குறைந்த அளவில் (1,000 மடங்கு குறைவாய்) தான் ஏற்கப்படுகின்றன என்பதால், இவற்றின் அளவு உடலில் அதிகரிக்கும்போதோ அல்லது இவை மிக நீண்ட காலம் உடலுக்குள் தங்கியிருந்தால் மட்டுமே இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் ஒரே ஆறுதல்.

தீர்வுகள் என்ன?

ஒவ்வொரு நாட்டின் அரசும், மருந்து களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளைப் போலவே, இந்த எண்டோகிரைன் சீர்குலைப்பிகள் விஷயத்திலும் தீவிர சோதனைகளையும், கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு.
இதைப் பின்பற்றி நார்வே, ஸ்வீடன், ஃபிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், பி.பி.ஏ.வுக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன. நமது நாட்டிலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. குழந்தைகளுக்கான ஃபீடிங் பாட்டில்களில் பி.பி.ஏ. பயன்படுத்த மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பொருள்கள் சார்ந்து தடை விதிக்கப்படவில்லை.

தனிமனிதர்களின் கடமைகள்

* இயன்றவரை பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது. மீறிப் பயன்படுத்தும்போது, மறுசுழற்சிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட #1,#2,#4 எண்கள் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மட்டுமே சரிபார்த்து வாங்குவது. (#3,#6,#7 ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்).
* பழங்கள், காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவிய பின்னர் பயன்படுத்துவது.
* மண்பாண்டங்கள், எவர்சில்வர், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்துவது.
* பதப்படுத்தப்பட்ட உணவையும், செயற்கை உணவு ஊட்டங்களையும் தவிர்ப்பது.
* சானிடரி நாப்கின்கள், டயப்பர்களில் ஸைலீன் போன்ற தாலேட்களைத் தவிர்ப்பது.
* தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது, வாட்டர் பில்டர்களைப் பயன்படுத்துவது.
* குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் அதிக கவனம் செலுத்துவது.
* நான்-ஸ்டிக், மைக்ரோ வேவ், டப்பர் போன்றவற்றைத் தவிர்ப்பது.
* வாங்கும் பொருள்களில் பி.பி.ஏ. ஃப்ரீ, பாரபென் ஃப்ரீ என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது.
* புகைப்பிடித்தலைத் தவிர்ப்பது.
* குப்பை கழிவை எரிப்பதைத் தவிர்ப்பது.
* அனைத்துக்கும் மேலாக, காற்று மாசைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறங்களில் அதிக மரங்களை நடுவது

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: sasithra71@gmail.com

 

https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/635993-health-4.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.