Jump to content

பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த  படம்

paruthi-veeran-release-day-special-article

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான 'பராசக்தி' மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நின்றது. அதேபோல் பல வெற்றிப் படங்களில் நடித்தும் வித்தியாசமான படங்களில் நடிப்பவர் திறமை வாய்ந்த நடிகர் என்றெல்லாம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் 'பருத்திவீரன்' பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திரைப்படம்.

மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு தரமான சினிமா, அரிதான வாழ்வியல் படைப்பு என்று ரசிகர்களால் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட 'பருத்திவீரன்' 2007 பிப்ரவரி 23 அன்று வெளியானது. இன்றோடு அந்தப் படம் வெளியாகியும், சினிமா ரசிகர்களுக்கு கார்த்தி அறிமுகமாகியும் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


மாறுபட்ட காதல் படமான 'மெளனம் பேசியதே', உளவியல் அம்சங்களை உள்ளடக்கிய க்ரைம் த்ரில்லர் படமான 'ராம்' எனத் தன்னுடைய முதல் இரண்டு படங்களிலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றுவிட்ட இயக்குநர் அமீர். 'பருத்திவீரன்' இயக்குநராக அவருடைய மூன்றாம் படம் மட்டுமல்ல ஒரு படைப்பாளியாக அவருடைய மாஸ்டர் பீஸ் என்றும் சொல்லலாம். இதற்குப் பிறகு அவர் இயக்கத்தில் 'ஆதிபகவன்' என்னும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

1614070032343.jpg

 

கிராமங்களின் இன்னொரு யதார்த்தம்

மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தாய்க்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்து பெற்றோரை இழந்து சித்தப்பாவிடம் வளர்ந்து அவருடன் சேர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞன் தன் மாமன் மகளின் அப்பழுக்கற்ற காதலால் மதிக்கத்தக்க மனிதனாகக் கனிவதும் அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள், சுற்றத்தினரின் சாதிய மேட்டிமை உணர்வால் அந்தக் காதலுக்குக் கிடைக்கும் எதிர்ப்பும் அதனால் காதலர்களுக்கு என்ன ஆகிறது என்பதும்தான் 'பருத்திவீரன்' படத்தின் ஒன்லைன். இந்தக் கதைக்கு அனைத்து இயல்பான மனித உணர்வுகளையும் உள்ளடக்கிய உயிர்ப்பும் மிக்க திரைக்கதை அமைத்து மிக மிக யதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமான கிராமிய வாழ்வை தன் திரைமொழியால் பதிவு செய்திருப்பார் இயக்குநர் அமீர்.

மதுரையை ஒட்டிய கந்தக பூமியாக விளங்கும் கிராமங்களின் வெக்கையை உணர வைத்திருப்பார். கிராமங்கள் என்றால் விவசாயம், வயல்காடு, ஆற்றங்கரை, வெள்ளந்தியான மனிதர்கள், ஆலமரத்தடி பஞ்சாயத்து, திண்ணைப் பேச்சுகள் என்றே அதுவரை தமிழ் சினிமாவின் மிகப் பெரும்பாலான கிராமத்துப் படங்கள் காண்பித்துவந்தன. ஆனால், கிராமங்களின் இன்னொரு தவிர்க்க முடியாத யதார்த்தமான சாதி மேட்டிமை உணர்வை, தீண்டாமையை, சாதிய ஒடுக்குமுறைகளை, அதனால் எளிய மனிதர்களின் வாழ்வு தொடங்குவதற்கு முன்பே சிதைவுறுவதை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்தது என்பதனாலும்தான் 'பருத்திவீரன்' வரலாற்றின் மிக முக்கியமான திரைப்படமாகிறது.

1614070047343.jpg

 

சாதனைபுரிந்த கலைஞர்கள்

மூத்த நடிகர் சிவகுமாரின் மகன், அப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்ட நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையில் தடம் பதித்தார். முதல் பட நடிகர் என்று சொன்னால் நம்ப முடியாத அளவு தோற்றம். உடை, கண்பார்வை, உடல் மொழி என அனைத்திலும், ஊதாரியாகத் திரியும், மற்றவர்களை மிரட்டிப் பணம் பறித்து அடாவடி செய்யும் கிராமத்து இளைஞனைக் கண்முன் நிறுத்தினார் கார்த்தி. அன்று முதல் இன்றுவரை நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டிவருகிறார்.

இயக்குநர், கதாநாயகனுக்கு அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் என்று 'பருத்திவீர'னை அடையாளப்படுத்தலாம். அதுவரை மேலைநாட்டுப் பாணியை ஒத்திருக்கும் இசைக்காக மட்டுமே அறியப்பட்டிருந்த யுவன் தன்னால் நாட்டாரியல் இசைக் கருவிகளில் கிராமத்து மண்மனம் வீசும் இசையைக் கச்சிதமாகவும் அற்புதமாகவும் அளிக்க முடியும் என்று பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசை மூலமாகவும் நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

'அறியாத வயசு', 'அய்யய்யோ' ஆகிய இரண்டு பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் கிராமத்துக் காதல் பாடல் தொகுப்புகளில் என்றென்றும் தவிர்க்க முடியா இடம் பிடித்தன. 'ஊரோரம் புளியமரம்' பாடல் நாட்டாரியல் இசைக் கருவிகளை சினிமாவுக்கான எந்த மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே ஒலிக்கச் செய்த அரிதான பாடல். அந்தப் பாடலும் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்று. படம் முழுக்கவே தமிழ் நாட்டாரியல் இசையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக யுவன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப்பெறுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நிகழவில்லை.

 

1614070065343.jpg

 

ஆனால் 'பருத்திவீரன்' படத்துக்கும் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் தேசிய விருது உட்படப் பல விருதுகள் கிடைத்தன. படத்தொகுப்பாளர் ராஜா முகமது சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை வென்றார். ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் சுயநலமற்ற காதலையும் உண்மையான காதல் கொடுக்கும் ஆவேசத்தையும் வைராக்கியத்தையும் வெகு இயல்பாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தியதற்காகப் படத்தின் நாயகி பிரியாமணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

அரிதான விருதைப் பெற்ற நாயகி

1968-லிருந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. லட்சுமி ( 'சில நேரங்களில் சில மனிதர்கள்'), ஷோபா ( 'பசி'), சுஹாசினி ('சிந்து பைரவி'), அர்ச்சனா ('வீடு') ஆகியோர் மட்டுமே பிரியாமணிக்கு முன்பு தமிழ்த் திரைப்படத்துக்காகத் தேசிய விருது வென்ற நடிகைகள். அபார நடிப்புத் திறமை கொண்ட இந்த நடிகைகளின் பட்டியலில் பிரியாமணியும் ஒருவரானார். அதுவும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தின் நாயகிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது என்பது பிரியாமணியின் சாதனையை மேலும் சிறப்பானதாக்குகிறது.

மேலும், தமிழக அரசு 'பருத்திவீர'னை அந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வு செய்து விருதளித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருதையும், கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசையும் அளித்தது.

இப்படிப் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் விமர்சகர்களின் பாராட்டையும் ரசிக மனங்களில் நீங்கா இடத்தையும் பெற்றுவிட்ட 'பருத்திவீரன்' தமிழ் சினிமாவைத் தலைநிமிரச் செய்த அரிதான திரைப்படங்களில் ஒன்று என்று மிகையின்றிச் சொல்லலாம்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/637171-paruthi-veeran-release-day-special-article-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாள , ட க்ளஸ் அண்ணயும் மறக்க இயலாத கதாபாத்திரங்கள்  அதோடு கார்த்தியும் கலக்கி இருப்பார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.