Jump to content

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையாரை காணவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

S4.jpg

 

ஏ -9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ்  புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

 

 

S1.jpg

 

 

 

 

 

குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள்  எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப் போவதாகவும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.

 

 

S2.jpg

 

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையாருக்கு பதிலாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா எனவும் கேள்வி எழுப்பும் பொது மக்கள்  மத ரீதியாக பாரபட்சங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கபடல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

S3.jpg

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இருந்த பிள்ளையாரை காணவில்லை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பிள்ளையார். இந்த மனிதரிடம் அகப்பட்டு அகதியாக அலையவேண்டிய நிலை வந்துவிட்டது.

☹️

சமயச் சின்னங்களை எந்தவித பொறுப்புமின்றி எல்லா இடங்களிலும் வைக்கும் அற்பர்களைப் பிடித்து உள்ளே போட்டால் இந்த உலகத்தில் இருக்கும் அரைவாசிப் பிரச்சனைகள் தீர்ந்தது.

 

😡

Link to comment
Share on other sites

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கிராமத்தில், கடந்த முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியில் கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

butha-2.jpg?fit=596%2C415

சனீசுவரனாலேயே பிடிக்க முடியாத பிள்ளையாரை, புத்தர் பிடித்ததுமல்லாமல் அழித்தும் விட்டாரே🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை

எனக்கென்னவோ இன்னமும் பிள்ளையார் அங்கே இருப்பதாகத்தான் தெரிகிறது

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

பாவம் பிள்ளையார். இந்த மனிதரிடம் அகப்பட்டு அகதியாக அலையவேண்டிய நிலை வந்துவிட்டது.

☹️

சமயச் சின்னங்களை எந்தவித பொறுப்புமின்றி எல்லா இடங்களிலும் வைக்கும் அற்பர்களைப் பிடித்து உள்ளே போட்டால் இந்த உலகத்தில் இருக்கும் அரைவாசிப் பிரச்சனைகள் தீர்ந்தது.

 

😡

நான் கடவுளை நம்புவன்.ஆனால் வயலுக்கு ஒரு கோவில் வரப்புக்கு ஒரு கோவில் என்டு எங்கடை ஆட்க்களின் அலப்பறைகளும் கொஞசம் ஓவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் கடவுளை நம்புவன்.ஆனால் வயலுக்கு ஒரு கோவில் வரப்புக்கு ஒரு கோவில் என்டு எங்கடை ஆட்க்களின் அலப்பறைகளும் கொஞசம் ஓவர்.

மரத்துக்கு மரம் புத்தர் சிலைகள் முளைக்கும் போது இந்த ஆதங்கத்தை காணவில்லையே சகோதரம்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மரத்துக்கு மரம் புத்தர் சிலைகள் முளைக்கும் போது இந்த ஆதங்கத்தை காணவில்லையே சகோதரம்? 😁

அதுவும் பிழை தான் சந்தேகம் இல்லை.ஆனால் வெர்கள் என்னிடம் நன்கொடை கேட்க்கவில்லை.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

அதுவும் பிழை தான் சந்தேகம் இல்லை.ஆனால் வெர்கள் என்னிடம் நன்கொடை கேட்க்கவில்லை.😁

அவர்களுக்கு அரசு இருக்கின்றது.நாடு இருக்கின்றது. அவர்கள் சார்பானவர்கள்/மக்கள் தமது இனம் மதம் நிலம் சம்பந்தமாக மிகுந்த கரிசனையாக உள்ளனர்.எனவே உதவியும் தண்டல்களும் அவர்களுக்கு தேவையில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது.

எனக்கென்னவோ இந்த நந்தசேன கோத்தா வின் வெள்ளை வான் மீதுதான் டவுட் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எனக்கென்னவோ இந்த நந்தசேன கோத்தா வின் வெள்ளை வான் மீதுதான் டவுட் .

பாவம் அந்த மனுஷன்! தட்டிப்பறிக்கும்  தன் தொழிலை சுதந்திரமாக செய்யவும்முடியாமல், போட்ட 
 வேஷத்தைக் கழட்டவும் முடியாமல், கைகால் உழைவெடுத்து  தவிக்குது. நீங்கள் வேறை நகைச்சுவை பண்ணிக்கொண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் கடவுளை நம்புவன்.ஆனால் வயலுக்கு ஒரு கோவில் வரப்புக்கு ஒரு கோவில் என்டு எங்கடை ஆட்க்களின் அலப்பறைகளும் கொஞசம் ஓவர்.

சைவக்காறர் மட்டுமில்ல வேதக்காறரும்தான். எங்க ஏரியா உள்ள வராதே என்கின்ற ரீதியில், 

குண்டுக்கயும் செல்லடிக்கயும் காப்பாற்ற வக்கில்லாத கடவுளை எங்க வச்சுத்தான் என்ன...

🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

சைவக்காறர் மட்டுமில்ல வேதக்காறரும்தான். எங்க ஏரியா உள்ள வராதே என்கின்ற ரீதியில், 

குண்டுக்கயும் செல்லடிக்கயும் காப்பாற்ற வக்கில்லாத கடவுளை எங்க வச்சுத்தான் என்ன...

🥴

 இந்த பூமி பந்திலே  கடவுளே வேண்டாம்..... கடவுளே இல்லை....கடவுள் வழிபாடுகளே இல்லை என விழித்து சொன்ன ஒரு நாட்டை உதாரணமாக இங்கே காட்டும் படி கேட்டுக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு நம்மேல் மட்டுமல்ல, நம்ம அயலார்மேலேயும் பொறுப்பு உண்டு. அதை தட்டிக்கழித்து மற்றவரின் எழுச்சியை பொறுக்கமுடியவில்லை, இயலாமையை ஏற்கமுடியவில்லை, அறியாமையை சகிக்க இயலவில்லை, அடுத்தவருக்கு நஷ்டத்தை, களங்கத்தை, கலக்கத்தை உண்டாக்குகிறோம். நல்ல பெயரை நாசமாக்குகிறோம், இப்படி பல. இதுகளை விட்டு ஏறிய, அயலவனை அணைக்க மனமில்லை. இதனால் ஏற்பட பழியை  சாமிமேல போட்டு தண்டனை குடுக்க முயற்சிக்கிறோம். அவரேயன்றி நம்மால் இந்தப்பிரச்சினையை தீர்க்க முடியாது. நாமே நம்மை எதிரிக்கு காட்டிக்கொடுத்து, உதவிகொண்டு கடவுளை குற்றம் சாட்டுகிறோம். ஏனென்றால் அவர் நம்மைச் சுட்டிக்காட்மாட்டார் என்கிற துணிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

 இந்த பூமி பந்திலே  கடவுளே வேண்டாம்..... கடவுளே இல்லை....கடவுள் வழிபாடுகளே இல்லை என விழித்து சொன்ன ஒரு நாட்டை உதாரணமாக இங்கே காட்டும் படி கேட்டுக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

😂😂

கு சா வுக்கு ரோசம் கொப்பளித்துக்கொண்டு வந்துவிட்டதோ. 😂

கடவுள் என்பவர் எங்களுக்கு வழிகாட்டி மட்டுமே. காட்டப்பட்ட  வழியே(Moral) நாம்தான் நடக்க வேண்டும். 👍

 

ஆதலால் கூறப்படுவதென்னவெனில், 

சந்திக்குச் சந்தி சமயச் சின்னங்களை, அது சித்தார்த்தனாயிருந்தாலென்ன சேவற் கொடியோனாகவிருந்தல்தால்தான் என்ன, யேசுவாயிருந்தாலென்ன,  எங்கே, எதனை யார் வைத்தாலும், மனிதனால் விதைக்கப்பட்ட நன்மை தீமை சகலவற்றிற்குமான விளைவுகளை அறுவடை செய்ய வேண்டியது மனிதர்தான். 

எனவே 

பெருந் தெருக்கள் திணைக்களத்திற்கு/RDA வுக்குச் சொந்தமான இடத்தில் சமயச் சின்னங்களை அத்துமீறி வைத்துவிட்டு அதனை அதிகாரமுடையோர் நீக்கிவிட்டவுடன் குய்யோ முய்யோ என்று குழறுவதால் பலனில்லை காண்பீர் பெரியோரே. 

வட கிழக்கெங்கும் மூலைக்கு மூலை மழைக் காளான்கள் போல எந்தவித பொறுப்புமின்றி முழைத்திருக்கும் சகல சமயச் சின்னங்களையும் துடைத்தெறிய வேண்டுமென தொடர்புடைய அதிகாரத் தரப்பினரை இத்தால் வேண்டிக் கொள்கிறேன். அத்துடன் பெரும் ஒலி மாசடைதலுக்கு காரணமாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விழைவிக்கும் ஒலிபெருக்கிகளையும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஓயாமல் துன்பந்தரும் ஒலிபெருக்கிகளை கட்டுப்பட்ஒத்தும்படி சிபாரிசு செய்கிறேன்.

🥁🥁🥁🥁🥁🥁

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அதுவும் பிழை தான் சந்தேகம் இல்லை.ஆனால் வெர்கள் என்னிடம் நன்கொடை கேட்க்கவில்லை.😁

இது பச்சைப்பொய். தையிட்டியில் ராணுவத்தால் கட்டப்படும் விகாரைக்கு அங்கே உள்ளவர்களிடம் ராணுவம் சீமெந்து தொடக்கம் கல்லு வரைக்கும் ராணுவம் ஒருவித பலாத்காரமாகநன்கொடை கேட்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சாவகச்சேரியில் பிள்ளையார் கோவில் ஒன்றுக்கு அருகில் திடீரென கூடிய பௌத்தர்களால் பதற்றம்..!

IENEOEMWIW_1080.jpg

யாழ்.சாவகச்சேரி - நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வாகனங்களில் வந்த பௌத்தர்கள் கூடியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

அவ்விடத்தில் உள்ள மருத மரத்தின் கீழ் சிறிய பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்கள் ஒன்றுகூடியதால் சந்தேகமடைந்த அயலவர்கள் 

அவர்களை ஏன் அவ்விடத்தில் நிற்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். இதன்போது தாம் சமைத்து உண்பதற்காகவே அவ்விடத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் அவ்விடத்துக்குச் சென்றனர். 

இருந்த போதும் குறிப்பிட்ட வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாகவே அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர். எனினும் அவர்களின் வருகை 

அவ்விடத்தில் புத்தர்சிலை வைக்க முயன்றார்களா என்ற சந்தேகத்தை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த பிள்ளையார் சிலை அமைந்துள்ள மருதமரத்தின் எதிர்த்திசையில் வீதியின் மறுபுறம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இளைப்பாறும் மடம்

சுமைதாங்கி ஆவுரஞ்சிகல் கேணி கிணறு என்பன அமையப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்களுக்கு குறித்த இடத்தின் முக்கியத்துவம் தொடர்பில் 

தெளிவுபடுத்திய முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர் தொடர்ச்சியாக விழிப்புடன் அப்பகுதிகளை கண்காணிக்குமாறு இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/23407?fbclid=IwAR1A117ECww2e6l0OXlBquyBkgXMmEpq1kbTTdjT7kla_uy3KjoylXyCVN4 

டிஸ்கி 

இது பிள்ளையாருக்கு போதாத காலம்.. சூதானமா இருங்கப்பா..😢.😢

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் பிள்ளையார் இன்னும் பெரிதாக அதே இடத்தில் தோன்றிவிட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மறுபடியும் பிள்ளையார் இன்னும் பெரிதாக அதே இடத்தில் தோன்றிவிட்டார்.

 

சாதா காக்கைகளுக்கிடையே வேறுபாடுகள் எதுவுமில்லை.

எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவுள்ள அண்டங்காக்கைகளால்தான் பிரச்சனையே. 

😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.