Jump to content

ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்!


Recommended Posts

ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்!

 

UNHRC-SriLanka-Issue.jpg

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவானது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளும் உள்ளதுடன் அவை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.

யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகளின் குழுவினரின் முயற்சியைத் தடுப்பதற்கு, தமக்கு நட்பான நாடுகளின் ஆதரவைக் கோருவதற்கு இலங்கை ஒரு தீவிரமான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருப்பதாக இலங்கை நம்புகிறது. 2019ல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச்சில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

நல்லிணக்கத்தின் அலுவலகம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும், மனித உரிமைகள் பேரவையில் அதன் நாற்பத்தொன்பதாவது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பித்த விடயங்களை உள்ளடக்கியும் முதல் வரைவு காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தியாவுடன் கூட்டாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இருந்து தற்போதைய அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக இலங்கை – இந்தியா இடையே நெருடல்கள் உள்ளன.

மேலும், யாழ்ப்பாணத் தீவுகளில் மூன்று தீவுகளை மின் உற்பத்தித் திட்டத்துக்காகச் செயற்படுத்த சீன நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளமை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தெற்கு கடலோரப் பாதுகாப்புக் கவலைகளை மேற்கோளிட்டு சீன நிறுவனம் இலங்கையின் வடக்கில் கால்பதிப்பதை இந்தியா எதிர்க்கிறது.

இதேவேளை, இந்தியாவின் இந்தத் தலையீட்டைக் கடுமையாக எதிர்க்கும் சீன நிறுவனம் கடந்த திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சர்வதேச ரீதியிலான போட்டி மற்றும் ஏல செயன்முறை மூலம் இந்தத் திட்டத்தை வென்றதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது- Daily Mirror.

இதேவேளை, வடக்கின் யாழ்ப்பாணத் தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதையும் இந்தியா, ஈழத் தமிழருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்தியாவின் தென்முனையை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியும் என்பதையும் வடக்கில் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்! | Athavan News

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

இதேவேளை, வடக்கின் யாழ்ப்பாணத் தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதையும் இந்தியா, ஈழத் தமிழருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்தியாவின் தென்முனையை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியும் என்பதையும் வடக்கில் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர் இந்தியாவுடன் இணைந்து பொது நலன்களுக்காக செயற்படலாம் என வடக்கில் தமிழர் தரப்பு கேட்டுப்பார்க்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் இந்தியாவுடன் இணைந்து பொது நலன்களுக்காக செயற்படலாம் என நினைக்கும் எவரும் இந்தியாவை கேட்டுப்பார்க்கலாம். நீங்கள் உட்பட....  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.