Jump to content

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா


Recommended Posts

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா

 

Antony-Blinken-720x450.jpg

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தென் சூடானின் நிலைமை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர்

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

hiuiiiiiiiiiio.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க நீண்ட ஈடுபாடுட்டுடன் செயற்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்க ஆர்வத்துடன் உள்ளது. பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைதன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -அமெரிக்கத் துாதுவரிடம் யாழ் .மாநகர முதல்வர் வேண்டுகோள்

1-4-2-696x239.jpg
 48 Views
இன்று யாழ் நூலகத்தில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
May be an image of one or more people, people standing and indoor
இதில் யாழ் மாநகர முதல்வரால், தூதுவரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறிப்பாகத் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஜெனிவாவின் ஊடாகவும் மற்றும் பல வழிகளிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன? 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

ஒன்றுமே இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன? 

உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு கொடுத்து சீனாவின் பொருளாதார உதவியை இழக்க  விரும்பாத நாடுகளுக்கு வீணாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று எனது அமெரிக்க அரசின் பிரதிநிதிகளிடம் கேட்கவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு கொடுத்து சீனாவின் பொருளாதார உதவியை இழக்க  விரும்பாத நாடுகளுக்கு வீணாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று எனது அமெரிக்க அரசின் பிரதிநிதிகளிடம் கேட்கவா? 

 ஏன் கற்பு சும்மா இதையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் அமெரிக்க இராஜாங்க செயலரிடம் கொட்டி எனர்ஜியை வீணாக்குகிறீர்கள்,  செவ்வாயில் இறங்கிய நாசாவின் ரோவர் வேறென்ன எல்லாம் கண்டுபிடித்திருக்கிறது, Area 51 இல்  என்ன பழைய/புதிய ரகசியங்கள்  என்று கேட்டு சொன்னீர்கள் என்றால் நாங்கள் அறிவியல் அறிவையாவது வளர்த்துக்கொள்ளலாம் வீணாகின  உங்கள் எனர்ஜிக்கும் பயன்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

May be an image of one or more people, people standing and indoor

யாழ். நூலகத்தின், மரபை மதித்து...
வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏

டிஸ்கி: இதனைப் பார்க்கும், வெள்ளைக்கார டமிழர்களுக்கு... கடுப்பாகத்தான் இருக்கும். :grin:
அதுக்கு... நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது. வெறி சொறி.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு கொடுத்து சீனாவின் பொருளாதார உதவியை இழக்க  விரும்பாத நாடுகளுக்கு வீணாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று எனது அமெரிக்க அரசின் பிரதிநிதிகளிடம் கேட்கவா? 

உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

யாழ். நூலகத்தின், மரபை மதித்து...
வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏

கவசம் மறைத்த முகம் நாடியதே சிறியரின் நெஞ்சம்

வெறுங்காலை நாடியதே கண். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

ஒன்றுமே இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன?

தீர்மானத்தில் ஒன்றும் இல்லை என்றாலும், தீர்மானம் வேண்டும் சிங்களத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்து இருப்தற்கு.

மற்றது, முக்கியமாக, கிந்தியாவினதும், அமெரிக்காவினதும் முற்றான முரண்பட்ட நிலைப்பாடு. இதுவரையில், அமெரிக்காவே ஆகக்குறைந்தது குறியீடு ஆக சர்வேந்திரா சில்வாவை பயண தடையில் வைத்து உள்ளது.  

சிங்களம் அனுபிபியை கடிததிற்கு, ஹிந்தியா  பதில் இல்லை என்பது வெறும் பிரச்சாரம்.

(பறையா (சாதி அல்ல) டெமுலு) Dr .ஜெய்சங்கர், உரையில் சொல்லிய நிலைப்பாடு முற்றுமுழுதாக சொறி சிங்கள அரசுக்கு சார்பானது என்பதை இங்கு ஒருவரும் கவனிக்கவில்லை.  

எனவே எந்த தீர்மானமும், சொறி சிங்களத்துக்கு முக்கிய, நிரந்தர  பின்னடைவு. சர்வதேச விசாரணை இல்லாத தீர்மானம் தமிழர் தரப்புக்கு தற்கலிக பின்னடைவு. 

தமிழர்கள் எல்லோரும் இந்த விடயத்தை,  நீதி என்ற அடிப்படையில் சிங்களத்தை தண்டிக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்க்க , சிங்களம் அதன் அரசியலுக்கான இறுதி படியான பாதுகாப்பு சபையில் (unsc) கையாள்வதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது.

இந்த ஏற்பாட்டை ரணில், சீனாவுக்கு அம்பாந்தோட்டையை,port-city எல்லாம் கொடுத்தது பழைய கதை.

சிங்களம், தேயிலை வர்த்தகத்தின் பெரும்பதியை சீனாவின் சந்தைக்கு கொண்டு போயுள்ளது, சர்வதேச தடைகள் வந்தால் வெட்டி ஆட வசதி வேண்டும் என்று.

எனவே தீர்மானம் என்பது, வெறுமனே மனித உரிமை, நீதி அல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

கவசம் மறைத்த முகம் நாடியதே சிறியரின் நெஞ்சம்

வெறுங்காலை நாடியதே கண். 🤣

சிறித்தம்பியர் ஜெர்மனியிலை பார்க்காத வெறும் கால்களோ எண்டு கேக்கிறன்? :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.