Jump to content

சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா

 
1-220.jpg
 44 Views

சிறீலங்காவில், கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி  இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க நீண்ட ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா ஆர்வத்துடன் உள்ளது.

பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை  வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=43084

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தோணி ...ஆட்டம் பாம் அந்தோணி
பெத்த பெத்த ஓடர் பாவா , உள்ள புகுந்து காட்டு காட்டு எண்டு காட்டு பாவா 
தேசிக்காய்ஸ் பிழைப்பே உன்ன நம்பித்தான் இருக்கு, ஏற்கனவே நகல்  அறிக்கையை பார்த்து பேதி புடுங்கிப்போய் இருக்கினம் நீ தான்பா வந்து குளுக்கோஸ் ஏற்றி தேத்தி நடக்க விடவேண்டும் ,
அடுத்த வருஷம் அம்பிகாவை ஜெனீவாவிற்கு கொண்டுவர வேணுமுன்னா நீ இல்லாட்டி நடக்காது நைனா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா

(நமது நிருபர்)

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில்  முன்னேற்றம் இல்லை. எனவே   இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.  

இது இவ்வாறிருக்க இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கனடா  அறிவித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது  கூட்டத் தொடரின் நேற்றைய பிரதான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன்  மற்றும் கனடாவின் வெளியுறவு  அமைச்சர் மார்க் கார்னு ஆகியோர் இவற்றை வலியுறுத்தினர்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  நேற்று பிற்பகல் வரை 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றன.  இதில் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்ற நாடுகளும்  உரையாற்றின. 

அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் உரையாற்றின.  இலங்கை தொடர்பான விவாதம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதான பிரதான அமர்விலேயே அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு உரையாற்றின. 

 அமெரிக்கா 

ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராஜாங்க செயலர்  அன்டனி பிலிங்கன் தனது பிரதான உரையில்  இலங்கை தொடர்பாக  குறிப்பிடுகையில்,

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறாமல் இருப்பதால் இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும்.   முக்கியமாக கடந்தகால அட்டூழியங்கள் குறித்த பொறுப்புக்கூறல்கள் போதுமானதாக இல்லை என்றார். 

கனடா 

இதேவேளை கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் பிரதான அமர்வில் உரையாற்றுகையில்,

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சிவில் சமூக அமைப்புகள் போன்றன அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில் கரிசனை செலுத்தி இருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி நினைவுகூரல் தொடர்பான அடக்குமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம். மேலும் சிறுபான்மை மத மக்களின்   சடலங்களை எரிப்பது தொடர்பான தீர்மானம் குறித்தும் சட்டத்தின் ஆட்சி படுத்தல் மோசமடைகிறது செல்கின்றமை தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்தி வருகின்றோம். 

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை  ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை  இந்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறது.  அந்த வகையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.  

இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்தியாக்காரனும், சீனாக்காரனும் ஒன்றாக  ஸ்ரீ லங்காவுக்கு ஆதரவு வழங்குவாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 23:11, Nathamuni said:

இவர்களை நம்பலாமா, உடையார்?

அதற்கு அப்பால், பெயருக்காவது தீர்மானம் வேண்டும்.

மற்ற திரியில் நான் சொல்ல்லியது. 

முக்கியமாக, கிந்தியாவினதும், அமெரிக்காவினதும் முற்றான முரண்பட்ட நிலைப்பாடு. இதுவரையில், அமெரிக்காவே ஆகக்குறைந்தது குறியீடு ஆக சர்வேந்திரா சில்வாவை பயண தடையில் வைத்து உள்ளது.  

சிங்களம் அனுபிபியை கடிததிற்கு, ஹிந்தியா  பதில் இல்லை என்பது வெறும் பிரச்சாரம்.

(பறையா (சாதி அல்ல) டெமுலு) Dr .ஜெய்சங்கர், உரையில் சொல்லிய நிலைப்பாடு முற்றுமுழுதாக சொறி சிங்கள அரசுக்கு சார்பானது என்பதை இங்கு ஒருவரும் கவனிக்கவில்லை.  

எனவே எந்த தீர்மானமும், சொறி சிங்களத்துக்கு முக்கிய பின்னடைவு. சர்வதேச விசாரணை இல்லாத தீர்மானம் தமிழர் தரப்புக்கு தற்கலிக பின்னடைவு. 

தமிழர்கள் எல்லோரும் இந்த விடயத்தை,  நீதி என்ற அடிப்படையில் சிங்களத்தை தண்டிக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்க்க , சிங்களம் அதன் அரசியலுக்கான இறுதி படியான பாதுகாப்பு சபையில் (unsc) கையாள்வதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது.

இந்த ஏற்பாட்டை ரணில், சீனாவுக்கு அம்பாந்தோட்டையை,port-city எல்லாம் கொடுத்தது பழைய கதை.

சிங்களம், தேயிலை வர்த்தகத்தின் பெரும்பதியை சீனாவின் சந்தைக்கு கொண்டு போயுள்ளது, சர்வதேச தடைகள் வந்தால் வெட்டி ஆட வசதி வேண்டும் என்று.

எனவே தீர்மானம் என்பது, வெறுமனே மனித உரிமை, நீதி அல்ல.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.