Jump to content

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனின் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார். தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக்கொள்ளுங்கள்.

எனது கணவர் என்ன செய்வார் தெரியுமா என அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டலை கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே விடுத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/269566?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 இருந்தாலும் தான் ஓர் ஆசிரியராக இருந்தும் இப்படி பேசுவதையே மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தற்போது இடமாற்றம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது  இவருக்கு 

ரகுநாதன் ஒரு திரியில் எழுதியிருந்தார் மிக்கல் கல்லூரியில் தன்னை ரக்கிங் பண்ணினதாகவும் , பாணியென்று சொன்னதாகவும் மிக்கல் கல்லூரி இதுதான் அங்கே உயர்தரம் படிப்பவர்கள் படிக்கும் பொடியனுகள் காட்டும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல  அது இங்குள்ளவர்களுக்கும் நடந்த சம்பவமே இது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 இருந்தாலும் தான் ஓர் ஆசிரியராக இருந்தும் இப்படி பேசுவதையே மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தற்போது இடமாற்றம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது  இவருக்கு 

ரகுநாதன் ஒரு திரியில் எழுதியிருந்தார் மிக்கல் கல்லூரியில் தன்னை ரக்கிங் பண்ணினதாகவும் , பாணியென்று சொன்னதாகவும் மிக்கல் கல்லூரி இதுதான் அங்கே உயர்தரம் படிப்பவர்கள் படிக்கும் பொடியனுகள் காட்டும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல  அது இங்குள்ளவர்களுக்கும் நடந்த சம்பவமே இது 

ஆனால் சும்முக்கு இணையதளத்தில் வால்பிடிக்கும் கூட்டம் மிரட்டல்விட்டவருக்கு ஆதரவாய் குழையடிக்கினம் .விடயம் பெரிது போல் உள்ளது. .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 

ஆசிரியர் என்பவர்கள் பிள்ளைகளை நல்வழி படுத்துபவர்களாகத்தானே இருப்பார்கள்..இந்த ரீச்சர் என்ன இப்படி எல்லாம் பேசிறா..ஆசிரியத் தொழிலிற்கும்இப்படியானவர்களுக்கும் வெகு தூரம் என்று நினைக்கிறேன்..அறப்படிச்சதுகள்்😡

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

நேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.
கட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.

 

உரையாடலை கேட்டால் இருதரப்பினரும் பாணிகள் மாதிரி இருக்குது. ஆசிரியையை  உடனடியாக பனி நீக்கம் செய்யவேண்டும், அவர் ஒரு ஆசிரியை மாதிரி இல்லாமல் பேட்டை ரவுடி மாதிரி நடந்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் தொழிலுக்கே இழுக்கு. மாதா, பிதா அதற்கு அப்புறம் குரு, தெய்வத்தை விட பொறுமையானவராக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

உரையாடலை கேட்டால் இருதரப்பினரும் பாணிகள் மாதிரி இருக்குது. ஆசிரியையை  உடனடியாக பனி நீக்கம் செய்யவேண்டும், அவர் ஒரு ஆசிரியை மாதிரி இல்லாமல் பேட்டை ரவுடி மாதிரி நடந்துள்ளார்.

பாணிகள் மாதிரி இல்லை. இரு பகுதியினரும் பாணிகளே தான்.அவர்கள் மட்டக்களப்பு பேச்சு வழக்கில் பேசவில்லை.மட்டக்களப்பு தொனிகள் கூட இல்லை. எந்த பினாட்டு பாணியானாலும் அந்த ஆசிரியை கல்விச் சமுதாயத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டிய ஒருவர்.

 இனியும் சேட்டை விட்டால் உயிர் இல்லை என ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது..இது என்ன நாடு? எப்படியான நாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பல ஆசான்கள் தங்கள் பொறுப்பை மறந்து ரவுடிகள் போல் மாணவரையும், அவர்தம் பெற்றோரையும் அடிமைகள் போலும் நடத்துகிறார்கள். தங்கள் சொந்த பழிவாங்கல்களை பிள்ளைகளில் காட்டுவது, ஒதுக்கி வைப்பது, நிஞாயம் கேட்டால் பழிவாங்குவதால் பெற்றோரும் கண்டுங்காணாமல் விடுவது. இதனால் மாணவர் மனமொடிந்து, கல்வியில் கவனம் இன்றி அதிலிருந்து விலகுவதற்காக வீட்டில் பொய் கூறி, வேறிடங்களுக்கு சென்று தப்பான வேலைகளில் ஈடுபட்டு தம் எதிர்காலத்தை வீணடிக்கிறார்கள். பொறுப்பற்ற, பொருத்தமான கல்வித்தகமையற்ற, அரசியல் செல்வாக்கு, பணம் என்பவற்றின் மூலம் இந்தப் பணிக்குள் நுழைந்து சேவை என்பதைவிட மாணவர்களை  மிரட்டல், ஒதுக்கலே நடைபெறுகிறது. இது ஒன்று வெளியில் தொழில் நுட்ப வசதியுள்ளவர்களால் வெளிவந்துள்ளது. ஏழை குடும்பங்கள் சகித்துக்கொண்டும், கல்வியில் இருந்து விலகிக்கொண்டும், சொல்ல முடியாமல் தவிப்பாரும் உண்டு. புனிதமான தொழில் இன்று சுயநலமாகி நம் சமுதாயத்தை கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு சிலரால் எல்லோருக்கும் வீணான பெயர். இவர்கள் இடம் மாற்றலால் தீராது, பணியில் இருந்து நீக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி. 

மிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ. 

இவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரஞ்சித் said:

மிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி. 

மிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ. 

இவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும். 

பேச்சு வழக்கு பாணிகளை மாற்றினாலும் சரளமாக வருவது கஸ்டம். அல்லது இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம். நான் இதை வேறு கோணத்தில் நாடகமாகத்தான் நினைத்திருந்தேன்.எனிலும் உண்மை பொய் தெரியாமல் நாங்களும் அதிகம் கதைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியைக்கு தண்டனை கொடுக்க தயங்கும் பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் ! உள் விவகாரம் அம்பலம்

spacer.png

மட்டக்களப்பு மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்’ என்று அந்த ஆசிரியை பிரசாந்தி மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.

மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’

 

இதன் ஒரு அங்கமாக பிரசாந்தி ஆசிரியரின் மிரட்டல் சம்மந்தமான பொலிஸ் முறைப்பாடுகளை எந்த காவல் நிலையங்களிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று கருணா மட்டக்களப்பு பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்க கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரைக்கும் காவல்துறை கைதுசெய்யவில்லை?” என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மறுபடியும் மாற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது.

கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது.

கல்விசார் அதிகாரிகள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு ஏதிராக எடுத்த உத்தியபூர்வமன நடவடிக்கையை
பெற்றோர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காதது ஏன்?
இது பாடசாலை உள்பிரச்சனை அல்ல ! இது கடத்தி காணாமல் போகச் செய்யும் முயற்சி .

தற்போது மட்டக்களப்பபு மாவட்ட மாணவர்கள் பெற்றோர்கள் என்று பொது பரப்பில் விமர்சிக்கப்படும் விடையம் என்று கல்வி அதிகாரிகளுக்கு புரியவில்லையா?

அல்லது சம்மந்தப்பட்ட பாடசாலையில் இதுவரைக்கும் மாணவர்களால் ஆர்ப்பாட்டமே நடத்தப்படவில்லையா! பல நாட்கள் பாடசாலை மூடப்படவில்லையா? பழைய ஆர்ப்பட்டங்கள் எதற்காக காரணங்களுக்கு நடைபெற்றது்.இது அதைவிட சிறு பிரச்சனையா? அந்த காரணங்களையும் ஞாபகப்படுத்த வேண்டுமா ? என பெற்றோர்கள் கேட்கின்றார்கள்.

05FB4A4F-ECF7-43FF-82A4-292296D888A8.jpe

 

 

https://www.meenagam.com/கொலைமிரட்டல்-விடுத்த-ஆசி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு

மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு
அண்மையில் மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டுமென பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் ஆசிரியையின் குறித்த நடவடிக்கையை கண்டித்தும், அவரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த ஆசிரியரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அவரது கணவர் தமது வருத்ததினை தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் குறித்த ஆசிரியை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் பணியிருந்த நிலையில் தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

சம்மந்தப்பட்ட பாடசாலை தேசிய பாடசாலை என்பதுடன், தேசியபாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ்தான் செயற்பட்டது .ஆனால் இன்று மாகாண கல்வி திணைக்களம் குறித்த ஆசிரியரை மாற்றம் செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு புத்தியீவிகள் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ள அதேவேளை , இதுவே ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதோடு ஓர் மாணவரை கடத்துவேன் என எச்சரிப்பது எவ்வளவு ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் பின்புலத்தில் அரசாங்கத்தின் மூன்று பிரபலங்கள் ஆசிரியைக்கு ஆதரவாக நின்று செயல்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்

மேலும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் ஆசிரியையின் பணிமாற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு புத்திஜீவிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை, எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு…’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” – முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும்.

 

இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்.

ஆயர் இல்லத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள புனித மிக்கல் கல்லுாரியில் இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஆயரின் பதில் என்ன, தவக்காலம் என்பதால் மன்னித்து விட்டாரா.

வேறு எந்த பாடசாலையாவது இந்தச் சம்பவம் இடம் பெற்றிருந்தால் இன்றைய நிலை என்ன, அதிகாம் படைத்தவன் செய்யும் குற்றத்தை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா

குறித்த ஆசிரியையின் கணவர் மக்களிற்கு வைத்தியம் பார்ப்பதை விட அரசியல் வாதிகளின் கால் பிடிப்பது தான் அதிக நேரம் என்பது அனைவருக்கும் தெரியும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

சட்டநவடிக்கை எடுப்பதை மூடி மறைக்கும் வலயக் கல்வி அலுவலகம்

ஒருதொலைபேசியில் ஒருமாணவருடனும் அந்த மாணவரின் தாயாருடனும் ஒரு ஆசிரியை என தன்னை அறிமுகம் செய்து ஒரு ஒட்டுக்குழு தலைவரின் மனைவி போன்று இரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1) மட்டக்களப்பில் இருக்க முடியாது.

2)அவரை இல்லாமல் செய்வேன்

அதைவிட தராதரம், நாயே..

என்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுசெய்துள்ளார்.

உண்மையில் இப்படிகதைத்தவர் ஒரு ஆசிரியையாக இருந்தால் அவரை உடனே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர் மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற அனுமதிக்கவேண்டும், வலயக்கல்வி அலுவலகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனைச் செய்ததா

சட்டநடவடிக்கை மூலம் தொலைபேசி நிறுவன பரிசோதனை நேரம் எந்த இலக்கத்தில் இருந்து யார் யாருக்கு கதைத்தது என்பதைல்லாம் வெளிச்சத்திற்கு வரும் உண்மையை அறியலாம், சட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் உள்ளே தள்ளலாம் அதை ஏன் செயற்படுத்த வில்லை அத்துடன் இந் நடைமுறை இன்று வரை பின்பற்ற வில்லை.

சம்மந்தப்பட்டவர் ஆசிரியையாக இருப்பின் வேலையை இழக்கநேரிடும்.

எனவே சட்டநடவடிக்கையை தீவிரப்படுத்துவதே சிறப்பு, காரணம் இப்படியான ரவுடிகளின் அட்டகாசம் அகற்றப்படும்.

 

மட்டக்களப்பின் அரசியல்வாகிகளும் தலைமறைவு காரணம் குறித்த வைதியரின் மிக நெருக்கமானவர்களே மாவட்டத்தின் ஐந்து அரசியல் வாதிகளும்.

மக்களே உங்களிற்கு யார் உதவுவர் கடவுளைத் தவிர வேறு யாரும் அல்ல….

எதிர்ப்பினைக்கண்டு மனமாற்றம் அடைந்த வைத்தியர்

 

மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணை
ஒரே நாளில் வைத்தியரின் இரு வேறு பதிவுகள்
705FE17F-7E44-4C36-8708-ED4A1F994332-sca4168125F-AE6C-463C-9167-F7657F18DE86.jpe

 

 

https://www.meenagam.com/மட்டக்களப்பை-அதிரவைத்த-ஆ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பான் பட்டை கிளப்பான் என்ற மொன்மொழிக்கேற்ப சரியாகதான் இருக்கின்றது. சரியான பஜாரி பெண்போல கதைக்கின்றார். ஏ ல் பாடசாலை வாழ்வில் இளைஞர்கள் அடிபடுவது வழமை. பிறகு 5, 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இருந்து பியர் அடிப்பர்கள். 
இந்த ஆசிரியை எந்த பாடசாலையின் முன்னாள் மாணவி? சிசிலியா / வின்சென்ட் / மெதொடிச்ட்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

ஆனால் சும்முக்கு இணையதளத்தில் வால்பிடிக்கும் கூட்டம் மிரட்டல்விட்டவருக்கு ஆதரவாய் குழையடிக்கினம் .விடயம் பெரிது போல் உள்ளது. .

ஞாயம் அநியாயம் பற்றி யோசிக்க மாட்டார்கள் ஆனால் இணையத்தில் மட்டும் உருட்டுவார்கள் அவங்களுக்கு இணையத்தை உருட்டணும் அவ்வளவுதான் பழக்க தோஷம் கண்டுக்காதீங்க‌

 

16 hours ago, ரஞ்சித் said:

மிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி. 

மிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ. 

இவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும். 

இருக்கலாம் அவர் யாழ்ப்பாணத்தவராக இருக்கலாம் ஆனால் ரவுணில் இருப்பவர்கள் இப்படி பேசலாம் சுகுணன் வைத்தியரின் மனைவி கொழும்பை சேர்ந்தவர் என்று சொன்னார்கள் சில வேளை அவர் யாழ்ப்பாணமாக கூட இருக்கலாம் .

தற்போது மட்டக்களப்பில் ரவுணில் பேச்சு மொழி மாறீ இருக்கிறது ஆனால் படுவாங்கரையில் மாறல்ல கிராமம் கிராமம்தன் 

8 hours ago, colomban said:

மட்டக்களப்பான் பட்டை கிளப்பான் என்ற மொன்மொழிக்கேற்ப சரியாகதான் இருக்கின்றது. சரியான பஜாரி பெண்போல கதைக்கின்றார். ஏ ல் பாடசாலை வாழ்வில் இளைஞர்கள் அடிபடுவது வழமை. பிறகு 5, 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இருந்து பியர் அடிப்பர்கள். 
இந்த ஆசிரியை எந்த பாடசாலையின் முன்னாள் மாணவி? சிசிலியா / வின்சென்ட் / மெதொடிச்ட்?

இன்னொரு பழமொழி உண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கொலும்ஸ்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னொரு பழமொழி உண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கொலும்ஸ்🤣

அது..............😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பைவிட்டே அகற்ற போறாவாம்.

உங்கள் பிள்ளை உங்களுக்கு வேணுமோ வேண்டாமோவாம்..

வெள்ளைவான் கோஷ்டி ரேஞ்சில மிரட்டல் விடுக்கிறா.

அவ்வளவு அதிகாரம் வல்லமை பொருந்திய ஆசிரியை அவர்கள் இதே மிரட்டலை அங்குள்ள ஒரு முஸ்லீம் மாணவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் விடுக்க முடியுமா?

மிரட்டல் விடுத்துவிட்டு இவர்கள் மட்டக்களப்பில் நிம்மதியா இருக்க முடியுமா?

ஆனால் ஒன்று கடந்த காலங்களில் இதுபோன்று மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்களை ஊரில் செல்வாக்குள்ளவர்கள்  பலம் மிக்கவர்கள் மிரட்டியது யாழ்ப்பாணத்திலும் நடந்திருக்கிறது, மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கபட்டத்தில்லை.

என்ன ஒரே ஒரு வித்தியாசம் அந்த காலத்தில் கை தொலைபேசிகளோ அல்லது குரல் பதிவு தொழில்நுட்பங்களோ இருக்கவில்லை.

ஆனால் நீதி இன்றுள்ளதுபோல் அன்றும் செத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது

 எந்தப் பாடசாலையும் இவரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மாணவர்கள் போராட வேண்டும்.  நாளைக்கு எந்த மாணவனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். மிரட்டல் இல்லாமல் நடவடிக்கையே நேரிடலாம்.  சீ.... ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் இப்படி தரங்கெட்ட ஆசிரியர்? பாடசாலையின் தரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே பாடசாலையும் இதை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடலாம் எனும் சந்தேகம் எனக்குள் உண்டு.

வேலைவாய்ப்பு வழங்குவோர் இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு தான் வழங்குகிறார்களோ? வளரும்  சமுதாயத்தை இளமையில் இருந்தே  ஒரேயடியாக ரவுடிகளாக மாற்றுவது சுலபமான வழி இது. வளரும் சமுதாயத்தை பாழ் குழியில் தள்ளும்  கோடரிக்காம்புகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பின்புலத்துடன் நியமிக்கப்படுபவர்களுக்கு எதிராகச் செயற்படும் அளவிற்கு சாதாரண பாடசாலை நிர்வாகங்கள் சக்திமிக்கவை அல்ல.

வைத்தியர் சுகுணனின் முகப்புத்தகம் பார்த்தேன். மட்டக்களப்பில் மிகப்பெரும் அரசியல் பலமுள்ளவர் என்பதும் கருணா பிள்ளையான் என்கிற  பலம் மிக்க  ஆயுததாரிகளினது ஆதரவும் அரசின் ஆதரவாளர்களான வியாழேந்திரன் போன்றோரின் ஆதரவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுதக்குழுவினருடனான நெருக்கமும், அரச காவல்த்துறையினரின் பெருத்த செல்வாக்குமுள்ளவர் என்பது தெரிகிறது.

மாட்டக்களப்பு நகர வீதியொன்றில் இவர் முன்னால் வர காவல்த்துறை அதிகாரிகள் இவரின் இடப்புறமும் வலப்புறமும் பின்னால் பவனிவரும் காட்சிகள் இவரது முகப்புத்தகத்தில் உள்ளன. அதுபோன்றே பிள்ளையான் கருணாவுடனான இவரது நெருக்கத்திற்கும் சான்றுகள் இருக்கின்றன. இவர் மருத்துவர் என்கிற பெயரில் வலம்வரும் ஆயுததாரிகளின் பின்புலத்தில் இயங்கும் தாதா. அவரது மனைவி தொலைபேசியில் தெரிவித்தது வெறும் எச்சரிக்கையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவம், கற்பித்தல் இரண்டுமே புனிதமான பணிகள். உயிரை காப்பதும், வாழ்வை வளம்படுத்தி, சமுதாயத்தை உருவாக்கி உயர்த்தும் பணிகள். என்றொரு நாள் இதற்குள் சுயநலம் புகுந்ததோ அன்றே அந்த சமுதாயத்திற்கு சாவு மணி அடித்தாயிற்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியை முன்னாள் ஆயுதக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர்? கொதித்தெழும் மாணவர்கள்!!

Report us Gokulan 2 days ago

இன்று சமூகவலைத்தளங்களில் அதிக வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற ஒரு விடயம், மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு விடுத்த கடத்தல் மிரட்டல்தான்.

'மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்' என்று என்று அந்த ஆசிரியை மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பில் சில மாணவர்கள், பெறோர்களை அனுகிய எமது செய்தியாளருக்கு அவர்கள் வழங்கிய கருத்துக்கள் இவை:

(பாதுகாப்பு கருதி கருத்து தெரிவித்தவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன)

கருத்து -1:

“மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’

கருத்து -2:

“பாடசாலைக்குப் போகவே பயமாக இருக்கிறது.. சுகுணன் ரீச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை நாங்கள் பாடசாலைக்கு போகமாட்டோம்..”

கருத்து -3:

“ஒலிப்பதிவு வெளியான அன்றைய தினம் குறிப்பிட்ட ஆசிரியையின் கணவரான வைத்தியர் அந்த ஒலிப்பதிவை பகிர்பவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது முகப்புத்தகத்தின் ஊடாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் மறு தினம் அந்த கண்டனத்தை அகற்றிவிட்டு மனவருத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்கள் யாருமே மிரட்டலுக்குள்ளான மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அவரை காவல்துறை கைதுசெய்யவில்லை?”

கருத்து -4:

“அந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆசிரியையின் கணவர் ஒரு முன்னாள் பிரதி அமைச்சரின் நன்பர். அதனால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தைப் பெருப்பிக்கின்றார்கள்..”

கருத்து -5:

“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”

கருத்து -6:

“ இந்த விடயத்தை மூடி மறைக்க நிறைய காரியங்கள் நடக்கின்றன. பணம், பதவி, அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு என்று நிறைய காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மாணவனுக்கு நியாயம் வேண்டி மக்கள்தான் போராடவேண்டும்…”

கருத்து -7:

“இதை இப்படியோ விட்டால் நாளைக்கு பாடசாலையில் ஆசிரியர்களின் பேச்சு மொழி இப்படியேயாகிவிடும்..’ உன்னை இல்லாமல் செய்துவிடுவேன்.. உன்னை கடத்துவேன்.. நாயே.. மண்டையில போடுவேன்…(பீப்..) “

கருத்து -8:

“ அவர் ஒரு ஆசியராக நடந்துகொள்வதானால் பாடசாலையில் மாணவணைக் கண்டித்திருக்கவேண்டும். ஒரு தயாராக நடந்துகொள்வதானால், அதிபரிடம் முறையிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கவேண்டும். தகப்பன் இல்லாத ஒரு மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி எடுத்து கடத்துவேன்.. காணாமல் போகச் செய்வேன்.. மட்டக்களப்பை விட்டு வெளியேற்றுவேன் என்று மிரட்டுவது ஒரு 'பேட்டை தாதா' செய்கின்ற செயல். அந்த ஆசிரியைக்கு நிச்சயம் தண்டணை வழங்கப்பட்டேயாகவேண்டும்”

கருத்து -9:

“இத்தனைக்கும் மாணவனை மட்டக்களப்பை விட்டு விரட்டுவேன் என்று எச்சரித்த ஆசிரியை மட்டக்களப்பைச் சேர்ந்தவரே அல்ல.. அவர் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. அவருக்கும் அவர் கணவனுக்கு மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் செல்வாக்கு இவ்வாறு பேசும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றது..”

கருத்து -10:

“ ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை: “எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு...’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” - முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும். இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்”

கருத்து -11:

“ஒரு மாணவன் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கின்றான். மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வதற்கான அச்சுறுத்தல் ஆதாரம் வெளிப்பட்டு இருக்கின்றது. பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாகவே மாணவன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றார். பாடசாலை நிர்வாகம் ஏன் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை? உயிரச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை?”

https://www.tamilwin.com/srilanka/01/269490?ref=rightsidebar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக இவரது கணவரையும் விசாரணை செய்ய வேண்டும், குறித்த மாணவனுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், ஒட்டுக்குழுக்களின் கடத்தல், காணாமல் போகச் செய்தல் விடயங்களை ஐ. நாவரை கொண்டு செல்ல வேண்டும். என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், குப்பையில் போட்டாலும் குண்டுமணி மங்காது. ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கருத்து -5:

“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”

ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.

பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.