Jump to content

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்

24 பிப்ரவரி 2021
சிங்கப்பூர்

பட மூலாதாரம்,TODAYONLINE,COM

 
படக்குறிப்பு,

காயத்ரி

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த அந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை பற்றிய முழு விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.

 

காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.

உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிபந்தனைகளை ஏற்று பணியில் சேர்ந்த பணிப்பெண்

கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மாரைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில், காயத்ரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்ரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக் கொண்டார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்ரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிக தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார்.

காயத்ரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்ரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.

தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்ரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்தார். குறிப்பாக 2015, அக்டோபர் மாதம் முதல் அந்த அப்பாவி பணிப்பெண்ணுக்கு 'கொடுமைக்காலம்' தொடங்கியது.

குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

பட மூலாதாரம்,HELPING HANDS FOR MIGRANT WORKERS, SINGAPORE-FB

 
படக்குறிப்பு,

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இருந்தார் காயத்ரி. அவற்றில் பதிவான காட்சிகள்தான் பின்னாட்களில் அவரை போலிசில் சிக்க வைத்துள்ளது.

பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாக குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாக குறைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் காயத்ரி.

வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.

தினமும் இரவு ஐந்து மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்ரி.

குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்ரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று.

14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். அதாவது பணிக்கு வரும் முன் இருந்த உடல் எடையில் 38 விழுக்காடு குறைந்து போனது.

பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்ரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்தது.

கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, தள்ளிவிடுவது, உதைப்பது ஆகிய துன்புறுத்தல்களுடன், படுத்திருக்கும்போது எட்டி உதைப்பதும் கனமான பொருட்களைக் கொண்டு தாக்குவதும் கூட நடந்துள்ளது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு உச்சபட்ச கொடுமை

பியாங் டொன் எதிர்பாராத சமயங்களில் அவரது தலைமுடியை மேல்நோக்கி இழுத்து, அங்குமிங்குமாக குலுக்கி, கொத்து முடியை காயத்ரி பிய்த்தெடுத்துள்ளார். ஒரு பொம்மையைப் போல் தனது பணிப்பெண் கையாண்டுள்ளார்.

கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொண்டிருந்த போது திடீரென வந்த காயத்ரி, இஸ்த்ரி பெட்டியை எடுத்து அவரது நெற்றியிலும் பிறகு கையிலும் சூடு வைத்துள்ளார்.

இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்வதில்லை என குத்திக்காட்டி உள்ளார்.

இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில்தான் காயத்ரி கவனமாக இருந்துள்ளார்.

2016 ஜூலை 25ஆம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார்.

பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்ரி விடவில்லை.

பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்ரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார்.

பியாங் டொன் வயிற்றில் காயத்ரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார்.

ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன்

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாத அந்த பணிப்பெண் தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உரங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு,

சங்கிலியில் கட்டி வைத்து சித்ரவதை: நைஜீரியாவில் 500 பேர் மீட்பு

அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி.

ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்ரி.

பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது.

இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்ரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர்.

எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.

பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா, அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா என்று மருத்துவர் கேட்ட போது, பியாங் டொன் தவறி கீழே விழுந்ததாகவும், மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர்.

முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்ரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை.

போலிஸ் விசாரணையை அடுத்து காயத்ரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஜூலை 25 அன்று காலை காயத்ரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால்தான் மரணம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.

நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்ரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பணிப்பெண்ணைத் தாக்கியது தொடர்பாக காயத்ரியின் தாயாரும் கணவரும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.

தாய்மை அடைந்திருந்தபோது காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்துக்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த மூன்று வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.

https://www.bbc.com/tamil/global-56186920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி போல இருக்கின்றது ....தூக்கில் போட வேண்டும் ...மகளை இப்படி வளர்த்தற்காகவும் ,இந்த பாதகத்திற்கு துணை நின்றதற்காகவும் தாயாருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தமிழச்சி போல இருக்கின்றது ....தூக்கில் போட வேண்டும் ...மகளை இப்படி வளர்த்தற்காகவும் ,இந்த பாதகத்திற்கு துணை நின்றதற்காகவும் தாயாருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் 

அதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணையே பிடிக்கவில்லை என்றால், வேளையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு வேலை நபர்க;லாய் தேர்ந்து இருக்க அல்லவா வேண்டும்.  
 
அந்த பெண் அவரின் அடிமை சொத்தாக வைத்து இருபது என்பது,  அநேகமான தாது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தெற்காசியர்களில், அதுவும் உழைத்து முன்னேறியவர்களில் ஓர் மனப்பன்மையாக இருக்கிறது.       

இதில், கொலை செய்தவரை அடுத்து,  கணவருக்கே மிக கூடிய தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலை செய்தவருக்கு,  மீளாத ஆயுள்  கால கடூழிய சிறைத்தணடனை, மரணதண்டனையை விட  பொருதமாக இருக்கும் அவர் அந்த பெண்ணுக்கு செய்த சித்தரவதை அவருக்கு எப்போது முடியும் என்ற வெதுப்பதில் அனுபவிப்பதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு/ இந்திய  தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடக வில்லி வேடங்கள் உண்மை போல் இருக்கின்றது

செல்லமே தொடர் மதுமிதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

அந்த பெண்ணையே பிடிக்கவில்லை என்றால், வேளையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு வேலை நபர்க;லாய் தேர்ந்து இருக்க அல்லவா வேண்டும்.  
 
அந்த பெண் அவரின் அடிமை சொத்தாக வைத்து இருபது என்பது,  அநேகமான தாது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தெற்காசியர்களில், அதுவும் உழைத்து முன்னேறியவர்களில் ஓர் மனப்பன்மையாக இருக்கிறது.       

இதில், கொலை செய்தவரை அடுத்து,  கணவருக்கே மிக கூடிய தண்டனை கொடுக்க வேண்டும்.

சிங்கையில் குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் பெட்ற இந்திய வம்சாவளியினர் மூர்க்கத்தனமும்,காடைத்தனமும்  அதிகம் கொண்டவர்களாக தான் மற்றய இனங்களால் பார்க்கப்படுகின்றனர், அதுவும் நல்ல செல்வச்செழிப்பான 
குடும்பங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை அவர்களது பார்வையிலேயே ஒரு தெனாவட்டு குடி கொண்டுவிடும், எனது நிறுவன முதலாளிக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி ,நான் மட்டும் இந்தியனாக இருந்திருக்க வேண்டும் எப்போதோ வீட்டிற்கு பெட்டியை கட்டியிருப்பேன், தொழிலாளிகளாக வரும் இந்தியர்களை விரும்பும் சிங்கப்பூர் சமூகம் குடியுரிமை,வதிவிட உரிமை பெட்ற இந்திய வம்சாவளியினரை வெறுக்கிறது. அதற்க்கு வலுச்சேர்த்திருக்கிறது இந்த சம்பவம்    

கடவுள் குணமறிந்துதான் கொம்பு கொடுப்பதில்லை என்று கூட சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு/ இந்திய  தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடக வில்லி வேடங்கள் உண்மை போல் இருக்கின்றது

செல்லமே தொடர் மதுமிதா

குமாரசாமி அண்ணா.... நீங்கள், சொல்வது உண்மை.
தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளில் வரும் வன்மம்,
அந்தக் குடும்பத்து பெண்களிடம்.. அப்படியே பதிந்து விட்டது.
அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது.

அந்தப் பெண்  குளிக்கும் போதும்,  கழிவறைக்குச் செல்லும் போதும்....
கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம். 😡

இவ்வளவிற்கும்... அந்த வீட்டுக்காரர் காவல் துறையில் வேலை செய்பவராம்.
தனது மனைவியையும், மாமியாரையும் கட்டுப் படுத்தத் தெரியாதவருக்கு...
இந்த உத்தியோகம் பொருத்தமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது.

அந்தப் பெண்  குளிக்கும் போதும்,  கழிவறைக்குச் செல்லும் போதும்....
கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம்

அண்ணை அநேகமாக 
இந்தப்பெண் படிப்பறிவற்ற அப்பாவி பெண்போல தான் இருக்க வாய்ப்பிருக்கிறது,
சிங்கையின் தொழிலாளர்களுக்கு ஆதரவான சில சட்ட மூலங்கள் எப்படி தொழிற்படுகிறது என்று தெரிந்திருந்தால்  எஜமானியின் நகம் உடலில் பட்டதற்கே வருடக்கணக்கில் எஜமானியை களி தின்ன வைத்திருக்கலாம், சிங்கைக்கு தொழிலிற்காக வருபவர்கள் இதையெல்லாம் அறிந்திருப்பது அவசியம் 
இங்கு IPA (in principal approval ) கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சம்பளத்தில் ஒரு வெள்ளி குறைவாக கொடுத்தாலும் முதலாளி அபராதத்துடன் கம்பியென்னும் நிலைக்கு வருவார், எனது நிறுவனத்தில் வீட்டில் கடமை புரிந்த பணிப்பெண்ணிற்கு  அறைந்த குற்றத்திற்காக சிங்கப்பூர் வேலையனுமதியை இரத்துசெய்து அந்தப்பெண்ணிற்கு 5000 வெள்ளி நஷ்டஈடு கொடுக்கவைத்து,இனி எப்போதும் நாட்டிற்குள் வரமுடியாத வாறு கடவுச்சீட்டில் பச்சை குத்தி dependent pass லிருந்த மனைவியையும் சேர்த்து பார்சல் செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பியது சிங்கப்பூர் அரசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே உருவத்தில் சிறிய மியான்மர் பெண்ணை தமிழிச்சிகள் இருவரும் அவருக்கு கொடுக்கும் உணவின் அளவை மேலும் குறைத்து தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...!

வாழ்வின் விழுமியங்கள் அனைத்தையும்...இதிகாசப் பெட்டிகளுக்குள் பூட்டி வைத்து விட்டுத் திறப்புகளைத் தொலைத்து விட்டார்கள்!

இந்த இருவருக்கும் கொடுக்கப் போகும் தண்டனையானது ...எல்லா இந்திய வம்சாவளியினருக்கும் மறக்க இயலாத ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது அவா!

என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. 

இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or  whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்..

இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. 

இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆசிய மக்களின்  ஒரு வித  குரோத மனநிலை  என நினைக்கின்றேன்

அதிலும் சிங்கப்பூர் மலேசியாவில்  அதிகம்

அங்கே அநேகமான  வீட்டு வேலைகாரர்களுக்கு முதலாளிகள் போடும்  முதலாவது கண்டிசனே

ஒப்பந்தம்  முடியும்வரை ஊருக்கு  போகமுடியாது

குடும்பத்துடன் தொடர்பு  வைத்துக்கொள்ளக்கூடாது  என்பது  தான்

நாங்கள்  சாப்பிட்ட  முடிய

இவ்வாறு  ஒரு வீட்டு வேலை  செய்யும் பணிப்பெண்ணிடம் என் மனைவி நீங்க சாப்பிட்டு  விட்டீர்களா  என்று  கேட்டதும் அந்த  பெண்ணின்  கண்கணிலிருந்து பொல  பொல  வென்று கண்ணீராக கொட்ட வெளிக்கிட்டு விட்டது (அவரும் தனது குழந்தைக்காகத்தான் வேலைக்கு  வந்திருப்பதாக முதலாளி  சொன்னார்)

விருந்தினராக  போனதால் இதற்கு மேல்  எதுவும்  பேசமுடியவில்லை

ஆனால்  இப்ப நினைத்தாலும் அந்த  கண்ணீர் என் கண்களை  நனைக்கிறது

இதில் முக்கியமான  விடயம் என்னவென்றால் வீட்டு  பெண்களே  அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...!

 

இப்பவரைக்கும் இருக்கு எம்மவர்களும் சளைத்தவர்கள் அல்ல 

துபாயில் எனக்கொரு சம்பவம்  நடந்தது ஒரு இந்தோனேசியா பெண் என நினைக்கிறன் அவளுக்கும் இதே போல சம்பவங்கள் நடந்ட்கிருக்கும் போல தோன்றியது ஆனால் செய்தது அரபியாக கூட இருக்கலாம் நாங்கள் சென்ற பகுதி அரபிகள் அதிகம் வாழும் பகுதியும் அது .
 நாங்களே வேலை செய்து நொந்து நூலாகி நடந்து போகும் போது ஒரு கட்டிடத்தின் கீழ் இருந்து அழுதாள் புதிதாக வந்திருப்பாள் போல இருக்கிறது  . அள்ளியெல்லாம் கொடுக்க காசில்லை ஒரு ரெக்சியை பிடித்து குறிப்பிட்ட இடத்து போக எவ்வளவு செல்வாகுமென ரைவரிடம் கேட்டு அதற்குரிய பணத்தை கொடுத்து அவளுக்கு மொழி தெரியாது எம்பசியில் இறக்கிவிட சொன்ன நியாபகம் வருகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களுக்கு முன் எனக்கு மிகவும் நட்பாக இருநத பிலிப்பீனோ பெண். அவருக்கு கிட்னி பெயிலியரான  நிலையில் தனது தங்கை ஒருவரை வைத்திரின் உதவிக் கடிதத்தோடு இங்கு அழைத்து இருந்தார்..கிட்டத் தட்ட ஓராண்டு அந்த சகோதரியை படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல.கூடுதலான நேரம் குளியல் அறையில் இருந்து தான் போண் எடுத்து அழுவா பிலிப்பினோவில் இருந்து வந்த சகோதரி.

 வந்தவருக்கு ஆங்கில அறிவு இருந்தபடியால் தமக்கையின் ஆய்க்கினைகளை மீறி வெளியில் இரவா பகலா வேலைக்கு போய் ரிக்கற்றைப் போட்டுக் கொண்டு தன் நாட்டுக்கே போய் விட்டார்..இப்போ இங்கே இருக்கும் சகோதரி யாரோடும் தொடர்பில்இல்லை.இப்படியானவர்களோடு தொடர்பில் இருப்பதை விட விலகுதல் நன்று தானே.இப்படி எவ்வளவு நடக்கிறது..

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

 
Getty ImagesCopyright: Getty Images

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணை தொடர்ச்சியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, பட்டினிப்போட்டு, பிறகு கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த மியான்மரை சேர்ந்த 24 வயதான பியாங் இங்கை டொன், 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை அந்த நாட்டையே உலுக்கி இருந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை காத்ரி முருகையன் என்ற இந்திய வம்சாவளி பெண் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

40 வயதான காயத்ரி முருகையனின் செயல்கள் “மிகவும் கொடியவை” என்றும் “முற்றிலும் மனிதாபிமானமற்றவை” என்றும் எதிர்தரப்பு வழக்குரைஞர் விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

மியான்மரை சேர்ந்த பணிப்பெண் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பட்டினி போடப்பட்டு, இறுதியில் கொல்லப்பட்டார் என்பதற்கான "அதிர்ச்சியூட்டும்" விளக்கத்தை அரசு தரப்பு முன்வைத்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த வழக்கு சிங்கப்பூரின் "மோசமான படுகொலை வழக்குகளில் ஒன்றாகும்" என்றும், இறப்பதற்கு முன் அந்த இளம்பெண் எதிர்கொண்ட துன்புறுத்தலின் அளவை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் நீதிபதி மேலும் கூறினார்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு உடந்தையாக(மறைமுகமாக) கணவருக்கும் தாயாருக்கும் என்ன தண்டனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வது சட்டத்தை நேர்மையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தும் சிங்கப்பூர் என்பதை மறந்து பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தனை கொலை வேண்டுமென்றாலும் பண்ணிவிட்டு இரண்டே வாரங்களில் வெளியே வந்திடலாம் எனும் நிலை இருக்கும்  தமது மூதாதையர்களின் இந்தியா என நினைத்து காயத்திரி முருகையன் ஒரு அப்பிராணியின் கதையையை மட்டுமல்ல அம்மா எப்போ வருவா என்று மியன்மாரில் காத்திருந்த அந்த பச்சை குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து  முடித்திருக்கிறார்கள்.

காயத்திரி முருகையனுக்கு மனநிலை சரியில்லையென்று வாதிட்டார்களாம், அப்போ வேலைக்கார பெண்ணை மகளுடன் சேர்ந்து கொடுமைபடுத்திய அவரோட அம்மாவுக்கும் மனநிலை சரியில்லையா?

நாட்டுக்குநாடு சட்டங்களும் நீதிதுறையும் வேறுபட்டாலும் வக்கீலுகள் ஒரேமாதிரியாகதான் இருப்பார்கள்.

30 வருச தண்டனையாம்,காயத்திரிக்கு இப்போ வயசு 40  அனேகமாக அவரின் மரணம் சூரிய வெளிச்சத்தை காணமுடியாத சிங்கப்பூர் சிறையிலேயே நிகழும்.

சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,

ரிவி பார்த்தாலும் வாசலுக்கு வெளியில இருந்தே பார்க்க அனுமதி,

வருச சம்பளம் நூறோ இரு நூறோ, பொங்கல் தீபாவளிக்கு சீத்தை துணியில் சட்டை சாரம். சில வீடுகளில் வீட்டில் உள்ளவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தாலும்  அவர்களுக்குத்தான் அடி உதை .

வயதாகி இறந்துவிட்டாலோ அகால மரணமடைந்தாலோ சுடலைக்குஎரிக்க விறகு கொண்டுவரும் விறகு வண்டிலின்மேலேயே போட்டு எரிப்பவர்களுக்கு 50 நூறு கொடுத்து அனாதை பிணமாக அவர்களை அனுப்பிவைக்கும் ஓரிரு சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன்.

பின்னர் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசங்கள் வர தொடங்கியதும் ஒரு சிலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்கள் மற்றையவர்கள் எங்கு போனார்கள் என்றே நினைவில் இல்லை,

 ஊரில் இருக்கும் அக்கா சொன்னா இப்போ  மீளவும் சில வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட மலையக சிறுவர் சிறுமியர் தென்படுகிறார்களாம்.

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

வாழ்வது சட்டத்தை நேர்மையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தும் சிங்கப்பூர் என்பதை மறந்து பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தனை கொலை வேண்டுமென்றாலும் பண்ணிவிட்டு இரண்டே வாரங்களில் வெளியே வந்திடலாம் எனும் நிலை இருக்கும்  தமது மூதாதையர்களின் இந்தியா என நினைத்து காயத்திரி முருகையன் ஒரு அப்பிராணியின் கதையையை மட்டுமல்ல அம்மா எப்போ வருவா என்று மியன்மாரில் காத்திருந்த அந்த பச்சை குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து  முடித்திருக்கிறார்கள்.

காயத்திரி முருகையனுக்கு மனநிலை சரியில்லையென்று வாதிட்டார்களாம், அப்போ வேலைக்கார பெண்ணை மகளுடன் சேர்ந்து கொடுமைபடுத்திய அவரோட அம்மாவுக்கும் மனநிலை சரியில்லையா?

நாட்டுக்குநாடு சட்டங்களும் நீதிதுறையும் வேறுபட்டாலும் வக்கீலுகள் ஒரேமாதிரியாகதான் இருப்பார்கள்.

30 வருச தண்டனையாம்,காயத்திரிக்கு இப்போ வயசு 40  அனேகமாக அவரின் மரணம் சூரிய வெளிச்சத்தை காணமுடியாத சிங்கப்பூர் சிறையிலேயே நிகழும்.

சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,

ரிவி பார்த்தாலும் வாசலுக்கு வெளியில இருந்தே பார்க்க அனுமதி,

வருச சம்பளம் நூறோ இரு நூறோ, பொங்கல் தீபாவளிக்கு சீத்தை துணியில் சட்டை சாரம். சில வீடுகளில் வீட்டில் உள்ளவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தாலும்  அவர்களுக்குத்தான் அடி உதை .

வயதாகி இறந்துவிட்டாலோ அகால மரணமடைந்தாலோ சுடலைக்குஎரிக்க விறகு கொண்டுவரும் விறகு வண்டிலின்மேலேயே போட்டு எரிப்பவர்களுக்கு 50 நூறு கொடுத்து அனாதை பிணமாக அவர்களை அனுப்பிவைக்கும் ஓரிரு சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன்.

பின்னர் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசங்கள் வர தொடங்கியதும் ஒரு சிலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்கள் மற்றையவர்கள் எங்கு போனார்கள் என்றே நினைவில் இல்லை,

 ஊரில் இருக்கும் அக்கா சொன்னா இப்போ  மீளவும் சில வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட மலையக சிறுவர் சிறுமியர் தென்படுகிறார்களாம்.

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.

உங்களை வயதில் மிக இளையவர் என்று எண்ணி இருந்தேன் ...
இதெல்லாம் தெரிந்து இருக்கிறது.

இதுக்கு ஏன் வெளியில் உதாரணங்கள் தேடவேண்டும் என்று  எனக்கு தெரியவில்லை 
இங்கு யாழ் களத்திலேயே இது தாராளமாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

 

இதுக்கு ஏன் வெளியில் உதாரணங்கள் தேடவேண்டும் என்று  எனக்கு தெரியவில்லை 
இங்கு யாழ் களத்திலேயே இது தாராளமாக இருக்கிறது 

எந்தெந்தப் பதிவுகளில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு ஆதரவாக, அல்லது சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்த கொலையை ஒத்த பதிவுகள் யாழில் உள்ளன? ஆதாரம் காட்டவும்.

Link to comment
Share on other sites

6 hours ago, valavan said:

 

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.



நான் சிறுவயதில் ஊரில் இருக்கும்போது பார்த்து வேதனைப்பட்ட இப்படியான சம்பவங்கள் மிக அதிகம். மலையகத்தமிழ் பெண் பிள்ளைகள் மிக இளவயதிலேயே அழைத்து வரப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட சம்பவங்கள் அநேகம்.

எமது வீட்டிற்கு அன்மையில் இருந்த ஒரு பெண்பிள்ளை (12 அல்லது 13 வயது இருக்கும்)மலையகத்திலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டு கடும் கொடுமைப்படுத்தப்பட்டார். நாங்கள் நன்னீர் எடுக்கச் செல்லும் கிணற்றிற்கே அவரும் வருவார் (பெரும்பாலும் மங்கிய மாலைப்பொழுதுகளில்) அப்போது எம்மை சந்திக்கும்போது தனக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லி அழுவார். உடம்பில் இருக்கும் தழும்புகளை காட்டுவார்.

சில காலங்களிற்கு பின்னர் அவர் இறந்து விட்டார் (சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்றே எமது அயலில் பேசிக் கொண்டார்கள்).

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மலையத் தமிழர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை எமது சமூகம் இயல்பாகவே அனுமதித்துக் கொண்டிருந்த காலம் அது (புலிகளது ஆழுகைக்கு முற்பட்ட காலம்)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

எந்தெந்தப் பதிவுகளில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு ஆதரவாக, அல்லது சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்த கொலையை ஒத்த பதிவுகள் யாழில் உள்ளன? ஆதாரம் காட்டவும்.

எனக்கு சிரிப்பு தாங்கல,

முதலும் ஏதோ  ஒரு பதிவுக்கு  மருதுகிட்ட ஆதாரம் கேட்டீர்கள் காட்டினாரா தெரியவில்லை, இப்போ இரண்டாம்தரம்.

மருது நீங்கள் இதுக்கும் சேர்த்து ஆதாரம் காட்டிவிட்டீர்களா காட்டபோகிறீர்களா  இல்லை குத்துமதிப்பா அடிச்சு விடுகிறீர்களா என்பதை கிளியர் பண்ணவும். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

வாழ்வது சட்டத்தை நேர்மையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தும் சிங்கப்பூர் என்பதை மறந்து பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தனை கொலை வேண்டுமென்றாலும் பண்ணிவிட்டு இரண்டே வாரங்களில் வெளியே வந்திடலாம் எனும் நிலை இருக்கும்  தமது மூதாதையர்களின் இந்தியா என நினைத்து காயத்திரி முருகையன் ஒரு அப்பிராணியின் கதையையை மட்டுமல்ல அம்மா எப்போ வருவா என்று மியன்மாரில் காத்திருந்த அந்த பச்சை குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து  முடித்திருக்கிறார்கள்.

காயத்திரி முருகையனுக்கு மனநிலை சரியில்லையென்று வாதிட்டார்களாம், அப்போ வேலைக்கார பெண்ணை மகளுடன் சேர்ந்து கொடுமைபடுத்திய அவரோட அம்மாவுக்கும் மனநிலை சரியில்லையா?

நாட்டுக்குநாடு சட்டங்களும் நீதிதுறையும் வேறுபட்டாலும் வக்கீலுகள் ஒரேமாதிரியாகதான் இருப்பார்கள்.

30 வருச தண்டனையாம்,காயத்திரிக்கு இப்போ வயசு 40  அனேகமாக அவரின் மரணம் சூரிய வெளிச்சத்தை காணமுடியாத சிங்கப்பூர் சிறையிலேயே நிகழும்.

சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,

ரிவி பார்த்தாலும் வாசலுக்கு வெளியில இருந்தே பார்க்க அனுமதி,

வருச சம்பளம் நூறோ இரு நூறோ, பொங்கல் தீபாவளிக்கு சீத்தை துணியில் சட்டை சாரம். சில வீடுகளில் வீட்டில் உள்ளவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தாலும்  அவர்களுக்குத்தான் அடி உதை .

வயதாகி இறந்துவிட்டாலோ அகால மரணமடைந்தாலோ சுடலைக்குஎரிக்க விறகு கொண்டுவரும் விறகு வண்டிலின்மேலேயே போட்டு எரிப்பவர்களுக்கு 50 நூறு கொடுத்து அனாதை பிணமாக அவர்களை அனுப்பிவைக்கும் ஓரிரு சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன்.

பின்னர் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசங்கள் வர தொடங்கியதும் ஒரு சிலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்கள் மற்றையவர்கள் எங்கு போனார்கள் என்றே நினைவில் இல்லை,

 ஊரில் இருக்கும் அக்கா சொன்னா இப்போ  மீளவும் சில வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட மலையக சிறுவர் சிறுமியர் தென்படுகிறார்களாம்.

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.

நான் இந்த திரியை இணைத்த போது இதே கருத்துக்கள் தான் எனக்கு நினைவலைகளாக ஓடியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

எந்தெந்தப் பதிவுகளில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு ஆதரவாக, அல்லது சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்த கொலையை ஒத்த பதிவுகள் யாழில் உள்ளன? ஆதாரம் காட்டவும்.

"சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,"

 

இது எல்லாம் நலிந்தவர்களை  மிதிக்கும் ஒரு மனோபாவம் 
இது இங்கு தாராளமாகவே இருக்கு 
ஒரு திரியில் ஒருவர கருத்து எழுதினால் பதில் கருத்து சார்ந்து இருக்கவேண்டும் 
கருத்து எழுதினவரின் கல்வி தராதரம் பற்றியதல்ல அது இங்கு தாராளமாகவே இருக்கு 
நீங்கள் உங்கள் கைகளால் நீக்கியது நிறைய இருக்கு 

7 hours ago, valavan said:

எனக்கு சிரிப்பு தாங்கல,

முதலும் ஏதோ  ஒரு பதிவுக்கு  மருதுகிட்ட ஆதாரம் கேட்டீர்கள் காட்டினாரா தெரியவில்லை, இப்போ இரண்டாம்தரம்.

மருது நீங்கள் இதுக்கும் சேர்த்து ஆதாரம் காட்டிவிட்டீர்களா காட்டபோகிறீர்களா  இல்லை குத்துமதிப்பா அடிச்சு விடுகிறீர்களா என்பதை கிளியர் பண்ணவும். 😝

அதுக்கு அவரே பதில் எழுதி இருக்கிறார் குறைந்தபட்ஷம் இருக்கிறது என்றும் 
இவ்வாறு தீவிரமாக இல்லை என்றும். 

நிழலி ஏன் குத்திமுறிந்து ஆதாரம் கேட்க்கிறார் என்பது எனக்கு புரியும் 
நான் என்ன எழுதுகிறேன் என்பது அவருக்கும் தெரியும் 

யாழ்களத்தில் நிர்வாகியாக இருந்துகொண்டு ஆயிரக்கணக்கான கருத்துக்களை 
வெட்டிகொத்திக்கொண்டு என்ன ஆதாரம் கேட்க்கிறார் என்பதுதான் எனக்கு புரியாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.