Jump to content

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்

24 பிப்ரவரி 2021
சிங்கப்பூர்

பட மூலாதாரம்,TODAYONLINE,COM

 
படக்குறிப்பு,

காயத்ரி

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த அந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை பற்றிய முழு விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.

 

காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.

உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிபந்தனைகளை ஏற்று பணியில் சேர்ந்த பணிப்பெண்

கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மாரைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில், காயத்ரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்ரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக் கொண்டார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்ரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிக தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார்.

காயத்ரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்ரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.

தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்ரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்தார். குறிப்பாக 2015, அக்டோபர் மாதம் முதல் அந்த அப்பாவி பணிப்பெண்ணுக்கு 'கொடுமைக்காலம்' தொடங்கியது.

குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

பட மூலாதாரம்,HELPING HANDS FOR MIGRANT WORKERS, SINGAPORE-FB

 
படக்குறிப்பு,

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இருந்தார் காயத்ரி. அவற்றில் பதிவான காட்சிகள்தான் பின்னாட்களில் அவரை போலிசில் சிக்க வைத்துள்ளது.

பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாக குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாக குறைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் காயத்ரி.

வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.

தினமும் இரவு ஐந்து மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்ரி.

குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்ரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று.

14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். அதாவது பணிக்கு வரும் முன் இருந்த உடல் எடையில் 38 விழுக்காடு குறைந்து போனது.

பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்ரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்தது.

கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, தள்ளிவிடுவது, உதைப்பது ஆகிய துன்புறுத்தல்களுடன், படுத்திருக்கும்போது எட்டி உதைப்பதும் கனமான பொருட்களைக் கொண்டு தாக்குவதும் கூட நடந்துள்ளது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு உச்சபட்ச கொடுமை

பியாங் டொன் எதிர்பாராத சமயங்களில் அவரது தலைமுடியை மேல்நோக்கி இழுத்து, அங்குமிங்குமாக குலுக்கி, கொத்து முடியை காயத்ரி பிய்த்தெடுத்துள்ளார். ஒரு பொம்மையைப் போல் தனது பணிப்பெண் கையாண்டுள்ளார்.

கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொண்டிருந்த போது திடீரென வந்த காயத்ரி, இஸ்த்ரி பெட்டியை எடுத்து அவரது நெற்றியிலும் பிறகு கையிலும் சூடு வைத்துள்ளார்.

இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்வதில்லை என குத்திக்காட்டி உள்ளார்.

இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில்தான் காயத்ரி கவனமாக இருந்துள்ளார்.

2016 ஜூலை 25ஆம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார்.

பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்ரி விடவில்லை.

பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்ரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார்.

பியாங் டொன் வயிற்றில் காயத்ரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார்.

ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன்

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாத அந்த பணிப்பெண் தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உரங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு,

சங்கிலியில் கட்டி வைத்து சித்ரவதை: நைஜீரியாவில் 500 பேர் மீட்பு

அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி.

ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்ரி.

பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது.

இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்ரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர்.

எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.

பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா, அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா என்று மருத்துவர் கேட்ட போது, பியாங் டொன் தவறி கீழே விழுந்ததாகவும், மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர்.

முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்ரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை.

போலிஸ் விசாரணையை அடுத்து காயத்ரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஜூலை 25 அன்று காலை காயத்ரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால்தான் மரணம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.

நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்ரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பணிப்பெண்ணைத் தாக்கியது தொடர்பாக காயத்ரியின் தாயாரும் கணவரும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.

தாய்மை அடைந்திருந்தபோது காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்துக்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த மூன்று வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.

https://www.bbc.com/tamil/global-56186920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி போல இருக்கின்றது ....தூக்கில் போட வேண்டும் ...மகளை இப்படி வளர்த்தற்காகவும் ,இந்த பாதகத்திற்கு துணை நின்றதற்காகவும் தாயாருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தமிழச்சி போல இருக்கின்றது ....தூக்கில் போட வேண்டும் ...மகளை இப்படி வளர்த்தற்காகவும் ,இந்த பாதகத்திற்கு துணை நின்றதற்காகவும் தாயாருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் 

அதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணையே பிடிக்கவில்லை என்றால், வேளையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு வேலை நபர்க;லாய் தேர்ந்து இருக்க அல்லவா வேண்டும்.  
 
அந்த பெண் அவரின் அடிமை சொத்தாக வைத்து இருபது என்பது,  அநேகமான தாது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தெற்காசியர்களில், அதுவும் உழைத்து முன்னேறியவர்களில் ஓர் மனப்பன்மையாக இருக்கிறது.       

இதில், கொலை செய்தவரை அடுத்து,  கணவருக்கே மிக கூடிய தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலை செய்தவருக்கு,  மீளாத ஆயுள்  கால கடூழிய சிறைத்தணடனை, மரணதண்டனையை விட  பொருதமாக இருக்கும் அவர் அந்த பெண்ணுக்கு செய்த சித்தரவதை அவருக்கு எப்போது முடியும் என்ற வெதுப்பதில் அனுபவிப்பதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு/ இந்திய  தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடக வில்லி வேடங்கள் உண்மை போல் இருக்கின்றது

செல்லமே தொடர் மதுமிதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

அந்த பெண்ணையே பிடிக்கவில்லை என்றால், வேளையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு வேலை நபர்க;லாய் தேர்ந்து இருக்க அல்லவா வேண்டும்.  
 
அந்த பெண் அவரின் அடிமை சொத்தாக வைத்து இருபது என்பது,  அநேகமான தாது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தெற்காசியர்களில், அதுவும் உழைத்து முன்னேறியவர்களில் ஓர் மனப்பன்மையாக இருக்கிறது.       

இதில், கொலை செய்தவரை அடுத்து,  கணவருக்கே மிக கூடிய தண்டனை கொடுக்க வேண்டும்.

சிங்கையில் குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் பெட்ற இந்திய வம்சாவளியினர் மூர்க்கத்தனமும்,காடைத்தனமும்  அதிகம் கொண்டவர்களாக தான் மற்றய இனங்களால் பார்க்கப்படுகின்றனர், அதுவும் நல்ல செல்வச்செழிப்பான 
குடும்பங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை அவர்களது பார்வையிலேயே ஒரு தெனாவட்டு குடி கொண்டுவிடும், எனது நிறுவன முதலாளிக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி ,நான் மட்டும் இந்தியனாக இருந்திருக்க வேண்டும் எப்போதோ வீட்டிற்கு பெட்டியை கட்டியிருப்பேன், தொழிலாளிகளாக வரும் இந்தியர்களை விரும்பும் சிங்கப்பூர் சமூகம் குடியுரிமை,வதிவிட உரிமை பெட்ற இந்திய வம்சாவளியினரை வெறுக்கிறது. அதற்க்கு வலுச்சேர்த்திருக்கிறது இந்த சம்பவம்    

கடவுள் குணமறிந்துதான் கொம்பு கொடுப்பதில்லை என்று கூட சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு/ இந்திய  தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடக வில்லி வேடங்கள் உண்மை போல் இருக்கின்றது

செல்லமே தொடர் மதுமிதா

குமாரசாமி அண்ணா.... நீங்கள், சொல்வது உண்மை.
தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளில் வரும் வன்மம்,
அந்தக் குடும்பத்து பெண்களிடம்.. அப்படியே பதிந்து விட்டது.
அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது.

அந்தப் பெண்  குளிக்கும் போதும்,  கழிவறைக்குச் செல்லும் போதும்....
கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம். 😡

இவ்வளவிற்கும்... அந்த வீட்டுக்காரர் காவல் துறையில் வேலை செய்பவராம்.
தனது மனைவியையும், மாமியாரையும் கட்டுப் படுத்தத் தெரியாதவருக்கு...
இந்த உத்தியோகம் பொருத்தமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது.

அந்தப் பெண்  குளிக்கும் போதும்,  கழிவறைக்குச் செல்லும் போதும்....
கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம்

அண்ணை அநேகமாக 
இந்தப்பெண் படிப்பறிவற்ற அப்பாவி பெண்போல தான் இருக்க வாய்ப்பிருக்கிறது,
சிங்கையின் தொழிலாளர்களுக்கு ஆதரவான சில சட்ட மூலங்கள் எப்படி தொழிற்படுகிறது என்று தெரிந்திருந்தால்  எஜமானியின் நகம் உடலில் பட்டதற்கே வருடக்கணக்கில் எஜமானியை களி தின்ன வைத்திருக்கலாம், சிங்கைக்கு தொழிலிற்காக வருபவர்கள் இதையெல்லாம் அறிந்திருப்பது அவசியம் 
இங்கு IPA (in principal approval ) கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சம்பளத்தில் ஒரு வெள்ளி குறைவாக கொடுத்தாலும் முதலாளி அபராதத்துடன் கம்பியென்னும் நிலைக்கு வருவார், எனது நிறுவனத்தில் வீட்டில் கடமை புரிந்த பணிப்பெண்ணிற்கு  அறைந்த குற்றத்திற்காக சிங்கப்பூர் வேலையனுமதியை இரத்துசெய்து அந்தப்பெண்ணிற்கு 5000 வெள்ளி நஷ்டஈடு கொடுக்கவைத்து,இனி எப்போதும் நாட்டிற்குள் வரமுடியாத வாறு கடவுச்சீட்டில் பச்சை குத்தி dependent pass லிருந்த மனைவியையும் சேர்த்து பார்சல் செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பியது சிங்கப்பூர் அரசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே உருவத்தில் சிறிய மியான்மர் பெண்ணை தமிழிச்சிகள் இருவரும் அவருக்கு கொடுக்கும் உணவின் அளவை மேலும் குறைத்து தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...!

வாழ்வின் விழுமியங்கள் அனைத்தையும்...இதிகாசப் பெட்டிகளுக்குள் பூட்டி வைத்து விட்டுத் திறப்புகளைத் தொலைத்து விட்டார்கள்!

இந்த இருவருக்கும் கொடுக்கப் போகும் தண்டனையானது ...எல்லா இந்திய வம்சாவளியினருக்கும் மறக்க இயலாத ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது அவா!

என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. 

இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or  whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்..

இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. 

இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆசிய மக்களின்  ஒரு வித  குரோத மனநிலை  என நினைக்கின்றேன்

அதிலும் சிங்கப்பூர் மலேசியாவில்  அதிகம்

அங்கே அநேகமான  வீட்டு வேலைகாரர்களுக்கு முதலாளிகள் போடும்  முதலாவது கண்டிசனே

ஒப்பந்தம்  முடியும்வரை ஊருக்கு  போகமுடியாது

குடும்பத்துடன் தொடர்பு  வைத்துக்கொள்ளக்கூடாது  என்பது  தான்

நாங்கள்  சாப்பிட்ட  முடிய

இவ்வாறு  ஒரு வீட்டு வேலை  செய்யும் பணிப்பெண்ணிடம் என் மனைவி நீங்க சாப்பிட்டு  விட்டீர்களா  என்று  கேட்டதும் அந்த  பெண்ணின்  கண்கணிலிருந்து பொல  பொல  வென்று கண்ணீராக கொட்ட வெளிக்கிட்டு விட்டது (அவரும் தனது குழந்தைக்காகத்தான் வேலைக்கு  வந்திருப்பதாக முதலாளி  சொன்னார்)

விருந்தினராக  போனதால் இதற்கு மேல்  எதுவும்  பேசமுடியவில்லை

ஆனால்  இப்ப நினைத்தாலும் அந்த  கண்ணீர் என் கண்களை  நனைக்கிறது

இதில் முக்கியமான  விடயம் என்னவென்றால் வீட்டு  பெண்களே  அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...!

 

இப்பவரைக்கும் இருக்கு எம்மவர்களும் சளைத்தவர்கள் அல்ல 

துபாயில் எனக்கொரு சம்பவம்  நடந்தது ஒரு இந்தோனேசியா பெண் என நினைக்கிறன் அவளுக்கும் இதே போல சம்பவங்கள் நடந்ட்கிருக்கும் போல தோன்றியது ஆனால் செய்தது அரபியாக கூட இருக்கலாம் நாங்கள் சென்ற பகுதி அரபிகள் அதிகம் வாழும் பகுதியும் அது .
 நாங்களே வேலை செய்து நொந்து நூலாகி நடந்து போகும் போது ஒரு கட்டிடத்தின் கீழ் இருந்து அழுதாள் புதிதாக வந்திருப்பாள் போல இருக்கிறது  . அள்ளியெல்லாம் கொடுக்க காசில்லை ஒரு ரெக்சியை பிடித்து குறிப்பிட்ட இடத்து போக எவ்வளவு செல்வாகுமென ரைவரிடம் கேட்டு அதற்குரிய பணத்தை கொடுத்து அவளுக்கு மொழி தெரியாது எம்பசியில் இறக்கிவிட சொன்ன நியாபகம் வருகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களுக்கு முன் எனக்கு மிகவும் நட்பாக இருநத பிலிப்பீனோ பெண். அவருக்கு கிட்னி பெயிலியரான  நிலையில் தனது தங்கை ஒருவரை வைத்திரின் உதவிக் கடிதத்தோடு இங்கு அழைத்து இருந்தார்..கிட்டத் தட்ட ஓராண்டு அந்த சகோதரியை படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல.கூடுதலான நேரம் குளியல் அறையில் இருந்து தான் போண் எடுத்து அழுவா பிலிப்பினோவில் இருந்து வந்த சகோதரி.

 வந்தவருக்கு ஆங்கில அறிவு இருந்தபடியால் தமக்கையின் ஆய்க்கினைகளை மீறி வெளியில் இரவா பகலா வேலைக்கு போய் ரிக்கற்றைப் போட்டுக் கொண்டு தன் நாட்டுக்கே போய் விட்டார்..இப்போ இங்கே இருக்கும் சகோதரி யாரோடும் தொடர்பில்இல்லை.இப்படியானவர்களோடு தொடர்பில் இருப்பதை விட விலகுதல் நன்று தானே.இப்படி எவ்வளவு நடக்கிறது..

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

 
Getty ImagesCopyright: Getty Images

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணை தொடர்ச்சியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, பட்டினிப்போட்டு, பிறகு கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த மியான்மரை சேர்ந்த 24 வயதான பியாங் இங்கை டொன், 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை அந்த நாட்டையே உலுக்கி இருந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை காத்ரி முருகையன் என்ற இந்திய வம்சாவளி பெண் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

40 வயதான காயத்ரி முருகையனின் செயல்கள் “மிகவும் கொடியவை” என்றும் “முற்றிலும் மனிதாபிமானமற்றவை” என்றும் எதிர்தரப்பு வழக்குரைஞர் விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

மியான்மரை சேர்ந்த பணிப்பெண் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பட்டினி போடப்பட்டு, இறுதியில் கொல்லப்பட்டார் என்பதற்கான "அதிர்ச்சியூட்டும்" விளக்கத்தை அரசு தரப்பு முன்வைத்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த வழக்கு சிங்கப்பூரின் "மோசமான படுகொலை வழக்குகளில் ஒன்றாகும்" என்றும், இறப்பதற்கு முன் அந்த இளம்பெண் எதிர்கொண்ட துன்புறுத்தலின் அளவை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் நீதிபதி மேலும் கூறினார்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு உடந்தையாக(மறைமுகமாக) கணவருக்கும் தாயாருக்கும் என்ன தண்டனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வது சட்டத்தை நேர்மையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தும் சிங்கப்பூர் என்பதை மறந்து பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தனை கொலை வேண்டுமென்றாலும் பண்ணிவிட்டு இரண்டே வாரங்களில் வெளியே வந்திடலாம் எனும் நிலை இருக்கும்  தமது மூதாதையர்களின் இந்தியா என நினைத்து காயத்திரி முருகையன் ஒரு அப்பிராணியின் கதையையை மட்டுமல்ல அம்மா எப்போ வருவா என்று மியன்மாரில் காத்திருந்த அந்த பச்சை குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து  முடித்திருக்கிறார்கள்.

காயத்திரி முருகையனுக்கு மனநிலை சரியில்லையென்று வாதிட்டார்களாம், அப்போ வேலைக்கார பெண்ணை மகளுடன் சேர்ந்து கொடுமைபடுத்திய அவரோட அம்மாவுக்கும் மனநிலை சரியில்லையா?

நாட்டுக்குநாடு சட்டங்களும் நீதிதுறையும் வேறுபட்டாலும் வக்கீலுகள் ஒரேமாதிரியாகதான் இருப்பார்கள்.

30 வருச தண்டனையாம்,காயத்திரிக்கு இப்போ வயசு 40  அனேகமாக அவரின் மரணம் சூரிய வெளிச்சத்தை காணமுடியாத சிங்கப்பூர் சிறையிலேயே நிகழும்.

சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,

ரிவி பார்த்தாலும் வாசலுக்கு வெளியில இருந்தே பார்க்க அனுமதி,

வருச சம்பளம் நூறோ இரு நூறோ, பொங்கல் தீபாவளிக்கு சீத்தை துணியில் சட்டை சாரம். சில வீடுகளில் வீட்டில் உள்ளவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தாலும்  அவர்களுக்குத்தான் அடி உதை .

வயதாகி இறந்துவிட்டாலோ அகால மரணமடைந்தாலோ சுடலைக்குஎரிக்க விறகு கொண்டுவரும் விறகு வண்டிலின்மேலேயே போட்டு எரிப்பவர்களுக்கு 50 நூறு கொடுத்து அனாதை பிணமாக அவர்களை அனுப்பிவைக்கும் ஓரிரு சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன்.

பின்னர் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசங்கள் வர தொடங்கியதும் ஒரு சிலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்கள் மற்றையவர்கள் எங்கு போனார்கள் என்றே நினைவில் இல்லை,

 ஊரில் இருக்கும் அக்கா சொன்னா இப்போ  மீளவும் சில வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட மலையக சிறுவர் சிறுமியர் தென்படுகிறார்களாம்.

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

வாழ்வது சட்டத்தை நேர்மையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தும் சிங்கப்பூர் என்பதை மறந்து பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தனை கொலை வேண்டுமென்றாலும் பண்ணிவிட்டு இரண்டே வாரங்களில் வெளியே வந்திடலாம் எனும் நிலை இருக்கும்  தமது மூதாதையர்களின் இந்தியா என நினைத்து காயத்திரி முருகையன் ஒரு அப்பிராணியின் கதையையை மட்டுமல்ல அம்மா எப்போ வருவா என்று மியன்மாரில் காத்திருந்த அந்த பச்சை குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து  முடித்திருக்கிறார்கள்.

காயத்திரி முருகையனுக்கு மனநிலை சரியில்லையென்று வாதிட்டார்களாம், அப்போ வேலைக்கார பெண்ணை மகளுடன் சேர்ந்து கொடுமைபடுத்திய அவரோட அம்மாவுக்கும் மனநிலை சரியில்லையா?

நாட்டுக்குநாடு சட்டங்களும் நீதிதுறையும் வேறுபட்டாலும் வக்கீலுகள் ஒரேமாதிரியாகதான் இருப்பார்கள்.

30 வருச தண்டனையாம்,காயத்திரிக்கு இப்போ வயசு 40  அனேகமாக அவரின் மரணம் சூரிய வெளிச்சத்தை காணமுடியாத சிங்கப்பூர் சிறையிலேயே நிகழும்.

சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,

ரிவி பார்த்தாலும் வாசலுக்கு வெளியில இருந்தே பார்க்க அனுமதி,

வருச சம்பளம் நூறோ இரு நூறோ, பொங்கல் தீபாவளிக்கு சீத்தை துணியில் சட்டை சாரம். சில வீடுகளில் வீட்டில் உள்ளவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தாலும்  அவர்களுக்குத்தான் அடி உதை .

வயதாகி இறந்துவிட்டாலோ அகால மரணமடைந்தாலோ சுடலைக்குஎரிக்க விறகு கொண்டுவரும் விறகு வண்டிலின்மேலேயே போட்டு எரிப்பவர்களுக்கு 50 நூறு கொடுத்து அனாதை பிணமாக அவர்களை அனுப்பிவைக்கும் ஓரிரு சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன்.

பின்னர் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசங்கள் வர தொடங்கியதும் ஒரு சிலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்கள் மற்றையவர்கள் எங்கு போனார்கள் என்றே நினைவில் இல்லை,

 ஊரில் இருக்கும் அக்கா சொன்னா இப்போ  மீளவும் சில வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட மலையக சிறுவர் சிறுமியர் தென்படுகிறார்களாம்.

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.

உங்களை வயதில் மிக இளையவர் என்று எண்ணி இருந்தேன் ...
இதெல்லாம் தெரிந்து இருக்கிறது.

இதுக்கு ஏன் வெளியில் உதாரணங்கள் தேடவேண்டும் என்று  எனக்கு தெரியவில்லை 
இங்கு யாழ் களத்திலேயே இது தாராளமாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

 

இதுக்கு ஏன் வெளியில் உதாரணங்கள் தேடவேண்டும் என்று  எனக்கு தெரியவில்லை 
இங்கு யாழ் களத்திலேயே இது தாராளமாக இருக்கிறது 

எந்தெந்தப் பதிவுகளில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு ஆதரவாக, அல்லது சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்த கொலையை ஒத்த பதிவுகள் யாழில் உள்ளன? ஆதாரம் காட்டவும்.

Link to comment
Share on other sites

6 hours ago, valavan said:

 

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.



நான் சிறுவயதில் ஊரில் இருக்கும்போது பார்த்து வேதனைப்பட்ட இப்படியான சம்பவங்கள் மிக அதிகம். மலையகத்தமிழ் பெண் பிள்ளைகள் மிக இளவயதிலேயே அழைத்து வரப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட சம்பவங்கள் அநேகம்.

எமது வீட்டிற்கு அன்மையில் இருந்த ஒரு பெண்பிள்ளை (12 அல்லது 13 வயது இருக்கும்)மலையகத்திலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டு கடும் கொடுமைப்படுத்தப்பட்டார். நாங்கள் நன்னீர் எடுக்கச் செல்லும் கிணற்றிற்கே அவரும் வருவார் (பெரும்பாலும் மங்கிய மாலைப்பொழுதுகளில்) அப்போது எம்மை சந்திக்கும்போது தனக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லி அழுவார். உடம்பில் இருக்கும் தழும்புகளை காட்டுவார்.

சில காலங்களிற்கு பின்னர் அவர் இறந்து விட்டார் (சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்றே எமது அயலில் பேசிக் கொண்டார்கள்).

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மலையத் தமிழர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை எமது சமூகம் இயல்பாகவே அனுமதித்துக் கொண்டிருந்த காலம் அது (புலிகளது ஆழுகைக்கு முற்பட்ட காலம்)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

எந்தெந்தப் பதிவுகளில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு ஆதரவாக, அல்லது சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்த கொலையை ஒத்த பதிவுகள் யாழில் உள்ளன? ஆதாரம் காட்டவும்.

எனக்கு சிரிப்பு தாங்கல,

முதலும் ஏதோ  ஒரு பதிவுக்கு  மருதுகிட்ட ஆதாரம் கேட்டீர்கள் காட்டினாரா தெரியவில்லை, இப்போ இரண்டாம்தரம்.

மருது நீங்கள் இதுக்கும் சேர்த்து ஆதாரம் காட்டிவிட்டீர்களா காட்டபோகிறீர்களா  இல்லை குத்துமதிப்பா அடிச்சு விடுகிறீர்களா என்பதை கிளியர் பண்ணவும். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

வாழ்வது சட்டத்தை நேர்மையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்தும் சிங்கப்பூர் என்பதை மறந்து பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தனை கொலை வேண்டுமென்றாலும் பண்ணிவிட்டு இரண்டே வாரங்களில் வெளியே வந்திடலாம் எனும் நிலை இருக்கும்  தமது மூதாதையர்களின் இந்தியா என நினைத்து காயத்திரி முருகையன் ஒரு அப்பிராணியின் கதையையை மட்டுமல்ல அம்மா எப்போ வருவா என்று மியன்மாரில் காத்திருந்த அந்த பச்சை குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து  முடித்திருக்கிறார்கள்.

காயத்திரி முருகையனுக்கு மனநிலை சரியில்லையென்று வாதிட்டார்களாம், அப்போ வேலைக்கார பெண்ணை மகளுடன் சேர்ந்து கொடுமைபடுத்திய அவரோட அம்மாவுக்கும் மனநிலை சரியில்லையா?

நாட்டுக்குநாடு சட்டங்களும் நீதிதுறையும் வேறுபட்டாலும் வக்கீலுகள் ஒரேமாதிரியாகதான் இருப்பார்கள்.

30 வருச தண்டனையாம்,காயத்திரிக்கு இப்போ வயசு 40  அனேகமாக அவரின் மரணம் சூரிய வெளிச்சத்தை காணமுடியாத சிங்கப்பூர் சிறையிலேயே நிகழும்.

சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,

ரிவி பார்த்தாலும் வாசலுக்கு வெளியில இருந்தே பார்க்க அனுமதி,

வருச சம்பளம் நூறோ இரு நூறோ, பொங்கல் தீபாவளிக்கு சீத்தை துணியில் சட்டை சாரம். சில வீடுகளில் வீட்டில் உள்ளவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தாலும்  அவர்களுக்குத்தான் அடி உதை .

வயதாகி இறந்துவிட்டாலோ அகால மரணமடைந்தாலோ சுடலைக்குஎரிக்க விறகு கொண்டுவரும் விறகு வண்டிலின்மேலேயே போட்டு எரிப்பவர்களுக்கு 50 நூறு கொடுத்து அனாதை பிணமாக அவர்களை அனுப்பிவைக்கும் ஓரிரு சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன்.

பின்னர் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிரதேசங்கள் வர தொடங்கியதும் ஒரு சிலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்கள் மற்றையவர்கள் எங்கு போனார்கள் என்றே நினைவில் இல்லை,

 ஊரில் இருக்கும் அக்கா சொன்னா இப்போ  மீளவும் சில வீடுகளில் வேலைக்கமர்த்தப்பட்ட மலையக சிறுவர் சிறுமியர் தென்படுகிறார்களாம்.

சிங்கப்பூர் காயத்திரி மேல் எமக்கு கோபம் வரும் நியாயமானது, காயத்திரிக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு சற்றே நிகரான தவறை செய்த எம்மவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பித்து கொண்டார்கள்.

நான் இந்த திரியை இணைத்த போது இதே கருத்துக்கள் தான் எனக்கு நினைவலைகளாக ஓடியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

எந்தெந்தப் பதிவுகளில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு ஆதரவாக, அல்லது சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்த கொலையை ஒத்த பதிவுகள் யாழில் உள்ளன? ஆதாரம் காட்டவும்.

"சிறுபராயத்தில் எங்கள் ஊரில் பல வீடுகளில் மலையகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்ட இளைஞர்கள்,பெண்கள்,ஆண்கள் சிறுவர் சிறுமியர்களை பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்காரர்கள் எழுந்திருக்குமுன் எழுந்து அவர்கள் தூக்கத்திற்கு போன பின்னர்தான் உறங்கபோவார்கள், அதுவரை வேலை வேலைதான்.

சோடா போத்தலில் பிளேன் ரீ, வேலியில் செருகி வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய தட்டில் சாப்பாடு,

குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அவர்களை வாடா போடா என்றழைக்கும் பண்பாடு,"

 

இது எல்லாம் நலிந்தவர்களை  மிதிக்கும் ஒரு மனோபாவம் 
இது இங்கு தாராளமாகவே இருக்கு 
ஒரு திரியில் ஒருவர கருத்து எழுதினால் பதில் கருத்து சார்ந்து இருக்கவேண்டும் 
கருத்து எழுதினவரின் கல்வி தராதரம் பற்றியதல்ல அது இங்கு தாராளமாகவே இருக்கு 
நீங்கள் உங்கள் கைகளால் நீக்கியது நிறைய இருக்கு 

7 hours ago, valavan said:

எனக்கு சிரிப்பு தாங்கல,

முதலும் ஏதோ  ஒரு பதிவுக்கு  மருதுகிட்ட ஆதாரம் கேட்டீர்கள் காட்டினாரா தெரியவில்லை, இப்போ இரண்டாம்தரம்.

மருது நீங்கள் இதுக்கும் சேர்த்து ஆதாரம் காட்டிவிட்டீர்களா காட்டபோகிறீர்களா  இல்லை குத்துமதிப்பா அடிச்சு விடுகிறீர்களா என்பதை கிளியர் பண்ணவும். 😝

அதுக்கு அவரே பதில் எழுதி இருக்கிறார் குறைந்தபட்ஷம் இருக்கிறது என்றும் 
இவ்வாறு தீவிரமாக இல்லை என்றும். 

நிழலி ஏன் குத்திமுறிந்து ஆதாரம் கேட்க்கிறார் என்பது எனக்கு புரியும் 
நான் என்ன எழுதுகிறேன் என்பது அவருக்கும் தெரியும் 

யாழ்களத்தில் நிர்வாகியாக இருந்துகொண்டு ஆயிரக்கணக்கான கருத்துக்களை 
வெட்டிகொத்திக்கொண்டு என்ன ஆதாரம் கேட்க்கிறார் என்பதுதான் எனக்கு புரியாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.