Jump to content

கொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

corona-worls__1_.jpg

கொரோனா  தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்ததாக  அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்திருந்தார். 

கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அனுமதியளித்துள்ள நிலையிலேயே வர்த்தமானி இன்று இரவு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றினால்  மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி முசுலிம் அரசியல் வாதிகளுக்கு  அரசியல் செய்ய விசயம் இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றால் இறப்போரின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி!

‘கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி இன்று (25) சற்றுமுன்னர் 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக வர்த்தமானி அச்சுக்கு அனுப்பப்பட்டது என்று தமக்கு சுகாதார அமைச்சர் அறிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்த நிலையில் குறித்த வர்த்தமானி தற்பாேது வெளிவந்துள்ளது.

சில நிபந்தனைகளுடன் இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, கொரோனா தொற்றால் இறப்போரின் சடலங்களை அகற்றுவது தொடர்பான நிபுணர்கள் குழு இன்று மாலை கூடிய போது தீர்மானிக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடுகள் இந்த விடயத்தை ஐ.நாவுக்கு கொண்டு வந்த இரு நாட்களில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

ஐ.நாவினதும் இஸ்லாமிய நாடுகளினதும் நல்லெண்ணத்தை பெற இந்த விடயத்தை அரசு பயன்படுத்தியுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.Screenshot_20210225-223547_Drive.jpg

 

 

https://newuthayan.com/தொற்றால்-இறப்போரின்-உடலை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தொற்றால் இறப்போரின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி!

‘கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி இன்று (25) சற்றுமுன்னர் 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக வர்த்தமானி அச்சுக்கு அனுப்பப்பட்டது என்று தமக்கு சுகாதார அமைச்சர் அறிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்த நிலையில் குறித்த வர்த்தமானி தற்பாேது வெளிவந்துள்ளது.

சில நிபந்தனைகளுடன் இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, கொரோனா தொற்றால் இறப்போரின் சடலங்களை அகற்றுவது தொடர்பான நிபுணர்கள் குழு இன்று மாலை கூடிய போது தீர்மானிக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடுகள் இந்த விடயத்தை ஐ.நாவுக்கு கொண்டு வந்த இரு நாட்களில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

ஐ.நாவினதும் இஸ்லாமிய நாடுகளினதும் நல்லெண்ணத்தை பெற இந்த விடயத்தை அரசு பயன்படுத்தியுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.Screenshot_20210225-223547_Drive.jpg

 

 

https://newuthayan.com/தொற்றால்-இறப்போரின்-உடலை/

பொலிகண்டி டீமை இனி பொத்துவில்  திரும்பிக்கூட பார்க்கமாட்டினம் ....ஐயோ பாவம், தேங்காய்ப்பூ பஞ்சாய்ப்பறந்து போட்டு 
ஜெனீவாவை வைத்து வருஷக்கணக்காக தமிழர்கள் முக்கிக்கொண்டிருக்க ஒரு கூட்டத்தொடரை வைத்தே தங்களது கோரிக்கையை நிறைவேற்றி ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டு  செல்கிறது முஸ்லீம் தரப்பு,இந்திய முதுகில் சவாரிசெய்து நட்டாத்தில் விடப்பட்ட  தேசிக்காய் வால்களோ கண்ணிரண்டும் அவிஞ்சுபோய் பே பே என்று பேந்த பேந்த முழிக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு

(எம்.மனோசித்ரா)

 

கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன. 

 

death-covid.jpg

நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று டுவிட்டர் பதிவொன்றை இட்டு இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

' கொவிட் 19 ல் இறப்பவர்களுக்கு அடக்கம் செய்ய அனுமதிக்கும் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரவேற்கிறேன். 

pak1.PNG

இந்த தீர்மானத்தை எடுத்தமைக்காக இலங்கை தலைமைத்துவத்திற்கு நன்றி கூறுகிறேன்.' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பதிவில் , ' வரவேற்கத்தக்க செய்தி. நீண்ட கால தாமதம். தமது உறவுகளை இழந்தவர்களை துன்பப்படுத்துவதால் குடும்பங்களின் துயரங்களை சேகரிப்பதை தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

USA.PNG

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். பின்னர் அந்த தீர்மானம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது அமெரிக்க தூதுவர் அது தொடர்பில் கவலையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா தீர்மானத்தை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, பொறுத்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்து போடப்பட்ட நாடகம். அடுத்த கூட்டத்தொடரில் பாராட்டுடன் கால அவகாசம் பெறும் நோக்கில் அரங்கேறும் நாடகம். இவர் நாடகம் எதுவரை ரசிக்கப்படும்? தமிழர் பிரிந்து நின்று முண்டு கொடுக்கும்வரை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.