Jump to content

அன்புள்ள அம்மா....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......

 

மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். 

எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். 

பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது  உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா.

மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....!

பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப்  பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..!

எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..!

இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...!

உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

எல்லாமே மாறும் உலகில் அம்மாவின் அன்பு ஒன்று தான் மாற முடியாது.அருமை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு கடிதம், ஆழமான வரிகள்......தொடருங்கள்......நாங்களும் தொடர்கின்றோம்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.

மனைவி மீது அளவில்லாத பாசம்..
பிள்ளைகள் மீது அதை விட பாசம்...
பேரப்பிள்ளைகள் மீது நிகரில்லா பாசம்...
ஆனால் முதிர்ந்த வயதிலும் காலில் கல்லடி பட்டால் அம்மா என்றுதானே அலறுகின்றோம்.

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்

ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.

உண்மைதான் தாத்தா ,தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 

உண்மை சகோதரி

நான் எப்பொழுதும் எங்கும் சொல்வேன்

போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவன் என்று. 

எழுத வெளிக்கிட்டால் புத்தகமாகி விடும். 

Link to comment
Share on other sites

50 minutes ago, ரதி said:

நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

இது மேலே நான் எழுதியதற்கு பதிலாகவும் ஆதாரமாகவும் பொருந்தி வருகிறது. 

இது தான் வாழ்க்கையின் தத்துவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, shanthy said:

மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். 

எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். 

பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது. 

தான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்...
தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய்  உள்ளம்.


பெற்ற  பிள்ளை எந்த வயதாகினும்  "அம்மா" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை  எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என  அம்மா சொல்லுவார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் கடிதம் மனதை வருடிச் செல்கிறது. அம்மா என்ற சொல்லிற்கு இணையாக உலகில் வேறு ஒரு  சொல் இருக்க முடியாது. ஒரு தாயின் அன்பிற்கு நிகர் ஏதுமில்லை. 
உண்மையிலேயே நாங்கள் ஒன்பது சகோதரர்கள். மூத்தவர்கள் பேரன் பேத்தி எடுத்து விட்டோம். ஆனாலும் இன்றுவரை மட்டுமல்ல நாம் உயிருடன் இருக்கும் வரை எங்கள் குடும்பபாசம் தொடரும். இது பெற்றவர்கள் எமக்களித்த கொடை. 
அம்மாவை நினைத்தாலே கண்கள் நிறைந்து விடுகிறதே. இதுதான் குடும்ப உறவின் ஆணிவேர். நல்லதொரு ஆக்கம் குமாரசாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2021 at 23:43, குமாரசாமி said:

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

அம்மாவுக்கு சொல்ல எப்பவும் மூட்டைமூட்டையாகக் கதைகள் இருக்கும்தானே. ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லுங்கள்😁

பல மணித்தியாலங்கள் கதைத்தாலும் சொல்லமுடியாதவற்றை கடிதம் மூலம் சொல்லலாம்.  ஆனால் இப்போது யார் கடிதம் எழுதுகின்றார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசத்துக்கு வேலி இல்லை கு, சாமியார்  வாழ்த்துக்கள் உங்கள் கடிதத்துக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

நல்ல பெற்றோர்கள் கிடைத்தால் தானே நல்ல பிள்ளை உருவாகும் 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா மிகவும் அருமையான அம்மாவின் கடிதம் தொடருங்கள்....அம்மாவின் பாசம் ,அன்பு இவை எழுத்தில் வடிக்க முடியாதவை

Link to comment
Share on other sites

வலி சுமந்த வரிகள்.அம்மா என்ற உறவு மட்டுமல்ல  அந்த சொல்கூட வலிமை மிக்கதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

Best Sivaji GIFs | Gfycat

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

Best Sivaji GIFs | Gfycat

சுவியர்,  மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡

ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜

  • Like 1
Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

Best Sivaji GIFs | Gfycat

அம்மாவின் அடியை குசினியில் உள்ள அகப்பைக்காம்புகள் தான் அறியும். ஆனால் அந்த நோவு எதுவும் அம்மாவின் அன்பில் மறந்து போகும். 

 

4 hours ago, புங்கையூரன் said:

சுவியர்,  மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡

ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜

மிளகாய் தூள் பறவாயில்ல முட்கிழுவை வீர வடுவெல்லாம் கடந்த ஆக்கள் இருக்கிறம் புங்கையூரன். 🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.