Jump to content

பிள்ளைகளைக் காட்டினாலே ஜனாதிபதியுடன் பேசத் தயார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளைக் காட்டினாலே ஜனாதிபதியுடன் பேசத் தயார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிப்பு

 
IMG_9526-1-696x349.jpg
 34 Views
துண்டுப்பிரசுரம் ஒன்றில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
ஜனாதிபதி கோட்டபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
 
“குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன்  அலரி மாளிகையில்  சந்தித்தோம். அப்போதும்  நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
 
குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் . அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”என்றனர்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.