Jump to content

நடராசாவின் பயன்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது.

பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும்.
 
தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள்.
 
* தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.
 
* நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
 
* ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.
 
* தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
 
* உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், அதனால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும். 

https://tamil.webdunia.com/

Link to comment
Share on other sites

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

 

Link to comment
Share on other sites

6 hours ago, நிழலி said:

 இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

மனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

ரை பண்னி பார்ப்போம்.

முயற்சி உடையார் களைப்பு அடையார்.

47 minutes ago, ரதி said:

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

 

Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு.

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

22 minutes ago, zuma said:

மனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள். 

கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது..

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

அதனால்... எவ்வளவு சாப்பிட்டாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது. :grin:

நடராஜா... உடம்புக்கு, நல்ல ஆரோக்கியமானது.
பதிவுக்கு... நன்றி, குமாரசாமி அண்ணா. :)

9 minutes ago, நிழலி said:

கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது..

அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..

நிழலி

யார்... இவர்? புது, ஆளாக  இருக்குது...  :grin:

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

 

நிழலி

யார்... இவர்? புது, ஆளாக  இருக்குது...  :grin:

அதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதனால்... எவ்வளவு சாப்பிடடாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது.
நடராஜா... உடம்புக்கு, நல்ல ஆரோக்கியமானது.
பதிவுக்கு... நன்றி, குமாரசாமி அண்ணா. :)

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

அதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்!

நிழலி... இது, உங்களது படமா?
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில்,
மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது.
இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புங்கையூரன் said:

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

புங்கை அண்ணா.... சில இடங்களில்,
தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும்  குழப்புற மாதிரி...
வண்டி, தொந்தி  என்று கலந்து அடிச்சு  விட வேணும். :grin:

அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும்  சேர்ந்து...
ஒறிஜினல்  தமிழ் எது? என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎
என்ற படியால்தான்... அப்படி, சும்மா  வீம்புக்கு, எழுதினேன்.  😜

Link to comment
Share on other sites

22 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி... இது, உங்களது படமா?
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில்,
மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது.
இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. :)

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன். 

எனக்கும்...  "கொரோனா" நேரத்தில்,
சலூன் பக்கம்  போக, பயமாக இருப்பதால்....
எனது மகள், தான்... கடந்த ஒரு வருடமாக, தலை  மயிர் வெட்டி விடுவார்.

நாளைக்கு... எனக்கு, முடி இறக்கு விழா... நடக்கப் போகுது.
அதுக்கு... இப்பவே... நேரம் ஒதுக்கி  வைத்து விட்டேன்.

டிஸ்கி: கொரோனா நேரத்தில்...  "மகள், தந்தைக்கு ஆற்றும் உதவி...  முடி வெட்டி விடுவதே"    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலுடம் உண்மை. நான் கடந்த  4 மாதங்களாக தினமும் 40 நிமிடங்கள் நடக்கிறேன்.எனக்கள் மாற்றத்தை உணர்கிறேன் நடக்க முதலும் நடந்த பின்னரும் இரத்தை அழுத்தத்தைச் சோதித்தால் ஆச்சிரியமாக இருக்கும். நடைக்குப் பின் இரத்த அழுத்தம் நன்றாகக் குறைந்திருக்கும். நித்திரையும் நன்றாக வரும். 3 கிவரையில் எடையம் குறைந்துள்ளது. உடலுக்குப் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ஆரம்பத்;தில் மிகவும் கஜ்ரமாக இருந்தது. இப்nபொழுது ஒரு நாள் நடக்கா விட்டாலும் ஏதோ குற்ற உணர்வாக இருப்பது போல் உள்ளது.தினமும் 10 ஆயிரம்  காலடடிகள் நடக்கிறேன். மிகவும் இலகுவான நடைதான். இனி மெதுவாகக்கூட்டலாம் என்று என்ற எண்ணி இருக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடக்கம் பொழுது சம தரையில் நடக்க முயற்சிக்கவும். அரம்பத்தில்  நான் எனது நடைப்பயிற்சியில் சிறிய  பிட்டி ஒன்றை  ஒவ்வொரு நாளும் என் நடைப்பயிற்சியில் ஏறி இறங்கினேன். மழஙஃ;கால்சிரட்டைக்கீழ் கடுமையான வலி. வைத்தியரிடம் காட்டவேண்டி வந்தது. அவர்சொன்னார் சமதரையில் நடக்கச் சொல்லி; சமதரையில் நடக்கும்பொழுது எந்த வலியும் இருக்க வில்லை. ஆகவே நடவுங்கள் நலமாக இருங்கள்.
பிற்குறிப்பு.
அந்த விசயத்திற்கு தினமும் சைக்கிள் ஓடுங்கள் பிறகு பாருங்க எல்லாம் அனுபவம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடை பயன்கள் நல்ல தகவல்
நடப்பதினால் பல மணித்தியாலங்களை இழந்து விடுவோம் அதிலும் பார்க்க ரக்சி பிடித்து கொண்டு போகலாம், வசதி முக்கியம்  என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் சொல்வார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

தம்பி ராசன்! வேலை முடிஞ்சு வீட்ட போகேக்கை கல்லடி பாலத்துக்கு கிட்ட இறங்கி நீந்தினாலே மூச்சு பயிற்சி தானாய் வரும். பேந்தென்ன சொல்லவே வேணும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

வண்டி இருந்தால் கொஞ்சம் எட்டிக் குனிய கால் தெரியும்.....!

தொந்தி என்றால் சுவரைப் பிடித்துக்கொண்டு குனிந்தாலும் உங்கட கால் தெரியாது......!  😁

 

8 hours ago, புலவர் said:


பிற்குறிப்பு.
அந்த விசயத்திற்கு தினமும் சைக்கிள் ஓடுங்கள் பிறகு பாருங்க எல்லாம் அனுபவம்தான்.

அதுக்காக சைக்கிள் ஓடினால் போற அலுவல் சைக்கிள் ஓடும்போதே முடிந்து விடுமோ என்று யோசிக்க வேண்டி இருக்கு .......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

சாப்பாட்டில் எந்தக் குறையும் வைக்கவில்லை.பியரும் அளவோடு குடிப்பேன். ஆனால் அதிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கூடின பலன் கிடைக்கும். நான் வேக நடை 4ட நடப்பதில்லை .சாதாரண நடைதான். வேகநடை என்றால் இன்னும் பலன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

அதனால்... எவ்வளவு சாப்பிட்டாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது. :grin:

சிறித்தம்பி! உங்கள் பொன்மேனி இப்படி இருக்குமா? 😷

Vijay facts on Twitter: "இதுல யாரு சிக்ஸ் பேக்ஸ் மாஸ் ..? Fav : #Vijay RT :  #SixPackSoori… "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன்.

காலையில் சுடுநீர் குடித்தால் நல்லது என்கிறார்கள்.இதுபற்றி ஏதாவது கேள்விப்பட்டீர்களா?

18 hours ago, தமிழ் சிறி said:

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

 

தொடர்நடை தான் பயன்தரும் என்கிறார்கள்.
நடக்கும் போது உடம்பு சூடாகி களைப்பு வந்து வியர்க்க வேண்டும் என்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! வேலை முடிஞ்சு வீட்ட போகேக்கை கல்லடி பாலத்துக்கு கிட்ட இறங்கி நீந்தினாலே மூச்சு பயிற்சி தானாய் வரும். பேந்தென்ன சொல்லவே வேணும்.

சகல உடற்பயிற்சிகளிலும் நீச்சல் தான் சிறந்தது என்கிறார்கள்.

17 hours ago, நிழலி said:

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

முயற்சி உடையார் களைப்பு அடையார்.

Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு.

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.

பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.