Jump to content

நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

 

தேசிய வெசாக் பண்டிகையை நிகழ்வுகளை இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி நயினாதீவு நாகவிகாரையில் முன்னெடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தசாசன , கலைகலாச்சார அலுவல்கள் அமைப்பின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை  | Virakesari.lkmahindaaa.jpg

அரச பொசன் பண்டிகை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 65  பௌத்த விகாரைகள்,35 பிரிவெனா பாடசாலைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை அரச பொசன் பண்டிகையை சுகாதார பாதுகாப்பு வழிமுறைக்கு அமைய சிறப்பாக கொண்டாட எதிர்பார்கக்ப்பட்டுள்ளது. 

அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வு திட்டமிடல் மற்றும் ஒழுங்குப்படுத்தலில் புத்தசாசனம், மத கலைகலாசார  அமைச்சின் கீழ் உள்ள  இந்து , கிருஷ்தவம் மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களம் ஒன்றினையவுள்ளன.

நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை  | Virakesari.lk

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

பிரதமர் சொல்ல விரும்பும் சேதி என்ன..🤥

அத்தியடி குத்தியனின் உதவியுடன் வடக்கில் பௌத்ததை விஸ்தரிப்போம் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இல்லாத அல்லது மிகச் சிறியளவில் குடியேறியிருக்கும் தமிழர் தாயகத்தில் அவர்களின் மதக் கொண்டாட்டம் ஒன்றினை நடத்தவேண்டிய தேவை என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கோரத்தாண்டவம் ஆடுது. மக்கள் பயத்திலும், ஏக்கத்திலும் உறைகிறார்கள். விளைவு தெரியாமல் விளையாடும் முட்டாள்கள் என்னடாவென்றால்; ஒரே நாடு, ஒரே சட்டம் என கூப்பாடு போடுகிறார்கள்.  வெகு விரைவில் கொடுக்கப்பட்ட வளங்களுக்கும், அவகாசத்துக்கும் கணக்கு காட்டும் வேளை நெருங்கப்போகுதோ தெரியவில்லை. சாதாரண நோயால் இறப்பவர்களையும் கொரோனா என்று சொல்லி எரிக்கிறார்கள். பலவந்தமாக கொரோனாவை காரணம் கூறி தங்கள் சட்டங்களையும், கொள்கைகளையும் திணிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சிங்களவர்கள் இல்லாத அல்லது மிகச் சிறியளவில் குடியேறியிருக்கும் தமிழர் தாயகத்தில் அவர்களின் மதக் கொண்டாட்டம் ஒன்றினை நடத்தவேண்டிய தேவை என்ன? 

இது போன்ற பல கேள்விகள் கேட்கப்படும் போது பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டுவார்கள். அல்லது எங்களை இனவாதிகள் இன வெறியர்கள் என்பார்கள்.

நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.

அவர்கள் சொன்னால் வெற்றிகோஷம், நாங்கள் சொன்னால் இனவாதம், நாடு பிரிந்து விடும். இனத்தையும் நாட்டையும் தாங்களே பிரித்துக்கொண்டு, யுத்தக்குற்ற விசாரணை செய்தால், உரிமைகளை கொடுத்தால் நாடு இரண்டு பட்டுவிடுமாம், இனங்களுக்கிடையில் பிரிவினை வந்து விடுமாம் என்று  போடும் வேஷங்களை சரியென்று வெளிநாட்டுத் தூதுவர்களிடம் ஒத்தூதுவதும் நமக்குள் உள்ளவர்களே.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.

ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணை கட்டாவிடில் மடை திறந்த வெள்ளம்போல் ஒருவரொருவர் மேல் வெறுப்பை கொட்ட வேண்டிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

ஐயா கற்பகம், தாங்கள் அமெரிக்காவில் தின்று கொண்டு வாழ்ந்து கொண்டு தமிழும் புரியாமல்...... ஐயோ.... ஐயோ..........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கு  சில  சந்தேகங்கள் வருகுது??

எனது அப்பா  அம்மா இலங்கையிலிருந்து நான் பிரான்சிலிருந்தால் அவர்களை  நான் எப்படி  அழைப்பது??

எனது  அண்ணன் தம்பி ஊரிலிருந்து நான் கனடாவிலிருந்தால் அவர்கள்  எனக்கு  என்ன முறை???

நான் பிரான்சிலிருந்து  எனது  மனைவி லண்டனில் இருந்தால் அவர்  எனக்கு  என்ன உறவு???

எனது  பிள்ளைகள் கனடாவிலிருந்து நான் ஊரிலிருந்தால்  எனது  பிள்ளைகள் என்ன  முறை  வரும்  எனக்கு??

ஒரே  குழப்பமாக்கிடக்கு???

உங்களுக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 03:57, கற்பகதரு said:

ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

ஜேர்மனியில் பாதுகாப்பு,கல்வி ,மருத்துவம்,விரும்பிய வேலையைத்தேடிச்செய்யும் உரிமை,வேலை இல்லாவிடில் உதவி,பொழுதுபோக்கு,பேச்சு சுதந்திரம்......இப்படி பல உரிமைகள் உண்டு .இவற்றை உங்களால் இலங்கையில் வழங்க முடியுமா?அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ?சுதந்திரமாக....மகிழ்ச்சியாக....திருப்தியாக.....தேகாயரோக்கியமாக...நீதியாக...எதுவுமில்லை.  ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும்.

குமாரசாமியண்ணை எங்கு வாழ்த்தாலும் அவர் பிறந்த இடம் தான் அவரது மண்  அங்கு வாழும் மக்களே அவரது மக்கள் எனப்படுவார்.ஜேர்மனி அரசு பல ஆண்டு விசாரனைக்குப்பின் ,அவருக்கு இலங்கையில் நின்மதியாக உயிர் பாதுகாப்புடன் வாழமுடியாது என்பதைக் கண்டுயறிந்து ஒர் ஜேர்மன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளைப் போல் அவருக்கும் வழங்கிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு?

அங்கே. கையை...காலை....கண்ணை.....இப்படி உடல் உறுப்புகளை இழந்தவர்களும். அநேகம் பேர் உண்டு.    அண்ணாவை...தம்பியை....பெற்றேரை...இப்படி உறவினர்களை இழந்தவர்களும் அநேகர் உண்டு.     

வீடுகள்...ஆடுகள்....மாடுகள்....வாகனங்கள் ...காணிபூமிகள்...இழந்தேரும் அநேகமுண்டு.....இங்கே மிகுந்த கஸ்டத்தின் மததியில தான் வந்து சேர்தோம். ஒரு சில வருடங்கள் இருந்து விட்டுப்போகலாம் என்று.தான் வந்தோம் .பிறகு நடத்தது எல்லாம் நாங்கள் எதிர்பார்க்காதவையாகும்.

Link to comment
Share on other sites

13 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் பாதுகாப்பு,கல்வி ,மருத்துவம்,விரும்பிய வேலையைத்தேடிச்செய்யும் உரிமை,வேலை இல்லாவிடில் உதவி,பொழுதுபோக்கு,பேச்சு சுதந்திரம்......இப்படி பல உரிமைகள் உண்டு .இவற்றை உங்களால் இலங்கையில் வழங்க முடியுமா?அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ?சுதந்திரமாக....மகிழ்ச்சியாக....திருப்தியாக.....தேகாயரோக்கியமாக...நீதியாக...எதுவுமில்லை.  ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும்.

ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடு. இலங்கை பின்தங்கிய நாடு. செல்வந்த நாட்டில் கிடைக்கும் வசதிகளுக்காக குமாரசாமி ஜேர்மனியில் இருக்கிறார் என்கிறீர்கள். பிறகு இலங்கை மண்ணுக்கும் உரிமை கோருகிறார். இங்கே உள்ளதையும் அனுபவித்துக் கொண்டு அங்கேயும் உரிமை கோருகிறார் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பாவம்... இவர் அவர்கள் நிலத்தையும் தனதாக்க பார்கிறார். 
 

13 hours ago, Kandiah57 said:

 ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும்.

இலங்கையில் சிறிய வேலை செய்பவர்கள் கூட லட்சாதிபதிகளாக இருப்பதால் தான் அவர்களுக்கு வேலை எடுக்க கூடியதாக இருந்திருக்கிறது என்கிறீர்கள். இப்படி அடுத்தவனையெல்லாம் முட்டாள் என்று நினைத்து கதையளப்பதால்தான் உங்கள் கதைகள் எல்லாம் பொய் என்ற முடிவுக்கு உலக நாடுகள் எப்போதோ வந்துவிட்டன.

13 hours ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை எங்கு வாழ்த்தாலும் அவர் பிறந்த இடம் தான் அவரது மண்  அங்கு வாழும் மக்களே அவரது மக்கள் எனப்படுவார்.ஜேர்மனி அரசு பல ஆண்டு விசாரனைக்குப்பின் ,அவருக்கு இலங்கையில் நின்மதியாக உயிர் பாதுகாப்புடன் வாழமுடியாது என்பதைக் கண்டுயறிந்து ஒர் ஜேர்மன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளைப் போல் அவருக்கும் வழங்கிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு?

குமாரசாமி அண்ணைதான் பொட்டம்மான் என்று தெரியாமல் எழுதிவிட்டேன். அவருக்கு நிச்சயமாக உயிர் ஆபத்து உண்டுதான். அண்ணை குமாரசாமி, நீங்கள் உயிரை பணயம் வைத்து தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவையோடு ஒப்பிடும் போது முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள் செய்ததெல்லாம் தூசுக்கும் நிகராகாது என்பதை அறியாமல் எழுதிவிட்டேன், மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

On 27/2/2021 at 06:12, விசுகு said:

இப்ப எனக்கு  சில  சந்தேகங்கள் வருகுது??

எனது அப்பா  அம்மா இலங்கையிலிருந்து நான் பிரான்சிலிருந்தால் அவர்களை  நான் எப்படி  அழைப்பது??

எனது  அண்ணன் தம்பி ஊரிலிருந்து நான் கனடாவிலிருந்தால் அவர்கள்  எனக்கு  என்ன முறை???

நான் பிரான்சிலிருந்து  எனது  மனைவி லண்டனில் இருந்தால் அவர்  எனக்கு  என்ன உறவு???

எனது  பிள்ளைகள் கனடாவிலிருந்து நான் ஊரிலிருந்தால்  எனது  பிள்ளைகள் என்ன  முறை  வரும்  எனக்கு??

ஒரே  குழப்பமாக்கிடக்கு???

உங்களுக்கு???

நீங்கள் குமாரசாமியாராக இருந்தால் அவர்களை எப்படி அழைப்பது என்று சிந்திப்பதிலும் பார்க்க அவர்கள் மண்ணை எப்படி உங்கள் மண்ணாக்குவது என்று திட்டம் போட்டிருப்பீர்கள். நீங்கள் இப்படி குழம்பி இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கற்பகதரு said:

ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடு. இலங்கை பின்தங்கிய நாடு. செல்வந்த நாட்டில் கிடைக்கும் வசதிகளுக்காக குமாரசாமி ஜேர்மனியில் இருக்கிறார் என்கிறீர்கள். பிறகு இலங்கை மண்ணுக்கும் உரிமை கோருகிறார். இங்கே உள்ளதையும் அனுபவித்துக் கொண்டு அங்கேயும் உரிமை கோருகிறார் இல்லையா?

அவர் பொருளாதரத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த யேர்மன் நாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையை ஒரு கிரிக்கெட் போட்டியாக இரசித்து அனுபவிக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.