Jump to content

சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங்கம்

by Anu
இலங்கையில் சீனா மொழியின்  ஆதிக்கம்; தூக்கி எறியப்பட்ட தமிழ் மொழி!

இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் பலகைகள் காட்சிப்படுத்துகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிற்றி என்கிற துறைமுக நகரம் ஆகிய பிரதேசங்களில் சீன மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அந்தந்த நிறுவனங்களின் தீர்மானங்களின்படி காட்சிப்படுத்த இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறுநாட்டு மொழிகளை இந்த நாட்டிற்குள் பயன்படுத்துவதாயின், இலங்கை அரசியலமைப்பிற்கு அது முரணான செயற்பாடாக அமையும் என்பது அரசியலமைப்பின் 4ஆவது பிரிவில் காணப்படுகின்றது.

இருந்த போதிலும் இந்த சட்டமானது, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள முடியாது என்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைவான ஏதாவதொரு அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்துவதாயின் அது சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழி கூட்டு சேர்க்கப்பட்ட மொழியாக இணைத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிவித்துள்ள அந்த திணைக்களம், அந்த சட்டமானது அரச மற்றும் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கொள்ளுபிட்டி,கொழும்பு 07,பம்பலப்பிட்டி,வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் சீன அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறும் இடங்களிலும் சீன உணவகங்களிலும் சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் இதரபகுதிகளில் சீன நிறுவனங்களின் ஒப்பந்தம் நடைபெறும் இடங்களிலும் சீன பெயர்ப்பலகைகள் பெருமளவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.pearlonenews.com/சீன-மொழி-பெயர்ப்-பலகையை-அ/?fbclid=IwAR2sWkeADuOrpmfgWseJL285L8mRu_ID8E4X3q4ZLP7J_wIiBbu22MEH_ks

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும்,

தமிழில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தியதற்காக ஊழியாட்டம் ஆடிய விமல் வீரவன்ச, தமிழ் புறக்கணிக்கப்படும்போது தடுக்க வக்கில்லாத அரசு, திட்டமிட்டு அந்நாட்டு குடிகளின் தாய்மொழியை அழிக்கும் அரசு; சீனாவின் அதுவும் அதன் தயவில் வாழும் நாடு அதற்கெதிராக  நடவடிக்கை எடுப்பதாவது. ஜெனீவாவைச் சாட்டியே சீனா நாட்டை விழுங்கப்போகுது. கேட்டுப்பார்க்கட்டுமேன், அது தனது மொழியில் விசாரணையை இலங்கைக்கு எதிராக தொடங்கும். நக்கிட்டார் நாவிடார்.  

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட சேதி. அவர்கள் கவலைப்படட்டும். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங்கம்

உதுவும் நல்லதுக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

தமிழில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தியதற்காக ஊழியாட்டம் ஆடிய விமல் வீரவன்ச, தமிழ் புறக்கணிக்கப்படும்போது தடுக்க வக்கில்லாத அரசு, திட்டமிட்டு அந்நாட்டு குடிகளின் தாய்மொழியை அழிக்கும் அரசு; சீனாவின் அதுவும் அதன் தயவில் வாழும் நாடு அதற்கெதிராக  நடவடிக்கை எடுப்பதாவது. ஜெனீவாவைச் சாட்டியே சீனா நாட்டை விழுங்கப்போகுது. கேட்டுப்பார்க்கட்டுமேன், அது தனது மொழியில் விசாரணையை இலங்கைக்கு எதிராக தொடங்கும். நக்கிட்டார் நாவிடார்.  

சாதாரண சிங்கள மக்களை அடையனும் அதுக்கு முகநூல் போன்றவை மூலம் பரப்புரை இலகுவாக சென்றடையும் .

4 hours ago, Kapithan said:

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட சேதி. அவர்கள் கவலைப்படட்டும். 😏

மூன்று தீவுக்கும் விலை 12 மில்லியன் டொலர் என்கிறார்கள் அவ்வளவுக்கு சொறிலங்கா வங்குரோத்து நிலையாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் காலணி நாடுகளில் தங்கள் மொழியை புகுத்துவது இயல்பு..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது நடுநிலை வகிதத்தா?எனக்கு முக்குப் போனாலும் எதிரிக்கு(தமிழர்களுக்கு) சகுனம் பிழைக்கணும் என்று நினைப்பது இந்தியா. இந்தியாவே இந்தப் போரை நடத்தியது. அது எப்படி ஒத்துக் கொள்ளும். ஒருவேளை 1 வாக்கால் இலங்கை தோற்க வேண்டிய நிலை வந்தால் நடுநிலமையைக்கைவிட்டு  சீனா .பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். இது வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விவசாயி விக் said:

இப்போது சீனா கட்டும் சில கொழும்பு திட்டங்களில் வெளியே இருக்கும் பலகையில் சீன மொழி மட்டுமே இருக்கும் பலகைகைளையும் கண்டேன்.  வேண்டும் என்றே வெள்ளவத்தையில் கொழும்பு"துரை" முகம் என்று தமிழில் பிழையாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  வினை விதைத்தால் திணையா விளையும்?

அவ்வளவுக்கு தமிழர்கள் மீது துவேசம் அதை யாழ்கள மனிதவுரிமைவாதிகள்  கண்டு கொள்ள மாட்டினம் அவைக்கு தமிழர்கள்  பிழை செய்வதுதான் அவர்களின் கண்களில் தெரியும் சிங்களம் அவர்களின் என்னவாக ..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினாலென்ன? எமக்கு இல்லை என்கிற நாட்டில் சீனம் வந்தாலென்ன, ஹிந்தி வந்தாலென்ன, சிங்களம் போனால்தான் நமக்கென்ன?   இதில் கருத்துச் சொல்லவோ குத்தி முறியவோ என்ன  இருக்கிறது  நமக்கு? அது சிங்களவனே பிரச்சனையில்லை என்கிறான். அவன் கண்ணுக்கு ஒவ்வாதது எல்லாம் தமிழ். அதில் அவன் கவனமாயிருக்கிறான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினாலென்ன? எமக்கு இல்லை என்கிற நாட்டில் சீனம் வந்தாலென்ன, ஹிந்தி வந்தாலென்ன, சிங்களம் போனால்தான் நமக்கென்ன?   இதில் கருத்துச் சொல்லவோ குத்தி முறியவோ என்ன  இருக்கிறது  நமக்கு? அது சிங்களவனே பிரச்சனையில்லை என்கிறான். அவன் கண்ணுக்கு ஒவ்வாதது எல்லாம் தமிழ். அதில் அவன் கவனமாயிருக்கிறான். 

நீங்கள் கூறியதெல்லாம் சரிதான். விதிவிலக்காக இது மட்டும்...

"ஹிந்தி வந்தாலென்ன"..... 

இலங்கை யாருக்கும் நாட்டைப் பங்கு போடட்டும். பிரச்சனையில்லை. ஆனால் இந்தியன்... 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன் தலைகீழா நின்றாலும் இலங்கை ஹிந்தியை வரவிடமாட்டான், பலாத்காரமாக புகுந்தாலொழிய. அதற்கும் சீனா இருக்கிறது தடுப்பதற்கு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.