Jump to content

'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்: சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் ஆபரேஷன் செய்யவில்லை: டாக்டர் முருகேசன்

திருச்சி, ஜூன் 22-: எனது மகன் பிரசவ ஆபரேஷன் செய்யவில்லை. நானும் எனது மனைவியும்தான் ஆபரேஷன் செய்தோம் என்று மணப்பாறை டாக்டர் முருகேசன் கூறினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை&திண்டுக்கல் ரோட்டில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் முருகேசன். இவரது ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக வந்த வீராலூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் மனைவி லீலாவதிக்கு டாக்டர் முருகேசனின் மகனும், பிளஸ்-1 படிக்கும் மாணவருமான திலீப் ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்த்ததாக பரபரப்பு செய்தி வெளியானது.

இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆர்.டி.ஓ. ரமணீதரனுக்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ்வச்சானி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. நேற்று டாக்டர் முருகேசனின் ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டர் முருகேசன், அவரது மனைவி டாக்டர் காந்திமதி, மகன் திலீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது டாக்டர் முருகேசன், தங்கள் மகன் இந்த ஆபரேஷனை செய்யவில்லை என்றும், தானும் தனது மனைவியும்தான் ஆபரேஷன் செய்ததாகவும், ஆபரேஷனின்போது தங்கள் மகன் உடன் இருந்ததாக மட்டுமே கூறியதாகவும் தெரிகிறது. ஆர்.டி.ஓ. விசாரணைக்குப் பிறகு டாக்டர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணப்பாறை நகரில் நானும் எனது மனைவி டாக்டர் காந்திமதியும் கடந்த 17 வருடங்களாக ஆஸ்பத்திரியை நடத்தி வருகிறோம். நாங்கள் இரண்டு பேரும் இந்த பகுதியில் பிறந்து இந்த பகுதியிலேயே வளர்ந்தவர்கள். இந்த பகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் கஷ்ட நஷ்டங்களை முழுமையாக உணர்ந்தவர்கள். இதனால் இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ பணியின் மூலமாக எங்களால் எந்த அளவுக்கு உதவி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உதவி செய்து வருகிறோம்.

எங்கள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆபரேஷன்களை நானும் எனது மனைவியும் தவிர வேறு யாரும் செய்ததில்லை. தேவைப்பட்டால் சிறப்பு டாக்டர்களை எங்கள் ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து அவர்கள் மூலம் ஆபரேஷன் செய்து உள்ளோம். எங்கள் மகன் சிறு வயதில் இருந்தே எங்கள் சிகிச்சை முறைகளை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள ஆசைப்படுவான்.

இப்போது எழுந்து உள்ள பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு நானும் எனது மனைவியும்தான் ஆபரேஷன் செய்தோம். எனது மகன் ஆபரேஷன் செய்யவில்லை. எங்களை நம்பி வரக்கூடிய கிராமப்புற மக்களின் நம்பிக்கைக்கேற்ப எங்களது பணி தொடர்ந்து நடைபெறும். இது தொடர்பாக நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு டாக்டர் முருகேசன் கூறினார்.

விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தலைப்பில் சாணக்கியனுக்கும் இன்னுமொருவனுக்குமிடையில் நடந்த கருத்தாடல் மிகவும் யாதார்த்தபூர்வமாகவும் ஆழமாகவும் இருந்ததுடன் ஆரோக்கியமான கருதாடல்களுக்கு முன்னுதாரனமாகவும்

இருந்தது.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தலைப்பில் சாணக்கியனுக்கும் இன்னுமொருவனுக்குமிடையில் நடந்த கருத்தாடல் மிகவும் யாதார்த்தபூர்வமாகவும் ஆழமாகவும் இருந்ததுடன் ஆரோக்கியமான கருதாடல்களுக்கு முன்னுதாரனமாகவும்

இருந்தது.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நானும் கவனித்தேன்.

கருத்துகளை பகிர்ந்த விதம் அழகு.

இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

இந்தத்தலைப்பில் சாணக்கியனுக்கும் இன்னுமொருவனுக்குமிடையில் நடந்த கருத்தாடல் மிகவும் யாதார்த்தபூர்வமாகவும் ஆழமாகவும் இருந்ததுடன் ஆரோக்கியமான கருதாடல்களுக்கு முன்னுதாரனமாகவும்

இருந்தது.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நானும் கவனித்தேன்.

கருத்துகளை பகிர்ந்த விதம் அழகு.

இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

உங்களிருவரதும் ஊக்குவிப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தாடல் ஆக்கபூர்வமாக அமைந்தமைக்கு இன்னொருவனின் பின்வரும் கருத்தாடல் பாணியே காரணம்,

1) வாதங்களை திசை திருப்பாமை. உதாரணமாக,

இங்கு குற்றம் சாட்டியவர்கள் டாக்டர்கள். மக்கள் மீதுள்ள பற்றுக்காரணமாகவே அல்லது அந்த பெண்ணின் மீதுள்ள அக்கறை காரணமாகவோ அவர்கள் அதை செய்யவில்லை.

என்ற இடத்தில் "டாக்டர்களில் நல்ல சேவை செய்யும் டாக்கடர்கள் பலர் உள்ளனர். அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்" என டாக்டர்களின் சார்பாக வாதாடி வாதத்தை திசைதிசை திருப்பாமல் தலைப்பின் கீழ் நல்ல விளக்கங்களுடன் கொண்டு சென்றமை.

2) தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமை. உதாரணமாக,

புலிகளில் கனரக வாகனகனமோட்டிகளும் விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

"புலிகளை பற்றி நீங்கள் கதைக்காதீர்கள். அவர்களை இங்கு ஒப்பிட முடியாது....." என்ற வகையில் பதிலளிக்காது, நான் கூறிய கருத்தின் பொருளை மாத்திரம் கருத்திற் கொண்டு பதிலளித்தமை.

எனவே ஒருவர் மனம்வைத்தால் மாத்திரம் நல்ல கருத்தாடலாக அமைந்து விடாது. அனைவரும் முயற்சிக்க வேண்டும். பாராட்டியவர்களுக்கு நன்றிகள்!

அன்புடன்,

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தாடல் ஆக்கபூர்வமாக அமைந்தமைக்கு இன்னொருவனின் பின்வரும் கருத்தாடல் பாணியே காரணம்,

1) வாதங்களை திசை திருப்பாமை. உதாரணமாக,

என்ற இடத்தில் "டாக்டர்களில் நல்ல சேவை செய்யும் டாக்கடர்கள் பலர் உள்ளனர். அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்" என டாக்டர்களின் சார்பாக வாதாடி வாதத்தை திசைதிசை திருப்பாமல் தலைப்பின் கீழ் நல்ல விளக்கங்களுடன் கொண்டு சென்றமை.

2) தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமை. உதாரணமாக,

"புலிகளை பற்றி நீங்கள் கதைக்காதீர்கள். அவர்களை இங்கு ஒப்பிட முடியாது....." என்ற வகையில் பதிலளிக்காது, நான் கூறிய கருத்தின் பொருளை மாத்திரம் கருத்திற் கொண்டு பதிலளித்தமை.

எனவே ஒருவர் மனம்வைத்தால் மாத்திரம் நல்ல கருத்தாடலாக அமைந்து விடாது. அனைவரும் முயற்சிக்க வேண்டும். பாராட்டியவர்களுக்கு நன்றிகள்!

அன்புடன்,

நல்ல கருத்துக்கள். ஒரு விவாதத்தின் போது உதாரணங்களினதும், உவமைகளினதும் நோக்கத்தை திசைதிருப்பாமல் கருத்தாட வேண்டியது அவசியம். அப்படி செய்யாதவர்கள் விவாதத்தின் கருப்பொருள் பற்றி சரியான தகவலோ அறிவோ இல்லாதவர்கள் அல்லது உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அற்றவர்கள்

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தாடல் ஆக்கபூர்வமாக அமைந்தமைக்கு இன்னொருவனின் பின்வரும் கருத்தாடல் பாணியே காரணம்,

1) வாதங்களை திசை திருப்பாமை. உதாரணமாக,

2) தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமை. உதாரணமாக,

நன்றி சாணக்கியன்.

இந்த இரண்டு உதாரணங்களையும் கவனத்தில் கொண்டால் கருத்தாடல் ஆக்கபூர்வமாகவும் இரசிக்கும்படியாகவும் இருக்குமென்பது உண்மையே.

முயற்சி செய்வோம்.

-இணையவன்

Link to comment
Share on other sites

நன்றி சாணக்கியன்.

இந்த இரண்டு உதாரணங்களையும் கவனத்தில் கொண்டால் கருத்தாடல் ஆக்கபூர்வமாகவும் இரசிக்கும்படியாகவும் இருக்குமென்பது உண்மையே.

முயற்சி செய்வோம்.

-இணையவன்

அப்படியே நீங்களும் உங்கள் ஆக்க பூர்வமான கருத்தை முன் வைக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'சிசேரியன்' சர்ச்சை: டாக்டர் தம்பதி கைது மகன் தலைமறைவு

ஜூன் 25, 2007

திருச்சி: கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவன் பிரசவம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய மணப்பாறை டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மனைவி டாக்டர் காந்திமதி ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 15 வயதே ஆகும் 11வது வகுப்பு படிக்கும் திலீபன் ராஜ் என்பவர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ததாக அவரது தந்தை டாக்டர் முருகேசன் சமீபத்தில் டாக்டர்கள் சங்க கூட்டத்தில் அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கின்னஸ் சாதனைக்காக இந்த பிரசவத்தை திலீபன் ராஜ் பார்த்ததாக அவரது தந்தை கூறியது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. சிறுவனை விட்டுப் பிரசவம் பார்க்க வைத்த டாக்டர் தம்பதியை கைது செய்ய வேண்டும், அவர்கள் டாக்டர் தொழில் பார்க்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ ரமணீதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது.

கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் டாக்டர் தம்பதி, திலீபன் ராஜ், பிரசவத்திற்கு வந்த பெண் நீலா, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இதுதவிர முருகேசனின் மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பிரசவங்கள், சிசேரியன் அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் சேகரித்தனர்.

பிரசவம் செய்து கொண்ட பெண்களிடமும் நேரில் போய் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.

விசாரணையின் முக்கிய திருப்பமாக, திலீபன்ராஜ் சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுப்பது போன்ற விசிடியையும் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விசாரணை அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில், டாக்டர் தம்பதியைக் கைது செய்யுமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை முருகேசனும், காந்திமதியும் கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக வளநாடு காவல் நிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் மணப்பாறை போலீஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் டாக்டர் தம்பதிகள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திலீபன் ராஜ் தலைமறைவு

இதற்கிடையே, டாக்டர் தம்பதியின் மகனும், சிசேரியன் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளவருமான திலீபன் ராஜ் தலைமறைவாகி விட்டார். உறவினர்கள் யாருடைய வீட்டிலாவது அவர் பதுங்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/25/doctors.html

Link to comment
Share on other sites

உயிர் தொடர்பான விடயத்தில் கோதனை செய்வதற்|கு யாருக்கும் உரிமை இல்லை..

எதாவது தவற நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்..

இருந்தாலும்..

செஞ்சோற்றுக்கடனில் சிறந்தவர் கர்ணனா.. கும்பகர்ணனா என்று வாதிடுகையில் கர்ணன்தான் என்பது வெளிப்படையாக சொல்லமுடிந்தது என்றாலும் இல்லை கம்பகர்ணன்தான் என்று தன் வாதத்திறமையை நம்பி போட்டியில் குதிப்பவர்களை பாராட்டலாம்..

உங்கள் கருத்தாடல் தரமானது..

நன்றி.

Link to comment
Share on other sites

விகடகவி மாமா ஒரு நாள் எல்லாரும் போக வேண்டும் தானே ஆனபடியா பயப்பிடாம செய்யலாம் எல்லாம் நேரம் தான்........................ :( :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதுமாக வாசிக்கவில்லை. ஆனால் சாணக்கியன் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டதிட்டங்கள் இப்படி மருத்துவ சாதனைகள் செய்ய அனுமதிக்கும் என்பது போலக் கருத்துக் கூறியிருப்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. கனடாவில் விலங்கு மருத்துவம் படித்து விட்டு இங்கு வரும் ஒருவர் மூன்று பரீட்சைகள் ஒருவருடம் செலவு செய்து சித்தியெய்தினால் தான் இங்கே செல்லப் பிராணிகளைத் தொடவே அனுமதிப்பார்கள். சில அமெரிக்க மருத்துவமனைகளில் சீனா அல்லது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் எம்டி பட்டம் பெற்ற மருத்துவர்களை வதிவிடப் பயிற்சிக்கே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சாதனைகளில் தமது உயிரைப் பணயம் வைப்பது நியாயமானது. இன்னொருவர் உயிரைப் பணயம் வைத்து ஒரு சாதனையா? ஏற்றுக் கொள்ள முடியாதது, கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன் சாதனைக்காக சட்டத்தை மீறினாரா மருத்துவர்?

‘‘உயிர் என்றால் இளப்பமா?

திருச்சி மாவட்டம்

மணப்பாறையில் ‘மதி சர்ஜிகல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை’யை டாக்டர் முருகேசன் என்பவரும் அவரது மனைவி டாக்டர் காந்திமதியும் நடத்திவருகிறார்கள். இவர்களுக்கு திலீபன்ராஜ் என்ற ஒரே மகன். பத்தாம் வகுப்பு முடித்து தற்போது பதினோராம் வகுப்புக்குப் போயிருக்கும் திலீபன்ராஜை சாதனைக்காக(!) சிசேரியன் ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார் முருகேசன். அதை வீடியோவாகவும் எடுத்து கடந்த மாதம் 6-ம் தேதி மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) கிளைக் கூட்டத்தில் சக4 டாக்டர்களுக்குப் போட்டுக் காண்பித்திருக்கிறார் டாக்டர் முருகேசன். அதைப் பார்த்து திகைத்துப்போன சக டாக்டர்கள், முருகேசனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இதையடுத்து இந்த விவகாரம் மருத்துவ உலகில் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.எம்.ஏ-வின் மணப்பாறை செயலாளர் டாக்டர் பிரசாத்திடம் பேசியபோது, ‘‘அன்று முருகேசன் அந்த சி.டி-யை போட்டுக் காட்டியதும் அதிர்ந்து போனோம். ‘நீங்கள் செய்திருப்பது மருத்துவத் துறைக்கே எதிரான செயல். டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமா இது..?’ என்று அவரைக் கண்டித்தோம். அவரோ, ‘உங்களால் என் மகனின் சாதனையை ஜீரணிக்க முடிய வில்லை. உங்கள் பிள்ளை இப்படி செய்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடுவீர்கள்...’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். அதன் பிறகுதான் எங்கள் மாநிலத் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக இது குறித்து புகார் அனுப்பினோம். இந்நிலையில், இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை போய் இப்போது ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது...’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொருவன்,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

முதலில் எனக்கு மருத்துவத்துறை அல்லது அதுசார்ந்த சட்ட திட்ட அறிவு கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு சாதாரண பாமரன். என் கேள்விகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் கருத்தில் உள்ள யதார்த்த நடைமுறையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு அப்பால் ஒரு இலட்சிய உலகை நோக்கிய பயணத்தில் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

மேலைநாடு என்பதைதான் நான் இங்கு அமெரிக்கா என குறிப்பிட்டேன். ஆனால் அமெரிக்க அணுகு முறை மிகவும் வேறுபட்டது, யதார்த்தமானது, அளவு மீறிய சட்டதிட்டங்களற்றது. நான் அத்தகைய ஒரு நிறுவனத்தில் அந்த அணுகுமுறையை பெற்றிருக்கிறேன். அது போலவே பிரித்தானியர் பல சட்டதிட்டங்களையும் ஒழுங்குகளையும் திணிப்பார்கள். ஆரம்பத்தில் தோல்வியடைவது போல் தோன்றினாலும் இறுதியில் நல்ல பெறுபேறுகளை அமெரிக்க பாணி ஏற்படுத்துகின்றது. பிரித்தானிய பாணி நாட்செல்லச் செல்ல இறங்குமுகத்தையும் சோர்வையுமே தருகிறது.

பொதுவாகவே டாக்டர்கள் எதோ தெய்வங்கள் போலவும், சத்திரசிகிச்சை கூடம் சன்னிதானம் போலவும், நர்சுகள் எல்லாம் புசாரிகள் போலவும் ஒரு ஐதீகத்தை சாதரணமாக எல்லா வைத்தியசாலைகளிலும் பார்க்கலாம். ஏன் இந்த பித்தலாட்டம்?

அண்மையில் ஒரு குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு பெரிய புள்ளிக்கு மருத்துவர் அல்லாதவர்கள் அவசர சிகிச்சை செய்து அவரை சத்திரசிகிச்சை கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கே இருந்த டாக்டர்கள் அந்த ஏனையவர்கள் வெளியேறினால்தான் சிகிச்சை தரமுடியும் என்று கூற (வந்தவர்கள் யார் என்று தெரியாமல்) பின்னர் துப்பாக்கி முனையில் சிகிச்சை செய்யவேண்டி நேர்ந்தது ( வசூல்ராஜா MBBS ஸ்டைலில்)

பட்டம் பெற்வர்கள் மாத்திரம் மற்றவர்கள் பிரைவேசியில் தலையிடலாம் என்றால், ஒரு அவசரமான அனாதரவான நிலையில் யாருமே உதவ வரமாட்டார்கள்.

மேற்குறித்த செய்தியில் தரவுகள் போதாது, சிறுவனின் வயது காரணமாகவே இந்த பரிதாப நிலை. அவனின் திறமை குறித்து ஆராயமல் / போதிய தரவுகள் இல்லாமல் கண்டிக்க முடியாது.

வயது வந்த பட்டம் பெற்ற டாக்டர்களின் கவனக்குறைவு பணத்தாசை என்பவற்றாலும், வயது வந்த கள்ள டாக்டர்களின் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்த பின் செய்யும் கொலைகளுக்கு மத்தியில் இது பெரிய குற்றமாக தெரியவில்லை. (அத்துடன் இங்கு கொலை செய்யும் நோக்கமும் இருக்கவில்லை)

மேற்குறித்த அனைத்து குற்றங்களுக்குமாக ஒரு கேள்வி,

புலிகளின் கனரக வாகனமோட்டிகளும், விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

முட்டாள் தனமான வாதம், இந்த ஆபிரேசனை சரியாக செய்ய ஆந்த சிறுவன் எத்தனை ஆபிரேசன்களை செய்து பழகி இருக்க வேண்டும் அதில் இறந்தவர்கள் எத்தனைபேர் , பாதிக்கபட்டவர்கள் எத்தனைபேர், அந்த உண்மைகளை அந்த சிறுவனது தாயும் தந்தையும் வெளிக்கொண்டு வருவார்களா? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களின் பெயரை வெளிப்படுத்துறதற்காக ஒரு பெண்ணின் உயிரோட விளையாடுகின்ற செயலை ஏற்க முடியாது. மருத்துவப் பயிற்சி முடிக்காத ஒருவர், ஒரு பெண்ணின் உடலில் கத்தியால கீறினார் என்றால், அதைக் கொலை முயற்சி என்று வழக்குப் போட முடியும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் சிசேரியன்: வழக்கில் புது திருப்பம் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம்

ஆகஸ்ட் 23, 2007

திருச்சி: துபாய் டாக்டர் வந்து அறுவைச் சிகிச்சை செய்வார் என்று கூறி ஏமாற்றி விட்டு, டாக்டர் தம்பதியினர் தங்களது மகனை விட்டு தனக்கு சிசேரியன் செய்ததாகவும், சில நாட்களில் குழந்தை இறந்து போய் விட்டதாகவும், மணப்பாறையில் 15 வயது சிறுவனால் சிசேரியன் செய்யப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு நாட்டையே உலுக்கிய சம்பவம் மணப்பாறையில் 15 வயது சிறுவன் சிசேரியன் செய்த விவகாரம். மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் தம்பதியான முருகேசன், காந்திமதி ஆகியோரின் மருத்துவமனையில், அவர்களது 15 வயது மகன் திலீபன் ராஜ் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினான்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் யார் என்பதில் முதலில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடமிருந்து பரபரப்பான வாக்குமூலத்தையும் வாங்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜகுமாரி (35). திருச்சி, பேட்டவாய்த்தலை, அண்ணா நகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் குமாரசாமி. இவர் ஒரு கூலித் தொழிலாளர்.

டாக்டர் தம்பதி நடத்தி வரும் மதி சர்ஜிகல் மற்றும் பேறு கால மருத்துவமனையில் கடந்த மே 4ம் தேதி அட்மிட் ஆனார் ராஜகுமாரி. அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் முதுகெலும்பில் குறைபாடு உள்ளதாக அவரிடம் டாக்டர் தம்பதியினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் 7ம் தேதி குழந்தை இறந்து விட்டது. 11ம் தேதி ராஜகுமாரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மதி மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை ராஜகுமாரி போலீஸாரிடம் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், என்னை ஆபேரஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர். அங்கு முதுகில் மயக்க மருந்து செலுத்தினர். இதனால் எனக்கு உணர்வு போய் விட்டது. ஆனால் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் பின்னர் எனக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை நடக்கப் போவதாகவும், துபாயிலிருந்து டாக்டர் வந்துள்ளதாகவும் கூறினார் டாக்டர் முருகேசன். ஆனால் ஒரு சிறுவன்தான் எனக்கு வந்து அறுவைச் சிகிச்சை செய்தார். டாக்டர் தாம்பதியினர் கூறியபடி அவர் அறுவைச் சிகிச்சை செய்தார். பின்னர்தான் அந்த சிறுவன் டாக்டர் தம்பதியின் மகன் என்று தெரிய வந்தது என்று கூறியுள்ளார் ராஜகுமாரி.

சிறுவன் செய்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்ைத சில நாட்களில் இறந்துள்ளது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துபாய் டாக்டர் என்று கூறி டாக்டர் தம்பதியினர் அந்த அப்பாவிப் பெண்ணை ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மணப்பாறை டி.எஸ்.பி. வி.ஜி.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/08...s-new-turn.html

Link to comment
Share on other sites

இன்னும் இந்த வழக்கு போகுதா குழந்தையும் இறந்து போயிட்டா நடகட்டும்........நடகட்டும்.......... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.