Jump to content

கடிதமும் கடந்து போகும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடிதமும் கடந்து போகும் !
=====================

 

நீங்கள் கடைசியாக எப்போது ஒரு தாளில் நண்பருக்கோ உறவினருக்கோ கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? போன வாரம்? போன மாதம்? போன வருடம்? அல்லது சில வருடங்களுக்கு முன்னர்?

ஆமாம், இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் ஒன்றுதான்  கடிதம். ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எமது பிரதான தொடர்பாடல் ஊடகமாக கடிதமே இருந்தது. அதற்கு தந்தி, தபால் அட்டை, inland letter, aerogram, air mail என்று வேறுவேறு வடிவங்களும் இருந்தன. 

Inland letter இந்தியாவில் மக்களிடையே உள்ளூர் கடிதத் தொடர்பில் அதிகம் புழக்கத்தில் இருந்தது. இதற்கு தனியாக கடித உறை மற்றும் முத்திரை தேவையில்லை (Ready made ஆடை போல). இது இரண்டு பக்கங்களைக் கொண்டது. அதில் ஒரு பக்கம் முழுவதும் எழுத முடியும், மறுபக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் எழுத முடியும். மேலே உள்ள இரண்டு பகுதிகளில் அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசத்தை எழுதி அதனையே மடித்து ஒட்டி அனுப்பி விடலாம். 
இதே வடிவத்தை ஒத்த aerogram கடிதம் இலங்கையில் வெளிநாட்டுக்கு அனுப்பும் வகையாக பயன்பாட்டில் இருந்தது. இதைத் தவிர கடித உறையோடு முத்திரை ஒட்டி அனுப்பும் Air Mail மூலம் கடிதத்துடன், எமது குடும்பப் படங்களை வைத்து வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத் தலைவருக்கு அனுப்புவோம். வீட்டுத் தலைவரும் தான் வேலை செய்யும் நாட்டில் எடுத்த சில படங்களை அனுப்புவதுண்டு. செலவு குறைந்த முறையாக இருந்ததால் இலங்கையில் உள்ளூர் தொடர்பாடலில் தபால் அட்டையும் மக்களிடையே அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்தது.

கடிதங்கள் காகிதத்தில் உள்ள வெறும் எழுத்துக்களாக மட்டும் இருக்கவில்லை. அது அனுப்புபவர், பெறுபவர் இருவருக்கும் இடையிலான உணர்வை, உறவை மட்டுமல்ல சிலநேரங்களில் மனிதர்களையே உயிப்போடு வைத்திருக்கும் ஒரு கருவியாகவே இருந்தது. குறிப்பாக தூர தேசத்தில் பணிநிமித்தம் தனியே வாழ்ந்த ஆண்கள் தம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனுப்பும் கடிதங்களுக்காகக் காத்துக் கிடப்பார்கள். புதிய கடிதம் வரும்வரை கடைசியாக வந்த கடிதத்தை அடிக்கடி எடுத்த வாசித்து பரவசமாவார்கள். அவர்களின் ஆடைகள் இருக்கும் பெட்டியில் / அலுமாரியில் இந்தக் கடிதங்களுக்குக் கட்டாயம் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். 

கடிதங்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்த காலத்தில் நாம் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தோம். சிலர் கடிதத்திலேயே கவிதையையும் சேர்த்தே எழுதுவார்கள். காதலர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சில கடிதங்கள் கவிதைகளாலேயே நிரம்பிருக்கும். கடிதம் எழுதுவது ஒருவகையில் பாடசாலைக் கல்விக்கு வெளியே எமக்கான எழுத்துப் பயிற்சியாகவும் இருந்தது. இவ்வாறு தமது இளமைக் காலத்தில்  கடிதங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு, அவற்றோடு இணைந்த அனுபவங்கள் இன்றும் பசுமையாக இருக்குமென்றே நான் நம்புகிறேன்.

எனக்கு முதலில் பரீட்சயமான கடிதம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய சுகவீனக் கடிதமாகும். சில பிள்ளைகள் பாடசாலைக்கு வராது வீட்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நிற்பதற்காகவே தமது தாத்தா, பாட்டிமாரை அடிக்கடி கொல்வதும் உண்டு. வகுப்பாசிரியரிடம் சுகவீனக் கடிதத்தைக் கொடுத்ததும் அவர் அதைப் படிக்க முன்னர், “ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை” என்று கேட்பார். அதன் பின்னரே கடிதத்தைத் திறந்து படிப்பார். படித்த பின்னர் அதனை மடித்து வைத்துவிட்டு, வகுப்பு முடிந்ததும் தன்னுடன் எடுத்துச் செல்வார். அப்போதெல்லாம், ஆசிரியர் அந்தக் கடிதங்களை எல்லாம் கொண்டுபோய் என்ன செய்வார் என்ற கேள்வி என் மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும். 

 அடுத்து நானே கடிதம் எழுதத் தொடங்கியது என் தந்தை வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றபோதுதான். மாதம் இருமுறை அவரிடமிருந்து கடிதங்கள் வந்து சேர்ந்துவிடும். ஒரு கடிதம் வந்து ஒரு வாரத்திற்குள் பதில் கடிதம் நாங்கள் எழுதி அனுப்புவோம் என்று அவர் காத்திருப்பார். கடிதத் தாளில் அம்மாவும் பிள்ளைகள் நாங்கள் நாலுபேரும் ஒருவர் பின் ஒருவராக எழுதுவோம். நாம் ஆளுக்கு நான்கு வசனங்கள் மட்டுமே எழுதுவோம். அப்பா ஒவ்வொரு முறையும் நிறைய விடயங்களை எழுதச் சொல்லுவார். பத்து வயதில் என்ன எழுதுவது என்ற குழப்பத்தில் ஆடு குட்டி போட்டது, சைக்கிள் ஓடி விழுந்தேன் என்று ஏதோவெல்லாம் எழுதியதாக ஞாபகம். ஒருவழியாக ஐந்தாறு வருடங்களில் அவர் ஊர் திரும்பியதும் அந்தக் கஷ்டமும் நீங்கியது.

பின்னர் என் பதின்ம வயதில் வேறு பல கடிதங்கள் பற்றியும் தெரிய வந்தது. அதில் முக்கியமானது காதல் கடிதம். எங்கள் ஊரிலும் கடிதம் கொடுத்து காதல் வளர்த்தவர்கள் பலர் இருந்தார்கள். பல இடங்களில் நண்பனுக்காக கடிதம் எழுதிக் கொடுத்து காதலை வெற்றி பெற வைத்த நல்ல நண்பர்களும் இருந்தார்கள். குழப்பிவிட்டவர்களும் இருந்தார்கள்.  சிலரின் காதல் திருமணத்தில் முடிந்தாலும் வேறு சிலரின் காதல் பாதியிலேயே கருகியதும் உண்டு. கடிதத்தை கடைசிவரை கொடுக்க முடியாமலே காதலைத் தவற விட்டவர்களும் இருக்கிறார்கள்.  

அந்த நாட்களில் ஒரு ஆணுக்கு தான் காதலிக்கும் பெண்ணுக்கு தன்னை பிடித்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதே பெரும்பாடு. கண்ணாலே கதை பேசி புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டாலும் காதலை உறுதிப்படுத்த கடிதங்களே ஆபத்துதவிகளாக கடிதங்களே இருந்தன. காதலைத் தெரிவிக்க அல்லது உறுதிப்படுத்த கடிதம் கொடுப்பது அப்படியொன்றும் இலகுவானதல்ல, படிக்கும் புத்தகத்தில் கடிதத்தை வைத்துக் கொடுத்துவிட்டு அல்லது அந்தப் பெண்ணின் தோழி மூலம் அனுப்பிவிட்டு என்ன பதில் வருமோ என்ற ஒரு பதட்டம் ஒருபுறம், கடிதம் தந்தை அல்லது தாயின் கைக்குப் போய் வீட்டிற்கு வழக்கு வருமோ என்ற பயம் ஒருபுறம் என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.  

வீட்டுக்கு வீடு தொலைபேசிகள் கூட இல்லாத அந்த நாட்களில் காதலை உறுதிப்படுத்திக் கொண்டாலும் அதன்பின் காதலர்கள் சந்திந்துப் பேசுவதும் கிராமங்களில் இலகுவானதல்ல.  இதனால் பெரும்பாலும் அந்த நாட்களில் கடிதங்களே அந்தக் காதல்களை வளர்த்தன. அந்தக் கடிதங்களை தமது காதலியின் கையில் சேர்ப்பதும் பதில் கடிதம் பெறுவதும் சில நேரங்களில் ஒரு திரில்லர் திரைபடத்தை 3Dயில் பார்ப்பது போலத்தான் ஆண்களுக்கு இருந்தது. பெண்கள் தனியே வெளியே செல்வது குறைவென்பதால் சரியான சந்தர்ப்பம் பார்த்து அவள் உலாவும் நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் வீசுதல், கல்லில் கட்டி அவள் கண்பட வீட்டுத் தோட்டத்திற்குள் வீசுதல். அவள் சைக்கிளின் செல்லும்போது உடன் செல்லும் தோழிக்கே தெரியாது  நுட்பமாக கடிதத்தை கைமாற்றுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதைத் தவிர காதலுக்காக நிரந்தர மற்றும் தற்காலிகத் தூதுவர்களைப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

சில வேளைகளில் இந்தக் கடிதங்கள் பெற்றோர், மாமன்மார் அல்லது அண்ணன்மாரின் கையில் சிக்கி கதாநாயகன் சின்னாபின்னமாவதும் உண்டு. இதனால் சில பெற்றோர் உடனேயே தமது பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைத்து, காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கதாநாயகனைத் தாடி வைத்த கவிஞனாக மாற்றிவிடுவதும் உண்டு. சில காதல் கதைகளில் கடிதத்தோடு தூது போன தூதுவர்களே பெண்ணை கவர்ந்ததும் நடந்துண்டு. நான் ஐந்து வருடமாகக் காதலித்துத் திருமணம் புரிந்திருந்தாலும் கடைசிவரை என் மனைவிக்குக் காதல் கடிதம் எழுதவேயில்லை. அதை என் மனைவி இன்றும் ஒரு குறையாகச் சொல்வதுண்டு.

காதல் கடிதங்களை விட மிகவும் சுவாரசியமானவை எம்மவர்கள் எழுதும் மொட்டைக் கடிதங்கள். அதிலும் இரண்டு வகையான மொட்டைக் கடிதங்கள் உள்ளன. அதில் முதல் வகை குடும்ப, உறவு மட்டத்தில் குழப்பிவிடும் வகையிலான மொட்டைக் கடிதம். தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் திருமணத்தைக் குழப்புதல், கணவன் மனைவிக்குள் சண்டையைக் கிளப்புதல், தனது எதிரியாக இருப்பவனின் உத்தியோகத்தைக் கெடுத்தல், பிடிக்காதவர் வீட்டுத் திருமணத்தைக் கெடுத்தல், தனக்கு கிடைக்காத பதவி உயர்வு தன்னோடு உள்ள இன்னொருவனுக்கு கிடைக்கவிடாது செய்தலென நம்மவர்கள் மொட்டைக் கடிதங்களை நாகாஸ்திரமாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். 

இவ்வாறு யாரென்று தெரியாது கடிதம் எழுதும் இவர்கள் கடிதத்தை தமது ஊரில் இருந்து அஞ்சலில் சேர்க்காது இன்னுமொரு நகரத்துக்குச் சென்று அங்கு போடுவார்கள். சிலர் அதற்கு முத்திரை ஓட்டுவதும் கிடையாது. வேறென்ன, கடிதத்தைப் பெறுபவனே அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தட்டும் என்ற நல்ல நோக்கம்தான். 

இரண்டாவது வகை மொட்டைக் கடிதங்கள் நிறுவன மட்டத்திலான மொட்டைக் கடிதங்கள். இதில் சமூக நன்மைக்காக whistle blower ஆக உண்மையிலேயே சமூக அக்கறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யும் வகையிலானவை ஒருவகை. அடுத்தது அலுவலக உயரதிகாரிகள், சக ஊழியர்கள் மீது புகார் செய்து அடுத்துக் கெடுக்கும் வகையிலானவை இன்னொருவகை. எமது சமூகத்தில் மிகச்சிலரே உண்மையான சமூக அக்கறையோடு அடையாளத்தை மறைத்து புகார் செய்வதுண்டு. அதிகமாக petition வகையிலான மொட்டைக்கடிதங்கள் தமக்குப் பிடிக்காத அரசு உயரதிகாரிகளை மாட்டி விடுவதற்காகவே எழுதப்படுவது வழமை. அந்த நாட்களில் பெரும்பாலும் ஊருக்கு ஒரு மொட்டைக் கடித நிபுணர் இருப்பார். 

நான் வாழ்நாளில் யாருக்கும் மொட்டைக் கடிதம் எழுதாத போதும் எனக்கும் ஒரு  மொட்டைக் கடிதம் வந்தது. என் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பாக வந்திருந்த அந்தக் கடிதம், என் மனைவிக்கு அனுப்புவதற்கு பதிலாக என் விலாசத்திற்கே அனுப்பப்பட்டிருந்தது. நானும் அனுப்பியவரைத் திட்டிவிட்டு, வேறு வழியில்லாமல் மறுநாள் மனைவியைச் சந்தித்தபோது கொண்டுபோய் அவரிடம் கொடுக்க வேண்டியிருந்தது. கடிதம் எழுதியவரும் என்ன செய்வார் பாவம், எனது அலுவலக கோப்பில் என் வீட்டு விலாசம்தானே இருக்கும்? என் மனைவியும் வாசித்து வாய்விட்டுச் சிரித்துவிட்டு என்னிடமே கொடுத்துவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் கையெழுத்தை வைத்து அதை எழுதியவரையும் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் பின்னர் அவரிடம் நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

பாடசாலை நாட்களின் பின்னர் எனக்கு கிடைத்த கடிதங்களில் முக்கியமானது என் முதல் வேலை நியமன நேர்முகத் தேர்வுக்கான கடிதம். அதில் இருந்த செய்தி முழுக்க முழுக்க சிங்களத்தில் இருந்தது. அதில் மருந்துக்கும் ஆங்கிலமோ தமிழோ இருக்கவில்லை. எங்களூரில் நல்ல ஆங்கில அல்லது சிங்களப் புலமையோடு இதற்காகவே பிறப்பெடுத்தது போல சில மூத்தவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரிடம் ஓடோடிச் சென்று விளக்கம் பெற்றேன். பின்னர் கொழும்பு செல்ல அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒரு கடிதம், நேர்முகத்தேர்வுக்கு வருகிறேன் என அமைச்சுக்கு ஒரு கடிதம் என்பவற்றோடு எனது வாழ்க்கை நான் பிறந்த கிராமத்திலிருந்து தலைநகருக்கு நகர்ந்தது.

அதன் பின்னர், பல்கலைக் கழக அனுமதிக்கான படிவங்கள், பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் பெற்றோருக்குக் கடிதம், படிப்பு முடிந்ததும் வேலைக்கு விண்ணப்பம், வேலையிலிருந்து விலகும் அறிவிப்பு, அடுத்த வேலைக்கு விண்ணப்பம், உயர் கல்விக்கான விண்ணப்பம் என்ற எமது காலத்தில் கடிதங்கள் எங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தே இருந்தன. ஆனாலும் காலப் போக்கில் கைப்பேசிப் பாவனை, மின்னஞ்சல் என்பன கடிதம், தபால் அட்டை போன்றவற்றின் தேவைகளை இல்லாது ஒழித்தன. ஆனாலும் அலுவலகத் தேவைகளுக்காக  கடிதங்களின் பாவனை தொடர்ந்திருந்தது. இன்று கடிதம் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம்.

கடந்த பத்தாண்டுகளில் அலுவலகத் தேவைகளுக்கும் கடித உறையில் வைத்துக் கடிதம் அனுப்பும் வழக்கம் குறைந்து செல்லத் தொடங்கி இன்று நாம்  paperless கலாச்சாரத்துக்குள் முழுமையாக மூழ்கத் தொடங்கியிருக்கிறோம்.

-- அக்கம்-பக்கம் --
 

 

https://www.facebook.com/101881847986243/posts/281051986735894/?d=n

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.