Jump to content

இயற்கையே மாறிப்போச்சு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

large.0-02-0a-15972441b01214d209ed76a80b807321ca1ea96a72c1b953943a169287a516c8_1c6da3ea9700ea.jpg.606096517f2d8db508fa8d2bb8a34b44.jpg

இயற்கையே மாறிப்போச்சு..!

*********************

கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி

கால் பாகம் தரையே இங்கு

இயற்கையின் செழிப்பு எல்லாம்

ஏன் தானோ விறகாய் போச்சு

 

பாரெல்லாம் வெய்யில் வெக்கை

பாலைவனம்போல் காயும் தேசம்

நீரெல்லாம் வற்றித்தானே-எம்

நிலமெல்லாம் புழுதியாச்சு

 

மழைவந்து கொட்டித் தாக்கும்

மரமெல்லாம் காற்றால் சாயும்

நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய்

நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும்.

 

விஞ்ஞானம் உயர்ந்ததாலே

விண் மேகம் கீழேயாச்சு

சந்திரனில் கால் பதித்துபூமி

சரித்திரமே பின்னால் போச்சு

 

நெருப்போடு நீரும் காற்றும்

நிலத்தோடு ஆகாய ஐம்பூதம்

அத்தனையும் எம்முள் வைத்தே

அகிலமே எம் உடலாய்யாச்சு

 

இயற்கையின் கொந்தளிப்பே-எம்

உடலிலும் நோயாய் தோன்றும்

அதனோடு இசைந்து வாழ்ந்தால்

அனைவர்க்கும் இனிமை வாழ்வே.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

  • Like 13
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் கொந்தளிப்பே-எம்

உடலிலும் நோயாய் தோன்றும்

அதனோடு இசைந்து வாழ்ந்தால்

அனைவர்க்கும் இனிமை வாழ்வே.

உண்மை உண்மை

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை சூழ்நிலைக் கவிதை மிக நன்றாக இருக்கு.....கோபி.....!  👍

(நீங்கள் விரும்பினால் 23 அகவைக்கு மாற்றும்படி கோரலாம்).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பசுவூர்க்கோபி said:

 

large.0-02-0a-15972441b01214d209ed76a80b807321ca1ea96a72c1b953943a169287a516c8_1c6da3ea9700ea.jpg.606096517f2d8db508fa8d2bb8a34b44.jpg

இயற்கையே மாறிப்போச்சு..!

*********************

கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி

கால் பாகம் தரையே இங்கு

இயற்கையின் செழிப்பு எல்லாம்

ஏன் தானோ விறகாய் போச்சு

 

பாரெல்லாம் வெய்யில் வெக்கை

பாலைவனம்போல் காயும் தேசம்

நீரெல்லாம் வற்றித்தானே-எம்

நிலமெல்லாம் புழுதியாச்சு

 

மழைவந்து கொட்டித் தாக்கும்

மரமெல்லாம் காற்றால் சாயும்

நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய்

நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும்.

 

விஞ்ஞானம் உயர்ந்ததாலே

விண் மேகம் கீழேயாச்சு

சந்திரனில் கால் பதித்துபூமி

சரித்திரமே பின்னால் போச்சு

 

நெருப்போடு நீரும் காற்றும்

நிலத்தோடு ஆகாய ஐம்பூதம்

அத்தனையும் எம்முள் வைத்தே

அகிலமே எம் உடலாய்யாச்சு

 

இயற்கையின் கொந்தளிப்பே-எம்

உடலிலும் நோயாய் தோன்றும்

அதனோடு இசைந்து வாழ்ந்தால்

அனைவர்க்கும் இனிமை வாழ்வே.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

உண்மை தோழர்.. போர்வெல் 1000 கீழே தண்ணீர் போயாச்சு..😢

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றி தோழர்..👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிலாமதி said:

இயற்கையின் கொந்தளிப்பே-எம்

உடலிலும் நோயாய் தோன்றும்

அதனோடு இசைந்து வாழ்ந்தால்

அனைவர்க்கும் இனிமை வாழ்வே.

உண்மை உண்மை

உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

இயற்கை சூழ்நிலைக் கவிதை மிக நன்றாக இருக்கு.....கோபி.....!  👍

(நீங்கள் விரும்பினால் 23 அகவைக்கு மாற்றும்படி கோரலாம்).

நன்றிகள். உங்கள் ஆலோசனைக்கும் மிக மிக நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 14:05, பசுவூர்க்கோபி said:

இயற்கையின் கொந்தளிப்பே-எம்

உடலிலும் நோயாய் தோன்றும்

அதனோடு இசைந்து வாழ்ந்தால்

அனைவர்க்கும் இனிமை வாழ்வே.

பூமியின் அழிவுகள் போதாதென்று மற்றைய கிரகங்களையும் ஆராய்கிறார்கள்.
பார்ப்போம் முடிவை.

  • Like 1
Link to comment
Share on other sites

Quote

 

இயற்கையின் கொந்தளிப்பே-எம்

உடலிலும் நோயாய் தோன்றும்

அதனோடு இசைந்து வாழ்ந்தால்

அனைவர்க்கும் இனிமை வாழ்வே.

 

கவிதைக்கு நன்றி கோபி.
நியூயோக்கினை விட சற்று பெரிய ஐஸ் பாறை கரைகிறதாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் செழிப்பையெல்லாம் மனிதன் அழித்ததால் இயற்கையே கொந்தழித்து விட்டது . நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள் பசுவூர்கோபி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையைப்பற்றி அருமையான கவிதை, எம்மால் இயன்றவரை இயற்கையை பாதுகாப்போம், பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு பசுவூர்கோபி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை என்பது வரம்.

வரங்களை சாபங்கள் ஆக்கியே மானுடத்தேடல்கள் பயணப்படுகின்றன. இயற்கையை பாதுகாக்க மானுடம் தேடல்களை முடக்குமா?

 

இயற்கையை நேசிக்கும் மானுடத்தை கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துகள் பசுவூர்கோபி.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.