Jump to content

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு.!

02-724x1024.jpg

சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக வாழ்க்கை வரலாற்றை   “ ஆடற்தடங்கள்”  என்னும் பெருநூலினை தயாரிக்க உள்ளதை தங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்சி  அடைகின்றோம்.

உலகெலாம் வாழும்   ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடன ஆற்றுகைக் கலைஞர்களை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும்.     40 வயதிற்கு மேற்பட்ட நடன ஆற்றுகைக் கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின்  வரலாற்று விபரங்களைக் கொண்ட “  ஆடற்தடங்கள்” என்னும் பெருநூல்  வெளிவர ஏற்பாடாகியுள்ளது.

ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும் கலைஞர்களின் வரலாறுகளை சேகரிப்பாளர்களும் இயங்குவர்கள் .

நடன ஆற்றுகைக் கலைஞர்கள் என்னும் பெருநூலின்   வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால்   தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

உலகில் எப்பகுதியிலும் வாழ்ந்தாலும்  ஈழ தேசத்தை பூர்வீகமாக கொண்டு 40 வயதிற்கு மேட்பட்ட பரதநாட்டிய  ஆற்றுகைக் கலைஞர்கள் மற்றும் பரதநாட்டிய நடன ஆசிரியர்கள்  இப்பெருநூலிற்கு தமது கலையுலக வாழ்க்கை வரலாற்றை அனுப்ப முடியும்.

பரத நாட்டிய ஆற்றுகைக் கலைஞராக அல்லது ஆசிரியர்களாக  இருந்து மரணித்தவர்கள் பற்றி அவர்களின் உறவினர்களோ, உரித்துடையோரோ , மற்றும் அவர்களின் மாணவர்களோ தகுந்த உறுதிப்படுத்தலுடன் அவர்களின் வரலாற்றினையும் அனுப்பிவைக்க முடியும்

 ஏ4 தாளின் அளவில் 5 பக்கங்களிக்கு உட்பட    எழுத்தின் அளவு 12 இருத்தல் வேண்டும்.

மின்னஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ, பணி மேம்படுத்துநர்கள் ஊடாகவோ கிடைக்கச் செய்யலாம்.

 அனுப்புபவர்  நூலில் பிரசுரிக்கத்தக்கதாக தங்களின் தனிப் புகைப்படம் மற்றும்  அவர்கள் பங்கு கொண்ட நிகழ்வுகள் அவர்கள் நெறியால்கை செய்த  நிகழ்வுகளின் முக்கிய

 புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும்.

தொடர்பு கருதி தொலைபேசி எண் இடலாம். தொலைபேசி எண் பிரசுரிக்க விரும்புபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படும்

பரத நாட்டிய நடன கலைஞர்களின் சுய  வரலாற்று அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: sanganathamdanceacademy@gmail.com

தொடர்புக்கான தொலைபேசி

புலன் எண் +61406770300

கைபேசி எண் +61427776548

உங்களின் கலையுலக  வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 15.03.2021

அத்தோடு குறித்த தகவலை ஏனைய ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

இயக்குநர்

சங்கநாதம் ஆடற்கலையகம்

அவுஸ்ரேலியா.

https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2021/02/103218/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.