Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இதுகுறித்து இரா.சாணக்கியன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(15)
 

http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-32/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைகளுக்கான தேர்தல் – வடக்கில் மாவை,கிழக்கில் சாணக்கியன்

 
1-243.jpg
 23 Views

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்  பட்சத்தில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இராசமாணிக்கம் சாணக்கியனையும் நியமிக்கலாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய நெயற்குழுக் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட  யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன விடுதலைப் போராட்டத்தில் நீண்ட அனுபவம் மிக்க தமிழரசுக் கட்சியின் மாவை. சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் களமிறக்க வேண்டும் என்றும் முன்மொழிவொன்றைச் செய்திருக்கின்றார்.

அத்துடன் மாவை. சேனாதிராஜாவுடன் களமிறங்கும் ஏனைய வேட்பாளர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அதே போன்று கிழக்கில் கருணா, பிள்ளையான் போன்றவர்களின் சவால்களை முறியடிப்பதற்கு இளைஞரான சாணக்கியன் பொருத்தமானவர் என்றும் அவருக்கு வடக்கு கிழக்கில் இணைந்த வாலிபர் முன்னணியில் முக்கிய பதவியொன்றை வழங்க வேண்டும் என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் நாடாளுமன்ற உறுப்பிகரான சார்ள்ஸ் நிா்மலநாதனுக்கும் பெண் பிரதிநித்துவத்தினை உறுதிசெய்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராசாவுக்கும் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தகவல்கள் மத்தியகுழு கூட்டத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=43330

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களைக் கூட்டமைப்பு அறிவிக்கும்! - சம்பந்தன் தெரிவிப்பு.!

Screenshot-2021-03-01-08-02-41-132-com-a 

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் களமிறங்கவுள்ளனர் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். எமது விருப்பமும் அதுவே ஆகும்.

எனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையில் நடத்துவதா அல்லது புதிய முறைமையில் நடத்துவதா என்பது தொடர்பில் அரசுக்குள் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.

அதேவேளை, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அரசுக்குள் இருக்கும் சிலர் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

எது நடந்தாலும் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்தியாவும் அதை விரும்பாது.

மாகாண சபைகளுக்கான தேர்தலைக் காலம் தாழ்த்தாது உடனே நடத்த வேண்டும் என்று அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.

எனவே, மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அரசு நடத்தியேக ஆக வேண்டும்.

ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை.

இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/03/01/23137/

Link to comment
Share on other sites

மாகாணசபை முதலமைச்சராகவோ அமைச்சர்களாகவோ வருபவர்கள் மக்கள் அபிவிருத்தியில் மிக அக்கறை கொண்ட, அத்துடன் நிர்வாகத்திறன்  மிக்கவர்களாக இருத்தல் வேண்டும். 

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது கண்ணுக்கெட்டாத வெகு தூரத்தில் இருக்கும் இன்றைய நிலையில் உள்ளூர் நிர்வாகத்தை நடத்துபவர்களும் அந்த அரசியலில் ஈடுபட்டு தமது சக்தியை வீண்டிக்காமல் உள்ளூர் மக்கள் வாழ்ககை தரத்தை உயர்த்துமுகமான அபிவிருத்திகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இல்லையேல் இதுவரை நடந்ததுபோல் மேலும் மக்கள் தென்னிலங்கை கட்சிகளை நோக்கி செல்லவே வழிவகுக்கும். ஏற்கனவே நிர்வாக திறன் அற்ற விக்கினேஸ்வரன் 5 வருடத்தை வீண்டித்தது போல் அல்லாமல் எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வது தமிழ் மக்களின் நிலையை உயர்த்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படாமல் இருந்திருந்தால் அவர்தான் கூட்டமைப்பின் நிரந்தர வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர்.

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படாமல் இருந்திருந்தால் அவர்தான் கூட்டமைப்பின் நிரந்தர வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர்.

அப்போ கூட்டமைப்பு விக்னேஸ்வரனுடன் முரண்படவில்லை என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.